இடுகைகள்

TAULTAE லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டவ்-தே அதி தீவிரப் புயலாக மாறுகிறது; தமிழகத்தில் 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை; பரவலாக மழை: வானிலை ஆய்வு மையம்...

படம்
  அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘டவ்-தே (TAUKTAE)’’ புயல் சின்னம் காரணமாகத் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழையும், பரவலாக மழையும் பெய்யக்கூடும். கடலில் சூறாவளி 90 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள டவ்-தே புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் பரவலாக மழையும், 3 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: “நேற்று கச்சத்தீவு பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறி தற்போது மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும், அதனைத் தொடர்ந்து 12 மணி நேரத்தில் அதி தீவிரப் புயலாகவும் மாறக்கூடும். இதன் காரணமாக இன்று மே 15 இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக க

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...