பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அவசியம் என்னும் வழக்கு - இன்றைய விசாரணையின் முழு விவரம் - உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன? (Teacher Eligibility Test (TET) Need for promotion case - Full details of today's hearing - What happened in the Supreme Court?)...


  பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அவசியம் என்னும் வழக்கு - இன்றைய விசாரணையின் முழு விவரம் - உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன? (Teacher Eligibility Test (TET)  Need for promotion case - Full details of today's hearing - What happened in the Supreme Court?)...


இன்று (20.11.2023) வழக்கு  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது உண்மை.


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை என்ற என்ற சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதியரசர்கள் கொண்ட பெஞ்ச் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை ஏதும் வழங்கப்படவில்லை 


அதே நேரத்தில் வழக்கு விசாரணைக்கு உகந்தது என விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது 



TET பதவி உயர்வு வழக்கு 


இன்று 20/11/23 உச்சநீதிமன்றத்தில் கோர்ட் எண் எட்டில் நீதிமன்ற அரசர்கள் ஹரிகேசராய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் தலைமையில் TET EXAM தேர்ச்சி பெற்றோருக்கு பதவி உயர்வு வழங்கல் வழக்கானது வந்தது 


வழக்கு dismiss செய்யப்படவில்லை 


இடைக்கால தடை வழங்கப்படவில்லை 


1.12.2023 அன்று வரவேண்டிய வழக்கு சனிக்கிழமை இரவு பட்டியல் இடப்பட்டு இன்று 20/11/23 எடுத்துக்கொள்ளப்பட்டது 


இனி வரக்கூடிய முடிவை பொருத்தே TET EXAM தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படுமா ? இல்லையா ? என்பது தெரியவரும்.





*AIFETO..20.11.2023*


*உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த TETவழக்கின் விசாரணைத் தொகுப்பு...*


🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖


*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:36/2001.*


📕📗📘📙📕📗📘📙📕📗📘📙



*நாம் புலனப் பதிவில் ஏற்கனவே தெரிவித்தபடி உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி TET  சம்பந்தமான வழக்கு இன்று (20.11.2023) விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TET) பெற்றவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தவர்களும், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து அரசு வழக்கறிஞர்களும் அவர்களுடன்  கூடுதல் வழக்கறிஞர்களும் வாதிட்டார்கள். இவ்வழக்கினை இரு அமர்வு நீதியரசர்கள் ஹரிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோர் விசாரித்தார்கள்.*


 *அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் சிங்கி அவர்களுடைய தலைமையில் மூத்த வழக்கறிஞர்களும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சார்பில் வழக்கறிஞர்  கவிதா ராமேஸ்வர்  வாதாடினார்கள்.*


*தமிழ் நாடு அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர்கள்  உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு தடையும் இடைக்காலத் தீர்ப்பும்  வழங்க வேண்டும் என்று வாதிட்டார்கள். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்புக்கு தடை விதிக்க இயலாது, வழக்கினை முழுவதும் விசாரணை செய்து தீர்ப்பினை  வழங்குவதாக  விசாரணையின் போது தெரிவித்தார்கள்.*


 *தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் கொள்கை முடிவு எடுத்து பதவி உயர்வு பெற பணி மூப்பு அடிப்படையில்தான் என்பதை கொள்கை முடிவாக வலியுறுத்தியுள்ளார்கள்.... என்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது.*


 *இந்த வழக்கில் தமிழக ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள்  (டிட்டோஜாக்) சார்பில்  உச்சநீதிமன்றத்தில் இணைத்துக் கொள்ள  திறமையான மூத்த வழக்கறிஞரை கொண்டு மனு செய்ய  திடமிட்டு இருக்கிறோம்.*


 *எப்படி இருந்தாலும் பதவி உயர்வுக்கு பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு அளிக்க முடியுமென்ற அரசின் கொள்கை முடிவு நமக்கு சாதகமான தீர்ப்பினைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.*


 *மற்றபடி எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்!.. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தால் தான் வழக்கிற்கு வலு சேர்க்கும்!.. என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்!..*


*அடுத்த வழக்குவிசாரணை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.*



 *மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர், மதிப்புமிகு  தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரிடம் அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றுள்ள தகவல் தொகுப்பாகும்.*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*


*மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.*


*அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.*


*க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.*


*தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.*


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...