கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு தமிழகத்தில் 712 பேர் பங்கேற்பு

நாடு முழுவதும், சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு, நேற்று துவங்கியது; தமிழகத்தில், 712 பேர் எழுதுகின்றனர். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பதவிகளில், காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆண்டுதோறும், போட்டித் தேர்வுகளை மத்திய தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., நடத்துகிறது. நடப்பு ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு, மே மாதம் நடந்தது. இதில், நாடு முழுவதும், மூன்று லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், தகுதி பெற்றவர்கள், மெயின் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். தமிழகத்தில், 17 ஆயிரம் பேர், முதல்நிலைத் தேர்வு எழுதியதில், 712 பேர், மெயின் தேர்வுக்கு தகுதி பெற்றனர். நாடு முழுவதும், மெயின் தேர்வு நேற்று துவங்கியது. தமிழகத்தில், மெயின் தேர்வை நடத்தும் பொறுப்பு, அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில், கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஆகிய இரு மையங்களில், நேற்று துவங்கிய மெயின் தேர்வில், 712 பேரும் பங்கேற்கின்றனர். 26ம் தேதி வரை, தேர்வுகள் நடக்கின்றன. ஒவ்வொரு தேர்வரும், ஒன்பது தேர்வுகளை எழுத வேண்டும். ஒவ்வொரு தேர்வுக்கும், தலா, 300 மதிப்பெண்கள். இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதி வாய்ந்த தேர்வர், டில்லியில் நடக்கும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.மெயின் தேர்வு முடிவுகள், இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ வெளியாகும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO Promotion : DSE Proceedings , Dated: 02-12-2025

  16 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நா...