COVID Vaccine 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டும், 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று...
கொரோனா இரண்டாம் அலை சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில் கேரளாவில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு நோய் தொற்று பாதித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா பெரும்தொடானது 2ம் அலையில் உலகையே உலுக்கியது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது கேரள மாநிலத்தில் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி கொண்டவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி நோய் தொற்று பரவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் என பதிவாகி வரும் நிலையில் அதில் 20 ஆயிரத்திற்கு மேல் கேரளாவில் பதிவாகியுள்ளது. தேசிய அளவில் 67.7% மக்களிடம் நோயெதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், கேரளாவில் அது 42.7% ஆக உள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக