கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>எம்.பி.ஏ.க்களில் 21% பேர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள்..!.?

இந்தியாவில் மேலாண்மைப் (எம்.பி.ஏ) படிப்பை முடிக்கும் பட்டதாரிகளில் வெறும் 21 சதவிகிதம் பேர் மட்டுமே பணியில் சேருவதற்கு தகுதி படைத்தவர்களாக இருக்கிறார்கள் என தனியார் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான ஆய்வில் தெரியவந்துள்ளது.
மெரி ட்ராக் (MeriTrac) என்ற அந்த நிறுவனம் கடந்த 2007ம் ஆண்டு இதே போன்று நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், 25 சதவிகித் மேலாண்மைப் பட்டதாரிகள் பணிக்கு தகுதியானவர்கள் என்ற புள்ளிவிவரம் தெரியவந்தது.
நாடு முழுவதும் உள்ள் 25 தலை சிறந்த பிசினஸ் ஸ்கூல் உட்பட, 100 மேலாண்மைக் கல்வி பயிற்றுவிக்கும் 100 கல்வி நிறுவனங்களில் 2,264 எம்.பி.ஏ. மாணவர்களிடம் இந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது. verbal ability, quantitative ability மற்றும் reasoning ஆகிய பிரிவுகளில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்குரிய மதிப்பெண்களும் வழங்கப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற மாணவர்களில், 52.58% பேர் மட்டுமே verbal ability தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் quantitative ability தேர்வில் 41.17% மாணவர்களும், reasoning தேர்வில் 37.51% மாணவர்களும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பொதுவாக verbal ability தேர்வில் 45% மதிப்பெண்ணும், quantitative ability தேர்வில் 35% மதிப்பெண்ணும், reasoning தேர்வில் 40% மதிப்பெண்ணும் பெற்றாலே தேர்ச்சி பெற்றதாக கருதப்பட்ட இந்த ஆய்விலேயே 21 சதவிகித மாணவர்கள் மட்டுமே பணிக்குச் செல்லத் தகுதியானவர்கள் எனத் தெரியவந்துள்ளது, பிசினஸ் ஸ்கூல் கல்வி நிறுவனங்களின் தரம் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiyam Mobile App New Version Update - Version 1.23.1 - Updated on 26-03-2026

     KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.23.1 *  IFHRMS   Kalanjiyam Mobile App New App New Update  *  Version 1.23.1 *  Updated on 26-03-20...