கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டி.இ.டி., இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் இழுபறி

டி.இ.டி., இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில், தொடர்ந்து இழுபறி நிலை நிலவுவதால், தேர்வு பெற்றவர்கள், தவியாய் தவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி பாட வாரியாக உள்ள ஆசிரியர் காலி இடங்களையும், பள்ளி கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர். டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றதும், மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், தகுதி வாய்ந்த ஆசிரியரை தேர்வு செய்ய, முதலில் டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. சென்னை, ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், "டி.இ.டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே; அதன்பின், ஆசிரியரை தேர்வு செய்ய, வேறொரு விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது.

>>>கும்பகோணம் பள்ளி தீவிபத்து: நஷ்டஈடு நிர்ணயிக்க ஒரு நபர் கமிஷன்

கும்பகோணம், பள்ளி தீ விபத்தில், பலியான மற்றும் காயமடைந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு, வழங்க வேண்டிய நஷ்டஈடு எவ்வளவு என்பதை நிர்ணயிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகத்தை, சென்னை ஐகோர்ட் நியமித்துள்ளது. ஆறு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க, ஒரு நபர் கமிஷனுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

>>>மாணவர்களை கண்காணிக்க மைக்ரோ சிப்: அமெரிக்காவில் எதிர்ப்பு

அமெரிக்க பள்ளிகளில், மாணவர்களின் நடமாட்டத்தை கண்டறிய, அடையாள அட்டையில் பொருத்தப்பட்டுள்ள, மைக்ரோ சிப்-க்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின், சில மாகாணங்களில் உள்ள பள்ளிகளில், அடையாள அட்டையில், மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு, ஜி.பி.எஸ்.,தொழில்நுட்ப முறைப்படி, மாணவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. வகுப்புகள் துவங்குவதற்கு முன்பாக, மணி அடித்த பிறகும், வராத மாணவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதை அறிந்து, அதற்கேற்ப, அவர்களது வருகை பதிவேட்டில், "பிரசன்ட்"அல்லது, "ஆப்சென்ட்'' போடப்படுகிறது.

>>>கணிதத்திறன் மேம்படுவதற்கான ஒரு சிறந்த வழி

மேதமேடிகல் டிரெய்னிங் மற்றும் டேலன்ட் சர்ச் ப்ரோகிராம்(எம்டிடிஎஸ்) என்பது, முழுமையான கணிதத்தில், விரிவானதொரு கோடைகால படிப்பாகும். இப்படிப்பானது, கணித சிக்கல்களைத் தீர்ப்பதற்கான திறனை அளிக்கிறது.
இப்படிப்பை முடித்த பலர், TIFR, ISI, IISc, CMI, IIT and University of Wisconsin போன்ற பல்வேறான கல்வி நிறுவனங்களில், கணித ஆராய்ச்சியாளர்களாக பணியாற்றுகிறார்கள்.

>>>இந்தியாவின் சிறந்த பல்கலைகள்

2012ல் இந்தியாவில் உள்ள பல்கலைகளில், பாடப் பிரிவுகள், சிறப்பு தகுதி, சேர்க்கை முறை, மாணவர்கள், ஆசிரியர்களின் கல்வியறிவு, தேர்ச்சி விகிதம், தேர்வு முறை முதலியவற்றை உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிடும் சிறந்த பல்கலைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் 45 இடங்களை பெற்ற பல்கலைகள்
1. டில்லி பல்கலை  டில்லி
2. ஜவஹர்லால் நேரு பல்கலை  டில்லி
3. பனாரஸ் இந்து பல்கலை  வாரணாசி
4. கோல்கட்டா பல்கலை  கோல்கட்டா
5. சென்னை பல்கலை  சென்னை

>>>அரசு கலை-அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு 3 நாள் பயிற்சி

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில், 55க்கும் மேற்பட்டோர் புதிய முதல்வர்களாக நியமிக்கப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு, நிர்வாகம் சார்ந்த, மூன்று நாள் பயிற்சி, சென்னையில் நேற்று துவங்கியது. மாநிலத்தில், 69 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், 55 கல்லூரிகளில், முதல்வர்கள் இல்லாமல், பொறுப்பு நிலையில், பலர் பணியாற்றி வந்தனர். சமீபத்தில், தகுதி வாய்ந்தவர்களுக்கு, முதல்வர்களாக பதவி உயர்வு செய்து, உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.

>>>சென்னையில் ஐ.ஐ.எம்., கிளை

இந்தியாவில் தற்போது 13 ஐ.ஐ.எம்.,(இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்) கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் திருச்சி ஐ.ஐ.எம்., நிறுவனமும் ஒன்று.
இக்கல்லூரியில் 2011, ஜூன் 15ம் தேதி முதல், வகுப்புகள் தொடங்கப்பட்டன. இங்கு PGPM (PostGraduate Programme) மற்றும் FPM (Fellow Programme in Management) ஆகிய மேலாண்மை படிப்புகள் வழங்கப்படுகின்றன. பெங்களூரு ஐ.ஐ.எம்., மேற்பார்வையில் இது செயல்படுகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC Group 4 - Answer Key - Part B & Part C

        TNPSC குரூப் 4 - விடைக் குறிப்புகள் - பகுதி ஆ - பொது அறிவு மற்றும் பகுதி இ - திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவுத் தேர்வு - 12-07-...