கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Form for furnishing Data of Employee and their eligible Family Members for insurance coverage under NHIS 2026

 


புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 2026-ன் கீழ் காப்பீட்டுப் பாதுகாப்பு பெறுவதற்காக, பணியாளர் மற்றும் தகுதியுள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை அளிப்பதற்கான படிவம்.


Form for furnishing Data of Employee and their eligible Family Members for insurance coverage under New Health Insurance Scheme, 2026


  • ANNEXURE-III : CERTIFICATE TO BE ISSUED IN LIEU OF IDENTITY CARD UNDER THE NEW HEALTH INSURANCE SCHEME, 2026.

  • ANNEXURE- VI  : NEW HEALTH INSURANCE SCHEME, 2026  for Employees of Govt. Departments covered under this Scheme. Form for furnishing Data of Employee and their eligible Family Members for insurance coverage under New Health Insurance Scheme, 2026 to Insurance Company/Third Party Administrator.

  • Details of the Employee and their eligible Family Members under the NHIS, 2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு வரும் 22.07.2026 அன்று விசாரணைக்கு வருகிறது



 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு வரும் 22.07.2026 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 


ஏற்கனவே  ஒரு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் (part heard matter) தற்போது மற்றொரு தரப்பினரின் (BTs Side) வாதம் கேட்கப்படுவது மட்டும்தான் நிலுவையில் உள்ளது.



.

FIFA World Cup Football Final: Spain wins the championship title

 



உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி : அர்ஜெண்டினா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின் அணி


FIFA World Cup Football Final: Spain wins the championship title


23வது பிபா உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது.


போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்றத் தவறின. இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது.


இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் (90 3) போது அர்ஜெண்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால், அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஆட்டம் கூடுதல் 30 நிமிடங்களுக்கு சென்றது. கூடுதல் நேரத்தின் போது ஆட்டத்தின் 106-வது நிமிடத்தில், மாற்று வீரர் நிக்கோ வில்லியம்ஸ் தலையால் முட்டிய பந்தைப் பெற்ற பெர்ரான் டோரஸ் அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெசுக்கு மிக நெருக்கத்தில் இருந்து சக்தி வாய்ந்த ஷாட் மூலம் கோலடித்து ஸ்பெயினின் நாயகனாக உருவெடுத்தார்.


அதன் பிறகு அர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும், ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக தற்காப்பில் செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்தனர். இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2010-ம் ஆண்டு முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.


Was it Methyl Isocyanate or Methyl IsoCyanide that leaked from the Bhopal plant? – Confusion in textbooks

 

போபால் ஆலையிலிருந்து கசிந்தது மெத்தில் ஐசோ சயனைடா? சயனேட்டா? - பாடப்புத்தகங்களில் குழப்பம்


Was it Methyl Isocyanate or Methyl IsoCyanide that leaked from the Bhopal plant? – Confusion in textbooks


Bhopal Tragedy - Correct Answer is MIC - Methyl isocyanate (CH₃NCO) என ஆங்கில வழி புத்தகத்தில் மூலக்கூறு வாய்பாட்டோடு கொடுக்கப்பட்டுள்ளது.



ஆனால் தமிழ் வழி புத்தகத்தில் மெத்தில் ஐசோசயனைடு  என தவறாக மூலக்கூறு வாய்பாடு இன்றி கொடுக்கப்பட்டுள்ளது,



தமிழ்வழி புத்தகத்திலேயே தவறான தகவல் உள்ளது. எனவே இந்த கேள்விக்கு இரண்டு பதிலுக்கும் மதிப்பெண் கோரலாம்.


போபால் விஷ வாயு துயரம்

தமிழ் வழி பாடப்புத்தகத்தில்

மெத்தில் ஐசோ சயனைடு என்று உள்ளது. 

ஆங்கில வழி பாடப்புத்தகத்தில் மெத்தில் ஐசோசயனேட் என்று உள்ளது. பாட நூல் வந்து இத்தனை ஆண்டுகளாக திருத்தப்படாமல் உள்ளது. தமிழ் வழியில் படித்து நீட் தேர்வில் இந்த வினா கேட்கப்பட்டு இருந்தால் மாணவர் எதிர்காலம் யார் பொறுப்பு?



TET வினா எடுத்த ஆசிரியர்கள் தமிழ் வழி புத்தகம் அல்லது ஆங்கில வழி புத்தகம் எதனை எடுத்துக் கொண்டார்கள்? என சமூக வலைதளங்களில் வினா எழுப்பி வருகின்றனர்.


TET 

Paper 2

Q N 129

11ஆம் வகுப்பு chemistry volume 2 page number 284


மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு - 33 கேள்விகள் என்னென்ன?



மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு - 33 கேள்விகள் என்னென்ன?


Census 2026 Self Enumeration 


ஜூலை 31 வரை பொதுமக்கள் பதிவு செய்யலாம்!


se.census.gov.in இணையதளம் மூலம் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பில் பதிவு செய்யலாம்.


* கேட்கப்படும் 33 கேள்விகள்


1. அடுக்குமாடிக் கட்டட எண்

2. வீட்டுக்கு கதவு எண்

3. தரையின் முக்கியப் பொருள்

4. சுவரின் முக்கியப் பொருள்

5. கூரையின் முக்கியப் பொருள்

6. வீடு பயன்பாட்டில் உள்ளதா?

7. வீட்டின் அமைப்பு வகை

8. குடும்ப அட்டை எண்

9. குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை

10. குடும்பத் தலைவர் பெயர்

11. குடும்பத் தலைவரின் பாலினம்

12. குடும்பத் தலைவரின் சமூகப் பிரிவு

13. வீட்டின் உரிமை நிலை

14. குடியிருப்பு அறைகளின் எண்ணிக்கை

15. திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை

16. குடிநீரின் முக்கிய ஆதாரம்

17. குடிநீர் கிடைக்கும் முறை

18. மின்சார வசதி

19. கழிப்பறை வசதி

20. கழிப்பறை வகை

21. கழிவுநீர் வெளியேற்றும் முறை

22. குளியலறை வசதி

23. சமையலறை மற்றும் LPG/PNG இணைப்பு

24. சமையலுக்குப் பயன்படுத்தும் முக்கிய எரிபொருள்

25. வானொலி / டிரான்சிஸ்டர் வசதி

26. தொலைக்காட்சி வசதி

27. இணைய வசதி

28. கணினி / மடிக்கணினி வசதி

29. தொலைபேசி / செல்போன் வசதி

30. சைக்கிள் உள்31. ளிட்ட வாகனங்கள்

31. கார் / ஜீப் / வேன் வசதி

32. வீட்டில் உண்ணப்படும் முக்கிய உணவு

33. செல்போன் எண்


TET Paper 2 Answer Key Challenge குறித்த தகவல்கள்



ஆசிரியர் தகுதி தேர்வு 2026 TET Paper 2 Answer Key Challenge குறித்த தகவல்கள் 


TET

Paper 2 

Mathematics & Science 


 * Q.No 15 

 அனைத்து Optionsக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்

https://drive.google.com/file/d/1kntq0te2szW5_6EVgjc0QHLkKREfQEq-/view?usp=drivesdk


Paper 2

 * Q.No 52

அனைத்து Optionsக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்

https://drive.google.com/file/d/1_zS0am3dykNGMbT0W3PsVlZv-fZ8TQWC/view?usp=drivesdk


Paper 2

 * Q.No 67

அனைத்து Optionsக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும்

https://drive.google.com/file/d/1dhDXflPTndOqS3D7DjWblK7K_DXuMaSc/view?usp=drivesdk


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-07-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-07-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




3 மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

 


உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி ; கேரளத்தில் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


ஃபிஃபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை முன்னிட்டு, இன்று (ஜூலை 20, 2026 திங்கட்கிழமை) கேரளாவில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


முக்கியத் தகவல்கள்:

விடுமுறைக்கான காரணம்: 

அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் உலகக்கோப்பை இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்குகிறது. மாணவர்கள் இப்போட்டியை நள்ளிரவில் விழித்திருந்து கண்டு மகிழ ஏதுவாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


தேர்வுகளில் மாற்றமில்லை: 

முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பொதுத் தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிற மாநிலங்கள்: 

கேரளாவைத் தொடர்ந்து மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநிலங்களிலும் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026 : வெல்லும் அணிக்கு ரூ.490 கோடி பரிசு



உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026 : வெல்லும் அணிக்கு ரூ.490 கோடி பரிசு


⚽ வென்றால் ரூ.490 கோடி பரிசு


வெற்றி யாருக்கு?

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.


அமெரிக்காவின் நியூயார்க் நியூ ஜெர்சி ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன.


உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.490 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.


இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ.325 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.



குடியுரிமையை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை - உச்சநீதிமன்றம்



குடியுரிமையை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை - உச்ச நீதிமன்றம்


வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால், அவர் இந்திய குடியுரிமையை இழந்ததாக அர்த்தமாகாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்.


தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மட்டுமே நிர்வகிக்கிறதே தவிர, குடியுரிமையை முடிவு செய்யும் அதிகாரம் அதற்கு இல்லை எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.



திறமையால் பிறவிக் குறைபாட்டை வென்ற மாவீரன்

 


தன் திறமையால் 

பிறவிக் குறைபாட்டை வென்ற மாவீரனின் கதை. 


ஜூன் 24,1987 

தென் அமெரிக்க கண்டத்தில் 

அர்ஜெண்டினா நாட்டின் 

ரொசாரியோ நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு 

லியோனல் மெஸ்ஸி என்று பெயர் சூட்டினார் அவரது தந்தை ஜோர்ஜ் .


லியோனெல்- பிரெஞ்சு- பொருள் - குட்டி சிங்கம் 

மெஸ்ஸி - இத்தாலி - பொருள் - அறுவடை செய்பவன் 


பெயர் வைத்தது போலவே

லியோனெல் பிறந்ததில் இருந்து தனது சக நண்பர்களைப் போல வயதுக்கேற்றாற் போல வளர்ச்சி காணாமல் "குட்டியாகவே" இருந்தார். 


அர்ஜென்டினாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் பரிசாக வழங்கப்படுவது எது என்றால் கேட்டால் 

தயக்கமே இல்லாமல் அது

"கால் பந்து" தான். 


குட்டையாக இருந்தாலும் 

சிங்கம் சிங்கம் தான். 

கால்பந்தாட்ட களத்தில் எதிர் அணியினர் அமைக்கும் கோட்டைகளை லாவகமாகக் கடந்து சென்று கோல் அடிப்பதில் 

இவரது ஆட்ட நேர்த்தி என்பது 

குழந்தைப் பருவத்திலேயே பிரபல்யம். 


அவரது குடும்பத்தினருக்கு 

அவர் சரியான அளவில் 

உடல் வளர்ச்சியைக் காணவில்லை என்பதை பத்தாம் வயதிலேயே ஒட்டியே உணர்ந்தனர். .


அவரது பதினோறாம் வயதில் 

அந்த செய்தி அவரது குடும்பத்தில் பேரிடியாக இறங்கியது.


ஆம்... மூளையில் பிட்சுசுவரி சுரப்பி எனப்படும் நாளமில்லா சுரப்பியில் இருந்து உடலின் வளர்ச்சியைத் தூண்டும் முக்கியமான ஹார்மோனான

"உடல் வளர்ச்சிக்கான ஹார்மோன்" (GROWTH HORMONE) சரியான அளவில் சுரக்கவில்லை என்பது உறுதியானது. 


இதை Growth Hormone Deficiency என்று அழைக்கிறோம். 

இதன் விளைவாக உடலின்  வளர்ச்சி என்பது அதிகபட்சம் 140 செண்ட்டிமீட்டரில் தடை படும். 

கால்பந்தாட்ட வீரனுக்குத் தேவையான தசை வளர்ச்சியோ எலும்பு வலிமையோ கிடைக்காது. 


ஒட்டுமொத்த குடும்பமே நொறுங்கிப் போனது. 


அசாத்தியமான கால்பந்தாட்டத் திறனைக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் எதிர்காலம் - பிறவிக் குறைபாட்டினால் பாதிக்கப்படப்போவது கண்கூடாகத் தெரிந்தது. 


அக்கால அர்ஜென்டினாவில்

வளர்ச்சிக்கான ஹார்மோன் சிகிச்சை என்பது பிரபலமானதாகவும் இல்லை. 

எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் இல்லை. 


பிரதிமாதம்  900 முதல் 1500 டாலர்கள்

செலவு புடிக்கும் சிகிச்சைக்கு அந்த ஏழைத் தகப்பனால் எப்படி வழி செய்ய முடியும்? 


மெஸ்ஸிக்கு தேவைப்படும் உதவியை 

குடும்பத்தாலோ சுற்றத்தாராலோ 

அவர் விளையாடிய உள்ளூர் அணியாலோ செய்ய இயலவில்லை. 


எனவே, 13 வயதுச் சிறுவனான மெஸ்ஸியை அழைத்துக் கொண்டு 

ஸ்பெய்ன் நாட்டில் உள்ள பார்சிலோனா மாகாணத்திற்கு சென்றார் அவரது தந்தை. 


அங்கு பார்சிலோனா கால்பந்து கிளப் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான அணியாகும். 

அந்த அணியின் பயிற்சி மற்றும் அணி மேலாண்மை செயலாளராக இருந்த கார்லஸ் ரெக்சாக் அவர்கள் பார்க்க ஒரு ஆட்டத்தில் விளையாடினார் 


இவரது மிரட்டலான ஆட்டத்திறனையும் 

எதிரிகளிடம் பதுங்கிப் பாயும் திறனையும் 

பந்தை லாவகமாக அங்கும் இங்கும் கொண்டு செல்லும் நேர்த்தியும் பார்த்து விட்டு "அசாத்தியமான திறன்" கொண்டவனாக இருக்கிறானே என்று வியந்தார். இவரை உடனே இந்த கிளப்பிற்குள் புக் செய்யலாம் என்று முடிவு செய்தார். 


ஆனால் பார்சிலோனா அணியின் ஏனைய நிர்வாகக் குழுவினருக்கு இவரது முடிவில் உடன்பாடு ஏற்படவில்லை. 


- வெளிநாட்டு வீரர் 

- வயது மிகவும் குறைவாக உள்ளது. 

- கூடவே பிறவு வளர்ச்சிக் குறைபாட்டு நோய் உள்ளது . அதனால் போதிய வளர்ச்சி இல்லை 

- அவரது மருத்துவ செலவுக்கும் சேர்த்து செலவு செய்ய வேண்டும். 


இத்தனை அஃகன்னாக்கள் இருப்பதால் 

வேண்டாம் என்றே முடிவு செய்தனர். 

போர்ட் கமிட்டியின் இந்த முடிவு, மெஸ்ஸிக்கும் அவரது தந்தைக்கும் அவரது செயலாளர்களுக்கும் பின்னடைவாக அமைந்தது. 


டிசம்பர் 14, 2000

பொம்பேயா டென்னிஸ் கிளப் 

உள்ளே 

பார்சிலோனா டெக்னிக்கல் மேனேஜர் 

ரெக்சாக்குடன் மெஸ்ஸியின் மேனேஜர்கள் 

நீண்ட நேரம் பேசிய பிறகு 

உடன்படிக்கை எட்டப்பட்டது. 


ரோக்சாக்குக்கு மெஸ்ஸியை விட மனசில்லை. 

எனவே, போர்டு கமிட்டியின் முடிவையும் மீறி மெஸ்ஸிக்காக ரிஸ்க் எடுக்கிறேன் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட எத்தனித்தார். 


ஒப்பந்தம் கையெழுத்தாக 

சரத்துகளை எழுத அங்கே காகிதங்கள் கூட தயார் செய்து வைக்கப்பட்டிருக்கவில்லை. 


எனவே, அங்கிருந்த பேப்பர் நேப்கினை எடுத்து அதில் ஒப்பந்த உடன்படிக்கையை எழுதி கையெழுத்திட்டு 

மெஸ்ஸியின் தந்தையிடம் கொடுத்து

"இனி உங்களின் மகன் எங்களின் அணிக்கு விளையாடுவான்" என்றார். 


நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டிருந்த தந்தையின் வயிற்றில் பால் வார்த்த முடிவல்லவோ அது. 


மெஸ்ஸியின் மருத்துவ செலவு முழுவதையும் பார்சிலோனா கிளப் ஏற்கும் என்பதும் முக்கியமான ஒப்பந்தமாகும். 


அதற்கடுத்து 

மெஸ்ஸி, அவருடன் அவரது குடும்பமும் 

ஸ்பெயினுக்கு இடம்பெயரவும் பார்சிலோனா உதவி செய்தது. 


இதன் மூலம் 

மெஸ்ஸி சரியான உடல் வளர்ச்சியை அடைந்தார். 140 செமீட்டர் உயரம் தான் வளருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முறையான ஹார்மோன் சிகிச்சை கிடைத்து 170 செமீட்டர் என்ற அளவை எட்டினார். 



 தனக்கு வாழ்வளித்த பார்சிலோனா அணியில் 2000 முதல் 2021 வரை தொடர்ந்தார். 


அதற்குப் பின்பும் 

அங்கேயே தொடர்ந்து தனது ஓய்வை அந்த அணியில் இருந்தே அறிவிக்க வேண்டும் என்று விரும்பினார். 


ஆனால், பார்சிலோனா அணி நிர்வாகத் திறமையின்மையால் பொருளாதார நலிவுறுதலைச் சந்தித்தது. கிளப்களை நிர்விக்கும் கடுமையான பொருளாதாரம் சார்ந்த நெறிமுறைகளின்  விளைவாக மெஸ்ஸியை அந்த அணியால் தக்க வைக்க இயலவில்லை. 


இத்தனைக்கும் மெஸ்ஸி பணமே வாங்காமலும் விளையாடத் தயாராக இருந்தும், நெறிமுறைகள் சாதகமாக இல்லாததால் கடினமான இதயத்துடனும் கண்ணீருடனும் தனக்கு வாழ்வு தந்த பார்சிலோனாவைப் பிரிந்து  தற்போது இண்டர்மியாமி சிஎஃப் (INTERMIAMI CF) 

அணிக்கு விளையாடி வருகிறார். 


சிறுவனாக சரியான வளர்ச்சி அடைய இயலாமல் 

பொருளாதாரத்திலும் உடல் நிலை சார்ந்தும் பாதிப்பில் இருந்தாலும், 


தனது தனித்திறமையின் காரணமாகவும் 

பார்சிலேனா அணியின் மேலாளர் கார்லஸ் ரெக்சாக்கின் நம்பிக்கை காரணமாகவும் 

இன்று கால்பந்தாட்ட உலகின் மன்னனாக இருந்து வருகிறார் .


 குட்டி சிங்கமான லியோனெல்

கோல்களையும் கோப்பைகளையும் 

அறுவடை செய்யும் மெஸ்ஸியாக மாறியது 

நமக்கெல்லாம் உத்வேகம் தரும் கதை என்றால் அது மிகையாகாது. 


பின்குறிப்பு :- தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாவட்ட அளவிலான ஆரம்ப கால தலையீடு மையங்கள் இயங்கி வருகின்றன. அங்கு குழந்தைகள் நல நிபுணர்கள் குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாட்டைக் கண்டறிந்து " பிறவி வளர்ச்சிக்கான ஹார்மோன் குறைபாடு" இருப்பின் அவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 

"ஹார்மோன் சிகிச்சை" இலவசமாக வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


நன்றி


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை



Dr.Radhakrishnan Award 2026–2027க்கு விண்ணப்பிக்கும் வழிமுறை

 


Dr. Radhakrishnan Award Application 2026–2027 User Manual


Dr.Radhakrishnan Award 2026–2027க்கு விண்ணப்பிக்கும் வழிமுறை


Step 1 : Login into EMIS Teacher login https://emis.tnschools.gov.in using Teacher EMIS ID and Password



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Today's (18-07-2026) Wordle

 



Today's (18-07-2026) Wordle Puzzle 


Wordle விளையாடும் முறை: 


ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.


பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,


மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 


சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  


 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.


தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.


 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.


 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 



Wordle Game Link: 



>>> Click Here...



Yesterday's (17-07-2026) Wordle Answer: BENCH 



Kalai Thiruvizha Competitions 2026-2027 | Guidelines | Joint Proceedings of the Directors



கலைத்திருவிழா போட்டிகள் 2026-2027 - வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்


Kalai Thiruvizha Competitions 2026-2027 | Guidelines | Joint Proceedings of the Directors


பள்ளிக் கல்வி - 2026-2027 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை கொண்டாடும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - சார்ந்து இயக்குநர்களின் செயல்முறைகள்



பள்ளிக் கல்வித்துறை


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 600006.


ந.க.எண்.1800/ஆ8/கலைத்திருவிழா/ஒபக/2026, நாள்: 17.07.2026


பொருள்:


2026-27 பள்ளிக் கல்வி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை கொண்டாடும் "கலைத்திருவிழா" போட்டிகள் நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து.


 கலைத்திருவிழா என்பது பள்ளிகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முக்கியமான கலை மற்றும் பண்பாட்டு விழாவாகும். மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், அவற்றை அடையாளம் கண்டு மேம்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. பாடல், நடனம், ஓவியம், நாடகம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களில் மாணவர்கள் தங்களது படைப்பாற்றலையும் திறன்களையும் வெளிப்படுத்துவதன் மூலம் தன்னம்பிக்கை, தலைமைத்துவம் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்கின்றனர். மேலும், இவ்விழாவானது மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை ஊக்குவிப்பதோடு, அவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது.


அதன்படி, 2026-2027ம் ஆண்டிற்கான கலைத்திருவிழாப் போட்டிகளை "இளையோர் திறன்" என்ற மையக்கருத்தின் அடிப்படையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் பின்வரும் ஐந்து பிரிவுகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும், பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


கலைத்திருவிழா 2026-2027 போட்டிப் பிரிவுகள் மற்றும் எண்ணிக்கை


பிரிவு         வகுப்புகள்     போட்டிகளின் எண்ணிக்கை


பிரிவு 1

1 மற்றும் 2 ஆம் வகுப்பு

9 போட்டிகள்


பிரிவு 2

3 முதல் 5 ஆம் வகுப்பு வரை

15 போட்டிகள்


பிரிவு 3

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை

18 போட்டிகள்


பிரிவு 4

9 மற்றும் 10 ஆம் வகுப்பு

32 போட்டிகள்


பிரிவு 5

11 மற்றும் 12 ஆம் வகுப்பு

32 போட்டிகள்




>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



மீண்டும் பரவும் கொரோனா | ஆந்திராவில் 4 பேர் உயிரிழப்பு



ஆந்திராவில் மீண்டும் கொரோனா


ஆந்திர பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 16 வரையிலான காலகட்டத்தில் 12 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


- ஆந்திர சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ தகவல்


3 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் மீண்டும் Corona பரவல் வேகமெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன், சிகிச்சை பெற்று வந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். 


இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திராவில் கொரோனா பாதிக்கப்பட்ட 12 பேரில் கடப்பாவைச் சேர்ந்த 8 பேர், குண்டூரைச் சேர்ந்த 2 பேர், விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடாவைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர். 3 பேர் வீட்டு தனிமைப்படுத்தலிலும், 2 பேர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் தொற்று வேகமாகப் பரவும் அபாயம் இல்லை. அதே சமயம் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. கொரோனா புதிய வகை வைரஸ் மாறுபாட்டைக் கண்டறிய 5 மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன” என அதில் கூறப்பட்டுள்ளது. ஆந்திரா மட்டுமின்றி 2026 ஜூலை 1 முதல் நாடு முழுவதும் 339 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. 


Census பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 10 நாட்கள் Special CL வழங்கக் கோரிய மனுவுக்கு CEO அவர்களின் பதில்



மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 10 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குமாறு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவுக்கு கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் பதில்



Response from the Chief Educational Officer of Karur District regarding the request to grant 10 days of special casual leave to teachers and staff engaged in census work



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


மாணவர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் (Collateral Free Education Loan) | செய்தி வெளியீடு



கல்லூரி மாணவர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் (Collateral Free Education Loan) விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Selection of outstanding teachers for Dr. Radhakrishnan Award | DSE Proceedings



 05-09-2026 அன்று ஆசிரியர் தின விழாவில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்க சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்தல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Selection of outstanding teachers for the Dr. Radhakrishnan Award to be presented at the Teachers' Day celebration on 05-09-2026 – Proceedings of the Director of School Education


தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 06


ந.க.எண். 010095/ஐ/இ1/2026, நாள்.15.07.2026


பிறப்பிப்பவர்: முனைவர் ச.கண்ணப்பன்


பொருள்:


பள்ளிக் கல்வி - டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான 05.09.2026 அன்று ஆசிரியர் தின விழா கொண்டாடுதல் - சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஏதுவாக EMIS இணைய தளம் மூலம் ஆசிரியர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்திட மென்பொருள் உருவாக்குதல் - நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை EMIS இணைய தளம் மூலம் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல் - தொடர்பாக.


பார்வை: அரசாணை (1டி) எண்.220 பள்ளிக் கல்வி (பொது-II) துறை. நாள் 05.08.2022


தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலை/ தனியார் பள்ளிகள்/ ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள்/சமூக பாதுகாப்புத்துறை / ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளினை ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில அரசு விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின விழாவில் ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) ரொக்கப் பரிசும், வெள்ளிப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப்படியும் வழங்கப்பட்டு வருகிறது.


பார்வையில் காணும் அரசாணையில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களை தேர்வு செய்திட கீழ்கண்டவாறு 38 வருவாய் மாவட்டத்திற்கான விருதுகள் நிர்ணயம். மாவட்ட / மாநில குழு அமைத்தல், மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள், ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளது.




 மாவட்டத் தேர்வுக்குழு


வ. எண்    பதவி     குழுவில் பதவி


1. முதன்மைக் கல்வி அலுவலர்

தலைவர்


2. முதல்வர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் 

உறுப்பினர்


3. மாவட்டக் கல்வி அலுவலர்கள் 

உறுப்பினர்


4. மேல்நிலைப் பள்ளி முதுநிலை தலைமையாசிரியர்

உறுப்பினர்


5. உயர்நிலைப் பள்ளி முதுநிலை தலைமையாசிரியர்

உறுப்பினர்


6. முதுநிலை வட்டாரக் கல்வி அலுவலர்

உறுப்பினர்


மாநிலத் தேர்வுக் குழு


1. பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை -6

தலைவர் 


2. இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். சென்னை -6

உறுப்பினர்


3. தொடக்கக் கல்வி இயக்குநர். சென்னை-6

உறுப்பினர்


4. அரசு தேர்வுகள் இயக்குநர், சென்னை - 6

உறுப்பினர்


5. தனியார் பள்ளிகள் இயக்குநர், சென்னை-6

உறுப்பினர்


6. இயக்குநர், ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை, சென்னை 8 (அல்லது) அன்னாரின் பிரதிநிதி

உறுப்பினர்


7. சென்னை மாநகராட்சி ஆணையாளர். சென்னை 8 (அல்லது) அன்னாரின் பிரதிநிதி

உறுப்பினர்


8. முதல்வர், கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை சென்னை  

உறுப்பினர்


9. சிறப்பு ஆணையர் (ம) இயக்குநர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலம் சென்னை - 5 (அல்லது) அன்னாரின் பிரதிநிதி

உறுப்பினர்


10. இயக்குநர், சமூக பாதுகாப்புத்துறை, சென்னை (அல்லது) அன்னாரின் பிரதிநிதி

உறுப்பினர்


11. பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலை) சென்னை - 6 

உறுப்பினர் செயலர்


விருது வழங்கிட ஆசிரியர்களைத் தேர்வு செய்திட பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள்.


1. விருதிற்குத் தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தெரிவித்தல் வேண்டும்.


2. போதிய ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை என்று தெரிவிக்காமல் ஆய்வு அலுவலர்கள் தங்கள் பள்ளிகள் பார்வையின் போது கண்டறிந்த சிறந்த ஆசிரியர்களை பள்ளிக் தலைமையாசிரியரிடம் இணையதளத்தில் பதிவு செய்திடல் வேண்டும். அறிவுறுத்தி


3. முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்கள் செயல்பாடுகளை இணையதளத்தில் மதிப்பீடு செய்ய வேண்டும்.


4. விண்ணப்பித்த ஆசிரியர்கள் பணிப்பதிவேடுகள் மற்றும் பிற சான்றுகள் மாவட்ட அளவில் உரிய அலுவலர்களால் சரிபார்க்கப்பட வேண்டும்.


5. விண்ணப்பித்த ஆசிரியர்கள் மாவட்டத் தேர்வுக்குழுவின் நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு, மதிப்பீடு செய்தல் வேண்டும்.


6. மாவட்டத்தேர்வுக்குழுவினர் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் /கருத்துருக்களை இணையவழியாக மதிப்பீடுகளின் அடிப்படையில் மாநிலத் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்யப்பட வேண்டும்.


7. மாநிலத் தேர்வுக்குழு மாவட்டக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இறுதி மதிப்பீடு செய்து தகுதியானவர்களின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும்.


வழிகாட்டு நெறிமுறைகள் (GUIDELINES)


1. மாநில பாட திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள் / ஆதிதிராவிட பழங்குடியினர் நலத்துறை / பிற்பட்டோர் நலத்துறை / சமூக பாதுகாப்புத் துறை / நிதி உதவி பெறும் பள்ளிகள் / ஆங்கிலோ இந்திய பள்ளிகள் மற்றும் அயநிதி / மெட்ரிக் பள்ளிகள் ஆகிய மேலாண்மைகளின் கீழ் செயல்படும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களும் விருதிற்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.


2. இவ்விருது வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு மட்டுமே கற்பித்தல் ஈடுபடும் வழங்கப்படும். அலுவலகங்களில் பணியில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்ககூடாது.


3. கல்வியாண்டில் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களைப் பரிந்துரை செய்யக்கூடாது. ஆசிரியர்கள் கல்வியாண்டில் குறைந்தது 4 மாதங்கள் (செப்டம்பர் 30ஆம் தேதிவரை -in Regular Service) பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். (மறுநியமன காலத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது).


4. பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எவ்விதக் குற்றச்சாட்டிற்கும். ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராகவும், பொதுவாழ்வில் தூய்மையானவராகவும். பொது சேவைகளில் நாட்டம் கொண்டவராகவும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைக் குறைத்தல், பள்ளி மாணவர் சேர்க்கை. தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல், கல்வித்தரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும்.


5. அரசியலில் பங்கு பெற்று அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாகப் பரிந்துரைக்கப்படக் கூடாது.


6. கல்வியினை வணிகரீதியாகக் கருதி செயல்படும் ஆசிரியர்களையும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களையும் இவ்விருதிற்குத் தகுதியற்றவர்களாகக் கருத்தப்பட வேண்டும்.


7. சிறந்த முறையில் பணிபுரியும் தமிழாசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களான ஓவிய ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள். கைத்தொழில் ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத் திறன் ஆசிரியர்களில் தகுதியானவர்களையும் விருதிற்குப் பரிந்துரைக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டும்.


8. பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்களின் கருத்துருக்கள். பெயர்பட்டியலினை மாவட்டத் தேர்வுக்குழுத் தலைவர் தமது சொந்தப் பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வுக்குழு உறுப்பினர்களும் இது தொடர்பாக மந்தணம் காத்திடல் வேண்டும்.


9. டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்காக வரையரை செய்யப்பட்ட படிவத்தில் மட்டுமே ஆசிரியர்களின் இணையவழியாக EMIS தளத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


10. ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டியல் தயார் செய்து 1:2 என்ற வீதத்தில் தேர்வு செய்து, நல்லாசிரியர் விருதிற்கான ஆசிரியர்களின் கருத்துருக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


11. வருவாய் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களைத் தேர்வு செய்து பரிந்துரை செய்யப்படும் பொழுது, அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அனைத்துப் பள்ளிகளையும் உள்ளடக்கியதாக உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


12 மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு தேசிய விருது பெற்ற எந்த ஆசிரியரையும் பரிந்துரை செய்தல் கூடாது.


ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும் பொழுது கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகளை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது 


1. விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியிலான EMIS வழியாக மட்டுமே ஆசிரியரின் EMIS login மூலம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


2. விண்ணப்பம் பதிவேற்றம் செய்து சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளான 03.08.2026 வரை மட்டுமே EMIS-ல் பதிவேற்றம்/Reset/Edit செய்ய இயலும். அதன்பிறகு விண்ணப்பத்தில் மாற்றம் செய்ய இயலாது.


3. அனைத்து வினாக்களுக்கும் உரிய உள்ளீட்டினை பதிவேற்றம் செய்யுமாறும், பதில் எதுவும் இல்லை எனில் (Not applicable) கலத்தில் இல்லை அல்லது 0 (பூஜியம்) - னை உள்ளீடு செய்து (whichever is applicable) சமர்ப்பிக்கவும். noor


4. விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யும் pdf/link ஆனது மாவட்ட/மாநிலத் தேர்வுக்குழுவால் சரிபார்க்க ஏதுவாக இருக்க வேண்டும் (Expiry ஆகாமலும் viewable ஆகவும் இருத்தல் வேண்டும்)


5. Presentation to State Selection Committee எனும் கலத்தில் ஆசிரியர்கள் மாநிலத் தேர்வுக்குழுவிற்கு தங்களுடைய பங்களிப்பை தெரிவிக்கும் வகையிலான உள்ளடக்கத்தினை ஒருங்கிணைந்த pdf ஆக பதிவேற்றம் செய்ய வேண்டும்.


6. இணைப்பில் கண்டிப்பாக உள்ள சான்றிதழ்களை அவற்றிற்குண்டான கலத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


7. விண்ணப்பம் பதிவேற்றம் செய்வதற்காக இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ள demo video-வினை முழுமையாக பார்த்து மின் விண்ணப்பிக்கவும்.


எனவே. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலை/ தனியார் பள்ளிகள்/ ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள்/சமூக பாதுகாப்புத்துறை / ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்களின் விவரங்களை EMIS இணைய தளம் மூலம் 17.07.2026 அன்று முதல் 03.08.2026-க்குள் முழுமையாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பள்ளிக்கல்வி இயக்குநர்


இணைப்பு: சான்று படிவங்கள் மூன்று



பெறுநர்:

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்


நகல்: 


1. இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், செ-06 

2. இயக்குநர். தனியார் பள்ளிகள் இயக்ககம், செ-06



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



New Curriculum for 1 to 3th Std | Training for BEOs and BRTEs | Joint Proceedings



1 முதல் 3 ஆம் வகுப்புகள் புதிய பாடத்திட்டம் - வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பயிற்சி - இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்


New Curriculum for Classes 1 to 3 | Training for Block Educational Officers and Block Resource Centre Teacher Educators | Joint Proceedings of the Directors


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்கக இயக்குநர்களின் இணை செயல்முறைகள், சென்னை -06.


ந.க.எண்.29299/எஃப்4/2023 நாள். 16.07.2026.


பொருள்:


பயிற்சி - 1 முதல் 3 ஆம் வகுப்புகள் வரை புதிய பாடத்திட்டம் மாற்றியமைத்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கியமை பள்ளிகளின் வகுப்பறையினை உற்றுநோக்கல், பள்ளிப்பார்வை மற்றும் கண்காணிப்பு அலுவலராக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்த ஒரு நாள் பயிற்சியினை இணையவழியில் அளித்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக.


பார்வை:


1. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநிலத்திட்ட இயக்குநர் அவர்களின் கடிதம் எண்.RC.No.2531/A11/FLN-PMU/SS/22 Date 30.03.2023.


2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.50656/அ1/இ4/2023, நாள் 31.08.2023.


3. இந்நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2640773/ஊ1/2026, நாள்.11.06.2026.


பார்வையில் கண்டுள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் பள்ளிக்கல்வித் துறை செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டில் 1 முதல் 3 முடிய உள்ள வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் மாற்றியமைத்து, மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 1 முதல் 3 முடிய உள்ள வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்திற்கு, முதல் பருவத்திற்கான பயிற்சியானது மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.


தற்போது வட்டார அளவில் உள்ள பள்ளிகளின் வகுப்பறையினை உற்றுநோக்கல், பள்ளிப்பார்வை மற்றும் கண்காணிப்பு அலுவலராக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு புதிய பாடத்திட்டம் சார்ந்த (1 முதல் 3 ஆம் வகுப்பு வரை) முதல் பருவத்திற்கான ஒரு நாள் பயிற்சியினை இணையவழியில் வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் பங்கேற்க அறிவுறுத்தப்படுகிறது.


இந்த இணையவழி பயிற்சியில் தங்களது மாவட்டத்திலேயே உரிய அலுவலர்கள் பங்கேற்கும் வகையில், எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுடன் இணைந்து பயிற்சி மையத்தினை தெரிவு செய்து, 23.07.2026 அன்று ஒரு நாள் பயிற்சி நடைபெறும் வகையில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இப்பயிற்சியின் மைய எண்ணிக்கைக்கேற்ப அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள். முதுநிலை விரிவுரையாளர்கள் பொறுப்பேற்று நடத்திடுமாறும், பயிற்சி முடிவுற்ற பின்னர் அறிக்கை விவரத்தினை பின்னர் இந்நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், மேற்படி பயிற்சி சார்ந்து உத்தேச செலவினத் தொகை தங்களது நிறுவன வங்கிக் கணக்கிற்கு பின்னர் விடுவிக்கப்படும்.


இணைப்பு: மைய எண்ணிக்கை விவரப் படிவம்


இயக்குநர்

தொடக்கக்கல்வி இயக்ககம்


இயக்குநர்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்


இயக்குநர்,

பள்ளிக்கல்வி இயக்ககம்



பெறுநர்


1. முதல்வர்கள், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்.


2. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்.


3. மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)


நகல்


1. கூடுதல் முதன்மைச் செயலர். பள்ளிக்கல்வித் துறை, தலைமைச் செயலகம். சென்னை-09 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.


2. மாநிலத்திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை-06 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.


3. இயக்குநர். பள்ளிக்கல்வி இயக்ககம். சென்னை-06 அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.


4. இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், சென்னை-06 அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



NHIS Number அறிய Website Link



NHIS Number அறிய வலைதள முகவரி


Website Link to know NHIS Number 


https://tnnhis2016.com/TNEMPLOYEE/IDCardSearch.aspx



Today's (17-07-2026) Wordle



Today's (17-07-2026) Wordle Puzzle 


Wordle விளையாடும் முறை: 


ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.


பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,


மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 


சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  


 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.


தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.


 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.


 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 



Wordle Game Link: 



>>> Click Here...



Yesterday's (16-07-2026) Wordle Answer: CAKES 





NEET (UG) 2026 Final Answer Key

 


The NEET (UG) 2026 Final Answer Key has been released.


Visit the official portal to check the Final Answer Key:


https://neet.nta.nic.in



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-07-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-07-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



திருக்குறள்:

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:46 சிற்றினம் சேராமை

குறள் எண்:452

குறள்:

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.

பொருள்:

தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.


பழமொழி :

Fact is stronger than fiction.

கற்பனையை விட உண்மை விசித்திரமானது.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன்.

2. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.


பொன்மொழி :

“மாற்றம் ஒன்றே மாறாதது.”


Thought for the Day :

Time is precious; once it is lost, it never comes back. Use it wisely.


பொது அறிவு :

1. சிறைகள் இல்லாத நாடு எது?

நெதர்லாந்து.

2. இந்தியாவில் சூரிய ஒளி முதலில் தோன்றும் மாநிலம் எது?

அருணாச்சல் பிரதேசம்


English words :

**Vague** - Not clear or specific, தெளிவற்ற.                      

  **Reluctant** - Unwilling and hesitant, தயக்கமுள்ள.


புவியியலும் சுற்றுசூழலும் :

"மாநிலங்கள் மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன.

உதாரணம்: தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள்.

மாவட்டங்கள் மேலும் தாலுகாக்கள் அல்லது வட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன."


NMMS :

MAT

"CONCEPTUALIZATION" என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு உருவாக்க முடியாத வார்த்தை எது??

(1) ACTUAL.

(2) TOTAL.

(3) PLANTATION.

(4) EXPLANATION.

விடை: (4) EXPLANATION


ஜூலை 17
சர்வதேச நீதிக்கான உலக தினம் (World Day for International Justice)

1998 ஆம் ஆண்டு ரோம் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜூலை 17 ஆம் தேதி சர்வதேச நீதிக்கான உலக தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) நிறுவப்பட்டது. உலகின் ஒவ்வொரு பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கிட்டத்தட்ட 80 நாடுகள் 1998 முதல் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளன. 1998 முதல் சுமார் 139 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.


உலக எமோஜி தினம் (World Emoji Day)

அவற்றின் பரவலான பயன்பாடு மற்றும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, எமோஜிகளைக் கொண்டாட ஒரு பிரத்யேக நாளைக் கொண்டிருப்பது பொருத்தமானது. ஜூலை 17 ஆம் தேதி உலக எமோஜி தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது - நமது உரையாடல்களை உயிர்ப்பிக்கும் படச்சித்திரங்களை நினைவுகூரும் ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பம்.


நீதிக்கதை

"சுத்தமே செல்வம்"

ஒரு கிராமத்தில் சித்தார்த் மற்றும் பவின் என்ற இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். சித்தார்த் தினமும் வீட்டைச் சுத்தம் செய்து, பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைப்பான். ஆனால் பவின் பயன்படுத்திய பொருட்களை அப்படியே போட்டுவிடுவான். வீட்டில் ஒட்டடை , தூசி படிந்திருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படமாட்டான்.

ஒருநாள் அவர்களது தாத்தா வீட்டிற்கு வந்தார். அவர் ஒரு முக்கியமான நிலப்பத்திரத்தை எடுத்துக் காட்டச் சொன்னார். சித்தார்த் உடனே அலமாரியைத் திறந்து, சுத்தமாக அடுக்கி வைத்திருந்த கோப்பிலிருந்து பத்திரத்தை எடுத்துக் கொடுத்தான்.

அதே நேரத்தில், பவின் தனது பள்ளிச் சான்றிதழைத் தேடினான். ஆனால் தூசிபடிந்த அறையிலும், சிதறிக் கிடந்த பொருட்களிலும் தேடியும் கிடைக்கவில்லை .

இறுதியில், பழைய செய்தித்தாள்களுக்கு நடுவே அது மடிந்து கிடந்தது.

அப்போது தாத்தா, “வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது அழகுக்காக மட்டும் அல்ல; தேவையான நேரத்தில் பொருட்களை எளிதாகக் கண்டுபிடிக்கவும், ஆரோக்கியமாக வாழவும் உதவுகிறது," என்று அறிவுரை கூறினார்.

அந்த நாளிலிருந்து பவினும் தினமும் வீட்டைச் சுத்தம் செய்து, பொருட்களை ஒழுங்காக வைத்துப் பழகினான்.

நீதி:

"வீட்டைச் சுத்தமாகவும் பொருட்களை ஒழுங்காகவும் வைத்திருப்பது நல்லபழக்கம்; அது ஆரோக்கியத்தையும், ஒழுக்கத்தையும், மனநிம்மதியையும் தரும்.”


இன்றைய செய்திகள்
17.07.2026

🗒️சென்னை பூங்கா ரெயில் நிலையத்தை இன்று  பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் .

🗒️தமிழ்நாட்டில் ஆக. 1- 30-ந்தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இன்று முதல் வரும் 30-ஆம் தேதி வரையில்
இணையதளத்தில் பொதுமக்கள் தாங்களாகவே தங்கள் விவரங்களை பதிவு  செய்யலாம்.

🗒️தமிழகத்தில்  15 மாவட்டங்களிலும்  மற்றும்  சமவெளி பகுதிகளிலும்  வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

*விளையாட்டுச் செய்திகள்*

🏀ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்.

🏀உலகக்கோப்பை கால்பந்து: மெஸ்ஸி வரலாற்று சாதனை:
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அதிரடியாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.


Today's Headlines

🗒️Prime Minister Narendra Modi will inaugurate the Chennai Park Railway Station today.

🗒️Tamil Nadu will conduct the Population Census from August 1 to August 30. From today until July 30, people can register their details themselves on the official website.

🗒️The Weather Department has said that heatwave conditions may occur in 15 districts of Tamil Nadu and in the plains.

Sports News

🏀Japan Open Badminton: P. V. Sindhu has advanced to the quarter-finals.

🏀FIFA World Cup: Lionel Messi created a historic record. Defending champions Argentina played brilliantly against England in the semi-final and qualified for the final.


முதல்முறையாக எத்தனால்20 பெட்ரோலுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு



 முதல்முறையாக எத்தனால்20 பெட்ரோலுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு


E20 பெட்ரோலால் தனது Grand Vitara காரின் என்ஜின் பழுதாகிவிட்டதாக வழக்குத் தொடர்ந்த உரிமையாளருக்கு புதிய காரை வழங்க Maruti Suzuki நிறுவனத்திற்கு ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.


E20 பெட்ரோல் பரவலாகிவிட்ட நிலையில், வாகனம் அதற்கு தகுதியானதா? என்பதை நிறுவனம் விளக்கத் தவறியதே இதற்கு காரணம் என நீதிமன்றம் கண்டிப்பு.


வாடிக்கையாளரின் மன உளைச்சலுக்கு ரூ.1 லட்சம், வழக்குச் செலவாக ரூ.10 ஆயிரம் நஷ்டஈடாக வழங்கவும் உத்தரவு


Hotspot சேவை | வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த Airtel நிறுவனம்



வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஏர்டெல் நிறுவனம்


5G டேட்டாவை Mobile Hotspot மூலம் பிற மொபைல்களுக்கு Share செய்து பயன்படுத்த முடியாது என ஏர்டெல் நிறுவனம் விளக்கம்.


அதேபோல் ஏர்டெல் 5G plus கிடைக்கும் இடங்களில் மட்டுமே வரம்பற்ற 5G சேவையை பயன்படுத்த முடியும் என அறிவிப்பு.


ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஹாட்ஸ்பாட் பயன்படுத்தும் பொழுது தங்களால் 5ஜி பயன்படுத்த முடிவதில்லை என்று குற்றம் சாட்டிய நிலையில், இவ்வளவு நாட்களாக பயனர்களுக்கு தெரியாமல் இருந்த ஏர்டெல் நிறுவனத்தின் விதிகள் இப்போது பேசுபொருளாகியுள்ளது


ஏர்டெல் நிறுவனம் அன்லிமிடெட் 5G டேட்டா என்றே விளம்பரப்படுத்துகிறது. இதனால் பலரும் பிராட்பேண்ட்டிற்கு தனியாக ரீசார்ஜ் செய்வதை தவிர்த்துவிட்டு, செல்போன் ரீசார்ஜ்ஜை வைத்தே இணையத்தை பயன்படுத்தி வந்தனர். இருப்பினும், சமீப காலமாக அன்லிமிடெட் 5ஜி கிடைப்பதில்லை என்று பரவலாக புகார் எழுந்தது.


இந்தச் சூழலில் தான் ஏர்டெல் நிறுவனத்தின் 5G திட்டங்கள் குறித்து சில முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படுவதாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் மற்ற சாதனங்களுடன் பகிர்ந்து பயன்படுத்த முடியாதாம். மேலும், சில குறிப்பிட்ட திட்டங்களில் அதிகபட்சமே 300GB வரை மட்டும் தான் பயன்படுத்த முடியுமாம். தற்போது தெரியவந்துள்ள இந்த தகவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


உத்சவ் டெக்கி என்பவர் ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விதிமுறைகளின் ஸ்கிரீன்ஷாட்டை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் தான் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. 


அதாவது ஏர்டெல் வழங்கும் அன்லிமிடெட் 5G டேட்டாவை மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் மற்ற சாதனங்களுக்குப் பகிர முடியாதாம். இதுவே வாடிக்கையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு இந்த நிபந்தனை முன்பே தெரியாது என்றும் அன்லிமிடெட் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இதுபோல போலியாக ஏமாற்றக்கூடாது எனவும் கொந்தளித்து வருகிறார்கள்.


இது மட்டுமின்றி ஏர்டெல், அன்லிமிடெட் 5G டேட்டா என்பது ஏர்டெல் 5G பிளஸ் நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் மட்டுமே செயல்படுமாம். 5G கவரேஜ் இல்லாத இடங்களில் வாடிக்கையாளர்கள் தங்களது திட்டத்தின் வழக்கமான டேட்டா வரம்பை மட்டுமே பயன்படுத்த முடியும். அது முடிந்துவிட்டால் தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும். இது அன்லிமிடெட் 5G டேட்டாக்குள் வராது எனவும் கூறப்படுகிறது.


இது ஒரு பக்கம் இருக்க ரூ.399 ரீசார்ஜ் தொடர்பாகவும் விவாதம் எழுந்துள்ளது. இணையதள பயனாளர் ஒருவர் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையம் அனுப்பியதாக சொல்லி ஒரு மெயிலை இணையத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதில் ரூ.399 திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா என குறிப்பிடப்பட்டு இருந்தாலும்.. 30 நாட்களுக்குள் 300GB வரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு மேல் பயன்படுத்தப்பட்டால் அது வணிக ரீதியான பயன்பாடாக கருதப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது.


இது தொடர்பாகவும் இணையதள பயன்பாட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். 300GB என்று வரம்பு இருந்தால் அதை எப்படி அன்லிமிடெட் திட்டம் என்று கூறலாம்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக அதிகளவு டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மற்றும் வீட்டில் பிராட்பேண்ட் வசதி இல்லாமல் மொபைல் ஹாட்ஸ்பாட்டை நம்பி வேலை செய்பவர்கள், இந்த விதிகளால் கொந்தளித்து போய் இருக்கிறார்கள்..


மேலும் சிலர் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களை ஒப்பிட்டு, ஏர்டெல் அதிக கட்டணம் வசூலிப்பதோடு மட்டுமல்லாமல் 300GB வரம்பு மற்றும் ஹாட்ஸ்பாட் கட்டுப்பாடு போன்ற நிபந்தனைகளையும் விதிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை ஏர்டெல் தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-07-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-07-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்