கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது



Presiding Officers கவனத்திற்கு...

தற்போது ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி எண் உள்ளிட்ட விவரங்களை காட்டுகிறது.


ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே தேர்தல் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்களை காட்டுகிறது. 


பிற மாவட்டங்களில் User Not Found எனக் காட்டுகிறது. 




ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவரை வாக்குச்சாவடி அலுவலர் 1 (PO1) குறியீட்டு வாக்காளர் பட்டியலில் (Marked Copy of Electoral Roll) குறிக்க வேண்டிய முறை


ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவரை வாக்குச்சாவடி அலுவலர் 1 (PO1)  குறியீட்டு வாக்காளர் பட்டியலில் (Marked Copy of Electoral Roll) குறிக்க வேண்டிய முறை


தலைமை வாக்குச்சாவடி அலுவலர் (Presiding Officer) அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டி புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஆண் பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவரை வாக்குச்சாவடி அலுவலர் 1 (PO1)  குறியீட்டு வாக்காளர் பட்டியலில் (Marked Copy of Electoral Roll) குறிக்க வேண்டிய முறை 



This is the correct method - as per PO Handbook.


ஆனால் பெரும்பாலான தேர்தல் பயிற்சி வகுப்புகளில் ஆண் வாக்காளர்களுக்கு குறுக்கு கோடிடவும், பெண்களுக்கு வட்டமிடவும், மூன்றாம் பாலினத்தவருக்கு ஸ்டார் குறியிடவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே தங்கள் பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட வழிகாட்டுதலையும் பின்பற்றலாம். 


EDC மூலம் வாக்களிக்க உள்ளவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை



 EDC மூலம் வாக்களிக்க உள்ளவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை


EDC ஐ வைத்து வாக்களிப்பவர்களும் (தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள்) கண்டிப்பாக வாக்காளர் அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும்.


 எனவே தேர்தல் பணிக்கு செல்லும் பொழுது தேர்தல் பணி சான்றுடன் (Election Duty Certificate) வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று அவசியம் கொண்டு செல்லவும்.




பெருகமணி ரயில்வே கேட் (LC No.65) தற்காலிக மூடல்

 பெருகமணி ரயில்வே கேட் (LC No.65) தற்காலிக மூடல் அறிவிப்பு


​ரயில் பாதை மற்றும் சிலிப்பர் புதுப்பித்தல் பணிகள் காரணமாக, பெருகமணியில் உள்ள ரயில்வே கேட் (LC No.65) தற்காலிகமாக மூடப்படுகிறது.


​நேரம் : 19.04.2026 காலை 8:00 மணி


 முதல் 23.04.2026 மாலை 6:00 மணி வரை.


​மாற்று வழி:


பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிறுகமணி (LUS No.64) மற்றும் காமநாயக்கன்பாளையம் (LC No.63) வழியாகச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.



வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான சுருக்கக் கையேடு - PRO Module

 


Presiding Officer Guide


வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான சுருக்கக் கையேடு - PRO Module 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


22.04.2026 மற்றும் 23.04.2026 அன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ECINET PRO Module செயலியில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் விவரம்



 22.04.2026 மற்றும் 23.04.2026 அன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ECINET PRO Module செயலியில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் விவரம்


PrO App Timeline



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


2% அகவிலைப்படி உயர்வு D.A. Hike

 

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு


2% Dearness Allowance Hike for Central Government Employees


01.01.2026 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 % உயர்வு 

58%லிருந்து 60%ஆக உயர்வு


 மத்திய அரசு ஊழியர்கள் , ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் - செய்தி வெளியீடு 


2% DA Hike - Press Release 



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Cabinet

Azadi Ke Amrit Mahotsav

Cabinet approves additional instalment of Dearness Allowance to Central Government employees and Dearness Relief (DR) to pensioners w.e.f. 01.01.2026


Posted On: 18 APR 2026 3:13PM by PIB Delhi


The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved to release an additional instalment of Dearness Allowance (DA) to Central Government employees and Dearness Relief (DR) to pensioners w.e.f. 01.01.2026 representing an increase of 2% over the existing rate of 58% of the Basic Pay/Pension, to compensate against price rise.

The combined impact on the exchequer on account of increase in both Dearness Allowance and Dearness Relief would be Rs.6791.24 crore per annum. This will benefit about 50.46 lakh Central Government employees and 68.27 lakh pensioners.

This increase is in accordance with the accepted formula, which is based on the

recommendations of the 7th Central Pay Commission.

MJPS

****

(Release ID:2253244) Visitor Counter: 121



அமைச்சரவை

ஆசாதி கே அம்ரித் மஹோத்சவ்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியின் கூடுதல் தவணை மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை 01.01.2026 முதல் அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


பதிவிட்ட நாள்: 18 ஏப்ரல் 2026, பிற்பகல் 3:13, PIB டெல்லி


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, விலை உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றின் கூடுதல் தவணையை 01.01.2026 முதல் அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 58% என்ற விகிதத்தை விட 2% கூடுதலாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் அதிகரிப்பின் காரணமாக அரசு கருவூலத்திற்கு ஏற்படும் ஒருங்கிணைந்த தாக்கம் ஆண்டுக்கு ரூ.6791.24 கோடியாக இருக்கும். இதனால் சுமார் 50.46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.27 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

இந்த அதிகரிப்பு, ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரத்தின்படி அமைந்துள்ளது.

7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள்.

எம்.ஜே.பி.எஸ்.

****

(வெளியீட்டு ஐடி: 2253244) பார்வையாளர் எண்ணிக்கை: 121


உங்களுக்கு Booth Slip கிடைக்கவில்லையா? - ECINET App மூலம் தகவல் அறியலாம்


உங்களுக்கு Booth Slip கிடைக்கவில்லையா? - ECINET App மூலம் தகவல் அறியலாம்


 உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? உங்களுக்கு பூத் ஸ்லிப் கிடைக்கவில்லையா?


 நீங்கள் வாக்கு அளிக்க வேண்டிய வாக்குச்சாவடி மையம் எது என்று தெரியவில்லையா?


 எல்லாவற்றையும் எளிதில் தெரிந்து கொள்ள google playstore ல் இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள ECINET மொபைல் ஆப் ஐ தரவிறக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம் ஒரே செயலியில் வாக்காளர் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறலாம்.


ECINET செயலி என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு "சூப்பர் செயலி" ஆகும். இது 40-க்கும் மேற்பட்ட தனித்துவமான தேர்தல் தொடர்பான சேவைகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது. வாக்காளர் பதிவு (படிவம் 6), டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பதிவிறக்கம் செய்தல் (e-EPIC), வாக்காளர் பட்டியலைத் தேடுதல், விண்ணப்ப நிலையைக் கண்காணித்தல், வாக்குச் சாவடிகளைக் கண்டறிதல், வேட்பாளர் விவரங்களைச் சரிபார்த்தல் மற்றும் cVIGIL வழியாக விதிமீறல்களைப் புகாரளித்தல் ஆகியவை இதன் முக்கியப் பயன்பாடுகளில் அடங்கும்.


https://play.google.com/store/apps/details?id=in.gov.eci.app


இன்றைய (19.04.2026) தேர்தல் பயிற்சி குறித்து CEO தகவல்


 இன்றைய (19.04.2026) தேர்தல் பயிற்சி குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் (CEO) தகவல்


1. சொந்த தொகுதியில் தேர்தல் பணியாற்ற இருக்கின்ற அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் இன்றைய (19.04.2026) பயிற்சியின் போது தேர்தல் பணி சான்று (EDC) வழங்கப்பட உள்ளது.


2. தபால் வாக்கு இதுவரை செலுத்தாதவர்கள் இன்று செலுத்தலாம். தபால் வாக்கினை தேர்தல் பயிற்சி மையங்களில் மட்டுமே அன்றைய தினமே செலுத்தி விட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது.


3. PRO App இல் இன்றைய பயிற்சியின் போதும் வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் (Presiding Officers ) அந்தந்த நேரத்திற்கு உண்டான பதிவுகளை குறித்த நேரத்தில் பதிவு செய்ய வேண்டும்.


4. இரண்டாவது பயிற்சிக்காக, முதன்மை கல்வி அலுவலர் நிலையில் ஒவ்வொரு தேர்தல் பயிற்சி மையத்திற்கும் நியமிக்கப்பட்ட மாவட்ட தொடர்பு அலுவலர்கள், மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், சான்றொப்பம்  இடுவதற்காக நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் போன்ற அனைத்து அலுவலர்களும் தங்கள் பணிகளை இன்றைய பயிற்சியின் போதும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


CEO, Tiruvannamalai


வாக்காளர் பட்டியலில் உங்களது பாகம் எண், வரிசை எண் SMS மூலம் அறியும் வழிமுறை


வாக்காளர் பட்டியலில் உங்களது பாகம் எண், வரிசை எண் SMS மூலம் அறியும் வழிமுறை


Procedure to Check Your Part Number and Serial Number in the Voter List via SMS


23.02.2026 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதை SMS மூலம் பார்ப்பதற்கான எளிமையான முறை


1950 என்ற எண்ணிற்கு ECI டைப் செய்து இடைவெளி gap விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண் குறிப்பிட்டு அனுப்பினால் உங்கள் விவரங்கள் சில நிமிடங்களில் வந்து சேரும். சட்டமன்றத் தேர்தலில் தபால் ஓட்டு போடுவதற்கு உதவியாக இருக்கும். 


எ.கா: 

ECI WWW123456


👆 உங்கள் Voter ID number (all caps..)


SMS அனுப்ப வேண்டிய தொலைபேசி எண் 1950


மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) குறித்த தகவல்

 


மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) குறித்த தகவல் 


 1️⃣ நேர மேலாண்மை

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னதாகவே மாதிரி வாக்குப்பதிவை தொடங்க வேண்டும்.

  குறைந்தது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முகவர்கள் முன்னிலையில் மட்டுமே இதை நடத்த வேண்டும்.

 

2️⃣ மாதிரி வாக்குப்பதிவு செயல்முறை


 1. முன் தயாரிப்பு:

 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (BU), கட்டுப்பாட்டு கருவி (CU) மற்றும் VVPAT ஆகியவற்றை சரியாக இணைக்கவும்.


2. பூஜ்ஜிய சரிபார்ப்பு (Zero Verification):

    CU-வில் உள்ள 'Total' பொத்தானை அழுத்தி, பதிவான வாக்குகள் 0 என்று இருப்பதை முகவர்களுக்குக் காட்டவும்.

    VVPAT-ல் 'Mock Poll Slip' இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.


3. வாக்கு அளித்தல்:

ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா சில வாக்குகள் வீதம், மொத்தம் குறைந்தது 50 வாக்குகள் பதிவாக வேண்டும். (தேர்தல் ஆணையத்தின் தற்போதைய வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு பொத்தானுக்கும் குறைந்தது 1 வாக்கு பதிவாவது கட்டாயம்).

    நோட்டா (NOTA) பட்டனுக்கும் வாக்குகள் அளிக்கப்பட வேண்டும்.

 

4. சரிபார்த்தல் (Verification):

    CU-வில் உள்ள 'Close' மற்றும் 'Result' பொத்தானை அழுத்தி, பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைக் குறித்துக் கொள்ளவும்.

    VVPAT-ல் விழுந்த சீட்டுகளை எண்ணி, CU-வில் உள்ள எண்ணிக்கையுடன் சரியாக இருக்கிறதா என்று சரிபார்க்கவும்.


3️⃣  வாக்குப்பதிவு நீக்கம் மற்றும் சீல் வைத்தல் (மிக முக்கியமானது)


 1. வாக்குகளை நீக்குதல் (Clearing Data):

    'Clear' பொத்தானை அழுத்தி, மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான அனைத்து வாக்குகளையும் நீக்கவும்.

    மீண்டும் 'Total' பொத்தானை அழுத்தி, வாக்குகள் 0 என்று இருப்பதை முகவர்களிடம் காண்பிக்கவும்.

 

2. சீல் வைத்தல் (Sealing):

    வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் VVPAT-க்கு உரிய சீல்களை (Green Paper Seal, Special Tag, Strip Seal) வைத்து முறையாக சீல் வைக்கவும்.

    இந்த செயல்முறையின் போது முகவர்களின் கையொப்பத்தை வாக்குப்பதிவு நாட்குறிப்பில் (Polling Station Diary) பெறவும்.


3. சான்றிதழ் (Certificate):

    மாதிரி வாக்குப்பதிவு வெற்றிகரமாக முடிந்தது என்பதற்கான சான்றிதழில் (Mock Poll Certificate) தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் முகவர்கள் கையொப்பமிட வேண்டும்.

 

* கவனத்தில் கொள்ள வேண்டியவை:

  தேர்தல் ஆணையத்தின் தற்போதைய 'Mock Poll Certificate' படிவத்தைப் பயன்படுத்தவும்.

  இயந்திரத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், உடனடியாக 'Zonal Officer'-க்குத் தகவல் தெரிவிக்கவும்.


தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

 

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி விடுமுறை அளிக்க வலியுறுத்தல்


தேர்தல் அன்று பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்*


வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பணி முடிய நள்ளிரவு வரை சில இடங்களில் ஆகிவிடுகிறது. மறுநாள் அவர்களால் மீண்டும் பள்ளிக்கு செல்வது சிரமமாகும்.


இதனால் வரும் ஏப்ரல் 24ம் தேதி ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.


தேர்தல் நாளான


23.4.2026 அன்று அதிகாலை முதல் இரவுநேரம் வரை தொடர்ந்து பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகிறது.


இது குறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் முஜிபுர் இந்திய தேர்தல் ஆணைய தமிழ்நாடு அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:


தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கும் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பணிகளில் பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த ஆசிரியர்கள்பெருமளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் நாளுக்கு அடுத்த நாளான 24.4.2026 வெள்ளிக்கிழமை பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்தேர்தல் பணி மிகவும் பொறுப்பும் கவனமும் உடைய பணியாகும்.


இப்பணிகளை நிறைவேற்ற உடல் மற்றும் மன உழைப்பும் அதிகம் தேவைப்படுகிறது.


 குறிப்பாக ஓட்டுப் பதிவு நிறைவடைந்த பின்பு ஒட்டுப்பெட்டி ஒப்படைக்கும் பணிகள் இரவு நேரம் வரை, நள்ளிரவு வரை நீடிப்பதால், அடுத்த நாள் உடனடியாக பள்ளிக்கு வருவது ஆசிரியர்களுக்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.


பல ஆசிரியர்கள் தன் இருப்பிட முகவரியிலிருந்து வெகு தொலைவில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதும், பல ஆசிரியர்கள் ஒட்டுச் சாவடி மையத்திலிருந்து 24.4.2026 அன்று அதிகாலையே தன் இருப்பிடத்திற்குச் சென்று சேர்வர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


எனவே, ஆசிரியர்கள் உடல் நலனையும், மன நலனையும் கருத்தில் கொண்டு 23.4.2026 அன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்களுக்கும். அதற்கு மறுநாள் 24.4.2026 (வெள்ளிக்கிழமை) அன்று விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் முஜிபுர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.



இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை

இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை


வணக்கம் 

17.04.2026 Friday

Today Attendanceல் 

Fully Not working எனவும்,

Reason இல் Others எனவும் தேர்வு செய்து 

Save கொடுக்கவும்.



பின்னர் வழக்கம்போல Teacher Attendance பதிவு செய்யலாம்.


ஆசிரியர்களுக்கு மட்டும் காலை மாலை என இருவேளையும் வருகை பதிவு செய்யவும்


துப்புரவு பணியாளர்களுக்கும் வழக்கம் போல் பதிவு செய்யவும்


மாணவர் வருகைப்பதிவு செய்ய முயற்சி செய்தால் கீழேயுள்ளது போன்று தகவல் காட்டும்



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-04-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-04-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 16.04.2026 

கிழமை:- வியாழன் 


திருக்குறள்:

குறள் 651:

துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.    

விளக்க உரை:

ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.


பழமொழி :
Hear more but talk less.     

அதிகம் கேள் குறைவாக பேசு.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. படிப்பும் உழைப்பும் தான் மனித சமுதாயம் உயர ஒரே வழி.

2. எனவே படிப்பை எப்போதும் கைவிடமாட்டேன்.


பொன்மொழி :

எந்த இடத்தில் வசதியாக உணர்கிறீர்களோ அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று புதிய ஒன்றை தேடத் தொடங்குங்கள். அப்போதுதான் புதிய சாதனைகளை நிகழ்த்த முடியும் -வால்ட் டிஸ்னி


பொது அறிவு :

01.இந்தியா அறிவியல் கழகம் (IISc) எங்கு அமைந்துள்ளது?

பெங்களூரு- கர்நாடகம்

Bengaluru , Karnataka,

02. போலியோ நோய் தடுப்பூசியை கண்டுபிடித்தவர் யார்?

ஜோனாஸ் சால்க்

Jonas Salk


English words :

Itinerary – A planned route or journey schedule

Destination – The place you are traveling to


தமிழ் இலக்கணம்:

அயற் சொற்களும் அவற்றிற்கான தமிழ் சொற்களும் இன்று பார்ப்போம்

அ.சொல் - த.சொல்

  அனுமதி -  இசைவு

இருதயம் - நெஞ்சகம்

ஐதிகம் - உலக வழக்கு

அதிகாரி - அலுவலர்


அறிவியல் களஞ்சியம் :

1883-ல் கிரகடோவா எரிமலை வெடித்தபோது, ​​அதன் சக்தி மிகவும் அதிகமாக இருந்ததால், 4,800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆஸ்திரேலியா வரை அதன் சத்தம் கேட்டது.


ஏப்ரல் 16

சாப்ளின் அவர்களின் பிறந்தநாள்

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin, ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.

சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார். மே 16, 1922-இல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. சாப்ளின் தி சர்க்கஸ் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநர் விருதுகளுக்குத் தேர்வானார். இவருக்கு விருது கிடைக்காதென்று இருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும் மேதைமையையும் பாராட்டிச் சிறப்பு விருது அளித்தார்கள். அதே ஆண்டு, தி ஜாஸ் சிங்கர் படத்துக்காக இன்னொரு சிறப்பு விருதை வழங்கினார்கள். திரைப்படத்தை இந்நூற்றாண்டின் கலை வடிவமாக்குவதில் அளவிடமுடியாத பங்காற்றியதற்காக 44 ஆண்டுகளுக்குப் பிறகு 1972-ஆம் ஆண்டில் இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றார்.


நீதிக்கதை

நன்றி மறந்த சிங்கம்

காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.

அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.

“மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்ற குரல் கேட்டது.

தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.

அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.

மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு… நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,” என்றது.

“நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?” என்றான் மனிதன்.

“மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்று நைசாகப் பேசியது சிங்கம்.

சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.

இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே… அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி,” என்றான்.

“என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள்.

அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?” என்றது சிங்கம்.

“கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா?” உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல,” என்றான் மனிதன்.

அவ்வழியாக ஒரு நரி வந்தது.

“இதனிடம் நியாயம் கேட்போம்,” என்று கூறிய மனிதன் நடந்த கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.

“எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான்.

முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே…” என்றது.

அனைத்தையும் கேட்ட நரி ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்தது.

“நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்,” என்றது நரி.

உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.

“நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்…”

“எந்தக் கூண்டிற்குள்?” என்றது நரி.

“அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்,” என்றது சிங்கம்.

“எப்படி அடைந்து கிடந்தீர்கள்?” என்றது நரி.

சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.

“நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!” என்று கத்தியது சிங்கம்.

“நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள்.

பிறகு என்னையே5 அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்,” என்றது நரி.

நன்றி மறந்த சிங்கம் தன் நிலையை நினைத்து நொந்து போனது.

குறள் நீதி: “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு; உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.” ஒருவர் செய்த நன்றியை மறப்பவர்க்கு என்றுமே உயர்வில்லை. ஆகவே, பெற்றவுதவி சிறியதோ/ பெரியதோ என்றுமே நன்றி மறவாது வாழ்வோம்.


இன்றைய செய்திகள்

16.04.2026

⭐கேஸ் சிலிண்டர் விநியோகம் குறித்து பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் - இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி தகவல்.

⭐சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தின் சிங்கிதராய் கிராமத்தில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் பவர் பிளாண்ட்டில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தும், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்து உள்ளனர்.

⭐ நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து 10ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் நேற்று வெளியானது.

⭐ சவுதி அரேபியாவின் ரியாத், மக்கா, நஜ்ரான் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள சாலைகள் ஆறுகளாக மாறியுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 நடப்பு ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.


Today's Headlines:

⭐ Public should not worry about cylinder distribution - Indian Oil Company Official Information.

⭐ 10 people died and more than 40 workers were injured in an accident at the power plant of Vedanta Company in Singitarai village of Chhattisgarh power district.

⭐ Results for class 10th students studying under CBSE curriculum across the country have been declared yesterday.

⭐  It has been raining heavily in the Riyah, Makkah and Najran areas of Saudi Arabia for the last few days. The roads there have turned into rivers.

🏀 Sports news

🏀 22nd of the ongoing IPL series
In the league match, Chennai Super Kings registered their second consecutive win by defeating Kolkata Knight Riders by 32 runs


தேர்தல் பணி பயிற்சி - எடுத்து செல்ல வேண்டியவை

 

TNLA Election 2026


♻️ முக்கிய குறிப்புகள்


▪️தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 15-04-2026 அன்று இரண்டாம் கட்ட பயிற்சி வழங்கப்பட்ட இருக்கிறது.


▪️பயிற்சி நடைபெறும் இடத்தில் தபால் வாக்கு செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கும்.


▪️முந்தைய பயிற்சி வகுப்பில் form 12/12A  வழங்கியவர்கள் தற்போது தபால் வாக்கு செலுத்தலாம்.


▪️படிவம் 12/12 A முதல் பயிற்சி வகுப்பில் வழங்காதவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் வழங்கலாம்.


▪️படிவம் 12/12A உடன் தேர்தல் பணிக்கான ஆணை Voter ID Xerox இணைத்து கொடுக்கவும்.


▪️மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது தபால் வாக்கினை பயிற்சி மையத்தில் செலுத்திக் கொள்ளலாம்.


▪️அனைவரும் பயிற்சி வகுப்பின்போது Android Mobile கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்.


அனைவரும்  தங்களுக்கான பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தேர்தல் பணி ஆணை, வாக்காளர் அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்து வருதல் வேண்டும்.


மேலும் கூடுதலாக ஆதார் அட்டை அல்லது தங்களுக்கான பணியாளர் அடையாள அட்டையும் வைத்திருத்தல் நன்று.




Election Training - Postal Ballot Information

 

தேர்தல் பயிற்சி - தபால் வாக்கு குறித்த தகவல் 


தேர்தல் பயிற்சி செய்தி; (வாட்ஸ்அப் பகிர்வு)


தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் யாவருக்கும் இனிய  வணக்கம்!


இன்று காலை (15/04/2026)  தேர்தல் பயிற்சி வகுப்பின் போது தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் தபால் வாக்குகள் வழங்கப்படவிருக்கிறது.


அதனை அங்கேயே செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


ஆகவே அனைவரும்  தங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்து வருதல் வேண்டும்.


மேலும் கூடுதலாக ஆதார் அட்டை அல்லது தங்களுக்கான பணியாளர் அடையாள அட்டையும் வைத்திருத்தல் நன்று.

 

15-04-2026 புதன்கிழமை அன்று தேர்தல் பயிற்சியிலிருந்து விலக்கு பெற்றவர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று பணியாற்றிட முதன்மைக் கல்வி அலுவலரின் தகவல்

 

இரண்டாம் கட்ட தேர்தல் பணி பயிற்சி நடைபெறும் 15-04-2026 புதன்கிழமை அன்று தேர்தல் பயிற்சியிலிருந்து முறையாக விலக்கு பெற்றவர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று பணியாற்றிட மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் தகவல்


தேர்தல் செய்தி -- மதுரை CEO


இரண்டாம் கட்ட தேர்தல் பணி பயிற்சி 15.04.2026 புதன்கிழமை அன்று நடைபெறுதல் சார்ந்து.


அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள்/ மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ வட்டார கல்வி அலுவலர்கள்/ தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.


இரண்டாம் கட்ட தேர்தல் பணி பயிற்சி 15-04-2026 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளதால் அப்பயிற்சியில் அனைத்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெரும்பான்மையான ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளதால் மேலும் மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லை என்பதால்  மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை எனவும், தேர்தல் பணி ஆணை கிடைக்கப்பெற்ற அனைவரும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், தேர்தல் பயிற்சியிலிருந்து முறையாக விலக்கு பெற்றவர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று பணியாற்றிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


'Youth Polling Station' - சட்டமன்றத் தேர்தலில் புதுமை

 


சட்டமன்ற தேர்தலில் புதுமை


முதல் முறையாக 'இளைஞர் வாக்குச்சாவடி' (யூத் போலிங் ஸ்டேஷன்)


தொகுதிக்கு தலா ஒன்று அமைக்கப்படுகிறது


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.


ஒவ்வொரு தேர்தலிலும் இந்திய தேர்தல் ஆணையம் ஏதாவது ஒரு புதுமையை புகுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஒவ்வொரு நகரிலும் மாற்றுத் திறனாளிகள் தனி வாக்குச்சாவடியை அமைத்தது. இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு அதிகாரி மற்றும் வாக்குப்பதிவு நிலை-2, வாக்குப்பதிவு நிலை-3 அலுவலர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளாகவே நியமிக்கப்பட்டனர். இதனால் முழுக்க முழுக்க மாற்றுத்திறனாளிகள் மூலமாகவே அவை நிர்வாகம் செய்யப்பட்டன.


கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தொகுதிக்கு ஒரு நவீன வசதிகள் கொண்ட மாதிரி வாக்குச்சாவடி (மாடல் போலிங் ஸ்டேஷன்) அமைக்கப்பட்டது. அந்த வரிசையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் ஒரு புதுமையை அறிமுகப்படுத்த உள்ளது. தொகுதிக்கு ஒரு இளைஞர் வாக்குச் சாவடி (யூத் போலிங் ஸ்டேஷன்) என்பதே இந்த புதுமையாகும்.


இந்த இளைஞர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு அலுவலர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் 30 வயதிற்கு உட்பட்ட இளம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களாகவே நியமிக்கப்படுவார்கள்.



ECINET App - PRO Module பயன்படுத்தும் வழிமுறை

 



PRO Module Demo Video 


ECINET App - PRO Module பயன்படுத்தும் வழிமுறை





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-04-2026

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-04-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 13.04.2026 

கிழமை:- திங்கள் 


திருக்குறள்:

குறள் 470:

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு

விளக்க உரை:

தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.


பழமொழி :
Experience is the best teacher.

அனுபவமே சிறந்த ஆசான்.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. படிப்பும் உழைப்பும் தான் மனித சமுதாயம் உயர ஒரே வழி.

2. எனவே படிப்பை எப்போதும் கைவிடமாட்டேன்.


பொன்மொழி :

வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம் - கோல்ட்ரிஜ்


பொது அறிவு :

01. இந்தியாவில் மிளகு அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

கர்நாடகா- Karnataka

02. இந்தியாவையும் சீனாவையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் என்ன?

மெக்மஹோன் கோடு -
The McMahon Line


English words :

Resilience – Ability to recover from difficulties

Perseverance – Continued effort despite challenges


தமிழ் இலக்கணம்:

பிறமொழிச் சொற்கள் தொடர்

1. நபர் - அரபி

2. ஜாஸ்தி - உருது

3. ரூபாய் - இந்துஸ்தானி

4. துட்டு - டச்சு

5. பீரோ - பிரெஞ்சு


அறிவியல் களஞ்சியம் :

பூமி மணிக்கு 1,000 மைல் வேகத்தில் சுழல்கிறது, ஆனால் அது விண்வெளியில் நம்பமுடியாத அளவிற்கு மணிக்கு 67,000 மைல் வேகத்தில் பயணிக்கிறது.


ஏப்ரல் 13

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.



நீதிக்கதை

கரடியும் இரண்டு வழிப்போக்கர்களும்

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராமு, மற்றொருவன் சோமு. இருவரும் இணை பிரியாத நண்பர்கள்.

ஒரு நாள் இருவரும் தேன் எடுப்பதற்காக காட்டுக்குப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் ராமு சோமுவிடம், “நீ எதைபற்றியும் பயப்டாமல் என்னுடன் வா.

என்னைப் போன்ற நண்பனைக் காண முடியாது. என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கூறினான்.

காட்டிலுள்ள பறவைகள், மரங்கள், காட்டு விலங்குகள் போன்றவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து சென்றார்கள்.

அப்போது கரடி ஒன்று உறுமும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் செல்லும் வழியிலேயே, அந்த கரடி திடீரென வந்து கொண்டிருந்தது.

கரடியைக் கண்டதும் இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்தியது.

ஓடத் தொடங்கிய சில வினாடிகளில் மரம் ஒன்று இருப்பதை ராமு கண்டான். உடனடியாக அந்த மரத்தில் ராமு ஏறி விட்டான்.

சோமுவுக்கோ மரத்தில் ஏறத் தெரியாது என்று அறிந்திருந்தும் மரத்தில் ஏற முடியாதவனைக் கீழே விட்டு விட்டுத் தன்னை மட்டும் காத்துக்கொள்ள சுய நலத்துடன் ராமு நடந்து கொண்டான்.

சோமுவுக்கு மரம் ஏறத் தெரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். கவலையுடன் எப்படி கரடியிடமிருந்து தப்புவது என்று அவசரமாக யோசித்தான்.

இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக் கொல்லாது என்று ஒரு யோசனை தோன்ற, பின்னர் நிலத்தில் விழுந்து மூச்சை அடக்கிக் கொண்டு இறந்தவனைபோல் படுத்துக் கொண்டான்.

அப்பொழுது கரடியும் அங்கு வந்து சேர்ந்தது. படுத்திருந்தவனை உண்பதற்காக அருகில் வந்த கரடி கீழே விழுந்து கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து பார்த்தது.

கரடி சோமுவை முகர்ந்து பார்த்ததை, மேலேயிருந்து பார்த்த ராமு, கரடி சோமுவிடம் ஏதோ சொல்கிறது என்று தவறுதலாக புரிந்து கொண்டான். பிறகு அவன் இறந்தவன் என்று முடிவு செய்து அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது.

கரடி செல்வதை மரத்தின் மேலிருந்து பார்த்த ராமு, கீழே இறங்கி வந்து சோமுவை எழுப்பினான். “கரடி சென்று விட்டது இனி எழும்பு நாம் தப்பி விட்டோம்” என்று ராமு கூறினான்.

சோமுவும் எழுந்து தன் யோசனை வெற்றியடைந்ததை எண்ணி நிம்மதியடைந்தான்.

கீழே படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்.

ராமு சோமுவிடம், “கரடி உன் காதில் என்ன இரகசியம் சொன்னது?” என்று கேட்டான்.

அதற்குப் சோமு, “ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது! என்று சொல்லிவிட்டுப் போனது” என்றான்.

இப்பதிலால், ராமு தன் சுயநலப் புத்தியை எண்ணி நொந்து கொண்டான். சோமுவோ இனி மேல் எங்கள் நட்பு நீடிக்க வேண்டாம் என்று கூறிக்கொண்டு கொண்டு தனியே நடந்து சென்றான்.

நீதி: ஆபத்தில் உதவாதது நட்பல்ல.


இன்றைய செய்திகள்

13.04.2026

⭐ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை

⭐டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் நடைபெறும் பெரும் மோசடிகளை தடுக்க RBI ஒரு புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது.

⭐ மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை  பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்துள்ளார்.


Today's Headlines

⭐ Summer holidays for students from Classes 1 to 9 will begin on April 17 onwards.

⭐ The RBI is considering a new scheme to prevent large-scale fraud in digital transactions.

⭐ Peace talks between the United States and Iran will begin in Islamabad, the capital of Pakistan, to reduce war tensions in the Middle East.

SPORTS NEWS

🏀 In the 2026 IPL series, 15-year-old Vaibhav Suryavanshi, playing for Rajasthan Royals, has stunned the entire cricket world with his explosive performance.


Annual Result Forms 2025-2026

 

 

2025-2026ஆம் கல்வி ஆண்டு - மாணவர்கள் தேர்ச்சி ஒப்புதல் - வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் படிவங்கள் 


2025-2026 Academic Year - Students Annual Result Approval - Formats & Documents to be submitted to the Block Educational Office



ஆண்டு தேர்ச்சி அறிக்கை படிவங்கள் 2025-2026


Annual Result Forms 2025-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பணி நீட்டிப்பில் உள்ள ஆசிரியர்கள், ஏப்ரல் & மே மாதங்களில் ஓய்வு பெறுவோருக்கான தகவல்கள்

 

தற்பொழுது பணி நீட்டிப்பில் உள்ள ஆசிரியர்களின் கவனத்திற்கும், ஏப்ரல் & மே மாதங்களில் ஓய்வு பெறுவோர் கவனத்திற்கும் சில தகவல்கள்


Information for teachers on extension, those retiring in April & May


பொதுவாக ஏப்ரல் மாதத்தில் 1 முதல் 30 ஆம் தேதி வரை பிறந்தநாள் கொண்டவர்கள் அவர்களின் ஓய்வு பெறும் நாள், மாதத்தின் இறுதி நாளான 30/04/ 2026 ஆகும்


அதேபோன்று மே மாதத்தில் 1 முதல் 31ஆம் தேதி வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் அவர்களின் ஓய்வு பெறும் நாள் 31-05-2026 ஆகும்


1) GO 115 SED Dt 28/6/2022

2) Govt clarification letter number 3618/2025 Dt 30.05.2025

3) DSE/DEE/DPS joint proceedings


I) April month retirement எனில் 30/4/26 வரை பணியில் இருப்பார்கள். முழு மாத ஊதியம் உண்டு..


II) May month retirement எனில் 31/5/26 வரை முழு ஊதியம் உண்டு.


III) ஜுன் 2025 முதல் மார்ச் 2026 வரை ஓய்வு பெற்று தற்போது மறுநியமனத்தில் பணிபுரிபவர்கள்

கடைசி வேலை நாள் 25/4/26 ...


IV) மறு நியமனத்தில் உள்ளவர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் 25/4/26 வரை மட்டுமே பெறப்பட வேண்டும்...


V) மறு நியமனத்தில் CPS பணியாளர் எனில் அவருக்கு 100% ஊதியம் உண்டு எந்த ஒரு பிடித்தமும் இல்லை.. (80% pay இல்லை 

clarification letter.. இல் 💯 pay என தெரிவிக்கப்பட்டுள்ளது) அதாவது 25 4 2026 வரை ஊதியம் முழுமையாக பெறலாம்


VI) தலைமை ஆசிரியர்கள் கோடை விடுமுறை அற்ற பணியாளர்கள்...

அரசாணை 115 இல் தலைமை ஆசிரியர் பற்றி குறிப்புகள் இல்லை...

இருப்பினும் சில கருவூலத்தில் HM க்கும் கடைசி வேலை நாள் April தான் (25/4/26) என்கிறார்கள்...


HM க்கு மே 31 வரை உண்டு எனில் அதற்கு ஆணை/செயல்முறைகள் கேட்கிறார்கள் 😞

 ( எனவே இந்த ஆண்டு முதல் மறு நியமனத்தில் உள்ள தலைமை ஆசிரியர்களும் 25/4/26 உடன் பணி விடுப்பு செய்யப்படலாம்) 


VII) இந்த மாதம் pay roll run 18/4/26... 

எனவே 25/4/26 க்குள் bill preparation/submission எந்த ஒரு பிரச்சனையும் இல்லை..



Thanks to

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம் 🙏

12/4/26


PO3 - Duties and Responsibilities

 


மூன்றாம் வாக்குப்பதிவு அலுவலருக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள். 


Duties and Responsibilities of the Polling Officer 3


PO 3


1. விரலில் அழியா மை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


2. Voter Slip-ஐ பெற வேண்டும்.


3. Control Unit-ல் உள்ள Ballot பட்டனை அழுத்தி வாக்காளரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.


4. வாக்களித்த பின் BEEP சத்தம் வந்ததை உறுதி செய்த பின்னர் தான் வாக்காளரை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். (PO3-யின் முக்கிய பணி)


5. ஒவ்வொரு முறையும் வாக்கு பதிவானதை உறுதி செய்த பின்பு தான் அடுத்த வாக்காளருக்கு Ballot பட்டனைஅழுத்த வேண்டும்.


6. Voter Slip-களை வரிசையாக 50 என்ற எண்ணிக்கையில் கட்டுகளாக கட்டி வைக்க வேண்டும்.



PO2 - Duties and Responsibilities



 இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலருக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள்


Duties and Responsibilities of the Polling Officer 2

                           


                          PO 2


1. 17 A புத்தகத்தில் (Register of Voters):


a. PO1 வாசிக்கும் வாக்காளரின் வரிசை எண்-ஐ எழுத வேண்டும்.


b. EPIC-ன் முழு எண்களையும், மற்ற ஆவணங்களின் கடைசி 4 எண்களையும் எழுத வேண்டும்.


c. வாக்காளரின் கையொப்பம் அல்லது கைரேகை வாங்க வேண்டும்.


2. Voter Slip-ல் :- வாக்காளரின் வரிசை எண் மற்றும் பெயர் ஆகியவை எழுதி கையொப்பமிட்டு கொடுக்க வேண்டும்.


3. அழியாத மை வைக்க வேண்டிய இடம் :


a. இயல்பானவர் இடது கை ஆல் காட்டி விரல்


b. Proxy -இடது கை நடு விரல்


c. பார்வையற்றிவரின் உதவியாளர் வலது கை ஆள் காட்டி விரல்


4. அழியாத மை-ஐ நுனிநகம் முதல் விரல் மூட்டு வரை வைக்க வேண்டும்.


5. புத்தகத்தில் (17A) - வாக்கு பதிவு ஆரம்பம் / முடிவின் போது "வாக்குபதிவு ஆரம்பம் / முடிவு" மற்றும் "வாக்குபதிவு எண்ணிக்கை"-யை எழுதி PO, PO2 மற்றும் முகவர்கள் ஆகியோரிடம் கையொப்பம் பெற வேண்டும்.


6. ASD வாக்காளர் வந்தால் அவர்களிடம் கையொப்பம் மற்றும் கைரேகை இரண்டையும் வாங்க வேண்டும்.


7. EPIC வாக்காளர் எண்ணிக்கை மற்றும் மற்ற ஆவணங்கள் வாக்காளர் எண்ணிக்கை-யை கட்டாயமாக குறிக்கப்பட வேண்டும்.


8. 17A -ல் பூர்த்தி செய்யப்ட்ட பக்கத்திலும் PO கையொப்பமிட வேண்டும்.


9. 17A -ல் வாக்காளர் விவரங்களை பூர்த்தி செய்த பின்னர், அந்த வாக்காளர் கையொப்பம் அல்லது கைரேகை இட மறுத்தார் எனில், அவரை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது.




PO1 - Duties and Responsibilities



முதலாம் வாக்குப்பதிவு  அலுவலருக்கான பொறுப்புகள் 


Duties and Responsibilities of the Polling Officer 1


                      1️⃣


                    PO 1


1. Marked Copy of Electoral Roll (குறியீட்டு வாக்காளர் பட்டியல்),


2. MC-ல் சில நபர்களுக்கு A. S. D (Absent, Shift, Death) என குறியீடு செய்யப்பட்டியிருக்கும்.


3. MC-ல் ஆண் என்றால் Underline


பெண் என்றால் சிகப்பு மையினால் குறிக்கவும் Round 0 


மூன்றாம் பாலினத்தவர் -Star *


அனுமதி


"பூத் சிலிப்" உடன் வரும் வாக்காளரிடம் EPIC அல்லது தேர்தல் ஆனையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிற அவணங்களில் ஒன்றை சரிபார்த்து அனுமதிக்கவும்.


MC-ல் வாக்காளரின் வரிசை எண் மற்றும் பெயரை சரிபார்த்து உரக்க வாசிக்கவும்.


இரண்டு மணி ரேத்திற்கு 1 முறை ஆண் / பெண் / மற்றவை-யின் எண்ணிகையை PO-விடம் கூற வேண்டும்.


Tally Sheet-லும் ஆண் / பெண் / மற்றவை குறிக்கப்பட வேண்டும்.


EDC இருந்தால் MC-ல் கடைசியில் பதிவு செய்ய வேண்டும்.


அனுமதி இல்லை


"பூத் சிலிப்" மட்டும் கொண்டு வரும் வாக்காளரை அனுமதிக்ககூடாது. (பூத் சிலிப் என்பது வாக்கு சாவடியை அடையாளம் காண்பதற்கு மட்டுமே பயன்படும்)


EPIC இருந்து MC-ல் பெயர் இல்லை எனில் அனுமதிக்ககூடாது.


PB (Postal Ballot) என MC-ல் குறிக்கப்பட்ட வாக்காளர் வந்தால், அவரை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது.




Departmental Examக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள்

 

 

 


துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள்


Details required to apply for Departmental Examination


👇🏻👇🏻👇🏻👇🏻

 (Last date of application 30/04/2026 11:59 PM)


1) NAME : 


2) FATHER'S NAME : 


3) D.O.B : 


4) PHONE NUMBER: (AADHAR LINKED) 


5) EMAIL ID: 


6) SCHOOL NAME & ADDRESS 


7) DEPARTMENT :


8) AADHAR NO : 


9) IFHRMS NO : 


10) JOINING DATE : 


11) HOME ADDRESS : 


12) DESIGNATION : 


13) EDUCATIONAL QUALIFICATIONS : 


14) PHOTO 40 KB : 


15) SIGNATURE 25 KB


( வேறு எந்த விதமான சான்றிதழ்களோ , பிற விவரங்களோ பதிவேற்ற வேண்டியதில்லை)




Mock Poll - தேர்தல் அலுவலருக்கான குறிப்புகள்


மாதிரி வாக்குப் பதிவு - தேர்தல் அலுவலருக்கான குறிப்புகள்


Mock Poll - Notes for Presiding Officer


இந்த ஒரு விஷயத்தை ( மாதிரி வாக்கு பதிவு மற்றும் சீலிடுதல்) முறைப்படி, சரியாக செய்து முடித்துவிட்டு.. CU and VVPAT சீல் சரியாக செய்துவிட்டால் போதும்.. தேர்தல் அன்று நடைபெறும் மிக மிக முக்கியமான பணி  நிறைவடைந்துவிடும். தேர்தலின் மிக முக்கியமான கட்டத்தை வெற்றிகரமாக கடந்து விடுவோம்.


5.15 AM ✒️

1. BU -----> VVPAT -----> CU cable-


2. VVPAT Back Side Switch ON (நிற்க வைக்கவும்)


3. CU ----> Switch ON (7 slips are Dropped in VVPAT)

***********************"*"*"***************


5.30 am முதல்- 6.45 am க்குள்


1. Close Result-> Clear


2. PO3 CU-ல் உள்ள Ballot Unit-ஐ Beep சத்தம் வந்த பின்பு சீரான இடைவெளியில் அழுத்தி 50 வாக்குகள் பதிவு செய்யவும்.


3. Mock Poll முடிந்த பிறகு Close > Result -----> Clear.


4. Total 0 என உறுதி செய்யவும்.


5. Mock Poll முடிந்த பிறகு CU-ஐ Switch OFF செய்யவும்.


6. Mock Poll Slips அனைத்தையும் கருப்பு உறையில் வைத்து, Plastic Box-ல் வைக்கவும்.


7. VVPAT & CU - உரிய முறையில் Seal வைக்கவும்.


8. Close Button-ஐ அழுத்திய பின் யாரும் ஓட்டு போட முடியாது.


9. Cable இணைத்த பின்பும், mock poll முடிந்த பின்பும் CRC செய்யவும்.


10. இந்த CRC அனைத்தையும் Clock Wise-ல் செய்ய வேண்டும்.

***********************"*"*"***************


7.00 am - வாக்குபதிவு தொடங்கவும்




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது

Presiding Officers கவனத்திற்கு... தற்போது ECINET செயலியில் தாங்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி எண் உள்ளிட்ட விவரங்களை காட்டுகிறது. ஒரு சில ம...