பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-11-2025 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள்:- 25.11.2025
கிழமை:- செவ்வாய்கிழமை
*திருக்குறள்:*
பால்:- அறத்துப்பால்
இயல்:- இல்லறவியல்
அதிகாரம்:- புகழ்
*குறள் : 236*
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
*விளக்க உரை:*
ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.
*பழமொழி :*
Pain is the teacher of courage.
வலி தான் தைரியத்தின் ஆசிரியன்.
*இரண்டொழுக்க பண்புகள் :*
1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.
2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.
*பொன்மொழி :*
உங்கள் எதிரிகளிடமும் நீங்கள் அன்பு காட்டுங்கள் .ஏனென்றால், அவர்கள் உங்களை தவறுகளை சுட்டிக்காட்டி நீங்கள் திருந்துவதற்கு வழி ஏற்படுத்துகிறார்கள். பெஞ்சமின் பிராங்கிளின்
*பொது அறிவு :*
01.இந்தியாவின் பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் பெண்மணி யார்?
இந்திரா காந்தி 1971
Indiragandhi-1971
02. பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை முதன் முதலில் வழங்கிய நாடு எது?
நியுசிலாந்து 1893
New zealand - 1893
*English words :*
audacious - bold and daring
tranquil-peaceful and calm
*தமிழ் இலக்கணம்:*
‘ர’& 'ற' கரம்
1.மெய்யெழுத்தை தொடர்ந்து இடையின ர வராது
எ.கா.
நின்ரது
முன்னின்ரு
தவறாக எழுதப் பட்டுள்ளது
2. ஆனால் வல்லின ற மெய்யெழுத்துக்கு பின்னர் வரும்
எ.கா –நின்றது
முன்னின்று
*அறிவியல் களஞ்சியம் :*
அறிவியல் வரலாற்றில் இதுவரை மரபணு மாற்ற CRISPR-Cas9 தொழில்நுட்பம், பல விலங்குகள், தாவரங்கள் ஏன் பாக்டீரியா மீது கூட பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக ஜெர்மனியில் உள்ள பெய்ரூட் பல்கலை, சிலந்திகள் மீது பயன்படுத்தி உள்ளது. மரபணு மாற்றப்பட்ட சிலந்தி ஒளிர்கின்ற சிவப்பு நிற வலையைப் பின்னுகிறது. சிலந்திகளின் வலை நுால் பல துறைகளில் பயன்படுகிறது.
*நவம்பர் 25*
*பிடல் காஸ்ட்ரோ அவர்களின் நினைவுநாள்*
பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.[2]
அமெரிக்காவில் இருந்து 93 மைல் தொலைவில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.
*பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்*
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.
உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
*நீதிக்கதை*
*கழுதையின் தன்னம்பிக்கை*
ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.
காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.
அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.
ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.
இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.
கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.
விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.
வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.
நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்களாக்கிக் கொள்ளவேண்டும், எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும். இத்தோடு நம் கதை முடிந்தது என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.
*இன்றைய செய்திகள்*
25.11.2025
⭐தமிழகத்தில் செயல்படும் அனைத்து உணவகங்களிலும் (சிறிய தேநீர் கடைகளிலிருந்து பெரிய ரெஸ்டாரண்ட்கள் வரை) சமையல் பணிகளிலும், உணவு பரிமாறும் பணிகளிலும் ஈடுபடும் ஊழியர்கள் கட்டாயமாக குடல் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
⭐ 'ஆபரேஷன் சைஹாக் நடவடிக்கை மூலம் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு , பொது மக்களிடம் ரூ.254 கோடிக்கு மேல் மோசடி செய்த 42 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
⭐பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான கராச்சியில் மின்வெட்டு காரணமாக பம்பிங் ஸ்டேஷன்கள் செயல்படாததால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
*🏀 விளையாட்டுச் செய்திகள்*
🏀மகளிர் உலக கோப்பை கபடி: இந்திய அணி சாம்பியன்
இறுதிப்போட்டியில் இந்தியா - சீன தைபே அணிகள் மோதின.
பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா, சீன தைபே அணியை வீழ்த்தியது.
*Today's Headlines*
⭐ Tamil Nadu Food Safety Department has ordered that the employees involved in cooking and serving food in all the restaurants operating in Tamil Nadu (from small tea shops to big restaurants) must get the enteric flu vaccine compulsorily.
⭐ By 'Operation Cyhawk', 42 people who have been involved in cyber crimes and extorted more than Rs 254 crore from the public were arrested by Delhi Police for fraud.
Karachi, one of Pakistan's major cities, has experienced severe water shortages due to power cuts, and the pumping stations are not working.
*🏀 Sports news*
🏀Women's World Cup Kabaddi: Team India is the champion
India and Chinese Taipei teams clashed in the final.
India beat Chinese Taipei in a thrilling match.
Helmet & Multipurpose Cable Lock


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.