கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-07-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-07-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:44 குற்றங்கூறாமை

குறள் எண்:440

குறள்:
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.

பொருள்:

தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும் .


பழமொழி :

A little string will tie a little bird

சிறு துரும்பும் பல் குத்த உதவும்


இரண்டொழுக்க பண்புகள் :.

1) ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஆக்கமுடன் செய்வேன் .

2) முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்வேன்.


பொன்மொழி :

வெற்றி பெறுவதற்கு முன் தோல்வியை சந்திக்கத் தயார் ஆகுங்கள்.


Thought for the Day :

If you want to shine like the sun, first burn like the sun.


பொது அறிவு :

1. தமிழ்நாட்டில் அதிகமாக மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது?

கடலூர்.

2. தமிழ்நாடு எத்தனை கி.மீ கடற்கரை பகுதியைக் கொண்டிருக்கிறது?

1076 கி.மீ.


English words :

Implement – Execute, செயல்படுத்து.

Negotiate – Discuss to reach agreement, பேச்சுவார்த்தை நடத்து.


புவியியலும் சுற்றுசூழலும் :

நாடுகள் (Countries)
ஒரு நாடு என்பது தனித்த அரசாங்கம் கொண்ட அரசியல் பிரதேசம்.
உலகில் தற்போது சுமார் 195 நாடுகள் உள்ளன (193 ஐ.நா. உறுப்பினர் நாடுகள் + 2 பார்வையாளர் நாடுகள்).
ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்த கொடி, தலைநகர், மொழி மற்றும் கலாச்சாரம் உள்ளது.


NMMS :

SAT - SOCIAL SCIENCE

பாண்டிய அரசர்களின் படைத்தளபதிகளின் பட்டங்கள்

(1) மாறன் - எயினன்

(2) மாறன் - ஆதித்தன்

(3) சாத்தன் - கணபதி

(4) மூர்த்தி - எயினன்

விடை: மாறன் - ஆதித்தன்


ஜூலை 01
தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day)

பிதான் சந்திர ராய்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடுகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) ஆகும்.

கல்பனா சாவ்லா அவர்களின் பிறந்தநாள்

    விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லா இந்த நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பெரிய உதாரணமாக உள்ளவர். ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை நினைவாக்கி பலருக்கும் எடுத்துகாட்டாக இருந்து வாழ்ந்துக் காட்டியவர்.
    சாதனைகள்:
        நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தினால் அவரது சிறப்புமிகு சேவைக்காக நினைவுப் பதக்கம் வழங்கப்பட்டது.
        இந்திய மாணவர்கள் சங்கத்தால் அவரின் பெயரில் “கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்சிப்பும்” வழங்கப்படுகின்றது.
        அவரின் புகழின் உச்சகட்டமாக 2001-ம் ஆண்டு விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    விண்வெளிப் பயணம்:
        விமானம் மற்றும் கிளைடர்களை 1988-ல் மற்றவர்களுக்கு பயணிக்க கற்று கொடுப்பதற்கான சான்றிதழ் மற்றும் அவர் பயணிப்பதற்கான உரிமத்தை பெற்றார் விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் 1995-ல் நாசா சென்றார்.
        கல்பனாவின் முதல் விண்வெளிப் பயணம் 1997-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. பூமியை சுமார் 252 முறை சுற்றி விண்கலத்தில் 10 மில்லியன் தொலைவு பயணம் செய்தார்.
        இவரின் இரண்டாவது விண்வெளிப் பயணம் 2003-ம் ஆண்டு நிகழ்ந்தது. கொலம்பியா விண்கலம் கல்பனா சாவ்லாவுடன் ஏழு பேர் பயணித்தனர். விண்வெளியில் தனது ஆராய்ச்சிகளை முடிப்பதற்கு பதினாறு நாட்கள் ஆனது.
        விண்வெளியில் பயணம் செய்த முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.


நீதிக்கதை

ஒரு நாள் காலையில் சேவலானது மரத்தின் மீது அமர்ந்து பலமுறைக் கூவிக் கொண்டே இருந்தது. சேவல் கூவும் சத்தத்தைக் கேட்ட நரி சேவல் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. நரியோ மிகுந்தப் பசியுடன் இருந்ததால் அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசை ஏற்பட்டது. ஆனால் சேவலோ மரத்தின் மீது இருந்ததால் நரியால் மரத்தில் ஏறிப்பிடிக்க முடியவில்லை.

சேவலைப் பார்த்து, சகோதரனே!, வணக்கம். உனக்கு ஒரு நல்ல செய்தி. இனி பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. நீ கொஞ்சம் கீழே வந்தால் இதை பற்றித் தெளிவாக பேசுவோம் என்றது. நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டு தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.

அதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, எதையோ அடிக்கடி எட்டிப் பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது. அதற்குச் சேவல், அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றது. வேட்டை நாய்கள் என்றதும் நரி வேகவேகமாக சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன் என்று கூறி கிளம்பியது.

சேவல், அருமை சகோதரா, போகாதே, நான் இப்பொழுதே கீழே இறங்கி வருகிறேன். ஏன் நாய்களைக் கண்டு பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று கேட்டது சேவல். அதற்கு நரி அந்த ஒப்பந்தத்தைப் பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை அந்த நாய்களுக்குத் தெரியாமல் இருந்தால், என் நிலைமை என்னவாகும்? அதனால் நான் போகிறேன் என்று சொல்லிவிட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது. சேவல் யாரை ஏமாற்றப் பார்த்தாய், உன்னுடைய கெட்டிக்காரத் தனமானப் பொய்கள் என்னிடம் பலிக்காது என்று கூறி சிரித்தது.

நீதி :

அடுத்தவரை ஏமாற்ற நினைத்தால் நாம்தான் ஏமாறுவோம்.


இன்றைய செய்திகள்
01.07.2026

🗒️ சிறப்பாக பணியாற்றிய கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கியனார் முதல் அமைச்சர் ஜோசப் விஜய்.

🗒️ஜூலை 1 முதல் ஆதாரில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாக புதுப்பிக்கலாம். பொதுமக்களின் டிஜிட்டல் தேவைகளை எளிதாக்கும் வகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

🗒️ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் தீரஜ் சேத்.

🗒️பரதநாட்டியத்தில் ராபா உலக சாதனை புத்தகத்தில்  இடம்பிடித்த  6 வயது சிறுமி ரஜீவன் கம்சத்வனி.

விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு. ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடைபெற உள்ளது.


Today's Headlines

🗒️ Chief Minister Joseph Vijay presented awards to Collectors and Police officers for their outstanding service.

🗒️ From July 1, Aadhaar holders can update their email address free of cost. The Unique Identification Authority of India (UIDAI) has announced this initiative to make digital services more convenient for the public.

🗒️ Dheeraj Seth has assumed charge as the new Chief of the Army.

🗒️ Six-year-old Rajeevan Kamsathvani has secured a place in the RABA World Records for excellence in Bharatanatyam.

Sports News

🏀 Asian Games: The Indian Women's Cricket Team has been announced for the upcoming Asian Games, which will be held in Japan.


Teachers Transfer Counseling | Seniority list of applications | DEE



 தொடக்கக் கல்வித் துறை - மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் மூதுரிமை பட்டியல்


Department of Elementary Education – Priority list of applications for transfer counseling


தொடக்கக் கல்வித் துறை 

அனைத்து இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிகளிலும் பொது மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களின் மாநில அளவில் முன்னுரிமை பட்டியல்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Sports Competitions | Tentative Schedule



2026-27 ஆம் கல்வி ஆண்டின் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடிப்பதற்கான உத்தேச வருடாந்திர செயல்திட்ட அட்டவணை


Tentative annual action plan schedule for conducting all types of sports competitions for the 2026-2027 academic year



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Self-Defense Training Lessons | Implementation Guidelines | SPD Proceedings



2026-27 ஆம் ஆண்டிற்கான தற்காப்புக்கலைப் பயிற்சி பாடங்கள் & வழங்குவதற்குரிய நெறிமுறைகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


Self-Defense Training Lessons & Implementation Guidelines – Proceedings of the State Project Director


மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்குதல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


மாநிலத் திட்ட இயக்ககம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை -6


மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


செ.மு. எண். 1741/A1/self defense/SS/2026 , நாள்: 24.06.2026


பொருள்:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2026-27 ஆம் ஆண்டிற்கான தற்காப்புக்கலைப் பயிற்சி வழங்குவதற்குரிய நெறிமுறைகள் - மாவட்டங்களுக்கு நிதி விடுவித்தல் சார்பு. வழிகாட்டுதல்


பள்ளி மாணவிகள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் எந்தவொரு சூழலையும் தைரியமாகவும் நிதானமாகவும் பக்குவமாகவும் எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை பெற்றிருக்க வேண்டியது மிக அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு மாணவியரின் உடல் வலிமையையும், மன உறுதியையும் மேம்படுத்தவும், ஆபத்தான நேரங்களில் தற்காத்துக் கொள்ளவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கராத்தே,ஜுடோ, டேக்வேண்டோ, சிலம்பம் போன்ற தற்காப்புக்கலைப் பயிற்சிகளை பள்ளி அளவில் மாணவிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிகள், மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், அவர்களது பாதுகாப்புக்கு உறுதுணையாகவும் அச்சமின்றி சமூகத்தில் முன்னேறவும் வழிவகுக்கிறது.


அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கும் 3 மாதங்கள் தற்காப்புகலைப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


தற்காப்புக்கலை பயிற்சியளிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று மாதங்களுக்கு ரூ.12,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மாவட்டங்களில் தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டு விவரம் இணைப்பு யில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்குரிய நிதி மாவட்ட வாரியாக விடுவிக்கப்பட்டுள்ளது.


தற்காப்புக் கலை பயிற்சிகளை நடத்திடத் தேவையான நெறிமுறைகள் பின்வருமாறு வழங்கப்படுகிறது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



சம்பாதிக்கும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு



சம்பாதிக்கும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு 


கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் பெண் ஜீவனாம்சம் கோரமுடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு.


மனைவியை விட குறைவான வருமானம் ஈட்டும் கணவனை ஜீவனாம்சம் தருமாறு கட்டாயப்படுத்துவது நியாயமற்றது.


கணவன் மாதம் ரூ.20,000 வழங்க வேண்டும் என்ற கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.


இந்த வழக்கு குறித்த முழுமையான விவரம்


கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்தவர்கள் ஜீவன் மற்றும் சஹானா தேவி. இருவருக்கும் கடந்த 2024- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்தனர். இதையடுத்து மனைவி சஹானா தேவி விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.


கீழமை நீதிமன்ற உத்தரவு

வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் அவரது மனைவிக்கு மாதந்தோறும் ரூ. 20,000 இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.


உயர்நீதிமன்ற விசாரணை

இந்த உத்தரவை எதிர்த்து ஜீவன், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர். சில்லக்கூர் சுமலதா, இருவரின் வருமானத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தார்.


நீதிமன்றக் கருத்து

கணவரின் மாத வருமானம் ரூ. 60,646 ஆகவும், மனைவியின் மாத வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு அதிகமாகவும் இருந்தது. மனைவிக்கு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு உள்ளிட்ட பிற பெரிய நிதிச் சுமைகளும் இல்லை.


எனவே, பொருளாதார ரீதியாகத் தன்னைத் தானே நிர்வகித்துக் கொள்ளும் திறன் படைத்த பெண், தன்னை விடக் குறைவான வருமானம் ஈட்டும் கணவனை ஜீவனாம்சம் தருமாறு கட்டாயப்படுத்துவது நியாயமற்றது என்று நீதிபதி தெரிவித்தார்.


மேலும், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த ரூ. 20,000 ஜீவனாம்சம் வழங்கும் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.


ஜீவனாம்சம் என்பது பாலின அடிப்படையில் வழங்கப்படக் கூடாது என்றும், அது பிரிந்து வாழும் தம்பதியரில் போதிய வருமானம் இல்லாதவருக்கு நிதிப் பாதுகாப்பு வழங்கும் நோக்கம் கொண்டதாகும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.


LLM படிப்புகளுக்கு விண்ணப்பித்தல் குறித்த அறிவிப்பு



தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டு LLM படிப்புகளுக்கு ஜூலை 13 வரை விண்ணப்பிக்கலாம்.


THE TAMIL NADU Dr.AMBEDKAR LAW UNIVERSITY

(State University Established by Act No.43 of 1997)

"Poompozhil", 5, Dr. D.G.S. Dhinakaran Salai, Chennai -600 028

Telephone Nos.044-24641919/24957414

NAAC Accredited

Email: thechairmanlawadmissions@gmail.com

ADMISSION NOTIFICATION:2026-2027

Applications are invited from the Eligible Candidates through Online Mode for Admission to the L.L.M PROGRAMME (Under the Choice Based Credit System-Regular Mode) offered in School of Excellence in Law for the Academic Year 2026-2027


Name of Programme : LL.M.Degree Programme


Duration : 2 Years


Specialisation : 

Business Law

Constitutional Law and Legal Order

Intellectual Property Law

International Law and Organization

Environmental Law and Legal Order

Criminal Law and Criminal Justice Administration

Human Rights Law

Labour and Administrative Law

Cyberspace Law and Justice

Maritime Law

Property Law

Crime and Forensic Law


Eligibility

A Pass in B.L./LL.B.Degree Programme(either 5 Years or 3 Years with 45% under New Regulations or 400 under Old Regulations)


NOTE:

(1) Candidates can apply through online mode only, for which applicants have to pay Application processing fee through Online Payment Gateway only. Online Application Forms and Prospectus are available in the University Websitewww.tndalu.ac.in

(2) Mode of Selection: Selection for admission will be conducted only through online. Candidates will be selected purely based on Merit in their performance in the Qualifying Degree Examination and as per the Rules of Reservation prescribed by the Government of Tamil Nadu.

(3) Enquiries relating to Admissions can be contacted through Telephone Nos. 044-24641919/24957414.


Institution

The Tamil Nadu Dr.Ambedkar Law University,

School of Excellence in Law,

Dr. M.G.R. Salai (Near MRTS Tharamani Railway Station), Perungudi, Chennai-113.

Submission of Application through Online Mode only 

Date of opening : 29.06.2026

Date of closing : 13.07.2026


Application Fee

SC/ST Applicants -Rs.500/-

Others -Rs.1000/-


NOTE: Application Fee paid through other modes, by Cash /Demand Draft /Money Order/Cheque /Bank PayOrder/Challan etc.,

will not be accepted. Fee once paid will not be refunded.

For further details please visit http://www.tndalu.ac.in

Date : 29.06.2026

Place: Chennai

REGISTRAR.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-07-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-07-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   திருக்...