கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தனியார் பள்ளி வாகனங்கள் நாளை வேலை நிறுத்தம்

தமிழகத்தில், தனியார் பள்ளி வாகனங்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெறக்கோரி, நாளை, பள்ளி வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
இது தொடர்பாக, தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில், வெளியிடப்பட்டு உள்ள துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், 15 ஆயிரம் பள்ளிகள், 1.5 கோடி மாணவர்கள், 50 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். சரிபட்டு வராத சமச்சீர் கல்வி, முப்பருவ கல்வி முறையால், முழுமையான புத்தகங்கள் சரியான நேரத்தில் கிடைக்காமல் அலைய விடுதல், முறையற்ற கல்வி கட்டணம், பள்ளி வாகனங்களுக்கான புதிய நடைமுறைபடுத்த முடியாத விதிகளான நடத்துனரை நியமித்தல், ஆபத்தை விளைவிக்கும், 5து4 அவசர வழி, ஓட்டுனர் களுக்கு தனி இரும்பு கூண்டு கட்டுதல், நான்கு வகையான ஆய்வு குழுக்கள், நான்கு முறை தகுதிச்சான்று, தற்காலிக அங்கீகாரம் முடிவுற்றால், தகுதிச் சான்று ரத்து, பள்ளி வாகன விபத்துக்கு பள்ளி நிர்வாகிகளை கைது செய்வது, இன்ஜினை பழுதாக்கும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது, ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.அரசாணை எண். 84 போடுவதற்கு முன்பாக துவக்கப்பட்ட, 1,000க்கும் மேற்பட்ட மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின், தொடர் தற்காலிக அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் திருப்பி அனுப்பி பள்ளியை மூடும்படி போடப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.கிராமப்புற பள்ளிகள் மட்டும் சொத்து வரி செலுத்த வேண்டும் என்பதை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளிகளின் ஒற்றுமையை அரசுக்கு தெரிவிக்க, 19ம் தேதி பள்ளி வாகனங்களை ஓட்டாமல் நிறுத்துவோம்.இவ்வாறு, துண்டுபிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

>>>அண்ணாமலை பல்கலை., 21ம் தேதி திறப்பு

சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவ வகுப்புகள் வரும், 21ம் தேதி திறக்கப்படுகிறது. இதுகுறித்து, பல்கலைக் கழக துணைவேந்தர் ராமநாதன் கூறுகையில், ""அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவம், பல் மருத்துவம், பி.எஸ்சி., - எம்.எட்., மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான, வகுப்புகள் வரும், 21ம் தேதி திறக்கப்படுகிறன. இதேபோபான்று, வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு, 26ம் தேதியும், 30ம் தேதி, அனைத்துத் துறை மாணவர்களுக்கும் தேர்வு நடக்கிறது' என்றா

>>>குரூப்-1 போட்டி தேர்வு டிசம்பர் 30ல் நடக்கிறது

இருபத்து நான்கு காலியிடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 தேர்வு, டிசம்பர் 30ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,), துணை ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள, 24 இடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 போட்டித் தேர்வு, வரும் டிசம்பர் மாதம் 30ம் தேதி நடைபெற உள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள், அரசு பணியாளர் தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

>>>நவம்பர் 18 [November 18]....

நிகழ்வுகள்

  • 1421 - நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்,
  • 1477 - இங்கிலாந்தில் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட முதலாவது நூலான "Dictes or Sayengis of the Philosophres" வில்லியம் கக்ஸ்டன் என்பவரால் வெளியிடப்படட்து.
  • 1493 - கொலம்பஸ் புவேர்ட்டோ ரிக்கோ என இன்றழைக்கப்படும் நாட்டை முதன்முறையாகக் கண்ணுற்றார்.
  • 1626 - புனித பீட்டர் பசிலிக்கா தேவாலயம் ரோம் நகரில் திறந்து வைக்கப்பட்டது.
  • 1803 - எயிட்டி புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது எயிட்டி குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழிவகுத்தது.
  • 1863 - டென்மார்க்கின் ஒன்பதாம் கிறிஸ்டியன் ஷ்லெஸ்விக் நகரம் டென்மார்க்குக்குச் சொந்தம் என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டான். இது 1864 இல் ஜேர்மன்-டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது.
  • 1883 கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேர எல்லைகளை வகுத்துக் கொண்டன.
  • 1903 - பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
  • 1909 - நிக்கராகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள் அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டு போர்க்கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.
  • 1918 - லாத்வியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1926 - ஜோர்ஜ் பேர்னாட் ஷா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார்.
  • 1929 - அத்திலாந்திக் பெருங்கடலில் நியூஃபின்லாந்துக் கரையில் இடம்பெற்ற 7.2 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக பலத்த சேத எற்பட்டது. 28 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் பேர்லின் நகரில் குண்டுகளை வீசியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். இச்சமரில் 9 பிரித்தானிய வான்கலங்கள் அழிக்கப்பட்டன.
  • 1943 - உக்ரேனில் லூவிவ் என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 6,000 யூதர்கள் நாசிப் படைகளினால் கொல்லப்பட்டனர்.
  • 1947 - நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச் என்ற இடத்தில் வர்த்தகத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 41 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1978 - கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் மக்கள் கோயிலில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.
  • 1987 - லண்டனில் கிங் க்ரொஸ் சுரங்கத் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற தீயில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1989 - கோபெ செயற்கைமதி விண்வெளிக்கு ஏவப்பட்டது.
  • 1991 - தமிழீழ காவல்துறையின் முதலாவது அணி பயிற்சி முடிந்து வெளியேறியது.
  • 2006 - ஈழப்போர்: மன்னார்க் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் இலங்கைக் கடற்படையினர் 10 பேர் கொல்லப்பட்டு 3 விடுதலைப் புலிகள் காயமடைந்தனர்.

பிறப்புக்கள்

  • 1923 - அலன் ஷெப்பர்ட், விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கர் (இ. 1998)
  • 1945 - மகிந்த ராஜபக்ச, இலங்கையின் 6வது ஜனாதிபதி

இறப்புகள்

  • 1936 - வ. உ. சிதம்பரம்பிள்ளை, கப்பலோட்டிய தமிழன், (பி. 1872)
  • 1952 - போல் எல்யூவார், பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1895)
  • 1962 - நீல்ஸ் போர், இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1885)

சிறப்பு நாள்

  • லாத்வியா - விடுதலை நாள் (1918)
  • ஓமான் - தேசிய நாள்

>>>10+D.T.Ed +degreee முறையில் B.Ed முடித்தவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றதீர்ப்பு

D.TEd பட்டயம்  +2 கல்வி தகுதிக்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .10+D.Ted +degreee முறையில் B.Ed முடித்தவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது . முழு தீர்ப்பின் நகல்.

>>>பி.எட்., - எம்.எட்., சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு

பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட, ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது. நீதிபதி வர்மா குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், இந்த முடிவை எடுத்துள்ளது.இந்த பரிந்துரைக்கு, கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில், ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.
வர்மா குழு:
நாடு முழுவதும், ஆசிரியர் கல்வியில் கொண்டு வர வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும், தரமான ஆசிரியரை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்து, பரிந்துரை அறிக்கை வழங்க, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் குழு அமைத்து, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.வர்மா குழு, சமீபத்தில், தன் பரிந்துரையை, மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. பரிந்துரையில், "தரமான கல்வியை அளிக்க வேண்டும் எனில், தரமான ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். அதற்கு, பி.எட்., - எம்.எட்., மற்றும் ஆசிரியர் கல்வி பட்டய படிப்பு ஆகிய ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கையில், நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் நடந்த, முதல், டி.இ.டி., தேர்வை, கிட்டத்தட்ட, ஏழு லட்சம் பேர் எழுதிய போதும், 1 சதவீதத்திற்கும் குறைவாக, வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்வு பெற்றதை, வர்மா குழு சுட்டிக் காட்டி, நுழைவுத் தேர்வின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தின் நிலைப்பாடு:
வர்மா குழுவின் பரிந்துரை அறிக்கை, சமீபத்தில், டில்லியில் நடந்த கல்விக் கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் வைக்கப்பட்டு, வாரியத்தின் ஒப்புதலும் பெறப்பட்டது. கூட்டத்தில், பல்வேறு மாநில பிரதிநிதிகள், ஆசிரியர் கல்விக்கான நுழைவுத் தேர்வு திட்டத்தை ஆதரித்துள்ளனர். ஆனால், இந்தவிவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு தெரியவில்லை.
30 ஆயிரம் மாணவர்கள்:
தமிழகத்தில், 700 ஆசிரியர் கல்வி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஆண்டு தோறும், 40 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு படிப்புகளில், 30 ஆயிரம் பேர் வரை சேர்கின்றனர். இந்த படிப்புகளின் சேர்க்கைக்கு, தற்போது நுழைவுத்தேர்வு கிடையாது.ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு விண்ணப்பதாரர்கள், பட்டப் படிப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், தேர்வுப் பட்டியலை வெளியிட்டு, கலந்தாய்வு அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது.
எப்போது வெளியாகும்?:
இந்த முறையால், தரமான ஆசிரியரை தேர்வு செய்ய முடியாது என்பதை, டி.இ.டி., தேர்வு, வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. எனவே, நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து, உயர்கல்வித் துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு, அடுத்த கல்வியாண்டு சேர்க்கைக்கு முன்னதாக வெளியாகலாம் என, எதிர்பார்க்கப் படுகிறது.இது குறித்து, பல்கலைக் கழக ஆசிரியர் சங்க பொதுச் செயலர் பிச்சாண்டி கூறியதாவது: கலை, அறிவியல் பட்டதாரிகள் மட்டுமே, பி.எட்., - எம்.எட்., படிப்புகளில் ஆர்வம் காட்டுகின்றனர். நுழைவுத் தேர்வு திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், கல்லூரி பாடத் திட்டங்களின் தரத்தை உயர்த்த வேண்டும். இல்லை எனில், நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே, ஆசிரியர் கல்விக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவர். கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் நிலை, கேள்விக்குறி ஆகிவிடும்.இவ்வாறு பிச்சாண்டி தெரிவித்தார்.

>>>தோல்வியை வெல்வோம்! - வெ.இறையன்பு I.A.S

வெற்றியை காட்சிப்படுத்தியே நாம் முயற்சிகளை முன் வைக்கிறோம். பல நேரங்களில் செயல்படுகிறபோதே ஜெயித்துவிட்டதாகக் கருதுகிறோம். நாம் செல்கிற வேகத்தில் தோல்வி ஏற்பட்டால் துவண்டு விடுகிறோம். அடுத்து புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் சுணங்கி விடுகிறோம். வெற்றி என்கிற ஆளுயர மாலையை அநாயசமாகத் தாங்குகிற நாம், தோல்வி என்கிற சின்ன கருப்புத்துணியின் பாரம் தாங்கமுடியாமல் அமுங்கி விடுகிறோம். வெற்றி மினுமினுக்கிற பொன்னாடையை அணிவிக்கின்றது. தோல்வி கண்ணீரை ஒற்றிக் கொள்ளும் கைக்குட்டையை மட்டுமே காணிக்கை ஆக்குகிறது. முதல் மதிப்பெண் கிடைக்கவில்லையே, நினைத்த படிப்பில் சேர முடியவில்லையே என்றெல்லாம் நம்மை நாமே தாழ்த்திக்கொண்டு வாழ்க்கையை சேதப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உற்று நோக்குபவர்களுக்கு மட்டுமே உண்மை தெரியும். வெற்றி தரக்கூடிய களிப்பைவிட, தோல்வி வழங்குகிற அனுபவம் ஆழ மானது. வெற்றி அஜாக்கிரதையையும், தோல்வி விழிப்புணர் வையும் அள்ளித்தருகின்றன. ஒரு முறை கிடைத்த பரிசு அதீத நம்பிக்கையையும், அலட்சிய மனப்பான்மையையும் அபரிமித மாகத் தந்துவிடுகிறது. மேடையில் ஒருமுறை நின்றுவிட்டதாலேயே நாம் அனைவரையும்விட உயரமானவர்கள் என்ற எண்ணம் உதித்துவிடுகிறது. அதே நேரம் வெற்றி பெறுகிற தருணத்தில் கவனக்குறைவாக இருந்து கேடயத்தை தவறவிட்டவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் வரலாறானது. ஜெயித்தவர்கள் தன் திறமையால் வென்றதாகக் கருதிக்கொள் கிறார்கள். தோற்றவர்கள், தான் குழுவைச் சரியாக வழிநடத்த வில்லையென்று சுயவிசாரணை செய்கிறார்கள். எதனால் வெற்றி பெற்றோம் என்று நாம் ஒரு நிமிடம்கூட அலசுவதில்லை. ஆனால், தோல்வி நம்மைத் துருவித்துருவி ஆராய வைக்கிறது. வெற்றியால் கிடைக்கின்ற பெருமை மின்னலாக மறைந்து விடுகிறது. தோல்வியால் பெற்ற அவமானங்கள் மழையாய் நம்மை நனைத்து விடுகிறது. ஒவ்வொரு தோல்வியும் மிகப் பெரிய வெற்றிக்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறது. சின்னச் சின்ன வெற்றிகளில் சிலிர்த்து போகிறவர்கள், பெரிய முயற் சியில் பாதாளத்தில் விழுந்து பரிதவிக்கிறார்கள். பதக்கங்களை காட்டிலும் நோக்கங்கள் முக்கியம். உயர்ந்த நோக்கத்துக்காக அடைகிற தோல்வி சின்ன சுகத்துக்காகக் கிடைக்கிற வெற்றியைக் காட்டிலும் உன்னதமானது. இன்று பெறுகிற தோல்வி வேறொரு உயர்ந்த லட்சியத் திற்காக நம்மை தயார்படுத்துகிறது எனக் கருதி, அதை சுட்டு விரலால் சுண்டி உதறி விட்டு நாம் முன்னேற வழிவகுப்போம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

No Work No Pay - One Day All India Strike

இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...