கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அமலுக்கு வந்தது பள்ளி வாகன விதி

பள்ளி வாகனங்களை பாதுகாப்புடன் இயக்க வகுக்கப்பட்ட, அரசின் புதிய விதிகள், அமலுக்கு வந்த நிலையில், அதை முறையாக செயல்படுத்த, கலெக்டர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு, உள்துறை செயலாளர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார். சென்னை சேலையூரில் பள்ளி சிறுமி ஸ்ருதி, பஸ் ஓட்டையில் விழுந்து பலியானார். இதை தொடர்ந்து, பள்ளி வாகனங்களை விபத்தில்லாமல் இயக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓட்டுனருக்கு ஐந்து ஆண்டு அனுபவம், உதவியாளர்கள், ஓட்டுனர் உரிமத்துடன், குழந்தைகளை கையாளும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தை, மாதம் ஒரு முறை கூட்டி, வாகனங்கள் பராமரிப்பு, டிரைவர், உதவியாளர் குறித்த கருத்து கேட்கவேண்டும். பள்ளி, மாவட்ட அளவில் கமிட்டி அமைக்க வேண்டும். இக்குழு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, பள்ளி வாகனங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்பன, போன்ற விதி முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது, அக்.,1முதல் அமலுக்கு வந்துள்ளது. இதை முறையாக செயல்படுத்த, கலெக்டர்கள், மாநில போக்குவரத்து கமிஷனர், மண்டல போக்குவரத்து அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு, உள்துறை செயலாளர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அறிவியல் பழகு போட்டிகள் (Ariviyal Palagu) குறித்த கால அட்டவணை மாற்றம், கருப்பொருள் மற்றும் உபதலைப்புகள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளிக் கல்வி - வானவில் மன்றம் - 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான அறிவியல் பழகு போட்டிகள் குறித்த கால அட்டவணை மாற்றம், கருப்பொருள் மற்றும் உபதலை...