கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உச்சநீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உச்சநீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

TET - சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் நிலைமை - ஒரு பார்வை




TET - சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் நிலைமை - ஒரு பார்வை


* சிறுபான்மை பள்ளிகளுக்கு , கட்டாயக் கல்வி சட்டம் பொருந்தாது என 2014ல் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு  தெளிவுபடுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பரமத்தி எஜுகேசனல் சொசைட்டி தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பை வலியுறுத்தி இதை தெளிவுபடுத்தியுள்ளது. எனவே கட்டாயக் கல்விச் சட்டத்தின் ஒரு பிரிவாக உள்ள தகுதித் தேர்வும் சிறுபான்மை பள்ளிகளுக்கும் தேவையற்றதாகிவிட்டது.


* இதனைத் தொடர்ந்து  02.06.2023-ல், சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு நீதிபதிகள் அமர்வு  வழங்கிய மிக நீண்ட ,விரிவான தீர்ப்பில் பக்கம் 128 - ல் para 71 -ல் உச்சநீதி மன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு தகுதித் தேர்வு பொருந்தாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


* இந்த தீர்ப்பை எதிர்த்துத்தான்  உச்சநீதிமன்றத்தில் இவ்வளவு காலமாக வழக்கு நடைபெற்று வந்தது. அதில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுபெற தகுதித் தேர்வு தேவையில்லை என்றும், ஆனால் சிறுபான்மை பள்ளிகளில் நியமனம் பெற தகுதித் தேர்வு கட்டாயம் என்று தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.


* இந்த மேல்முறையீட்டில் சிறுபான்மை பள்ளிகளுக்கு TET தேர்ச்சி தேவை என்ற மேல் முறையீட்டை 19.02.2025 தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது.


இந்நிலையில்


* கடந்த 01.09.2025 அன்று உச்சநீதிமன்றத்தின்  இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் , ஆசிரியப் பணியில் 55 வயதைத் தாண்டியவர்கள் தவிர மற்ற அனைவரும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால்  சிறுபான்மைப் பள்ளிகளைப் பொறுத்தவரை , ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பின்மீது , 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு ஏதும் வழங்க வாய்ப்பு இல்லாததால், அதன் மீது தீர்ப்பு ஏதும் வழங்காமல் , சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு, ஏற்கனவே 5 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு குறித்து தலைமை நீதிபதியே முடிவு செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

 

* இதன் மீது உச்சநீதிமன்ற நீதிபதி எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. வேறு வழக்கும் பதிவு செய்யப்படவும் இல்லை.


* எனவே தற்போது சிறுபான்மைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அறிவிப்போ அல்லது எவ்வித வழக்கோ நிலுவையில் இல்லை.


* ஆகவே, 01.09.2025 அன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு, சிறுபான்மைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களைக் கட்டுப்படுத்தவில்லை என்பதைப் புரிந்து கொள்ளவும் 



ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பேட்டி

 


மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு..


தைரியமாக இருங்கள், எல்லாவற்றிற்கும் தீர்வுகள் உண்டு"


ஆசிரியர்களுக்கான நல்ல தீர்ப்பினை பெற்றுத் தருவது அரசின் கடமையாக நினைக்கிறேன் - தைரியமாக இருங்கள், எல்லாவற்றிற்கும் தீர்வுகள் உண்டு - ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் உடனான ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பேட்டி


I think it is the government's duty to provide a good solution for teachers - Be brave, there are solutions for everything - Interview with School Education Minister Anbil Mahesh after consultation with teachers' union executives regarding the Supreme Court verdict regarding the Teacher Eligibility Test (TET)



>>> முழுமையான காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




TET Exam குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு - நம் அமைச்சரும், அரசும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு அரணாக நிச்சயம் இருப்பார்கள் - ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர்

 

 

TET Exam குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு - நம் அமைச்சரும்,  அரசும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு அரணாக நிச்சயம் இருப்பார்கள் - ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளரின் பதிவு


ஆசிரியச் சொந்தங்களுக்கு வணக்கம்…


TET தேர்வு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து, பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்கள் வழியாகவும், ஆசிரியர்களின் What’s App குழுக்கள் வழியாகவும் வந்துகொண்டே இருக்கின்றன..

அரசுப்பள்ளிகளில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமல்ல, தனியார் பள்ளியில் பணிபுரிபவர்களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும் என்பதால் இதனைப்பற்றிய ஒரு தெளிவான கருத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்..

இந்த தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பிருந்தே, இந்த வழக்கில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்னும் நிலைப்பாட்டுடன்தான் தமிழ்நாடு அரசும்,
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் இந்த வழக்கில் தொடர்ந்து இருந்து வந்தனர்.

தற்போது தீர்ப்பு சாதகமாக வராவிட்டாலும் கூட, தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் எந்த ஆசிரியரும் பாதிக்கபட மாட்டார்கள். அதற்குத் தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் எடுப்போம். அது சட்டப்பூர்வமாக இருந்தாலும் சரி, அரசின் நிலைப்பாடாக இருந்தாலும் சரி என ஊடகங்கள் வழியே மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களைப் பாதுகாக்கும் அரணாக இருப்போம் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொன்னது தவிர,

தமிழ்நாடு அரசோ, நமது பள்ளிக்கல்வித்துறையோ இதுகுறித்த எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஊடகங்களில் வரும் யூகங்களுக்கும், அரசியல் ரீதியாக வரும் எதிர்மறையான பரப்புரைகளுக்கும் ஆசிரியர்கள் யாரும் இடம்கொடுக்காமல், எவ்வித பதட்டமுமின்றி தங்களது பணியினை வழக்கம்போல தொடருவோம்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்து நம்மை காக்கப்போவது நமது தமிழ்நாடு அரசின் திட்டமிடலும், நமது பள்ளிக்கல்வித்துறை முன்னெடுக்கப்போகும் நடவடிக்கைகளுமே ஆகும். எனவே இதுசார்ந்த நிலையில் அரசு எடுக்கப்போகும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதும், இதனை பொறுமையாக எதிர்கொள்வதுமே நமது செயல்பாடாக இருக்க வேண்டும்.

ஆசிரியர்களால் வளர்ந்தவன் நான் எனச் சொல்பவர் நம் அமைச்சர் . அதனால்தான் தமிழ்நாட்டில் உள்ள எந்தப் பள்ளிக்குள் சென்றாலும் ஆசிரியர்களின் இருக்கையில் அமராமல் வேறொரு இருக்கையில் அமர்ந்து, ஆசிரியர்களின் மாண்பைப் போற்றி வருகின்ற நம் அமைச்சரும், நம் அரசும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு அரணாக நிச்சயம் இருப்பார்கள்..

நன்றி

சிகரம் சதிஷ்குமார்
ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர்

ஆசிரியர் தகுதித் தேர்வு - உச்சநீதிமன்றத் தீர்ப்பு - ஆசிரியர் கூட்டணி அறிக்கை



ஆசிரியர் தகுதித் தேர்வு - உச்சநீதிமன்றத் தீர்ப்பு - ஆசிரியர் கூட்டணி அறிக்கை


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*மாநில மையம்* 

*நாள்: 03.09.2025*

*******************

*TET வழக்கு!*


*உச்சநீதிமன்றத் தீர்ப்பு!*


*அடுத்த கட்ட நகர்வுகள் என்ன?*

********************

*பேரன்புமிக்க ஆசிரியப் பெருமக்களே! வணக்கம்.*


*ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) தொடர்பாக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 01.09.2025 அன்று வெளிவந்துள்ளது.அத்தீர்ப்பு வெளிவந்தவுடன் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் மட்டுமல்ல; பொதுமக்கள் மத்தியிலும் கூட ஒரு வகையான பதட்டமும், பரபரப்பும் தொற்றிக் கொண்டது. இப்படி ஒரு தீர்ப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை.இப்படி ஒரு வழக்கு நடந்ததை அறியாத பொதுமக்கள் கூட தற்போது பணியில் உள்ள,55 வயது நிறைவடையாத ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றால்தான் பணியில் தொடர முடியும் என்ற தீர்ப்பைக் கேட்டு ஆச்சரியத்தோடும், ஆதங்கத்தோடும் பேசிக் கொண்டதைக் காண முடிந்தது. அந்த அளவுக்கு இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பொதுமக்கள் மத்தியில்கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.*


*இந்தத் தீர்ப்பு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய மன உளைச்சலையும்,உளவியல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்தியா முழுவதும் பொருந்தக் கூடியது. இந்தியா முழுவதும் உள்ள ஒன்றிய அரசின் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்,28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றிய ஆட்சிப் பகுதிகளின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இத்தீர்ப்பு பொருந்தக் கூடியது. உதாரணமாக தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் என அனைவரும் தங்களது பணியைத் தொடர்வதற்கும், பதவி உயர்வில் செல்வதற்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் போனால் போகிறதென்று 55 வயது நிரம்பிய ஆசிரியர்களுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இது போன்ற ஒரு தீர்ப்பைக் கடந்த காலங்களில் நாம் கேள்விப்பட்டதில்லை. பொதுவாக கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009 நடைமுறைக்கு வந்த பின்பு தான் ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது நடைமுறைக்கு வந்தது. அதன்பின்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால்,கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்பது கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத தீர்ப்பாக அமைந்துவிட்டது.முன் தேதியிட்டு அமல்படுத்தப்பட்டுள்ள இத்தீர்ப்பு இயற்கை நீதிக்கு முரணாக உள்ளது.*


*தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் ஒருவர் ஆசிரியராக நியமனம் பெற பல்வேறு தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது.முதலில் குறிப்பிட்ட கல்வித் தகுதியோடு ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு அவர் ஆசிரியராக பணியாற்ற தகுதியானவர் என்று அரசே சான்றிதழ் வழங்குகிறது. இவ்வாறு சான்றிதழ் பெற்றவர்கள் ஒரு காலத்தில் வேலைவாய்ப்பக முன்னுரிமையின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.அது சமூக நீதியாக அமைந்திருந்தது.ஆனால், தற்போது ஆசிரியர் பயிற்சி பெற்ற ஒருவர் மீண்டும் ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டுகளில் பணி நியமனம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவர், ஆசிரியர் நியமனத்திற்கென்று மீண்டும் ஒரு தேர்வை எழுத வேண்டும். அதில் வெற்றி பெற்றரே ஆசிரியராகப் பணியில் சேர முடியும்.*


*ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர்களாக நியமனம் பெற்ற ஒரு சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு,கல்வி உரிமைச் சட்டம் 2009ஐ பின்பற்றி தகுதித் தேர்வு தொடர்பாக 29.07.2011இல் NCTE வெளியிட்ட அறிவிக்கைக்கு முன்பு நியமனம் பெற்று,பதவி உயர்வு பெற்ற எவரும் தகுதி தேர்வு எழுதத் தேவையில்லை எனவும், அதற்குப் பின்பு நியமனம் பெற்றவர்கள் மற்றும் பதவி உயர்வு பெறுபவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியிருந்தது.*


*கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி புதிதாக ஆசிரியராக நியமனம் பெறுவதற்கு மட்டுமே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது இல்லை என்ற வாதத்தின் அடிப்படையில் தான் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிலரால் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவ்வாறு உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது தவறு என்ற கருத்தும் அன்றே சிலரால் எடுத்துக் கூறப்பட்டது. முடிந்தவரை உயர்நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு, மேல்முறையீட்டு மனு ஆகியவற்றைச் செய்திருக்க வேண்டும் என்பது சில மூத்த வழக்கறிஞர்களின் கருத்தாக இருந்தது. ஆனாலும் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று விட்டதால் அந்த வழக்கில் தமிழ்நாடு அரசும் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்களான 100 ஆசிரியர்கள் சார்பிலும், டிட்டோஜாக் பேரமைப்பின் இணைப்புச் சங்கங்களின் உறுப்பினர்களான 100 ஆசிரியர்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனி நபர்களாலும் பல்வேறு சங்கங்களாலும் தொடரப்பட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரணை செய்து 01.09.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்புத் தான் ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் நிலை குலைய வைத்த இந்த தீர்ப்பு.*


*இந்த வழக்கின் விசாரணையில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு ஆதரவாகவே வாதிட்டது.பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. ஆனால், ஒன்றிய அரசின்  NCTE சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் ஆசிரியர் நியமனம்,பதவி உயர்வு ஆகிய இரண்டுக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என வாதாடினார்கள் என்பதையும் இங்கே நாம் குறிப்பிட்டுக் கூற வேண்டும்.*


*உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் 55 வயதுக்கு உட்பட்ட, தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், அவ்வாறு தேர்ச்சி பெறவில்லை எனில் அவர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும், அவர்கள் ஏற்கனவே ஆற்றிய பணிக் காலத்தைக் கணக்கிட்டு ஓய்வுக்காலப் பணப்பலன்களை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. இந்த வரிகள் மிகக் கடுமையானதாகப் பார்க்கப்படுகிறது.இதன் மூலம் ஆசிரியர்களின் பணி அனுபவம் முற்றிலுமாகப் புறந்தள்ளப்பட்டுள்ளது.எந்த ஒரு பணியிலும் அனுபவம் என்பது மிக மிக முக்கியமானது. அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் ஆற்றும் பணி மிகவும் நேர்த்தியாக இருக்கும். எனவே தான் பல தனியார் நிறுவனங்கள் பணி அனுபவத்திற்கே முன்னுரிமை அளிக்கின்றன. அதிலும் குறிப்பாக அனுபவம் வாய்ந்த ஆசிரியருடைய கற்பித்தல் என்பது, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் பயன்படும். அனுபவம் வாய்ந்த ஒரு ஆசிரியர் மாணவர்களின் உளவியலைப் புரிந்து, அவர்களது கற்றல் நிலையை உணர்ந்து, தனது கற்பித்தல் திறனை பயன்படுத்துகிறார்.எனவே, அனுபவம் வாய்ந்த ஆசிரியருடைய கற்பித்தல் பணி என்பது சிறப்புக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.எனவே தான் தற்போதும் கூட தமிழ்நாட்டில் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. ஆனால், தற்போது 30 ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்தவர்கள் கூட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியராகவே தொடர முடியும் என்பது அவர்களது அளப்பரிய பணி அனுபவத்தை அலட்சியப்படுத்துவதாக உள்ளது. ஆசிரியர்களின் திறமையை அளவிட தகுதித் தேர்வு ஒன்றே அளவுகோல் என்று கூறுவது எவ்விதத்திலும் பொருத்தமானது அல்ல.*


*உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஊடக விவாதங்களில் சிலர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதில் ஆசிரியர்களுக்கு என்ன சிரமம் இருக்கிறது? என்று கூட கேள்விகள் கேட்கிறார்கள். ஆசிரியர்களின் திறமையை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆசிரியர்கள் திறமையானவர்கள்; அறிவிச்சிறந்தவர்கள்.ஆனால், தேர்வு எழுதுவதற்கென்று ஒரு வயது இருக்கிறது. அந்த வயதைக் கடந்த ஆசிரியர்களைத் தேர்வு எழுதச் சொல்வது என்பது உளவியல் நெறிமுறைகளுக்கு மாறானது. உதாரணமாக தற்போது நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மருத்துவ படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள்.இதற்கு முன்பு நீட் தேர்வு இல்லாத காலத்தில் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து தற்போது தலைசிறந்து விளங்கும் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இதில் அவர்களது பணி அனுபவம் என்பது முக்கியமானது. அப்படிப்பட்ட தலைசிறந்த மருத்துவர் தற்போது நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவராக பணியாற்ற முடியும் என்று கூறினால் அது சரியாக இருக்குமா? 25 வயதில் இந்திய ஆட்சிப்பணித்  தேர்வில் வெற்றி பெற்று 25,30 ஆண்டு காலமாக உயர் அலுவலராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒருவரை தற்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறினால் பொருத்தமாக இருக்குமா? இதேபோன்று நீதித்துறை உட்பட அனைத்து துறைகளிலும் தகுதித் தேர்வு என்று ஆரம்பித்தால் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள்? என்பதை நாம் எதார்த்தமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.*


*அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களைப் பணியை விட்டு நீக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மிகவும் ஆபத்தானது. இதே போன்ற தீர்ப்பு எதிர்காலத்தில் பிற துறைகளின் பணியாளர்களுக்கும் வராது என்று சொல்லி விட முடியாது. ஒரு சட்டமோ அல்லது அரசாணையோ அது பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தான் நடைமுறைக்கு வரும்.இதுவரை அப்படித்தான் நடைமுறை இருந்துள்ளது. ஆனால்,ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்ட தேதிக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முன் தேதியிட்டு அது நடைமுறைக்கு வருகிறது என்று சொல்வது மிகவும் பொருத்தமற்றதாக உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து உருவான இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் இந்தியா முழுமைக்குமான பிரச்சனையாக மாறியுள்ளது. ஆனால்,இந்தத் தீர்ப்பின் தாக்கம் மற்ற மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களால் இன்னும் பெரிய அளவில் உணரப்படவில்லை என்றே தெரிகிறது. அங்குள்ள மாநில அரசுகள் இந்தத் தீர்ப்பை அமல்படுத்தும் போது தான் அதன் பாதிப்பை அவர்கள் உணரக்கூடும். ஆனால், தமிழ்நாட்டில் தற்போது இது பற்றி எரிகிற பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.இந்தச் சூழலில் தமிழ்நாட்டு ஆசிரியர்களை பதட்டமும், பரபரப்பும் தொற்றிக் கொண்டுள்ளது.*


*தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் "உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு ஆதரவாக நிற்கும் என்றும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்றும் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.இன்றைய சூழலில் ஆறுதல் தரக்கூடியது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட டிட்டோஜாக் பேரமைப்பின் இணைப்புச் சங்கங்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக தொடர்ந்து சட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இத்தீர்ப்பை எவ்வாறு சட்டப்பூர்வமாக அணுகுவது என்பதையும், மேல்முறையீடு, மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. அதையும் தாண்டி தமிழ்நாடு அரசு ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்திட அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் டிட்டோஜாக் பேரமைப்பு தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்த உள்ளது.எனவே, ஆசிரியர்கள் பதட்டமான மனநிலையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வழக்கம்போல் கற்பித்தல் பணியைச் சிறப்பாக ஆற்ற வேண்டும்.* 


*நம்முடைய கணக்கீட்டின்படி உச்சநீதிமன்றத் தீர்ப்பை பின்பற்றி தகுதித் தேர்வு நடத்தப்பட்டால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேல் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்படும். ஒருவேளை அவ்வாறு தேர்வு நடத்தப்பட்டால் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கென சிறப்புத் தகுதித் தேர்வு(Special  TET)தான் நடத்தப்படும். அதற்குரிய அறிவிப்புகள், அதற்கான பாடத்திட்டங்கள், அதற்கான பயிற்சி ஆகியவற்றை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும்; நிச்சயம் வழங்கிடும். இதற்குப் பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. எனவே, ஆசிரியர்கள் பதட்டமோ, பரபரப்போ அடையத் தேவையில்லை. நிச்சயமாக ஓய்வு பெறும் வரை அனைவரும் ஆசிரியர்களாகப் பணியாற்றுவோம்.*


*அடுத்து நடைபெறவுள்ள TET தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற தேவையில்லாதகுழப்பம் பல ஆசிரியர்களுக்கு உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள TET தேர்வை எழுதுவதற்கு விருப்பமுள்ளவர்கள் எழுதலாம். அது அவர்களுடைய சொந்த விருப்பம். ஆனால், ஒருவேளை பணியில் உள்ளவர்களுக்குத் தகுதி தேர்வு நடத்தப்பட்டால் அது "சிறப்புத் தகுதித் தேர்வாக (Special TET) நடைபெறும். அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதை நாம் அரசிடம் நிச்சயமாக வலியுறுத்துவோம். அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.*


*இந்நிலையில் அடுத்து நடைபெறும் தகுதித் தேர்வு எழுதுவது, அதற்கு முன் அனுமதி பெறுவது தொடர்பாக ஆர்வ மிகுதியில் சில சங்கப் பொறுப்பாளர்களும்,சில வட்டாரக்கல்வி அலுவலர்களும் பல்வேறு செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவது ஏற்புடையதாக இல்லை.*


*உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு தற்போது சட்ட ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவ்வாறு சட்ட ஆலோசனை மேற்கொண்டு அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடாத நிலையில் ஆர்வக்கோளாறில் சில சங்கப் பொறுப்பாளர்களே செயல்படுவது தவறானதாகும். சங்கத்தின் மாநில தலைமை பல்வேறு சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து தெளிவான ஒரு அறிக்கை கொடுப்பதற்கு முன்பே கீழ் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பிரச்சனையின் நுணுக்கத்தை, அதன் தீவிரத்தை உணராமல் பொதுவெளியில் கருத்துக்களை பகிர்வது என்பது எவ்விதத்திலும் சரியான நடவடிக்கை அல்ல.அது பதட்ட நிலையில் உள்ள ஆசிரியர்களை மேலும் குழப்பவே உதவும்.எனவே, ஆசிரியப் பெருமக்கள் எவ்வித மன உளைச்சலுக்கும் ஆளாகாமல் தெளிந்த உள்ளத்தோடும், மகிழ்ச்சியோடும் கல்விப் பணியை ஆற்ற வேண்டும்.உச்ச நீதிமன்றத் தீர்ப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னால் நாம் முந்திச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு விஷயத்தில் தமிழ்நாடு அரசு நமக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதிட்டது. எனவே, தற்போது நாம் தமிழ்நாடு அரசின் பின்னால் நிற்போம். அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு முடிவு செய்யும்.*

********************

*தோழமையுடன்*

 *ச.மயில்*

 *பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி : பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் - பா.ம.க. தலைவர் மருத்துவர்.அன்புமணி ராமதாஸ் அறிக்கை



உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி : பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க சிறப்பு தகுதித்தேர்வு நடத்த வேண்டும் - பா.ம.க. தலைவர் மருத்துவர்.அன்புமணி ராமதாஸ் அறிக்கை


கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்; அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சட்டத்தின்படி சரியாக இருந்தாலும் லட்சக்கணக்கான ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக்கூடியதாகும்.


இந்தியாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8ஆம் வகுப்பு வரை  இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதியுதவி வழங்குவதால், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது அடிப்படைத் தகுதியாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் 2011&12ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டதால், அதன்பின் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தான் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அதற்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? என்ற வினாவுக்கு விடையளிக்கும் வகையில் தான் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.


உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்தத் தீர்ப்பின்படி தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்து 8537 ஆசிரியர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுவர். அதேபோல், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவர். இவர்கள் தவிர தனியார் பள்ளிகளில் பணியாற்றுவோரில் சுமார் 2 லட்சம் பேர் வேலை இழப்பர். அவர்களில் பெரும்பான்மையினர் 50 வயதைக் கடந்தவர்கள் எனும் நிலையில் நடப்புப் பாடத்திட்டத்தின்படி அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது மிகவும் சவாலான ஒன்றாகும். 50 வயதைக் கடந்த ஆசிரியர்களின் குடும்பங்களில் பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற செலவுகள் இருக்கும் என்பதால், குடும்பத் தேவைகளை கருத்தில் கொண்டு அவர்கள் பணியில் தொடர வேண்டியது கட்டாயமாகும். இத்தகைய சூழலில் அவர்கள் அடுத்த இரு ஆண்டுகளில் பணி விலக வேண்டும் என்றால் அவர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும். அதிலும் குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இல்லாத ஆசிரியர்களின் நிலை இன்னும் மோசமாகும்.


கல்வி உரிமைச் சட்டப்படி தகுதித் தேர்வு கட்டாயம் என்ற அடிப்படையில் தான் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால், எதார்த்தத்தின் அடிப்படையில் பார்த்தால் ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வுத் தேவையில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடும் இது தான். அதனால் தான் 2012ஆம் ஆண்டிலிருந்தே இந்தத் தேர்வை எதிர்த்து வருகிறது. ஆசிரியர் பணியைப் பொருத்தவரை ஒருவர் சிறப்பாக கற்பிப்பதை அவருக்கு வழங்கப்படும் பயிற்சியும், அனுபவமும் தான் தீர்மானிக்குமே தவிர, தகுதித் தேர்வு தீர்மானிக்காது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அடுத்த இரு ஆண்டுகளில் பணி நீக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள ஆசிரியர்களில் பலர் 15 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டவர்கள். அந்த ஆசிரியர்கள் அவர்களின் பணிக்காலத்தில் ஏராளமான மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரை உருவாக்கியிருக்கக் கூடும். சில ஆசிரியர்கள் இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி அதிகாரிகளைக் கூட உருவாக்கியிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெறவில்லை என்பதற்காக பணி நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி ஆகும்.


இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன் தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் போட்டித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். அவர்களும் இப்போது தகுதித்தேர்வு  எழுத வேண்டும் என்பது நியாயமற்றது. இந்தியா முழுவதும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு இல்லை. அவ்வாறு இருக்கும் போது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும்  தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது சரியல்ல. இது தொடர்பான நியாயங்களை உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்க தமிழக அரசு தவறியதன் விளைவு தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்; அது தான் தீர்வு காண வேண்டும்.


கல்வி உரிமை சட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பாக பணியில் சேர்ந்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும்  தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அதிலும் வெற்றி கிடைக்கவில்லை என்றால், பாதிக்கப்படவுள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தி, அவர்கள் அனைவரும் பணியில் நீடிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.


ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு : தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பள்ளிக்கல்வி இயக்குநரிடம் கோரிக்கை மனு

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு : தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பள்ளிக்கல்வி இயக்குநரிடம் கோரிக்கை மனு 


தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் உறவுகளுக்கும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர் சொந்தங்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள்.


யாரும் எதிர்பார்த்திராத  வகையில் நேற்று வெளிவந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும், கலக்கத்தையும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.


கட்டாய கல்வி சட்டத்தில் குறிப்பிடாத சில விஷயங்களை தங்களுக்குண்டான அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணை பிறப்பித்திருப்பது துரதிஷ்டவசமானது அதாவது கட்டாய கல்வி சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பணியில் நீடிக்க முடியும் என்ற தன்னிச்சையான உத்தரவு லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தையும் வேதனையும் ஏற்படுத்தி உள்ளது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.


இது குறித்து சட்ட வல்லுனர்களிடம் தொடர்ந்து கலந்து ஆலோசித்து வருகிறோம்.


மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.


அதாவது தமிழ்நாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கிற எந்த ஒரு ஆசிரியருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம்.


ஆசிரியர் நலன் காத்திடும் திராவிட முன்னேற்றக் கழக அரசு மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாய்நாடு திரும்பியவுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம் நிச்சயம் எந்த ஒரு ஆசிரியரையும் இந்த அரசும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் கைவிட மாட்டார்கள்


கடைசி ஆசிரியரை காப்பாற்றும் வரை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் களத்தில் நிற்கும் என்று உறுதி மொழியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். நமக்காக மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர்களும் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஆராய்ந்து வரும் செய்திகள் நமக்கு மிகப்பெரிய ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.


தொடர் முயற்சி வெற்றி கிட்டும் வரை தொடரும் ........

நம்பிக்கையுடன்,


என்றென்றும் ஆசிரியர் நலனில்,

கு.தியாகராஜன்,

மாநில தலைவர்,

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.



>>> கோரிக்கை கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



TET சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விளைவாக எந்த ஒரு ஆசிரியரும் பாதிக்கப்படாத வண்ணம் தமிழகத்தில் உரிய நடவடிக்கை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு அளித்த கடிதத்தின் நகலினை இன்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர். ச.கண்ணப்பன் அவர்களிடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் அருமை அண்ணன் கு.தியாகராஜன் அவர்கள் மற்றும் மாநிலப் பொருளாளர் அவர்கள்  வழங்கி வலியுறுத்திய நிகழ்வு


உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஆசிரியர்கள் பதற்றம் : பணி பாதுகாப்பை உறுதி செய்ய சிபிஐ எம் வலியுறுத்தல்

 உச்சநீதிமன்றத் தீர்ப்பால் ஆசிரியர்கள் பதற்றம் : பணி பாதுகாப்பை உறுதி செய்ய சிபிஐ எம் வலியுறுத்தல்



பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

 


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு


5 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் கால அளவைக் கொண்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை. 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கால அளவு பெற்றுள்ள ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


29/7/2011க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணியில் தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம்.


29-07-2011க்கு முன்பு நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் பதவி உயர்வு பெற தகுதித்தேர்வு அவசியம்.


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.


ஒரு ஆசிரியர் தனது பணியை தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது


 ஆசிரியர் தகுதி தேர்வில் எழுதி தேர்ச்சி பெற்றால் தான் அவர் அடுத்த நிலை பதவி உயர்வை அடைய முடியும் என்றும் தீர்ப்பு


 பதவி உயர்வைத் தாண்டி பணியில் தொடரவே ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமானது


இன்று வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பின் குறிப்புகள் வருமாறு..


 அனைத்து ஆசிரியர்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


 சர்வீஸில் இறுதி நிலையில் இருக்கும் அதாவது 55 வயதுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள் அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அவர்கள் பணியில் தொடரலாம்.


 ஆனால் பதவி உயர்வு வேண்டுமென்றால் அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


 அனைத்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கால நிர்ணயம்..


 பதவி உயர்வுக்கு கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.



தீர்ப்பின் முழுமையான விவரம் விரைவில்...




பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம் : உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகிறது

 

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு  அவசியம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பானது நாளை காலை 10:30 மணி அளவில் வாசிக்கப்படும்


TET Judgement will be on 01.09.2025


நாளை (01-09-2025) காலை பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு  அவசியம் என்ற சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் மூலமாக மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பானது நாளை காலை 10:30 மணி அளவில் வாசிக்கப்படும் என சற்று முன் நமது வழக்கின் வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் நமது பொதுச் செயலாளர் அவர்களை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்


எனவே நாளைய தினம் தீர்ப்பு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது


தகவல் பகிர்வு : மாநில மையம் , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி



 

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை (TET is Compulsory for Promotion) என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வழக்கு எண்: 37664 - 2023 தொடர்பான விவரம் (Details related to the case number: 37664 - 2023 filed by the Tamil Nadu Teachers' Federation in the Supreme Court against the High Court's Judgment that Teacher Eligibility Test is required for promotion)...






பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை எனும் தீர்ப்பை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தொடர்ந்த வழக்கு நிலவரம் குறித்து வழக்கறிஞர் திருமதி. நளினி சிதம்பரம் அவர்களை மாநிலப் பொதுச்செயலாளர் அய்யா செ.முத்துசாமி Ex.MLC அவர்கள், மாநிலப் பொருளாளர் திரு.பா.பெரியசாமி, ஆசிரியர் பேரணி நிர்வாக ஆசிரியர் திரு.வடிவேல், துணைப் பொதுச்செயலாளர் திரு.க.சாந்தகுமார் மற்றும் தலைமை நிலைய செயலாளர் திரு.கருப்பண்ணன் ஆகியோர் சந்தித்து  விவாதித்த பொழுது






சம வேலைக்கு சம ஊதியம் - உச்ச நீதிமன்ற தீர்ப்பு : ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் கவலை



சம வேலைக்கு சம ஊதியம் - உச்ச நீதிமன்ற தீர்ப்பு : ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் கவலை


Equal Work Equal Pay - Supreme Court Judgment 



>>> உச்சநீதிமன்ற தீர்ப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ஒப்பந்த உதவி பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் மிகக் குறைந்த ஊதியம் குறித்து உச்ச நீதிமன்றம் தீவிர கவலை தெரிவித்துள்ளது, மேலும் "நமது ஆசிரியர்களை நாம் நடத்தும் விதம் குறித்து நமக்கு ஆழ்ந்த கவலை உள்ளது" என்றும் கூறியுள்ளது. 


தொடர்பான செய்தி:

ஒப்பந்த உதவி பேராசிரியர்களுக்கு, குறிப்பாக ரூ.30,000 போன்ற குறைந்த ஊதியம் வழங்கப்படுவது, ஆசிரியர்களின் நலன் மற்றும் பணி சூழல் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. 


செயல்பாட்டுக்கான தேவை:

இந்த செய்தி "குரு பிரம்மா என புகழ்ந்தால் மட்டும் போதாது" என்ற கருத்துடன் இணைந்து வருகிறது. ஆசிரியர்கள் மீது ஆழ்ந்த மரியாதை கொண்டிருந்தாலும், அவர்களுக்கு போதுமான ஊதியம் மற்றும் சிறந்த பணி சூழலை வழங்குவது அவசியம் என்பதை இது வலியுறுத்துகிறது. 


உச்ச நீதிமன்றத்தின் கவலை:

ஊதிய விவகாரம்:

ஆசிரியர்கள், குறிப்பாக ஒப்பந்த பணியாளர்கள் எதிர்கொள்ளும் மிகக் குறைந்த ஊதியங்கள், அவர்களின் பணிக்கான மதிப்பைக் குறைப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. 


நீதியான ஊதியம்:

ஆசிரியர்களுக்கு, சம ஊதியம் மற்றும் நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக உள்ளன. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் கவலை, இதற்கான ஒரு தீர்வை நோக்கி செல்கிறது. 


பணியின் மதிப்பு:

ஆசிரியர்கள் வழங்கும் கல்வி மற்றும் சமூகப் பணியின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதுடன், அவர்களுக்கு அதற்கேற்ப ஊதியமும், கௌரவமும் வழங்கப்பட வேண்டும். 


சுருக்கமாக, குறைந்த ஊதியம் என்பது ஆசிரியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் மகத்தான சேவையின் மதிப்பையும், கண்ணியத்தையும் குறைப்பதாக உச்ச நீதிமன்றம் கவலை கொண்டுள்ளது. 


குஜராத் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் உதவிப் பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் குறைந்த சம்பளம் குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.


உதவிப் பேராசிரியர்களின் ஊதியக் கட்டமைப்பை, அவர்கள் செய்யும் பணிகளின் அடிப்படையில், அரசு பகுத்தறிவுப்பூர்வமாக நிர்ணயம் செய்ய வேண்டிய நேரம் இது என்று நீதிமன்றம் கூறியது.


ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர்கள் தற்போது மாதச் சம்பளம் ரூ.30,000/- பெறுகிறார்கள், தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் மாதத்திற்கு தோராயமாக ரூ.1,16,000/- மற்றும் வழக்கமான நியமனம் பெற்றவர்கள் ரூ.1,36,952/- பெறுகிறார்கள், இருப்பினும் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான பணிகளைச் செய்கிறார்கள்.


"உதவிப் பேராசிரியர்கள் மாதந்தோறும் ரூ. 30,000/- ஊதியம் பெறுவது கவலையளிக்கிறது. அரசு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு, அவர்கள் செய்யும் செயல்பாடுகளின் அடிப்படையில் ஊதியக் கட்டமைப்பை பகுத்தறிவு செய்ய வேண்டிய நேரம் இது" என்று நீதிபதி பி.எஸ். நரசிம்ம மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு குறிப்பிட்டது .


"  நமது ஆசிரியர்களை  நாம் நடத்தும் விதம் குறித்து எங்களுக்கு கடுமையான கவலை உள்ளது," என்று நீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது.



பொது விழாக்களில் " குருபிரம்ஹ குருவிஷ்ணு குருதேவோ மகேஸ்வரா" (குருவே உயர்ந்த யதார்த்தம் (பிரம்மம்); அந்த குருவை நான் வணங்குகிறேன்) என்று தொடர்ந்து ஓதினால் மட்டும் போதாது , ஏனெனில் நாம் உண்மையிலேயே அதை நம்பினால், அது தேசம் அதன் ஆசிரியர்களை நடத்தும் விதத்தில் பிரதிபலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.


ஆசிரியர்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்றும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அரசியலமைப்பு கோட்பாட்டின் அடிப்படையில் அவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.


"எந்தவொரு தேசத்தின் அறிவுசார் முதுகெலும்பாக கல்வியாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளனர், ஏனெனில் அவர்கள் எதிர்கால சந்ததியினரின் மனதையும் குணத்தையும் வடிவமைப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள். அவர்களின் பணி பாடங்களை வழங்குவதைத் தாண்டி செல்கிறது - இது வழிகாட்டுதல், ஆராய்ச்சியை வழிநடத்துதல், விமர்சன சிந்தனையை வளர்ப்பது மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மதிப்புகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இருப்பினும், பல சூழல்களில், அவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மற்றும் அங்கீகாரம் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உண்மையிலேயே பிரதிபலிக்கவில்லை.


கல்வியாளர்கள் கண்ணியமாக நடத்தப்படாமலோ அல்லது மரியாதைக்குரிய ஊதியங்கள் வழங்கப்படாமலோ, அது ஒரு நாடு அறிவுக்கு அளிக்கும் மதிப்பைக் குறைத்து, அதன் அறிவுசார் மூலதனத்தைக் கட்டியெழுப்புவதில் ஒப்படைக்கப்பட்டவர்களின் உந்துதலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. நியாயமான ஊதியம் மற்றும் கண்ணியமான சிகிச்சையை உறுதி செய்வதன் மூலம், அவர்களின் பங்கின் முக்கியத்துவத்தை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம், மேலும் தரமான கல்வி, புதுமை மற்றும் அதன் இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் ஆகியவற்றிற்கான நாட்டின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறோம்.


அனுமதிக்கப்பட்ட பதவிகளில் காலியிடங்கள் இருந்தபோதிலும், தற்காலிக நியமனங்களைச் செய்வதாக நீதிமன்றம் குஜராத் மாநிலத்தை விமர்சித்தது


ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் நடத்தப்பட்ட விதம் மற்றும் அனுமதிக்கப்பட்ட பதவி காலியாக இருந்தபோதிலும், அரசு அவர்களை தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் எவ்வாறு தொடர்ந்து நியமிக்கிறது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் ஆரம்பத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.


"சமநிலைக்கான நியாயமான கூற்றை விட, உதவிப் பேராசிரியர் பதவியை வகிக்கும் விரிவுரையாளர்கள், கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இவ்வளவு குறைந்த சம்பளத்தில் தொடர்ந்து ஊதியம் பெறுவதையும், வாழ்வதையும் பார்ப்பது மிகவும் கவலையளிக்கிறது. அனுமதிக்கப்பட்ட 2720 பதவிகளில், 923 பதவிகள் மட்டுமே வழக்கமாக நியமிக்கப்பட்ட ஊழியர்களால் நிரப்பப்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், கல்வி நடவடிக்கைகளின் தொடர்ச்சியை உறுதி செய்யவும், மாநில அரசு தற்காலிக மற்றும் ஒப்பந்த நியமனங்களை நாடியுள்ளது. 158 பதவிகள் தற்காலிக நியமனங்கள் மூலம் நிரப்பப்பட்ட நிலையில், 902 பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டன. இந்த நடவடிக்கை 737 பதவிகளை காலியாக வைத்தது, மேலும் 525 புதிய உதவிப் பேராசிரியர் பதவிகள் மற்றும் 347 விரிவுரையாளர் பதவிகள் அனுமதிக்கப்பட்டதன் மூலம் இந்த எண்ணிக்கை உண்மையில் அதிகரித்தது.


அனுமதிக்கப்பட்ட பதவிகள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருப்பதால், மாநில அரசு தொடர்ந்து தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமனங்களைச் செய்கிறது."


ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர்கள், வழக்கமாக நியமிக்கப்படும் உதவிப் பேராசிரியர்களின் அதே செயல்பாடுகள் மற்றும் கடமைகளைச் செய்பவர்கள், 2012 ஆம் ஆண்டில் ரூ. 40,412 ஊதியமாகப் பெற்ற நிலையில், தற்போது ரூ. 30,000 மட்டுமே பெறும் சூழ்நிலையை நீதிமன்றம் கையாண்டிருந்தது. அவர்கள் சம ஊதியம் கோரினர்.


உதவிப் பேராசிரியர்களின் ஊதிய விகிதத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை மனுதாரர்களுக்கு அனுமதித்த நீதிமன்றம், ஒப்பந்த அடிப்படையிலான இந்த ஊழியர்கள் கடந்த இரண்டு தசாப்தங்களாக "மிகக் குறைந்த" மாதாந்திர ஊதியத்தில் பணியாற்றி வருவதால், உண்மைகள் "மிக மோசமானவை" என்று குறிப்பிட்டது. தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் கூட இதேபோன்ற ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்ற உண்மை இருந்தபோதிலும் இது நடந்தது.


நீதிமன்றம் இரண்டு செட் மேல்முறையீடுகளை விசாரித்தது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர்கள் வழக்கமான உதவிப் பேராசிரியர்களின் குறைந்தபட்ச ஊதிய விகிதத்திற்கு (ஆச்சார்யா மாதவி பவின் & மற்றவர்கள் vs குஜராத் மாநிலம்) தகுதியுடையவர்கள் என்றும், தற்காலிக நியமனங்கள் செய்யப்பட்டவர்கள் மே 8, 2008 (குஜராத் மாநிலம் vs கோஹெல் விஷால் சாகன்பாய் & மற்றவர்கள்) க்கு முன்பு இதேபோல் நியமிக்கப்பட்டவர்களுக்கு இணையாகப் பெற வேண்டும் என்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் உத்தரவை எதிர்த்து குஜராத் அரசு ஒரு மேல்முறையீடு செய்தது.


அவர்கள் ரிட் மனுக்களை தாக்கல் செய்வதற்கு முந்தைய 3 ஆண்டுகளில் இருந்து, அதாவது 2012 முதல் 8% விகிதத்தில் நிலுவைத் தொகையைப் பெற உரிமை உண்டு என்பதை டிவிஷன் பெஞ்ச் ஒரு மாற்றத்துடன் உறுதி செய்தது. இந்த மேல்முறையீடுகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


இரண்டு தீர்ப்புகளின் தொடர்ச்சியாக, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர்களால், வழக்கமான அல்லது தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கு இணையாகக் கோரி இரண்டாவது மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் வழக்கமாக நியமிக்கப்படுபவர்களுக்குச் சமமாக இருக்க வேண்டும் என்று கூறி, அவர்களின் மனுவை ஒரு தனி நீதிபதி அனுமதித்தார். அவர்கள் முதலில் நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து வருடாந்திர ஊதிய உயர்வுகள் மற்றும் பிற சலுகைகளை வழங்கியது. இருப்பினும், மேல்முறையீட்டில், ஒற்றைத் தீர்ப்பு மேற்கண்ட இரண்டு முடிவுகளையும் பின்பற்றவில்லை என்று டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளித்தது மற்றும் எந்த தர்க்கரீதியான முடிவுக்கும் வராமல் அவர்களின் மனுவை முற்றிலுமாக தள்ளுபடி செய்தது.


இவர்கள் குஜராத்தின் பல்வேறு அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள்.


இரண்டாவது மேல்முறையீட்டில், முதல் மேல்முறையீட்டுத் தொகுப்பில் டிவிஷன் பெஞ்ச் முன் அரசு இதேபோன்ற வாதங்களை முன்வைத்ததாகவும், அது சரியாக நிராகரிக்கப்பட்டது என்றும், அதற்கு எதிரான சிறப்பு விடுப்பு மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும் தீர்ப்பளித்தது. இதேபோன்ற நிலைப்பாட்டில், தற்போதைய வழக்கில் இதேபோன்ற தர்க்கத்தை நீதிமன்றம் ஏற்காமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. முந்தைய உத்தரவுகளை தனி நீதிபதி பின்பற்றவில்லை என்று டிவிஷன் பெஞ்ச் கண்டறிந்திருந்தால், அதை ஒதுக்கி வைத்துவிட்டு மனுவை ஒரு தர்க்கரீதியான முடிவில் தீர்த்து வைத்திருக்க வேண்டும் என்றும் அது கூறியது.


இரண்டாவது மேல்முறையீட்டை ஒதுக்கி வைத்துவிட்டு, அது கூறியது: " உதவிப் பேராசிரியர்கள் மாதந்தோறும் ரூ. 30,000/- ஊதியம் பெறுவது கவலையளிக்கிறது. அரசு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு, அவர்கள் செய்யும் செயல்பாடுகளின் அடிப்படையில் ஊதிய அமைப்பை பகுத்தறிவு செய்ய வேண்டிய நேரம் இது. குஜராத் உயர் நீதிமன்றத்தின் ஆச்சார்யா மாதவி (உச்ச) மற்றும் கோஹெல் விஷால் சாகன்பாய் (உச்ச) தீர்ப்புகளை நாங்கள் தற்போது பின்பற்றி வருகிறோம். மேல்முறையீட்டாளர்களுக்கும், அதேபோன்ற பதவியில் உள்ள உதவிப் பேராசிரியர்களுக்கும் நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்ற வேண்டியிருப்பதால், உயர் நீதிமன்றத்தில் தங்கள் தீர்வுகளைத் தேடிக்கொள்ள நாங்கள் அதை விட்டுவிடுகிறோம். உயர் நீதிமன்றம் அதையே பரிசீலித்து சட்டத்தின்படி உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்."


வழக்கு விவரங்கள்: ஷா சமீர் பரத்பாய் & ORS. எதிர். குஜராத் & ORS மாநிலம். | SLP (C) எண். 1347 OF 2024


மேற்கோள்: 2025 Livelaw (SC) 827



>>> உச்சநீதிமன்ற தீர்ப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


தெரு நாய்களைப் பிடிப்பவர்களைத் தடுப்பவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பின் முழு விவரம்



தெரு நாய்களைப் பிடிப்பவர்களைத் தடுப்பவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பின் முழு விவரம்


 தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது தடை செய்யப்படுகிறது : உச்ச நீதிமன்றம்


தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை - உச்சநீதிமன்றம் தீர்ப்பின் முழு விவரம்


"நாடு முழுவதும் பொருந்தக்கூடிய ஒட்டு மொத்த வழிகாட்டு நெறிமுறைகளை தெரு நாய்கள் விவகாரத்தில் ஏற்படுத்தப் போகிறோம்" - உச்சநீதிமன்றம்


பிடித்த இடத்திலேயே விட வேண்டும்

தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை விதித்தது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில் பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தியதற்கு பிறகு அவற்றை பிடித்த இடத்திலேயே விட்டு விட வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கி உள்ளது.




வெறி நாய் கடி விவகாரம்

இந்தியாவில் வெறி நாய் கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், செய்தித்தாள்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த வாரம் வழக்கு பதிவு செய்திருந்தது.


ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, டெல்லியில் சுற்றித் திரியும் அத்தனை தெரு நாய்களையும் அடுத்த எட்டு வாரத்திற்குள் பிடிக்க வேண்டும் என்றும், அவற்றை முறையான காப்பகம் அமைத்து பராமரிக்க வேண்டும் என்றும் நாய்களுக்கு தேவையான கருத்தடை செய்வது தடுப்பூசி போடுவது உள்ளிட்டவற்றை அரசு மற்றும் டெல்லி மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. 


உத்தரவுக்கு எதிராக மனு

இந்த உத்தரவுக்கு எதிராக சிலர் உச்சநீதிமன்றத்தை நாடி இருந்த நிலையில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்திப் மேத்தா மற்றும் என் வி அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதி அமர்வு அமைக்கப்பட்டது. 


இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 14 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.


மத்திய அரசு வாதம்

அப்போது டெல்லி அரசு சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜென்ரல் துஷார் மேத்தா, "ஒரே நாளில் பத்தாயிரம் பேருக்கு மேல் இந்தியாவில் நாய் கடிக்கு ஆளாகி வருகின்றனர்.


ஒரு வருடத்திற்கு 20000 நபர்கள் வரை இந்த தெரு நாய் கடியினால் உயிரிழப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.


 பெரும்பாலும் குழந்தைகள்தான் தெரு நாய்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இங்கு யாரும் விலங்குகளை வெறுப்பவர்கள் கிடையாது. அவற்றை யாரும் கொல்ல வேண்டும் என சொல்லவில்லை. அவற்றை மனிதர்களிடமிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று தான் சொல்கிறோம்" என கூறினார்


மூத்த வழக்கறிஞர் கபில் சிபில்

அப்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்த மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், "இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எதிர் தரப்பிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.


இவற்றைக் காப்பகங்களில் வைக்க வேண்டும் என நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. ஆனால், அந்த காப்பகங்கள் எங்கே இருக்கிறது.


பெரும்பாலான இடங்களில் ஒட்டுமொத்தமாக நூற்றுக்கணக்கான நாய்கள் அடைக்கப்படுகின்றது. அவை ஒன்றுக்கொன்று சண்டையிடும் பொழுது பெரும்பாலானவை இறந்து போகின்றன.



தெரு நாய்களுக்கு உரிய கருத்தடை உள்ளிட்டவற்றை செய்யும் பொழுது அவற்றின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும். ஆனால், அதை விடுத்து இப்படி ஈவு இரக்கமின்றி செயல்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.


டெல்லிக்கு வழங்கப்பட்ட இந்த உத்தரவை பின்பற்றி பிற மாநிலங்களும் நாய்களைப் பிடிக்க தொடங்கியிருக்கின்றன என கூறினார்.

பிறகு வழக்கின் தீர்ப்பு  தேதி குறிப்பிட்டாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.


உச்சநீதிமன்றம் தீர்ப்பு:

இந்த வழக்கில் 22-08-2025 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,


"கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், டெல்லியில் உள்ள அனைத்து நாய்களையும் எட்டு வார காலத்திற்குள் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருந்தது.


தற்பொழுது அந்த தீர்ப்பில் நாங்கள் சில மாற்றங்களை மேற்கொண்டிருக்கிறோம். அதன்படி டெல்லியில் பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு அந்த நாய்களை எங்கிருந்து பிடித்தார்களோ அந்த பகுதியிலேயே விட்டுவிட வேண்டும் 


தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையாக தடை

மூர்க்கத்தனமான ராபிஸ் நோயை பரப்புவதற்கான வாய்ப்புகள் உள்ள நாய்களை தொடர்ந்து காப்பகங்களில் அடைத்து வைக்க வேண்டும்.


தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பதை முழுமையாக தடை செய்கிறோம். தெருவோர நாய்களுக்கு உணவளிக்க கூடியவர்கள் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் தான் உணவளிக்க வேண்டுமே தவிர கண்ட இடங்களில் உணவுகளை போடக்கூடாது .


தெரு நாய்களுக்கு உணவளிக்க தனி இடத்தை உருவாக்க வேண்டும். 


நாய் கடி விவகாரம் தொடர்பாக நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுகிறோம்.


நாடு முழுவதும் பொருந்தக்கூடிய ஒட்டு மொத்த வழிகாட்டு நெறிமுறைகளை தெரு நாய்கள் விவகாரத்தில் ஏற்படுத்தப் போகிறோம்.


தெரு நாய்கள் விவகாரத்தை எவ்வாறு கையாள்வது, இதற்கென்று எத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது என்று இது தொடர்பாக அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்.


மாநகராட்சிகள் தெரு நாய்களை பிடிக்க பிறப்பித்த முந்தைய உத்தரவை தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுக்கிறது.


தெரு நாய்களை பிடிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ளலாம் எனவும் அனுமதி வழங்குகிறோம்.


நாய்களைப் பிடிப்போரை தடுப்பவர் மீது 25 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்"  என தீர்ப்பு வழங்கப்பட்டது.


Aadhar என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல - Supreme Court



 ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல - உச்ச நீதிமன்றம்


Aadhaar is not proof of citizenship - Supreme Court


ஆதார் என்பது சரியான அடையாள ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.


பிகார் சிறப்பு வாக்களர் திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.


பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது வாக்காளர்களின் ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்ற நிபந்தனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.


பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.


இந்த பணியில், ‘பிகாரில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் பெயர் இடம்பெற்றவா்கள், எந்தவொரு ஆதார ஆவணங்களையும் தாக்கல் செய்யத் தேவையில்லை. ஆனால், அந்தப் பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள், தங்களின் குடியுரிமையை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.


இதை எதிர்த்து பல்வேறு கட்சிகள் மற்றும் ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.


இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமனற்ம், பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது வாக்காளர்களின் குடியுரிமை ஆவணமாக ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று  பரிந்துரை செய்திருந்தது.



இது குறித்து பதிலளிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஏற்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


5000 அரசுப் பள்ளிகள் மூடப்படும் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்


 உத்தரப் பிரதேசத்தில் சுமார் 5000 அரசுப் பள்ளிகள் மூடப்படும் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்


5000 அரசுப் பள்ளிகளை மூடுவது தொடர்பான உத்தரவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 5000 தொடக்கப் பள்ளிகளை மூடுவது தொடர்பான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை தள்ளுபடி செய்ததை அடுத்து, இந்த பள்ளிகளை மூடுவது தொடர்பான உத்தரவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. 


உத்தரப் பிரதேச அரசு, இந்தப் பள்ளிகளை மூடி, அவற்றை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்க முடிவு செய்திருந்தது. இந்த முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், அரசாங்கத்தின் முடிவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 


உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளதுடன், இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை பட்டியலிடவும் உத்தரவிட்டுள்ளது. 




திட்டியதால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன் - ஆசிரியர் மீதான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் ரத்து



திட்டியதால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன் - ஆசிரியர் மீதான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் ரத்து


திட்டுவது ஒருவரை தற்கொலைக்கு தூண்டுவதாகாது: உச்ச நீதி மன்றம்


 பள்ளி மற்றும் விடுதிக்கு பொறுப்பான குற்றம் சாட்டப்பட்டவர், மற்றொரு மாணவனின் புகாருக்குப் பிறகு மாணவனை திட்டினார். அதைத் தொடர்ந்து, மாணவர் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் 


ஒரு மாணவனை திட்டி தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது. 


 பள்ளி மற்றும் விடுதியின் பொறுப்பாளரான குற்றம் சாட்டப்பட்டவர், மற்றொரு மாணவரின் புகாரைத் தொடர்ந்து இறந்தவரை திட்டியுள்ளார். சம்பவத்திற்குப் பிறகு, மாணவர் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 


ஒரு சாதாரண மனிதனால் திட்டுவது இவ்வளவு துயரத்தை விளைவிக்கும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது என்று நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 306 இன் கீழ் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக ஆசிரியரை விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 


"இந்த விஷயத்தை முழுமையாகப் பரிசீலித்த பிறகு, இது தலையிடுவதற்கு ஏற்ற வழக்கு என்று நாங்கள் கருதுகிறோம். மேல்முறையீட்டாளர் சரியாகச் சமர்ப்பித்திருப்பது போல, ஒரு மாணவரின் புகாரின் அடிப்படையில்  திட்டுதல், அதுவும் ஒரு மாணவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு இவ்வளவு துயரத்தை விளைவிக்கும் என்று எந்த ஒரு சாதாரண மனிதனும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது," என்று பெஞ்ச் கூறியது. 


இறந்தவருக்கு எதிராக மற்றொரு மாணவர் செய்த புகார் கவனிக்கப்பட்டு, தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இதுபோன்ற திட்டுதல் மிக சாதாரணம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


"இந்த நீதிமன்றத்தின் கருத்தில் கொள்ளப்பட்டதில்,  ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை நிலைப்பாட்டின் கீழ், இறந்தவர் செய்த தற்கொலையைக்காக, எந்த  காரணத்தையும் (தவறு பற்றிய அறிவு) மேல்முறையீட்டாளருக்குக் காரணம் காட்ட முடியாது," என்று பெஞ்ச் கூறியது. 


அந்த நபர், தனது வழக்கறிஞர் மூலம், தனது பதில் நியாயமானது என்றும், இறந்தவர் மீண்டும் குற்றத்தைச் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், விடுதியில் அமைதியையும் பேணுவதற்கும் ஒரு பாதுகாவலராக  திட்டியதாகவும் மட்டுமே கூறினார். தனக்கும் இறந்தவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை என்று அவர் சமர்ப்பித்திருந்தார்.


DECLARED BY THE HONOURABLE SUPREME COURT


தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவியை திட்டியதால், அம்மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதனால் அந்த ஆசிரியர் மீது IPC 306-ல் கொலைவழக்கு பதியப்பட்டது. இந்த அப்பீல் வழக்கில் உச்சநீதிமன்றம தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதில் “மாணவர்களை ஆசிரியர்கள் திட்டுவது எதார்த்தமானது என்றும், அவ்வாறு திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டது துரதிஷ்டமானது என்றும், இந்த வழக்கில் ஆசிரியர் சற்றும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்துவிட்டது. அதனால், சம்மந்தப்பட்ட ஆசிரியர் தற்கொலைக்குத் தூண்டினார் என்று கருதமுடியாது. தற்கொலைக்குத் தூண்டும் எண்ணத்தில் ஆசிரியர் திட்டியிருக்கிறார் என்பதற்கு தகுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதால், இவ்வழக்கில் இருந்து ஆசிரியரை விடுவிப்பதான உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.”

” The Appellant acted as a responsible authority addressing a complaint; no evidence suggested he intended the tragic outcome, the court said. Furthermore, to establish the charge of abetment to suicide, it is essential to prove elements such as instigation, provocation, or intentional aid in committing the act; without proof of these ingredients, the offence of abetment to suicide is not made out”. 

THANGAVEL Vs THE STATE OF TN


மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு - தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியை வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு - Maternity Leave Case


 மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு - தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியை வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு - Maternity Leave Case


மகப்பேறு விடுப்பு அரசியலமைப்பு சட்டம் அளித்த உத்தரவாதம் - தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியை வழக்கில் Supreme Court Judgment - Maternity Leave Case


மகப்பேறு விடுப்பு என்பது மகப்பேறு சலுகைகளில் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றும் இது பெண்களுக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்த உத்தரவாதம் என்றும் தமிழ்நாடு பெண் அரசு ஊழியர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியை ஒருவர் அரசு பணியில் சேருவதற்கு முன்பு முதலாவது திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகளின் தாயாக இருந்தார். முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகள் இருவரும் முதல் கணவரிடம் உள்ளனர். இந்த நிலையில் அரசு பள்ளியில் ஆசிரியை பணியில் சேர்ந்த பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அவர், கருவுற்றிருந்தார்.


இதற்காக அவர் தமது பள்ளிக்கல்வித்துறையின் வாயிலாக பிரசவ கால விடுமுறைக்காக விண்ணப்பித்த போது, ஏற்கனவே அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக அவருக்கு பிறக்க உள்ள குழந்தைக்கு பிரசவ கால விடுமுறை அளிக்க இயலாது என கூறப்பட்டது. 


இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு நபர் நீதிபதி அமர்வில் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி பார்த்திபன், "ஆசிரியைக்கு 2021ஆம் ஆண்டு அக்டோபர் 11 முதல் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி வரை ஒரு ஆண்டு காலத்துக்கு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது," என்று உத்தரவிட்டார்.


இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் இருநபர் நீதிபதி கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதிகள், "திருமணம் ஆன அரசு பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு என்பது சட்டப்பூர்வமானதுதான். ஆனால், அடிப்படை உரிமை அல்ல," என்று கூறியது. எனவே, ஒரு நபர் நீதிபதி அளித்த உத்தரவுக்கு தடை விதித்தது.


இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆசிரியை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரின் மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் புயான் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "மகப்பேறு சலுகைச் சட்டம் என்பது பெண்களில் மகப்பேறு விடுமுறை உரிமையை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஒரு தாயாகவும், அரசு ஊழியராகவும் சுதந்திரமான வாழ்க்கை வாழ்வதற்கான சாத்தியங்கள் போன்ற நெகிழ்வு தன்மைகளை பெண்களுக்கு அளிக்கிறது,” என்றனர்.


மேலும் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், “பெண் ஆசிரியைக்கு முந்தைய திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகள் பிறந்திருந்த போதிலும், இப்போதைய குழந்தைக்கும் அவருக்கு மகப்பேறு உரிமை உள்ளது. பெண் ஆசிரியை அரசு பணியில் சேருவதற்கு முன்பு முதல் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். அரசு வேலையில் சேர்ந்த பின்னர், அவர் இரண்டாவது திருமணம் மூலம் குழந்தை பெற்றிருக்கிறார். எனவே, அரசு பணியில் சேர்ந்த பிறகு அவருக்கு குழந்தை பிறந்ததை முதல் குழந்தையாக கருத வேண்டும். மேலும் முதல் திருமணம் மூலம் பிறந்த இரு குழந்தைகள் அவரிடம் இல்லை. முதலாவது கணவரிடம் அதாவது குழந்தைகள் அவரது தந்தையுடன் வசிக்கின்றனர்.


எனவே, மகப்பேறு கால விடுமுறை என்பது மகப்பேறு கால பலன்களோடு இணைந்ததாகும். உடல் நல உரிமை, தனியுரிமை, சம உரிமை, பாகுபாடு காட்டாமை மற்றும் கண்ணியத்திற்கான உரிமை உள்ளிட்டவை போல சர்வதேச மனித உரிமை சட்டம் உள்ளிட்டவற்றில் இனப்பெருக்க உரிமைகள் இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாடு அரசின் கொள்கையின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நிச்சயமாக பாராட்டத்தக்க நோக்கமாகும், மேலும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்குவதன் நோக்கமும் அதைப் போன்றதுதான். நாட்டில் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இரண்டு குழந்தைகள் விதிமுறை என்ற நோக்கமும், தற்போதைய வழக்கு சூழ்நிலைகளில் மகப்பேறு விடுப்பு உட்பட பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்குவதும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல. சமூக நோக்கத்தை அடைய, இரண்டும் ஒரு நோக்கமாக மற்றும் பகுத்தறிவு முறையில் இணக்கமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.


High School HM promotion case adjourned - Supreme Court


உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றம் அறிவிப்பு


Hearing of High School HeadMaster promotion case adjourned - Supreme Court


உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கின் அடுத்த விசாரணை 17.07.2025 அன்று நடைபெறும் என இந்திய உச்சநீதிமன்றம் அறிவிப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்



உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்


உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய். தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக் காலம் மே 13-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண  கவாயை நியமிக்க ஒன்றிய அரசுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை வழங்கியுள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து மே 14-ம் தேதி 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பார்.


உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தற்போதைய தலைமை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் மே 14-ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பரில் பதவியேற்றார். இவரது பதவிக் காலம் வரும் மே 13-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் மே 14-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.


முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு சஞ்சீவ் கண்ணாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடந்த வாரம் கடிதம் அனுப்பியது. இதனையடுத்து, தனக்கு அடுத்ததாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்புக்கு நீதிபதி பி.ஆர்.கவாயின் பெயரை சஞ்சீவ் கண்ணா பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது. நீதிபதி பி.ஆர்.கவாய் நவம்பர் 2025-ல் ஓய்வு பெற உள்ளதால், சுமார் 6 மாதங்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார்.


முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குப் பிறகு தலைமை நீதிபதி பதவியை ஏற்கும் இரண்டாவது தலித் நீதிபதி கவாய் ஆவார். உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியாக, கவாய் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அவற்றில் மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை உறுதி செய்த தீர்ப்பு மற்றும் தேர்தல் பத்திரத் திட்டத்தை அரசியலமைப்புக்கு விரோதமானது என்று அறிவித்த தீர்ப்பு உள்ளிட்டவை அடங்கும்.



மகாராஷ்டிராவின் அமராவதியில் நவம்பர் 24, 1960-ல் பிறந்த நீதிபதி கவாய், 1985-இல் தனது சட்டப் பணியைத் தொடங்கினார். ஆகஸ்ட் 1992-இல், அவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் உதவி அரசு வழக்கறிஞராகவும், கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் 2000-ஆம் ஆண்டில் அதே அமர்வில் அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றார்.


நீதிபதி கவாய் நவம்பர் 14, 2007 அன்று மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், மும்பையில் உள்ள உயர் நீதிமன்றத்தின் முதன்மை இருக்கையிலும், நாக்பூர் அவுரங்காபாத் மற்றும் பனாஜியில் உள்ள அமர்வுகளிலும் பணியாற்றினார். மே 24, 2019 அன்று உச்ச நீதிமன்றத்திற்கு அவர் பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு அரசின் வழக்கில், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தது உச்சநீதிமன்றம்


வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு அரசின் வழக்கில், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தது உச்சநீதிமன்றம்


ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவு


மாநில மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு: குடியரசுத் தலைவருக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு


மாநில மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என குடியரசு தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்துள்ள உச்சநீதிமன்றம், முடிவெடுப்பதற்கு முன் உச்சநீதிமன்றத்தை அணுகுவது விவேகமானது என்று தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாக அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த 8ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "சட்டப்பேரவை நிறைவேற்றிய ஒரு மசோதாவை நிறுத்திவைத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு செய்தால் அது தொடர்பாக அமைச்சரவை ஆலோசனைப்படி ஒரு மாத காலத்துக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்.


அமைச்சரவையின் ஆலோசனைக்கு புறம்பாக அந்த மசோதாக்களை நிறுத்திவைப்பதாக இருந்தால், ஆளுநர் அதிகபட்சமாக 3 மாதங்களுக்குள் அவற்றை திருப்பி அனுப்ப வேண்டும். அதேவேளை அந்த மசோதாக்கள் மாநில சட்டப்பேரவையில் மறுநிறைவேற்றம் செய்யப்பட்டு மீண்டும் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அந்த மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு ஆளுநரால் பரிந்துரைக்கப்படுமானால் அவற்றின் மீது குடியரசு தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்” என தீர்ப்பளித்தது.


மசோதாக்கள் மீது சட்ட ஆலோசனையை உச்சநீதிமன்றத்திடம் கேட்க குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநில ஆளுநர்களுக்கு கிடையாது. இதை சுட்டிக்காட்டியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ஆளுநர்கள் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தால், அவர் உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை பெறுவது விவேகமானது. அரசியலமைப்பின் பிரிவு 143இன் கீழ் ஒரு மசோதா குறித்த சட்ட ஆலோசனையை குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பது கட்டாயம் அல்ல. என்றபோதிலும், விவேகமான ஒரு நடவடிக்கையாக, குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். ஆளுநர் மசோதாக்களை அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்கு பரிந்துரைப்பதற்கான வழிமுறை மாநில அளவில் இல்லாததால் இது மிகவும் அவசியமானது.” என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


மேலும், "ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு அதன் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை குறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்கு உண்டு. ஒரு தவறான மசோதா சட்டமாக மாறினால் இயற்கையாகவே பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். எனவே, முன்கூட்டியே அத்தகைய ஒரு சட்டம் இயற்றப்படாமல் தடுக்கப்படுமானால் அது நேரத்தையும் பொது வளங்களையும் மிச்சப்படுத்தும். மேலும், பொருத்தமான திருத்தங்களை சட்டமன்றம் மேற்கொள்வதற்கும் வாய்ப்பும் கிடைக்கும்.” என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prize giving ceremony for CM Trophy sports competitions

  முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெறுதல் : மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரின் கடிதம் Prize giv...