கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்" -சுகாதார அமைச்சகம் அறிவிப்பு...



 "கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்" -சுகாதார அமைச்சகம் அறிவிப்பு...


இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் கிடைக்கின்றன. இந்த இரண்டுமே கர்ப்பிணி பெண்களிடம் ட்ரையல் பார்க்கப்படவில்லை என்பதால் மத்திய அரசு இவர்களுக்கு இந்தத் தடுப்பூசிகளை பரிந்துரை செய்யாமல் இருந்தது. இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பூசி போடுவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

 

அப்போது பேசிய ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் டாக்டர் பலராம் பார்கவா, கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருப்பதாகவும், இனி கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் எனவும் கூறினார். மேலும் அவர், குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்து பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பரில் பரிசோதனை முடிவுகள் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

 

நாடு முழுவதும் 25.37 கோடி பேருக்கு முதல் டோஸும், 5.42 கோடி பேருக்கு 2-வது டோஸும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணி நிரவல் குறித்த தொடக்கக் கல்வி இயக்குநரகச் செய்தி

பணி நிரவல் குறித்த தொடக்கக் கல்வி இயக்குனரகச் செய்தி (வாட்ஸ் அப் தகவல்) இன்று மற்றும் நாளை (03 & 04/07 / 2025/ இடைநிலை ஆசிரியர்க்கான பணி...