முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை மற்றும் போராட்டம் குறித்த தகவல்கள்
JACTTO GEO Information about the talks held with the Chief Minister and Ministers and protests
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில மாவட்ட வட்டார பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம்
இன்று மாலை எட்டு முப்பது முதல் ஒன்பது மணி வரை நடைபெற்ற மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் அவர்களுடன் பேச்சு வார்த்தையில்
அமைச்சர்கள், முதல்வர் மற்றும் நிதித்துறை செயலாளர் , அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோருடன் நடைபெற்ற ஆலோசனையின் பின்பு பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் அவர்கள் ஜாக்டோ ஜியோ சார்பாக இன்றைய கூட்டு தலைமை பொறுப்பை ஏற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் கே பி ரக் ஷித், தமிழக தமிழாசிரியர் கழக கௌரவத் தலைவர் புலவர் ஆறுமுகம், அரசு ஊழியர் சங்க தலைவர் சீனிவாசன் ஆகியோரை அழைத்து அரசின் நிலைப்பாடு குறித்து தமது நிலையை விளக்கினார்கள்
அரசு கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து நான்கு வாரத்திற்குள் அறிவிப்பு வெளியிடுவதாக, அரசுக்கு நான்கு வார காலம் கால அவகாசம் கேட்டு போராட்டத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்
அதன் பின்பு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில்
அரசு நான்கு வருட காலம் அவகாசம் எடுத்துக் கொண்டதாலும், மேலும் கால அவகாசம் அளிப்பதை அடிமட்ட தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என்ற நிலையில் நாளைய போராட்டத்தை தொடர்வது என்றும், மதுரை உயர்நீதிமன்ற தடையாணைக்கு இணங்க மறியல் போராட்டத்தை மாற்றி அமைத்து
ஒட்டுமொத்த தற்செயல்விடுப்பு போராட்டம் மற்றும் காலை 11 மணிக்கு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஏகமனதாக தீர்மானித்து ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது
அதன் அடிப்படையில் செயல்பட மாநில மாவட்ட வட்டார பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் நன்றி