கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரூர் துயர நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 நபர்கள் மீது வழக்குப் பதிவு - 3 பேர் உடனடியாக கைது

 கரூர் துயர நிகழ்வு தொடர்பாக வதந்தி பரப்பிய 3 பேர் கைது


கரூர் துயர நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 நபர்கள் மீது வழக்குப் பதிவு - 3 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.


கரூர் சோகம் : வதந்தி பரப்பிய மூவர் கைது, 25 சமூக ஊடகக் கணக்குகள் மீது எஃப்ஐஆர்


கரூர் சோகம் தொடர்பாக வதந்தி பரப்பிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளதோடு, 25 சமூக வலைதளக் கணக்குகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கரூரில் நடைபெற்ற விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட நெரிசலில் ஏராளமானோர் சிக்கிய நிலையில், 41 பேர் வரை உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தகவலறிந்து உடனடியாக கரூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு உயிரிழந்தோர் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, காயம் அடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு கிளம்பினார். துணை முதல்வர் உதயநிதி துபாயில் இருந்து பாதியிலேயே வந்து கரூர் சூழல்களை கவனித்தார். அதேபோல அமைச்சர்கள் கரூரில் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.


அதே சமயம் விஜய் உடனடியாக கரூரிலிருந்து திருச்சி சென்று, திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். சில மணி நேரம் கழித்தே அவரிடம் இருந்து இரங்கல் செய்தி வந்தது. இந்த சூழலில் நடிகர் விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் சதி நடந்திருப்பதாக வதந்தி பரப்பப்பட்டு வந்தது.


இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.


இந்த நிலையில் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.


இவ்வாறு, பொதுவெளியில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இதன் தொடர்ச்சியாக கரூர் சோகம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல் துறை இறங்கியுள்ளது. அதன்படி, சென்னை பெரும்பாக்கம் பகுதியில் பாஜகவை சேர்ந்த சகாயம், மாங்காடு தமிழக வெற்றி கழக நிர்வாகி சிவனேசன், ஆவடி தவெக நிர்வாகி சரத்குமார் ஆகிய மூன்று பேரை வதந்தி பரப்பியதாக கைது செய்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரூர் துயர நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 நபர்கள் மீது வழக்குப் பதிவு - 3 பேர் உடனடியாக கைது

 கரூர் துயர நிகழ்வு தொடர்பாக வதந்தி பரப்பிய 3 பேர் கைது கரூர் துயர நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 நபர்கள் மீது வழக்குப...