கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டெங்கு ஒழிப்பு உறுதி மொழி : மாணவர்கள் வாசிக்க உத்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், டெங்கு ஒழிப்பிற்கு உறுதிமொழி வாசிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால், திருநெல்வேலி மாவட்டத்தில் பலர் இறந்தனர். மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதையடுத்து, சுகாதாரத்துறையினர், டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, பள்ளி மாணவர்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உறுதிமொழி: டெங்கு பரப்பும் ஏ.டி.எஸ்., கொசுக்களை ஒழிப்பதற்கு, அனைத்து பள்ளிகளிலும் தினமும் இறைவணக்கத்தின் போது, டெங்கு உறுதி மொழியை மாணவர்கள் ஏற்க வேண்டும். வீட்டில் உள்ள தண்ணீரை மூடி வைக்க வேண்டும். மழை நீர் தேங்காமல், உரல், சிரட்டை, டயர்கள், டீக்கப்களை அப்புறப்படுத்த வேண்டும். சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எனது வீட்டை சுத்தப்படுத்துவேன். இதை எனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பொதுமக்களிடமும் நான் எடுத்துக்கூறுவேன். இவ்வாறு தலைமை ஆசிரியர்கள் முன் மாணவர்கள், உறுதிமொழி ஏற்க வேண்டும்.

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,""டெங்கை ஒழிப்பதற்கு மாணவர்கள் பங்கு முக்கியம். மாணவர்களிடம் இந்த கருத்தை பரப்பினால், ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று நாங்கள் கருத்துக்களை பிரதிபலித்தது போல் அமையும்,''என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி ( D.A.) உயர்வு - விரைவில் அறிவிப்பு

  மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி ( Dearness Allowance) உயர்வு - விரைவில் அறிவிப்பு ஜூலை 2025 இல் அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊ...