கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் நியமனம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக் கழக துணை வேந்தராக, அண்ணாமலை பல்கலைக் கழகப் பேராசிரியர் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பேராசிரியர் பத்மநாபன் இருந்தார். அவரது பதவிக்காலம் கடந்தாண்டு ஜூலை மாதம் 12ம் தேதியுடன் முடிவடைந்தது. தொடர்ந்து, புதிய துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான குழுவை கவர்னர் அமைத்தார். அக்குழுவின் பரிந்துரையின் பேரில், அண்ணாமலை பல்கலைக் கழக கல்வித் துறை தலைவராக இருக்கும் விஸ்வநாதன் துணை வேந்தராக தேர்வு செய்யப்பட்டார். இவர், வரும் மூன்று ஆண்டுகளுக்கு அப்பதவியில் இருப்பார். இதற்கான அரசு உத்தரவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BLO பணியை செய்யாத ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் செயல்முறைகள்...

   BLO பணியை செய்யாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ...