இடுகைகள்

தொற்று லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

COVID Vaccine 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டும், 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று...

படம்
 கொரோனா இரண்டாம் அலை சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில் கேரளாவில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு நோய் தொற்று பாதித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா பெரும்தொடானது 2ம் அலையில் உலகையே உலுக்கியது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது கேரள மாநிலத்தில் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி கொண்டவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி நோய் தொற்று பரவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் என பதிவாகி வரும் நிலையில் அதில் 20 ஆயிரத்திற்கு மேல் கேரளாவில் பதிவாகியுள்ளது. தேசிய அளவில் 67.7% மக்களிடம் நோயெதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், கேரளாவில் அது 42.7% ஆக உள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக

இந்தியாவிலேயே முதன் முறையாக அசாம் பெண் டாக்டருக்கு ‘இருவகை’ கொரோனா தொற்று : ICMR மூத்த விஞ்ஞானி தகவல்...

படம்
 இந்தியாவிலேயே முதன் முறையாக அசாம் பெண் டாக்டருக்கு ‘இருவகை’ கொரோனா தொற்று : ஐசிஎம்ஆர் மூத்த விஞ்ஞானி தகவல்... அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் மருத்துவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு வகையான கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் உருமாறிய வைரசான டெல்டா, ஆல்பா உள்ளிட்ட வகையான வைரசுகள் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.  இந்நிலையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் மருத்துவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு வகையான கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக இதுபோன்ற பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் (ஆர்.எம்.ஆர்.சி) மூத்த விஞ்ஞானி டாக்டர் பி.போர்ககோட்டி கூறுகையில், ‘கொரோனா தொற்று எதிர்ப்பு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்ட போதிலும், உருமாறிய வைரஸ்களான டெல்டா, ஆல்பா போன்ற தொற்றுகளால் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  கடந்த மே மாதத்தில், ஆர்.எம்.ஆர்.சி.யின் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பெண் மருத்துவ நோயாளிக்கு இ

பேசினாலே பரவுது! கொரோனா தொற்று - புதிய வழிகாட்டி நெறிமுறைகளில் எச்சரிக்கை...

படம்
  கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், தும்மினாலோ, இருமினாலோ, பேசினாலோ, அவரிடமிருந்து வெளியாகும் எச்சிலின் நுண் துகள்கள், காற்றில் 10 மீட்டர் வரை பரவும். அந்த காற்றை சுவாசிப்பவர்களும், எச்சில் துகள்கள் விழுந்த இடத்தை தொடுபவர்களும், வைரசால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டி நெறிமுறைகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் முதல் அலை, கடந்த ஆண்டு பரவியது. அப்போது, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், 'கொரோனா வைரஸ், மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு எளிதாக தொற்றி விடுகிறது. சமூக இடைவெளி 'ஒருவர் தும்மும் போதும், இருமும் போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை, மற்றொருவர் தொட்டு, முகத்தில் தேய்க்கும்போது, வைரஸ் பரவும்' என தெரிவிக்கப்பட்டது. அதனால், கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க, மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்; 6 அடி துாரம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்' என, சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியது.  இந்நிலைய

தமிழகத்தில் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி...

படம்
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பள்ளிகள் மூடப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. 🛑 பள்ளி ஆசிரியருக்கு கொரோனா: கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள், கிட்டத்தட்ட 300 நாட்கள் கழித்து ஜனவரி 19ம் தேதி திறக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறி இருந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் முதற்கட்டமாக நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் பாடங்களை கற்பித்து வருகின்றனர். 🛑இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஒருவருக்கு தற்போது கொரோனா உறுதியாகி உள்ளது. பள்ளிகளில் மாணவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஆசிரியை ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 19ம் தேதி காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் காணப்பட்ட

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...