>>> 4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.751, Dated: 03-12-2023) வெளியீடு (G.O.Ms.No.751, Dated: 03-12-2023 - Announcement of public holiday tomorrow (04-12-2023) for 4 districts - Government of Tamil Nadu Ordinance)... சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.751, Dated: 03-12-2023) வெளியீடு... “மிக்ஜம்’ புயல் எதிரொலியாக 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது. ‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்