பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து ஆணை - செய்தி வெளியீடு எண். 425, நாள் : 23-02-2025
In order to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them, the Chief Minister constituted a committee consisting of his ministers and ordered
Press Release No. 425, Dated : 23-02-2025
* பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து ஆணையிட்டுள்ளார்.
* இந்தக் குழுவில் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. எ வ வேலு , மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மாண்புமிகு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
* அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நாளை தலைமை செயலகத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...