கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நல்லதும் கெட்டதும் - இன்றைய சிறுகதை...


நல்லதும் கெட்டதும் - இன்று ஒரு சிறு கதை...


 _*நல்லதும் கெட்டதும்...*_


_வேதனைகளை ஜெயித்து விட்டால்._

_அதுவே ஒரு சாதனை தான்._


_*பிச்சைக்காரர்கள் ஒரு போதும் கோடீஸ்வரர்களைக் கண்டு பொறாமைப்படுவதில்லை.*_

_*தன்னை விட அதிகமாய் பிச்சையெடுப்போரை கண்டு தான் பொறாமைப்படுகிறார்கள்.*_


_உண்மையான உறவு எவ்வாறு இருக்க வேண்டும்?_

_அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்_

_உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்_

_கொட்டியும்_ _ஆம்பலும்_ _நெய்தலும் போலவே_

_ஒட்டி உறுவார் உறவு._

_*~ ஔவையார் (மூதுரை)*_


_*பொருள்:-*_ 

_ஒரு குளத்தில் நீர் நிறைந்திருக்கும் வரை கொக்குகளும் நாரைகளும் அக்குளத்தின் அருகிலே இருந்து அதனால் பயனடையும். ஆனால் குளத்தில் நீர் வற்றிவிட்டால் அவை வேறு குளத்தை நாடி பறந்து போகும். அக்குளத்தில் இருந்த தாமரை மலர்களோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குளத்தை விட்டு பிரியாது அதனுடனே இருக்கும்._


_*அதுபோலவே நம் வாழ்க்கையிலும், இன்பங்களிலும் துன்பங்களிலும் எப்போதும் நம் அருகில் இருப்பவர்களே உண்மையான அன்பு கொண்ட உறவினர்கள்.*_


_ஒரு நாட்டில் கண் பார்வை இல்லாத ஒரு மன்னன் ஆண்டு வந்தான்!_

_அவனுக்கு ஒரு பட்டத்து இளவரசன் இருந்தான்! ஒரு நாள் அவனை அழைத்து மகனே! இந்த தேசத்திற்கு நீ மன்னன் ஆகும் நேரம் வந்து விட்டது! நீ அரியணை ஏற்க வேண்டும் அதற்கு முன் உனக்கு திருமணம் செய்ய வேண்டும் உனக்கு எப்படி பட்ட துணை வேண்டும் என்று சொல்ல!_


_*அதற்கு இளவரசன் அப்பா நம் நான்கு சிற்றரசன் மகள்கள்*_ _*இருக்கிறார்கள் அவர்களில் ஒருவரை நான் தேர்ந்து எடுக்க ஆசைப் படுகிறேன்!*_ _*ஆனால் யாரைத் தேர்ந்து எடுப்பது என்று தெரியவில்லை!*_

_*நீங்கள் தான் அதற்கு உதவ வேண்டும் என்று சொன்னான்.*_ 


_அதற்கு மன்னன் கவலை படாதே அந்த நால்வருக்கும் நான் ஒரு சோதனை வைக்கிறேன்,_ _அதில் யார்_ _வெற்றி_ _கொள்கிறார்களோ அவர்களை_

_நீ திருமணம்_ _செய்து_ _கொள்ளலாம்._ _அதுவரை நீ அரண்மனையில் இரு! உனக்கு உடம்பு சரியில்லை வயிறு வலியில் துடிப்பதாக சொல்லப் போகிறேன் என்றார்._


_*நான்கு இளவரசிகள் அழைக்கப்பட்டார்கள். மன்னன் அவர்களிடம் சொன்னான் பட்டத்து இளவரசன் உடம்பு சரியில்லை அவனுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டு இருக்கு. அதனால் நீங்கள் ஒரு சிறந்த சூப்பை தயார் செய்யுங்கள். முதலில் அரசவையில் அனைவரும் அதை சுவைத்து பார்ப்போம்! எந்த உணவு நன்றாக இருக்கிறதோ அந்த உணவை சமைத்தவர் அடுத்த பட்டத்து இளவரசி ஆவார் என்று சொல்ல!*_


_நான்கு இளவரசிகள் போட்டி போட்டுக் கொண்டு உணவைத் தயார் செய்ய ஆரம்பித்தனர். ஒரு மணி நேரம் கழித்து மன்னரிடம் சுவைக்க எடுத்து வரப்பட்டது!_


_*முதல் இளவரசி சிக்கனை கொண்டு நல்ல சூப் ஒன்றைத் தயார் செய்து இருந்தார்! மன்னர் சுவைத்துப் பார்த்தார் சுவை அலாதியாக இருந்தது.*_


_இரண்டாம் இளவரசி காய்கறிகள் மற்றும் நிறைய மசாலாக்கள் சேர்த்து அருமையான சூப் தயாரித்து இருந்தார்! அதுவும் அமிர்தமாக இருந்தது._


_*மூன்றாவது இளவரசி  வெண்ணெய் சேர்த்து மணக்கும் சூப் ஒன்றை தயார் செய்து இருந்தார்! அதுவும் சுவைக்க அமிர்தம் போல் இருந்தது!*_


_ஆனால் நான்காம் இளவரசி செய்த சூப் உப்பு காரம் மசாலா இல்லாமல் சூடு அதிகம் இல்லாமல் இருந்தது, சுவை ஒன்றும் சொல்லி கொள்ளும் படி இல்லை!_


_*முதல் மூன்று இளவரசியும்*_ _*நான்காவது*_ _*இளவரசியை பார்த்து*_ _*நகைத்தனர்!*_

_*கண்டிப்பாக முதல் மூன்றில் ஒருவர் தான் மன்னன் தேர்ந்து எடுப்பார் என்று முடிவு செய்து இருந்தனர்!*_


_ஆனால் மன்னன்_

_நான்காவது_ _இளவரசியை தேர்ந்து எடுத்தார்!_


அவையில் இருந்த அனைவரும் மன்னனிடம் ஏன் என்று கேட்க அதற்கு மன்னன் சொன்னார், முதல் மூன்று பேரும் எப்படி ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆர்வத்தில் இருந்தார்கள்.


_ஆனால் நான்காவது இளவரசி மட்டும் தான் இளவரசனுக்கு உடம்பு சரியில்லை வயிறு சரியில்லை அதனால் உப்பு, காரம், எண்ணெய் மற்றும் சூடு குறைவாக இருக்கும் சூப்பை அக்கறையுடன் தயார் செய்தார்!


அவர் தான் உண்மையில் குடும்பத்திற்கும் ஏன் நாட்டிற்கும் சிறந்தவராக இருப்பார் என்று தீர்ப்பைச் சொல்லி முடித்தார்!


_உண்மையான உறவு எவ்வாறு இருக்க வேண்டும்_

_உண்மையான உறவு_

_"தாமரை மலர்" போல் இருக்க வேண்டும்._

 

_*எந்த ஒரு  விசயத்தையும் நாம் பார்க்கும் கோணத்திலேயே  இருக்கிறது.*_

 _*நல்லதும்  கெட்டதும்.*_


_நமது கண்கள் சரியாக இருந்தால் இந்த உலகத்தை நமக்குப் பிடிக்கும் ._

_நமது நாக்கு சரியாக இருந்தால் இந்த உலகத்துக்கு நம்மைப் பிடிக்கும்._


_*அமைதியால் நிம்மதி கிடைக்கிறதா*_

 _*இல்லை*_

_*நிம்மதியால் அமைதி கிடைக்கிறதா...*_


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET 2026 Notification For Working Teachers

    TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS - 2026 NOTIFICATION TNTET 2026 Notification For Working Teachers Teachers Recru...