கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் வரும் 10ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் - வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Special fever medical camp at 1000 places in Tamil Nadu on 10th - A special camp is going to be held in Tamil Nadu as viral fever is spreading - Minister M. Subramanian)...

 தமிழ்நாட்டில் வரும் 10ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் - வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Special fever medical camp at 1000 places in Tamil Nadu on 10th - A special camp is going to be held in Tamil Nadu as viral fever is spreading - Minister M. Subramanian)...


தமிழ்நாட்டில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதித்த ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக செல்கிறார்கள். இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-


கொரோனா போன்ற நோய் தொற்று அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் புதுவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதில் சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் 200 வார்டுகளில் 200 முகாம்கள் நடத்தப்படும். பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு சென்று பயன் அடையலாம்.


காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். பொதுவாக வைரஸ் தொற்று ஏற்படுவதால் கூட்டங்களுக்கு செல்வதை தவிர்த்தல், முக கவசம் அணிதல் போன்ற சுய கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிப்பது நல்லது.


இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

5400 தர ஊதியம் தொடர்பாக பெறப்பட்டுள்ள இடைக்கால தடை ஆணை

    Interim Stay order of the Madras High Court regarding 5400 Grade Pay 5400 தர ஊதியம் தொடர்பாக பெறப்பட்டுள்ள, சென்னை உயர்நீதிமன்றத்தின் இட...