கேரள சட்டசபையில் தமிழில் பதவி ஏற்ற எம்.எல்.ஏ...



 கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பெற்றது. தொடர்ந்து 2-வது முறையாக முதல்-மந்திரியாக பினராயி விஜயன் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தநிலையில் 15-வது கேரள சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக சபாநாயகர் ரகீம் முன்னிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட 136 பேர் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர். 


பதவி ஏற்ற பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், தங்களுடைய தாய்மொழியான மலையாளத்தில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேவிகுளம் எம்.எல்.ஏ.வான ராஜா, தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். இதேபோல் மஞ்சேஸ்வரம் எம்.எல்.ஏ. அஷரப் கன்னடத்தில் பதவி ஏற்றுக் கொண்டார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...