கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாணவருக்கு அபுதாபியில் NEET தேர்வு மையம்



மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாணவர் அப்துல்லாவுக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்


இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து பார்த்த மாணவர் அதிர்ச்சி


அபுதாபியில் தேர்வு மையம் என்பதை பார்த்ததும் தேசிய தேர்வு முகமையை தொடர்புகொண்ட பெற்றோர்


  புதிய ஹால் டிக்கெட் தரப்படும் என கூறிய தேசிய தேர்வு முகமை



6th Std | Term 3 | English | Quiz Collection (50 Questions) | TET

 


ஆறாம் வகுப்பு | மூன்றாம் பருவம் | ஆங்கிலம் | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2


Class 6 | Term III | English | Quiz Collection (50 Questions) | Teacher Eligibility Test (TET) Paper 1 and Paper 2


I have prepared a comprehensive quiz based on the Tamil Nadu State Board English textbook for Class 6, Term 3. This quiz covers all units, including prose, poetry, supplementary readings, and grammar sections such as "Who Owns the Water?", "Indian Seasons", "That Sunday Morning", and "The Jungle Book".



>>> Click Here to Practice Questions 



I've created a comprehensive set of 50 questions that touch upon every major story, poem, and grammar concept in your Class 6 Term 3 English textbook. This quiz will help you recall specific plot details, understand character motivations, and practice essential grammar skills like conjunctions and degrees of comparison. Good luck with your studies - you've got this!



6th Std | Term 2 | English | Quiz Collection (50 Questions) | TET

 



ஆறாம் வகுப்பு | இரண்டாம் பருவம் | ஆங்கிலம் | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2


Class 6 | Term II | English | Quiz Collection (50 Questions) | Teacher Eligibility Test (TET) Paper 1 and Paper 2


I have prepared a comprehensive 50-question quiz based on the Class 6 English Term 2 syllabus issued by the Government of Tamil Nadu. This quiz covers key prose lessons like "Sports Stars" and "Trip to Ooty," poetry such as "Team Work" and "From a Railway Carriage," as well as the supplementary stories and essential grammar topics like Pronouns and Adjectives.



>>> Click Here to Practice Questions 



I hope this 50-question quiz helps you master your Class 6 Term 2 English lessons! It covers everything from the inspiring stories of sports stars to the exciting travels of Gulliver and the rhythm of a railway carriage. Good luck with your studies—you've got this!


6th Std | Term 1 | English | Quiz Collection (50 Questions) | TET

 


ஆறாம் வகுப்பு | முதல் பருவம் | ஆங்கிலம் | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2


Class 6 | Term 1 | English | Quiz Collection (50 Questions) | Teacher Eligibility Test (TET) Paper 1 and Paper 2


I have prepared a comprehensive quiz based on the Tamil Nadu Class 6 English textbook for Term 1. This 50-question assessment covers all three units, including prose, poetry, and supplementary readings, along with the relevant grammar and vocabulary sections.



>>> Click Here to Practice Questions 



I've created a comprehensive 50-question quiz that spans all the essential units of your Class 6 Term 1 English syllabus. It includes deep dives into the lives of sea turtles, the history of Indian spices, the beautiful poetry of nature, and essential grammar topics like nouns, pronouns, and prepositions.

​Good luck with your practice! Taking this quiz will help you understand both the stories and the language patterns perfectly. You've got this!


Census 2027 Form



மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம் 2027


Census Form 2027


இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 


வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு அட்டவணை படிவம்


Census 2027 Format


Census of India 2027 


House listing and Housing Census Schedule Form



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



6th Std | Term 3 | Tamil | Quiz Collection (50 Questions) | TET

 


ஆறாம் வகுப்பு | மூன்றாம் பருவம் | தமிழ் | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2


Class 6 | Term III | Tamil | Quiz Collection (50 Questions) | Teacher Eligibility Test (TET) Paper 1 and Paper 2



>>> வினாக்களை பயிற்சி செய்ய இங்கே சொடுக்கவும்



6-ஆம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவப் பாடங்களிலிருந்து மிக முக்கியமான 50 வினாக்களைத் தொகுத்து வழங்கியுள்ளேன். இந்த வினாடி வினா உங்கள் பாட அறிவைச் சோதிக்கவும், தேர்வுக்குத் தயாராகவும் பெரிதும் உதவும். விடைகளுக்கான விளக்கங்களையும் கவனமாகப் படியுங்கள். வாழ்த்துகள்!




6th Std | Term 2 | Tamil | Quiz Collection (50 Questions) | TET

 


ஆறாம் வகுப்பு | இரண்டாம் பருவம் | தமிழ் | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2


Class 6 | Term II | Tamil | Quiz Collection (50 Questions) | Teacher Eligibility Test (TET) Paper 1 and Paper 2



>>> வினாக்களை பயிற்சி செய்ய இங்கே சொடுக்கவும்



6-ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவப் பாடங்களிலிருந்து மிக முக்கியமான 50 வினாக்களைத் தொகுத்து வழங்கியுள்ளேன். இந்த வினாடி வினா உங்கள் பாட அறிவைச் சோதிக்கவும், தேர்வுக்குத் தயாராகவும் பெரிதும் உதவும். விடைகளுக்கான விளக்கங்களையும் கவனமாகப் படியுங்கள். வாழ்த்துகள்!




6th Std | Term 1 | Tamil | Quiz Collection (50 Questions) | TET

 


ஆறாம் வகுப்பு | முதல் பருவம் | தமிழ் | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2


Class 6 | Term 1 | Tamil | Quiz Collection (50 Questions) | Teacher Eligibility Test (TET) Paper 1 and Paper 2



>>> வினாக்களை பயிற்சி செய்ய இங்கே சொடுக்கவும்



6-ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவப் பாடங்களிலிருந்து மிக முக்கியமான 50 வினாக்களைத் தொகுத்து வழங்கியுள்ளேன். இந்த வினாடி வினா உங்கள் பாட அறிவைச் சோதிக்கவும், தேர்வுக்குத் தயாராகவும் பெரிதும் உதவும். விடைகளுக்கான விளக்கங்களையும் கவனமாகப் படியுங்கள். வாழ்த்துகள்!



TAPS நடைமுறை முயற்சிக்கு எதிர்ப்பு - தமிழ்நாடு அரசுக்கு CPS ஒழிப்பு இயக்கம் கண்டனம்



 தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக TAPS நடைமுறை முயற்சிக்கு எதிர்ப்பு - தமிழ்நாடு அரசுக்கு CPS ஒழிப்பு இயக்கம் கண்டனம்



பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த  பரிசீலிப்போம் என த.வெ.க. அரசு உறுதியளித்த நிலையில் தற்போது TAPS தொடர்பான அரசாணை நம்பிக்கையை சீர்குலைக்கும் நடவடிக்கையாக உள்ளது என சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயராஜேஸ்வரன்,  பிரெடரிக் ஏங்கல்ஸ் , செல்வகுமார் கூறியுள்ளனர்.


 அவர்களது அறிக்கை

 தற்போதைய அரசு ஜூன் 15-ல் வெளியிட்டுள்ள டாப்ஸ் தொடர்பான அரசாணை, அரசு ஊழியர் ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் காலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பரிசீலிப்போம் என த.வெ.க. உறுதியளித்தது. ஆனால் இந்த அரசாணை நம்பிக்கையை சீர்குலைக்கும் நடவடிக்கையாக உள்ளது.


2026 ஜனவரி 1க்கு முன்பு ஓய்வு பெற்று சிபிஎஸ் இல் தங்களது இறுதி பலன்களை பெற்றுக்கொண்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர் ஆசிரியர்கள் குறித்து இந்த அரசனையில் எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. தேர்தல் வாக்குறுதியை புறக்கணித்து அதிகாரிகளின் ஆலோசனைகளை மட்டும் கேட்டு தமிழக அரசு செயல்படுமானால் அதன் விளைவுகள் அரசியல் ரீதியாக த.வெ.க. அரசிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுத்தும். 


20 லட்சம் குடும்பங்களின் எதிர்பார்ப்பும் கோரிக்கையும் பழைய ஓய்வூதிய திட்டமே. தமிழக அரசு உடனடியாக TAPS திட்டத்தை கைவிட்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். 2026 ஜனவரி 1க்கு முன், பின் ஓய்வு பெற்ற அனைவருக்கும் பொருந்தும் வகையில் முழுமையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என குறிப்பிட்டுள்ளனர்.


Teachers Transfer Counseling – Information regarding DOJ



ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - பணியில் சேர்ந்த நாள் தொடர்பான தகவல் 


General Transfer Counseling for Teachers – Information regarding the date of joining service


ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு EMIS Websiteல் விண்ணப்பிக்கும் முன்னர் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களின் தற்போதைய விவரங்கள் மிக சரியாக உள்ளதா என அவர்களின் 8 இலக்க EMIS ID மூலம் அவசியம் சரி பார்க்க வேண்டும். 


உதாரணம்! 2004 மற்றும் 2005 இல் தொகுப்பு ஊதியம் முறையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மட்டும் தொகுப்பு ஊதியத்தில் பணியில் சேர்ந்த நாளை முன்னுரிமைக்கு எடுத்து கொள்ளலாம் என சென்ற ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வில் கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டது. 


அது போல் தொகுப்பு ஊதியத்தில் பணியேற்று அதே பதவியில் தொடர்ந்து பணிபுரிபவர்கள் மற்றும் பதவி உயர்வில் சென்றவர்கள் தங்களின் தனிப்பட்ட Login இல் முதன்முதலில் பணியேற்ற தேதி (தொகுப்பு ஊதியத்தில் ) சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 2004, 2005 இல் தொகுப்பு ஊதியத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கு முதன்முதலில் பணியில் சேர்ந்த தேதி 01-06-2006 என இருப்பின்  தொகுப்பு ஊதியத்தில் பணியில் சேர்ந்த சரியான தேதியை மாற்றம் செய்து கொள்ளுங்கள். (பணி வரன்முறை தேதி 01-06-2006 என்பது சரி) 


User ID , Password இரண்டும் தெரியாவிட்டால் TET ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்யும் வழிமுறை

User ID , Password இரண்டும் தெரியாவிட்டால் TET Hall Ticket Download செய்யும் வழிமுறை


User name & Password மறந்திருப்பின்,


'Forgot your password' என்பதை அழுத்தினால் வரும் திரையில்,


தேர்வு விபரம் & Mobile No. அளித்து User name & Passwordஐ SMSல் பெற்றுக்கொள்ளலாம்.


அல்லது


உங்களிடம் User ID and Password இல்லாவிட்டால் கீழ் உள்ள இந்த TRB லிங்கில் சென்று எடுத்துக்கொள்ளலாம்.


 https://trb1.ucanapply.com/forget-password





TET hall ticket - user ID and password இரண்டுமே தெரியாதவர்கள், மேற்கண்ட screenshot ல் உள்ளது போல, TET 1 OR TET 2 என தேர்வு செய்து submit கொடுத்தால், உங்கள் registered mobile number க்கு user ID and New password வரும்.


அதன் மூலம் login செய்து hall ticket download செய்து கொள்ளலாம்.



TET APPLICATION ID மறந்து விட்டதா? - Hall Ticket Download செய்யும் வழிமுறை




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 


TET - Hall Ticket Download Link



TET  - Hall Ticket Download Link


Working Teachers TET  - Hall ticket published


TET தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தேர்வு நுழைவு சீட்டு தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது


TNTET HALL TICKET PUBLISHED 


TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS - 2026 - RELEASE OF HALL TICKET



DOWNLOAD @ 

https://trb1.ucanapply.com/login



 

TET Hall Ticket தொடர்பான தகவல்கள்

 


TET Hall Ticket தொடர்பான தகவல்கள் 


TET தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தேர்வு நுழைவு சீட்டு தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது


* ஆசிரியர் தேர்வு வாரியம் - பத்திரிகைச் செய்தி | 19.06.2026


* தேர்வு விவரம்:

தேர்வு: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 - TET

* அறிவிக்கை எண்: 01/2026, நாள் 13.02.2026

* தேர்வு நாட்கள்: 

     * தாள் I : 04.07.2026

     * தாள் II : 05.07.2026


* Hall Ticket விவரம்:

* ஹால் டிக்கெட் வெளியீடு: ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

* டவுன்லோட் செய்ய தொடக்கம் : 19.06.2026 முதல்

* எப்படி எடுப்பது: User ID மற்றும் Password பயன்படுத்தி Login செய்து பதிவிறக்கம் செய்யலாம்


ஹால் டிக்கெட் பிரச்சனை இருந்தால்:

* சிறப்பு முகாம்: 22.06.2026 முதல் 30.06.2026 வரை

* நாட்கள்: வேலை நாட்களில் மட்டும் - Working Days

* எங்கு: ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரடியாக

* எதற்கு: ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள், வேறு குறைகள் இருந்தால் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்


* முக்கிய தேதிகள்:

1. 19.06.2026 : ஹால் டிக்கெட் டவுன்லோட் ஆரம்பம்

2. 22.06.2026 - 30.06.2026 : சிறப்பு முகாம்

3. 04.07.2026 : TET தாள் I தேர்வு

4. 05.07.2026 : TET தாள் II தேர்வு


* கவனிக்க : இந்த தேர்வு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கானது. 



TET Hall Ticket - TRB Press Release





ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06.

பத்திரிகைச் செய்தி

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.01/2026, நாள் 13.02.2026ன் படி 2026 ஆம் ஆண்டிற்கான பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் II ற்கான தேர்வு எதிர்வரும் 04.07.2026 மற்றும் 05.07.2026 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் 19.06.2026 முதல் அவர்களது User ID மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய இயலாதவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சிறப்பு முகாம் 22.06.2026 முதல் 30.06.2026 வரை (பணி நாட்களில் - Working Days) செயல்படும். நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதிலோ அல்லது வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலோ இச்சிறப்பு முகாம் அலுவலர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தலைவர்

இடம்: சென்னை

நாள் : 19.06.2026


TET - TRB - முக்கிய அறிவுறுத்தல்கள்



 TET - ஆசிரியர் தேர்வு வாரியம் - முக்கிய அறிவுறுத்தல்கள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பணியிலிருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கான விதிமுறைகள் 


   ஆசிரியர் தேர்வு எழுதும் ஆசிரியர் பெருமக்கள் தேர்வு நடைபெறும் நாளன்று காலை 9:30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் அதற்குமேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


* Aadhar Card

* PAN Card

* Passport

* Driving License

மேற்காணும் அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.


OMR தாளில் விடைகளை குறிக்க கண்டிப்பாக கருப்பு பந்து முனை பேனா (Black ball point pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


National Scholarship Programme for Differently Abled Students - Guidelines



மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை வழங்கும் திட்டம் - வழிகாட்டு நெறிமுறைகள்


National Scholarship Scheme for Students with Disabilities – Guidelines


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை வழங்கும் திட்டம் - கணினி வழியாக விண்ணப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் கடிதம் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 தேசிய கல்வி உதவித்தொகை வழங்கும் இணைய தனத்தில் (Website) மாற்றுத்திறனாளி மானவ/மாணவியர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 2026-2027ஆம் கல்வியாண்டிற்கு விண்ணப்பங்கள் (புதிய விண்ணப்பங்கள் / புதுப்பித்தல் விண்ணப்பங்கNation Scholarship Portal ல் உள்ளவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுக்குள் விண்ணப்பிக்கவும் மற்றும் INSTITUTE NODAL OFFICER விண்ணப்பங்களை சரிப்பார்த்து அடுத்த நிலைக்கு அலுவலருக்கு (STATE NODAL OFFICER) அனுப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய கல்வி மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் (புதிய விண்ணப்பங்கள் / புதுப்பித்தல் விண்ணப்பங்கள்) கீழ்கண்டுள்ள வகையில் விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிக்க மற்றும் INSTITUTE NODAL OFFICER சரிபார்ப்பதற்கான காலக்கெடு https://scholarships.gov in/All-Scholarships link Department of Empowerment of Persons with Disable ல் பின்வருமாறு தெரிவிக்கப்படும் என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


For Pre-Matric Scholarship Scheme


Opening of Portal for registration

1 June 2026


Last date for online application submission

31 August 2026


For Post-Matric/Top Class Education Scholarship Schemes


Opening of Portal for registration

1 June 2026


Last date for online application submission

31 October 2026


இத்திட்டத்திற்காக ஒவ்வொரு கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகள் /பள்ளிகள் / தொழிற்பயிற்சி நிலையங்களில் உdter Institute Nodal Officerகளின் e-KYC மற்றும் Aadhaar authentication போன்ற உள்ளீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் நியமிக்கப்பட்ட Institute Nodal Officer மற்றும் Head of Institute ஆகியோர் பரிமாற்றம் மூலம் சென்றால் புதிய INO and HOI நியமிக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி / தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர்களிடமிருந்து கடிதம் மற்றும் புதிய INO and HOI Updated Aadhaar. Aadhaar link mobile No ஆகியவற்றுடன் scdaspsc22@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்பட்சத்தில் மாற்றம் செய்து தர இயலும் என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


மேற்குறிப்பிட்டுள்ள கால அளவிற்குள், மத்திய அரசின் வாயிலாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு (வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி) மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களை கணினி மூலம் (Online) https://scholarships.gov என்ற link-ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்திற்கான குறித்த கால அளவிற்குள் விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில், மேற்குறித்த link-இல் விண்ணப்பிக்க இயலாது என்ற விவரமும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவ /a. Income certificate. Bonafide certificate. Previous year mark sheet, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அல்லது Smart card-UDID-னை மற்றும் இதர சான்றுகள் (தேவைப்படும்பட்சத்தில்) ஒவ்வொரு திட்டத்திற்கும் (Pre/Post/Top class) பதிவேற்றம் செய்ய உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேற்குறிப்பிட்டுள்ள சான்றிதழ்கள் உள்ளதா என்பதை INSTITUTE NODAL OFFICER உறுதி செய்து அதன்பின்னர். அடுத்த நிலைக்கு (STATE NODAL OFFICER) சமர்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும், இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் (9ஆம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை பயிலும்) மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களின் வங்கி கணக்குகளின் விவரங்கள் செயல்பாட்டில் (Activate) உள்ளதா என்பதையும். அவர்களின் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.


மேலும், UDISE+ / AISHE உள் மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் Community விவரமும், தேசிய கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளி Community விவரம் சரியான எண்ணிக்கையில் உள்ளதா (அதாவது தங்கள் பள்ளி / கல்லூரிகளில் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாலிகளின் Community வாரியான மொத்த எண்ணிக்கை மற்றும் UDISE+ / AISHE ல் உள்ள மாற்றுத்திறனாளிகளின் Community வாரியான எண்ணிக்கையும் சமமாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த பயனாளிகளின் தற்போது கல்வி பயின்று Bonafide சான்றிதழ்,  Income certificate, Previous year mark sheet. மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அல்லது Smart card-UDID போன்றவை பதிவேற்றம் இல்லாத நபர்களிடமிருத்து பெறப்படும் விண்ணப்பங்கள் STATE NODAL OFFICER அவர்களால் மீண்டும் INSTITUTE NODAL OFFICERக்கு திருப்பி அனுப்பப்படும் (அல்லது) நிராகரிக்கப்படும் என்ற விவரமும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது


எனவே, மேற்கண்ட நிகழ்வுகள் எதும் ஏற்படா வண்ணம் ஒவ்வொரு கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வரும் INSTITUTE NODAL OFFICERகளுக்கு அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், அனைத்து துறை தலைவர்களும் தங்களின் கீழ் உள்ள சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு மேற்படி திட்டம் மற்றும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை 15.06.2026க்குள் சுற்றறிக்கை அனுப்பி அதன் நகல் ஒன்றை இவ்வாணையரகத்திற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இணைப்பு கல்வி உதவித்தொகைக்கு வழிகாட்டு நெறிமுறைகள்



NEET (UG) 2026 - Admit Card Reminder & Safety Advisory

 


NEET (UG) 2026 - Admit Card Reminder & Safety Advisory



புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2026

 


அகர முதல்வர்களுக்கு சிகர விருதுகள்!


புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2026


விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது



Vidyadhan Scholarship Programme - இணை இயக்குநர் செயல்முறைகள்



வித்யாதன் கல்வி உதவித்தொகை - இணை இயக்குநர் செயல்முறைகள்


வித்யாதன் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் , நாள் : 12-06-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



From 

Mrs.S.Shanthi, 

Joint Director (NSS) 

Directorate of School Education 

Chennai-06.


To

Chief Educational Officer 

Chief Educational Office 

All Districts


R.C.No.016714/M2/S3/2026 , Dated. 12.06.2026


Sub:


School Education Scholarship - Vidyadhan Scholarship Programme 2026 - Sarojini Damodaran Foundation (SDF) - Dissemination of information to eligible students through Government and Aided Schools - Requested - Reg.


Ref:


Letter from Pankaj Tripathi, Principal Consultant, SarojiniDamodaran Foundation dated.05.06.2026


With reference to the letter cited above, all Chief Educational Officers are requested to instruct the Headmasters of Government and Aided High and Higher Secondary Schools under their jurisdiction to disseminate the details of the Vidyadhan Scholarship Programme 2026offered by the Sarojini Damodaran Foundation (SDF) to eligible students.


Students who have passed the SSLC/10th Standard Examination in 2026 and satisfy the prescribed eligibility criteria may apply online through the Vidyadhan portal at www.vidyadhan.org on or before 12.07.2026.


Therefore, the details of the scholarship programme may be widely publicized among eligible students and their parents, and necessary action may be taken accordingly.


Enclosure: Reference cited above


Joint Director(NSS)



Copy to


Pankaj Tripathi(ex-Civil Servant) Principal Consultant, Sarojini Damodaran foundation,


Email:saravanan@sdfoundationindia.com


பள்ளிக் கல்வித் துறை (DSE & DEE) வழக்குகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக இணை இயக்குநர்கள் நியமனம் - இயக்குநர் உத்தரவு



பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த (DSE & DEE) நீதிமன்ற வழக்குகளை ஆய்வு செய்யவும் மற்றும் தொடர் கண்காணிப்பு செய்யவும் மாவட்ட வாரியாக இணை இயக்குநர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் , நாள் : 17.06.2026


DSE Proceedings - JDs appointed as Court Case Monitoring Officers



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TET | Psychology தொடர்பாக SCERTன் தகவல்



TET | Psychology தொடர்பாக SCERTன் தகவல் 


Good Evening Teachers


As discussed in the live session, here are the two prompts which can be used in any generative AI like ChatGPT, Grok, Gemini etc. 


For easy identification, I have given the topic in red color. You can replace the topic / concept as you like with any subject and in any language.


1. Explain me "Jean Piaget's Cognitive Development Theory" in layman's terms and in Tamil.   


2. Give me 10 MCQs on the topic "Jean Piaget's Cognitive Development Theory" in Aiken format and in Tamil.



1. Jean Piaget's Cognitive Development Theory - Click Here



2. 10 MCQs on the topic "Jean Piaget's Cognitive Development Theory" - Click Here


TET | Psychology | ஜீன் பியாஜேவின் (Jean Piaget) அறிவுசார் வளர்ச்சிவழிக் கோட்பாடு (Cognitive Development Theory)

  


TET | Psychology | ஜீன் பியாஜேவின் (Jean Piaget) அறிவுசார் வளர்ச்சிவழிக் கோட்பாடு (Cognitive Development Theory)


Grok AI விளக்கம் 


ஜீன் பியாஜேவின் (Jean Piaget) அறிவுசார் வளர்ச்சிவழிக் கோட்பாடு (Cognitive Development Theory) என்பது, குழந்தைகள் வளரும்போது அவர்களின் மூளையும், சிந்திக்கும் திறனும் எப்படிப் படிப்படியாக மாறுகிறது என்பதைப் பற்றியது.

​சுருக்கமாகச் சொன்னால், குழந்தைகள் ஒன்றும் "சிறிய அளவிலான பெரியவர்கள்" கிடையாது. அவர்கள் உலகத்தைப் பார்க்கும் விதமும், புரிந்துகொள்ளும் முறையும் பெரியவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது என்கிறார் पियाஜே.

​குழந்தைகள் தங்கள் சுற்றியுள்ள உலகத்தை அனுபவித்து, அதிலிருந்து தாங்களாகவே அறிவை உருவாக்கிக்கொள்கிறார்கள். இந்த வளர்ச்சி 4 முக்கிய நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

​1. புலனியக்க நிலை (Sensorimotor Stage) — பிறப்பு முதல் 2 வயது வரை

​இந்த வயதில் குழந்தைகள் தங்கள் ஐம்புலன்கள் (பார்வை, தொடுதல், கேட்டல்) மற்றும் இயக்கங்கள் (தொடுவது, கடிப்பது, நடப்பது) மூலமாக உலகத்தைப் புரிந்துகொள்கிறார்கள்.

  • முக்கிய அம்சம் (Object Permanence): ஒரு பொருள் கண்ணுக்கு முன்னால் இல்லை என்றாலும், அது உலகத்தில் எங்கோ ஒரு இடத்தில் இருக்கத்தான் செய்கிறது என்பதைப் புரிந்துகொள்வது.
  • உதாரணம்: 6 மாதக் குழந்தைக்கு முன்னால் ஒரு பொம்மையை மூடி வைத்தால், அது மறைந்துவிட்டதாக நினைக்கும். ஆனால் 1-2 வயதுக் குழந்தை, துணியை விலக்கி பொம்மையைத் தேடும்.

​2. செயலுக்கு முற்பட்ட நிலை (Preoperational Stage) — 2 முதல் 7 வயது வரை

​இங்கு குழந்தைகள் பேசக் கற்றுக்கொள்கிறார்கள். சின்னச் சின்னக் குறியீடுகள் (Symbols) மற்றும் கற்பனைகள் மூலம் சிந்திக்கத் தொடங்குவார்கள்.

  • சுயநலச் சிந்தனை (Egocentrism): மற்றவர்களின் பார்வையில் இருந்து உலகத்தைப் பார்க்க இவர்களால் முடியாது. தங்களுக்குத் தெரிந்ததுதான் எல்லாருக்கும் தெரியும் என்று நினைப்பார்கள்.
  • உயிரற்றவற்றுக்கு உயிர் கொடுத்தல் (Animism): பொம்மைகளுக்கும், நிலாவுக்கும் உயிர் இருப்பதாக நினைத்து அவற்றிடம் பேசுவார்கள்.
  • உதாரணம்: ஒரு குச்சியைக் குதிரையாக நினைத்து விளையாடுவது.

​3. பருப்பொருள் செயலக நிலை (Concrete Operational Stage) — 7 முதல் 11 வயது வரை

​இந்த நிலையில் குழந்தைகளின் சிந்தனையில் லாஜிக் (Logic) அல்லது பகுத்தறிவு ஆரம்பிக்கும். ஆனால், அவர்களின் கண்ணுக்கு முன்னால் இருக்கும் நிஜமான (Concrete) பொருட்களை வைத்து மட்டுமே அவர்களால் லாஜிக்காக யோசிக்க முடியும்.

  • மாறாத்தன்மை (Conservation): வடிவங்கள் மாறினாலும் அளவு மாறாது என்பதைப் புரிந்துகொள்வார்கள்.
  • உதாரணம்: உயரமான குறுகிய கிளாஸில் இருக்கும் தண்ணீரையும், அகலமான பாத்திரத்தில் இருக்கும் அதே அளவு தண்ணீரையும் காட்டினால், இரண்டிலும் ஒரே அளவுதான் தண்ணீர் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வார்கள் (முந்தைய நிலையில் உயரமான கிளாஸில் தான் அதிகத் தண்ணீர் இருக்கிறது என்று சொல்வார்கள்).

​4. முறைசார் செயலக நிலை (Formal Operational Stage) — 11 வயதுக்கு மேல்

​இதுதான் இறுதி நிலை. இங்குக் குழந்தைகள் பெரியவர்களைப் போலச் சிந்திக்கத் தொடங்குவார்கள். கண்ணுக்குத் தெரியாத கற்பனையான விஷயங்களைப் பற்றியும் (Abstract concepts), எதிர்காலத்தைப் பற்றியும் லாஜிக்காக யோசிக்கும் திறன் இவர்களுக்கு வந்துவிடும்.

  • கருதுகோள் சிந்தனை (Hypothetical thinking): "ஒருவேளை இப்படி நடந்தால் என்ன ஆகும்?" என்று கற்பனையாக ஒரு சூழலை உருவாக்கி, அதற்குத் தீர்வு காண முயல்வார்கள்.
  • உதாரணம்: நீதி, நேர்மை, அறிவியல் கோட்பாடுகள் போன்றவற்றை ஆழமாகப் புரிந்துகொள்வது.

​சுருக்கமாக (In Simple Words):

​குழந்தைகளின் அறிவு வளர்ச்சி என்பது ஏதோ ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றுவது போல அல்ல; அது ஒரு செடி தானாக வளர்வதைப் போன்றது. ஒவ்வொரு வயதிலும் மூளை ஒரு புதிய "சாஃப்ட்வேர்" (Software) அப்டேட்டைப் பெற்று, உலகத்தைப் புதிய கோணத்தில் புரிந்துகொள்கிறது என்பதுதான் பியாஜேவின் எளிய தத்துவம்.



TET | Psychology | Jean Piaget's Cognitive Development Theory பற்றிய 10 பல்வாய்ப்பு வினாக்கள் (MCQs)



 TET | Psychology | Jean Piaget's Cognitive Development Theory பற்றிய 10 பல்வாய்ப்பு வினாக்கள் (MCQs)


ஜீன் பியாஜேயின் அறிவாற்றல் வளர்ச்சி கோட்பாடு (Jean Piaget's Cognitive Development Theory) பற்றிய 10 பல்வாய்ப்பு வினாக்கள் (MCQs) Aiken வடிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:


​அறிவாற்றல் வளர்ச்சி கோட்பாட்டை (Cognitive Development Theory) முன்மொழிந்தவர் யார்?

A. சிக்மண்ட் பிராய்டு (Sigmund Freud)

B. ஜீன் பியாஜே (Jean Piaget)

C. லெவ் வைகோட்ஸ்கி (Lev Vygotsky)

D. பி.எஃப். ஸ்கின்னர் (B.F. Skinner)

ANSWER: B


​பியாஜேயின் அறிவாற்றல் வளர்ச்சி கோட்பாட்டில் மொத்தம் எத்தனை நிலைகள் உள்ளன?

A. 2

B. 3

C. 4

D. 5

ANSWER: C


​பியாஜேயின் கோட்பாட்டின்படி, அறிவாற்றல் வளர்ச்சியின் முதல் நிலை எது?

A. முன்செயல் நிலை (Preoperational stage)

B. புலனியக்க நிலை (Sensorimotor stage)

C. பருப்பொருள் நிலை (Concrete operational stage)

D. முறையான செயல் நிலை (Formal operational stage)

ANSWER: B


​'பொருள் நிலைத்தன்மை' (Object permanence) என்ற கருத்து எந்த நிலையில் உருவாகிறது?

A. புலனியக்க நிலை (Sensorimotor stage)

B. முன்செயல் நிலை (Preoperational stage)

C. பருப்பொருள் நிலை (Concrete operational stage)

D. முறையான செயல் நிலை (Formal operational stage)

ANSWER: A


​'தன்மையவாதம்' அல்லது 'தன்னிலையார்வம்' (Egocentrism) என்பது எந்த நிலையின் முக்கியப் பண்பாகும்?

A. புலனியக்க நிலை (Sensorimotor stage)

B. முன்செயல் நிலை (Preoperational stage)

C. பருப்பொருள் நிலை (Concrete operational stage)

D. முறையான செயல் நிலை (Formal operational stage)

ANSWER: B


​பியாஜேயின் கூற்றுப்படி 'ஸ்கீமா' (Schema) என்பது எதைக் குறிக்கிறது?

A. அறிவை கட்டமைக்கும் அடிப்படை அலகு

B. உணர்ச்சிகளின் வெளிப்பாடு

C. சமூக தொடர்புகள்

D. உடல் வளர்ச்சி

ANSWER: A


​ஏற்கனவே உள்ள ஸ்கீமாவில் புதிய தகவல்களைச் சேர்க்கும் செயல்முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. மாற்றி அமைத்தல் (Accommodation)

B. சமநிலைப்படுத்துதல் (Equilibration)

C. உள்வாங்குதல் (Assimilation)

D. முதிர்ச்சி (Maturation)

ANSWER: C


​ஒரு பொருளின் வடிவம் மாறினாலும் அதன் அளவு மாறாது என்ற 'மாறாத்தன்மை' (Conservation) கருத்தை குழந்தைகள் எந்த நிலையில் புரிந்துகொள்கின்றனர்?

A. புலனியக்க நிலை (Sensorimotor stage)

B. முன்செயல் நிலை (Preoperational stage)

C. பருப்பொருள் நிலை (Concrete operational stage)

D. முறையான செயல் நிலை (Formal operational stage)

ANSWER: C


​கற்பனை மற்றும் நுண்பொருள் சிந்தனை (Abstract thinking) எந்த நிலையில் முழுமையாக வளர்ச்சியடைகிறது?

A. புலனியக்க நிலை (Sensorimotor stage)

B. முன்செயல் நிலை (Preoperational stage)

C. பருப்பொருள் நிலை (Concrete operational stage)

D. முறையான செயல் நிலை (Formal operational stage)

ANSWER: D


​பியாஜேயின் கோட்பாட்டின்படி, முன்செயல் நிலையின் (Preoperational stage) வயது வரம்பு என்ன?

A. பிறப்பு முதல் 2 ஆண்டுகள் வரை

B. 2 முதல் 7 ஆண்டுகள் வரை

C. 7 முதல் 11 ஆண்டுகள் வரை

D. 12 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்

ANSWER: B



18-06-2026 TN SCERT Special TET 1 & TET 2 Maths SESSION 2 , TET 2 Social Science Session 3 - Youtube Links

 


Good afternoon all. Kindly note today session and its timings



Click here for SPECIAL TET PAPER 1 MATHS SESSION 2


https://www.youtube.com/live/OxP94LNlXDU?si=KEE1jKyunriAUqzN




Click here for SPECIAL TET PAPER 2 MATHS SESSION 2

 

https://www.youtube.com/live/HEBQ4OjM8cE?si=Tjbby1m6tefGNweV



Click here for SPECIAL TET PAPER 2 SOCIAL SCIENCE SESSION 3


https://www.youtube.com/live/ZSQezqwcWTU?si=_c7LIwA1FYE2xxO2


Session starts on 18.06.26 at 06.30 PM Today.


EMIS Websiteல் ஆசிரியர் Transfer Counseling Application PDF வடிவில் தரவிறக்கம் செய்தல் தொடர்பான தகவல்



EMIS Websiteல் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் Transfer Application PDF வடிவில் தரவிறக்கம் Download செய்தல் தொடர்பான தகவல்

 

அன்பார்ந்த ஆசிரிய சகோதர சகோதரிகளே,


EMIS Websiteல் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் செய்தபின் அலைபேசியில் PDF வடிவில் சரியாக தரவிறக்கம் செய்ய இயலவில்லை எனில், Chrome Browserல் வலதுபக்க மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை தொடும் பொழுது தோன்றும் Drop-down Menuவில் Desktop View என்பதை Tick செய்து கொள்ளவும். பிறகு Zoom Option -ல் 62% கொடுத்த பின் Print Click செய்தால் ஒரு பக்கத்தில் Transfer Application PDF வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.



B.Ed., / M.Ed., படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியீடு



பி.எட்., / எம்.எட்., படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியீடு


Admission notification released for B.Ed., and M.Ed., courses.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



செய்தி வெளியீடு எண்: 249 , நாள் : 18.06.2026


அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட் / முது நிலை மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு

மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.பெ.விஸ்வநாதன் அவர்கள் தகவல்


 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பி.எட் மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இன்று 19.06.2026 முதல் 21.07.2026 வரை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். 31.07.2026 அன்று மாணாக்கர் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். 04.08.2026 முதல் 10.08.2026-க்குள் மாணாக்கர்கள் தங்கள் விருப்பக் கல்லூரியை தேர்வு செய்யலாம். 14.08.2026 அன்று மாணாக்கர்களுக்கான இட ஒதுக்கீடு ஆணை வெளியிடப்படும். மாணாக்கர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள்நுழைவு ID மூலம் www.lwlase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர வேண்டும்.


24.08.2026 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் பி.எட் 2026-2027 சேர்க்கை தொடர்பான விவரங்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன.


பி.எட் 2026-2027 சேர்க்கை தொடர்பான விவரங்கள்




மேலும் 2026-2027 ஆம் கல்வியாண்டில் 110 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பாடப்படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கை இடங்கள் 24,334 உள்ளன. இதற்கு மாணாக்கர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இன்று 19.06.2026 முதல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.


மேலும், 19.08.2026 முதல் அனைத்து முதுநிலை முதலாமாண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். 2026-2027 முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கை தொடர்பான விவரங்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன.


முதுநிலைப் பாடப்பிரிவு 2026-2027 மாணாக்கர் சேர்க்கை தொடர்பான விவரங்கள்




மாணாக்கர்கள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கி கொள்ள வேண்டும் என மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.


கல்லூரிக் கல்வி ஆணையர்


வெளியீடு: இயக்குநர். செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


ஷிகெல்லா தொற்று - 5 பேர் உயிரிழப்பு



 ஷிகெல்லா தொற்று - 5 பேர் உயிரிழப்பு 


கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று மேலும் 19 பேருக்கு கண்டறியப்பட்டு, தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்


மாசுபட்ட குடிநீர், உணவு காரணமாக பரவும் இந்த தொற்று அச்சத்தால், கொச்சி அருகே உள்ள திருபுனித்துறை அரசு சித்த மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-06-2026



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-06-2026 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



திருக்குறள்:

பால் :  பொருட்பால்         

இயல் : அரசியல்  

அதிகாரம்:44   குற்றங்கூறாமை

குறள் எண்:433

குறள்:

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்

பொருள்:

பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.


பழமொழி :

Distance lends enchantment to the view

இக்கரைக்கு அக்கரை பச்சை.


இரண்டொழுக்க பண்புகள் :.

1. கோபப்படாமல் அமைதியாக பொறுமையோடு இருப்பேன்.

2. பிறரின் துன்பத்தை உணர்ந்து உதவுவேன். இதன் மூலம் இரக்க குணத்தை பிரதிபலிப்பேன்.


பொன்மொழி :

"கல்வி என்பது மதிப்பெண்களுக்காக மட்டும் அல்ல; நல்ல மனிதராக வாழ கற்றுத்தரும் ஒளிவிளக்கு."" 📚✨


Thought for the Day :

Every lesson learned is a step closer to your dreams.


பொது அறிவு :

1. செயற்கை நுண்ணறிவின் (AI) தந்தை என்று கருதப்படுபவர் யார்?

ஜான் மெக்கார்தி.

2. சதிஷ் தவான்  விண்வெளி மையம் அமைந்துள்ள இடம் எது?

ஸ்ரீஹரிகோட்டா.


English words :

Determine – Decide, தீர்மானி.

Emphasize – Highlight, வலியுறுத்து


NMMS :

ஒரு முக்கோணத்தின் இரண்டு பக்கங்கள் 4 செ.மீ மற்றும் 5 செ.மீ எனில், அம்முக்கோணத்தின் மூன்றாவது பக்க அளவு என்ன?   

(1) 3 செ.மீ      (2) 1 செ.மீ    

(3) 11 செ.மீ      (4) 9 செ.மீ           

விடை: (1) 3 செ.மீ


புவியியலும் சுற்றுசூழலும் :

இந்திய அரசியலமைப்பு 26 நவம்பர் 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. 26 ஜனவரி 1950 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த நாளே குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.


ஜூன் 19
ஆங் சான் சூச்சி அவர்களின் பிறந்தநாள்

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார்.


நீதிக்கதை

மரமும் காற்றும்

ஒரு ஆற்றங்கரையில் ஒரு பெரிய மரமும், சில நாணல் புற்களும் இருந்தன.

ஒரு நாள் பலத்த காற்று வீசியது. பெரிய மரம் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல், "நான் எவ்வளவு வலிமையானவன்! என்னால் இந்த காற்றை எதிர்க்க முடியும்" என்று அகம்பாவத்துடன் கூறியது.

ஆனால், சிறிய நாணல் புற்கள் காற்று வீசும் திசைக்கேற்ப வளைந்து கொடுத்தன. காற்று நின்ற பிறகு, பெரிய மரம் புயலால் வேரோடு சாய்ந்து கிடந்தது. ஆனால், நாணல் புற்கள் எந்த சேதமும் இல்லாமல் நிமிர்ந்து நின்றன.

நீதி (Moral): வளைந்து கொடுக்கத் தெரிந்தவர்களே வாழ்வின் சோதனைகளை வெல்ல முடியும்; அகந்தை அழிவைத் தரும்.


இன்றைய செய்திகள்
19.06.2026

*தலைப்புச் செய்திகள்*
🗒️21-ம் தேதி நீட் மறு தேர்வு - வார நாட்கள் அட்டவணையில் ரெயில்கள்  இயக்கப்படும் என இரயில்வே துறை அறிவிப்பு.

🗒️ஒருங்கிணைந்த கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

🗒️பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையில் உலக அமைதிக்கான வழி உள்ளது’ - மேதகு ஜனாதிபதி திரவுபதி முர்மு
தெரிவித்துள்ளார்.

🗒️அமேசானையே முந்திய ஸ்பேஸ் எக்ஸ்: உலகின் 5-வது பெரிய நிறுவனமாக சாதனை படைத்துள்ளது.

*விளையாட்டுச் செய்திகள்*
🏀மகளிர் தேசிய கோப்பைக்கான ஆக்கி போட்டி; உருகுவேவை வீழ்த்திய இந்தியா.

🏀 டி20 உலகக் கோப்பை...
ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா.


Today's Headlines

🗒️ NEET Re-Examination on June 21 – The Railway Department has announced that trains will operate according to the weekday schedule.

🗒️ The Directorate of Public Health has issued a circular to all District Health Officers directing them to carry out integrated mosquito control measures without delay.

🗒️ “There is a path to world peace in the way of life of tribal communities,” stated President Droupadi Murmu.

🗒️ SpaceX surpasses Amazon to become the world's 5th largest company.

Sports News

🏀 Women's National Cup Hockey Tournament: India defeated Uruguay.

🏀 T20 World Cup: India won the series by defeating Afghanistan.


6th Std | Term 3 | Mathematics | Quiz Collection (50 Questions) | TET

 


ஆறாம் வகுப்பு | பருவம் 3 | கணக்கு | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2



Class 6 | Term III | Mathematics | Quiz Collection (50 Questions) | Teacher Eligibility Test (TET) Paper 1 and Paper 2



>>> வினாக்களை பயிற்சி செய்ய இங்கே சொடுக்கவும்


6th Std | Term 2 | Mathematics | Quiz Collection (50 Questions) | TET

 




ஆறாம் வகுப்பு |  பருவம் 2 | கணக்கு | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2


Class 6 | Term 2 | Mathematics | Quiz Collection (50 Questions) | Teacher Eligibility Test (TET) Paper 1 and Paper 2



>>> வினாக்களை பயிற்சி செய்ய இங்கே சொடுக்கவும்



6th Std | Term 1 | Mathematics | Quiz Collection (50 Questions) | TET

 


ஆறாம் வகுப்பு | முதல் பருவம் | கணக்கு | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2


Class 6 | Term 1 | Mathematics | Quiz Collection (50 Questions) | Teacher Eligibility Test (TET) Paper 1 and Paper 2



>>> வினாக்களை பயிற்சி செய்ய இங்கே சொடுக்கவும் 

 


Naan Mudhalvan திட்டம் - ஊக்கத்தொகை அறிவிப்பு



நான் முதல்வன் திட்டம் - ஊக்கத்தொகை அறிவிப்பு


UPSC குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாதம் ரூ.25,000 ஊக்கத்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு அழைப்பு


கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் ’நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரையே குறிப்பிடாமல் தமிழ்நாடு அரசு செய்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது எனவும்,  எனினும், இணையதள முகவரியில் ’நான் முதல்வன்’ என ஆங்கிலத்தில் இருப்பதை தற்போதைய அரசு கவனிக்கவில்லை போல எனவும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.



செய்தி வெளியீடு எண்: 254 , நாள் : 18.06.2026


தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிப்பு - 2026


தமிழ்நாடு அரசானது ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் யு.பி.எஸ்.சி குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தை செயல்படுத்துகிறது.


இத்திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி குடிமைப்பணி / இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வுகளுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25,000 ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.


இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2026) யு.பி.எஸ்.சி குடிமைப்பணி / இந்திய வனப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள். ஆன்லைன் மூலம் ( https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc registration/ ) 19.06.2026 முதல் 30.06.2026 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9




Telegram செயலி நாட்டிற்கே அச்சுறுத்தல் - ஒன்றிய அரசு



Telegram செயலி நாட்டிற்கே அச்சுறுத்தல் - ஒன்றிய அரசு 


“பயங்கரவாதம், சைபர் குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், சிறார் துஷ்பிரயோகம், நிதி மோசடிகளுக்கு டெலிகிராம் பயன்படுகிறது.


செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்களால், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களைப் எளிதில் கண்டறிய முடிவதில்லை. இது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்”


- டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பரபரப்புக் குற்றச்சாட்டு


TAPS G.O. (Ms) No : 111 , Dated : 16-06-2026




அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் TAPS செயல்படுத்துதல் - அரசாணை (நிலை) எண்.111 , நாள்: 16-06-2026  மற்றும் தேவையான படிவங்கள் வெளியீடு


TAPS G.O. (Ms) No : 111 , Dated : 16-06-2026  Released


ஓய்வூதியம் தமிழ்நாடு உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) விதிகள் மற்றும் நடைமுறைகளை வகுத்தல் சார்ந்த அரசாணை வெளியீடு Dated: 16/06/2026



TAPS இடைக்கால நிவாரணம் சார்ந்த அரசாணை வெளியீடு - 01.01.2026 முதல் ஓய்வு பெறுபவர்களுக்கு முழுமையான TAPS Rules வரும் வரை இது நடைமுறையில் இருக்கும்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Government Order (G.O.Ms.No.111, dt 16.06.2026) இன் முக்கியப் பகுதிகள் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

​தலைப்பு: ஓய்வூதியம் – தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) – விதிகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குதல் – TAPS விதிகள் அறிவிக்கப்படும் வரையிலான இடைப்பட்ட காலத்தில் 01.01.2026 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெறும் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கான வாழ்வாதார ஆதரவு – இடைக்கால ஊதியம் (Interim Payout) வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.  

​முக்கிய உத்தரவுகள் மற்றும் நடைமுறைகள் (G.O. சுருக்கம்):

​1. நோக்கம் மற்றும் பின்னணி:

​01.01.2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 'தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS)' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

​இந்தத் திட்டத்திற்கான விரிவான விதிகள் மற்றும் நடைமுறைகள் இறுதி செய்யப்படும் வரையிலான இடைப்பட்ட காலத்தில், ஓய்வுபெறும் ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக தற்காலிக நடவடிக்கையாக இந்த மாதாந்திர இடைக்கால ஊதியம் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  

​2. தகுதி வரம்புகள் (யார் யாருக்குப் பொருந்தும்?):

​01.04.2003 அன்று அல்லது அதற்குப் பிறகு வழக்கமான ஊதிய விகிதத்தில் (Regular scale of pay) பணியில் சேர்ந்து, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் இருந்த அரசு ஊழியர்களுக்கு இது பொருந்தும்.  

​01.01.2026 அன்று பணியில் இருந்து, அதற்குப் பிறகு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதியான பணிக்காலத்தை முடித்து வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றவர்கள் (Superannuation) அல்லது பணியின் போது இயற்கை எய்தியவர்களின் (Death-in-harness) குடும்பத்தினருக்கு இது பொருந்தும்.  

​3. யாருக்குப் பொருந்தாது?

​வயது முதிர்வு ஓய்வு அல்லது பணியின் போது மரணம் தவிர்ந்த இதர வழிகளில் பணியிலிருந்து விலகியவர்கள்.  

​தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் விதி 17(பி)-இன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள நிலையில் ஓய்வு பெற்றவர்கள்.  

​01.01.2026-க்கு முன்னதாகவே அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்.  

​4. இடைக்கால ஊதியம் கணக்கிடும் முறை:

​ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு:

கடைசியாகப் பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் (Basic Pay) 30% அல்லது ₹10,000 (எது அதிகமோ அது) மற்றும் அதனுடன் 60% அகவிலை நிவாரணம் (Dearness Relief) சேர்த்து மாதாந்திர இடைக்கால ஊதியமாக வழங்கப்படும்.  

​பணியின் போது மரணமடைந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு:

மேற்கண்ட கணக்கீட்டின்படி (அடிப்படை ஊதியத்தில் 30% அல்லது ₹10,000, எது அதிகமோ அது + 60% அகவிலை நிவாரணம்) மாதாந்திர இடைக்கால குடும்ப ஊதியமாக வழங்கப்படும்.  

​ஓய்வூதியதாரர் இறந்தால்:

இடைக்கால ஊதியம் பெற்று வந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் இறந்தால், அவரது தகுதியுள்ள குடும்ப உறுப்பினருக்கு அவர் பெற்று வந்த இடைக்கால ஊதியத்தில் 60% தொகையானது இடைக்கால குடும்ப ஊதியமாக வழங்கப்படும்.  

​5. வெளியேறும் விருப்பத்தேர்வுகள் (Exit Options):

​அரசு ஊழியர்கள் TAPS திட்டத்திலிருந்து வெளியேற விரும்பினால் இரண்டு கட்ட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன:

​முதல் கட்டம் (உடனடி விலகல் - Stage-I): Comprehensive TAPS விதிகளுக்காகக் காத்திருக்காமல் உடனடியாக திட்டத்திலிருந்து விலக விரும்பினால், படிவம்-III / IV (Form-III/IV) மூலம் CPS இறுதித் தீர்வுப் பிரகடனத்தை சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் அவர்களின் CPS கணக்கில் உள்ள தொகை (ஊழியர் + அரசின் பங்களிப்பு மற்றும் வட்டி) தற்போதைய CPS வழிகாட்டுதலின்படி முழுமையாகத் தீர்வு செய்யப்படும். இந்த முடிவு இறுதியானது மற்றும் மாற்ற முடியாதது; இதன் பிறகு TAPS திட்டத்தின் எந்தப் பலன்களையும் கோர முடியாது.  

​இரண்டாம் கட்டம் (விதிகள் அறிவிக்கப்பட்ட பின் விலகல் - Stage-II): தற்போது இடைக்கால ஊதியப் பலன்களைப் பெறத் தொடங்குபவர்கள், எதிர்காலத்தில் முறையான TAPS விதிகள் அறிவிக்கப்பட்டவுடன், இத்திட்டத்திலேயே நிரந்தரமாக நீடிக்கலாமா அல்லது இதுவரை பெற்ற இடைக்கால ஊதியத் தொகையை (வட்டியுடன் சேர்த்து) கழித்துக் கொண்டு மீதமுள்ள முழு CPS தொகையையும் பெற்றுக்கொண்டு வெளியேறலாமா என்பதை முடிவு செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.  

​6. காலக்கெடு மற்றும் விண்ணப்பிக்கும் முறை:

​ஏற்கனவே (01.01.2026 முதல் இந்த அரசாணை வெளியான தேதிக்குள்) ஓய்வு பெற்றவர்கள் அல்லது மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர், இந்த அரசாணை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் குறிப்பிட்ட படிவத்தில் (Form-I / II) தங்கள் விருப்பப் பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டும்.  

​இனிமேல் ஓய்வு பெறுபவர்கள் அல்லது மரணமடைபவர்களின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற/மரணமடைந்த தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டும்.  

​இந்த இடைக்கால ஊதியம் தற்காலிகமானது மற்றும் முறையான TAPS விதிகள் அறிவிக்கப்பட்டவுடன், இறுதிப் பலன்கள் கணக்கிடப்பட்டு, இந்த இடைக்காலத் தொகையோடு சரிசெய்யப்படும் (Arrears or Recovery).



*தமிழாக்கம் - G.O.(Ms) No.111, நிதி (TAPS) துறை, நாள்: 16.06.2026*


*சுருக்கம்*  

ஓய்வூதியம் – தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) – விதிகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குதல் – 01.01.2026 முதல் ஓய்வு பெறும் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு TAPS விதிகள் அறிவிக்கப்படும் வரையிலான இடைக்கால காலத்திற்கு வாழ்வாதார ஆதரவு – இடைக்கால தொகை வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.


அரசாணை (நிலை) எண்.111 , நாள்: 16.06.2026  

*ஆண்டு:* 2  

*திருவள்ளுவர் ஆண்டு:* 2057.


*பார்வை:* அரசாணை (நிலை) எண்.7, நிதி (PGC) துறை, நாள்: 09.01.2026.


*ஆணை:*  

1. மேற்கண்ட அரசாணையில், தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதிய பலன்களை வழங்கும் நோக்கத்துடன் ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS)’ என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. TAPS-க்கான விரிவான விதிகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்படுத்தும் நடைமுறை தனியாக அறிவிக்கப்படும் எனவும், TAPS 01.01.2026 முதல் அமலுக்கு வரும் எனவும், விதிகள் அறிவிக்கப்பட்டு தேவையான சட்ட மற்றும் கணக்கியல் தேவைகள் நிறைவடைந்த பின்னரே செயல்படுத்தப்படும் எனவும் ஆணையிடப்பட்டது.


2. TAPS-க்கான விதிகளை உருவாக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. இது இடை-அலுவலக ஆலோசனை செயல்முறையை வரையறுக்கும். குறிப்பிட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்படுத்தும் நடைமுறைகளை இறுதி செய்ய பல்வேறு பங்குதாரர்களுடன் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில், TAPS விதிகள் மற்றும் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் வரை, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வாழ்வாதார ஆதரவை வழங்க, 01.01.2026 முதல் பணியிலிருந்து விலகிய பிறகு தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு கீழே பத்தி 4-ல் உள்ளபடி மாதாந்திர இடைக்காலத் தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


3. TAPS விதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரும், கடைசியாக பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் 50% மற்றும் தகுதியான பணிக்காலத்திற்கு ஏற்ப அகவிலைப்படி ஆகியவற்றை உள்ளடக்கிய உறுதியளிக்கப்பட்ட மாதாந்திர தொகையை நிர்ணயிக்கும் செயல்முறை மற்றும் வழக்கமான ஓய்வூதிய அங்கீகார ஆணைகளை வழங்க சிறிது காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அரசு கவனமாக பரிசீலித்த பின், இந்த அரசாணையின் பத்தி 6-ல் கூறப்பட்டுள்ள தற்காலிக நடைமுறைப்படி இடைக்கால மாதாந்திர தொகையை வழங்க ஆணையிடுகிறது. இது TAPS விதிகள் மற்றும் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் வரையிலான காலத்திற்கு மட்டுமே.


*4. இந்த ஆணை யாருக்கு பொருந்தும்:*  

01.04.2003 அன்றோ அதற்குப் பின்னரோ முறையான ஊதிய விகிதத்தில் பணியமர்த்தப்பட்டு, மாநில அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் பணியில் சேர்ந்து, 01.01.2026 அன்று பணியில் இருந்து, 01.01.2026 அன்றோ அதற்குப் பின்னரோ TAPS விதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்போ, 10 ஆண்டுகளுக்குக் குறையாமல் பணிபுரிந்து வயது முதிர்வு அல்லது பணிக்காலத்தில் மரணம் காரணமாக பணியிலிருந்து விலகும் அரசு ஊழியர்களுக்கு இந்த இடைக்கால நடைமுறைகள் பொருந்தும்.


*5. (அ) இந்த ஆணைகள் பொருந்தாது:*  

i. வயது முதிர்வு அல்லது பணிக்கால மரணம் தவிர பிற காரணங்களுக்காக அரசுப் பணியிலிருந்து விலகும் நிகழ்வுகளுக்கு.  

ii. தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் விதி 17(b)-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு.  

iii. 01.01.2026-க்கு முன் அரசுப் பணியில் இருந்து விலகிய எந்தவொரு அரசு ஊழியருக்கும்.  

(ஆ) மேற்கண்ட (i) மற்றும் (ii) பிரிவுகளுக்கு, இடைக்கால தொகை குறித்து தனி ஆணைகள் வெளியிடப்படும்.


*6. இடைக்கால மாதாந்திர தொகை கணக்கிடும் முறை:*  

i. 10 ஆண்டுகளுக்குக் குறையாமல் பணிபுரிந்து, 01.01.2026 அன்றோ அதற்குப் பின்னரோ வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் ஒவ்வொரு தகுதியுள்ள அரசு ஊழியரும், TAPS விதிகள் அறிவிக்கப்படும் வரை, பணியிலிருந்து விலகிய பின் வாழ்வாதாரத்திற்காக மாதாந்திர இடைக்கால தொகையைப் பெறத் தேர்வு செய்யலாம்.  

ii. TAPS செயல்படுத்தப்படும் வரை, முழு அல்லது விகிதாச்சார தகுதியுள்ள மாதாந்திர தொகையை நிர்ணயிப்பதற்கான தகுதியான பணிக்காலம் மற்றும் பிற தகுதி நிபந்தனைகளை சரிபார்ப்பதற்கு நிலுவையில் இருப்பதால், வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்ற பிறகு வழங்கப்படும் இடைக்கால தொகை, கடைசியாக பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் 30% அல்லது ரூ.10,000/- இவற்றில் எது அதிகமோ, அத்துடன் அதற்கான அகவிலைப்படியில் 50% சேர்த்து, ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்.  

iii. மேலே (i)-ல் குறிப்பிட்டபடி இடைக்கால தொகையை தேர்வு செய்து, 01.01.2026 அன்றோ அதற்குப் பின்னரோ மரணமடையும் வயது முதிர்வு ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் தகுதியான குடும்ப உறுப்பினருக்கு, TAPS செயல்படுத்தப்பட்டு வழக்கமான குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் வரை, அந்த ஓய்வூதியதாரருக்கு வழங்கப்பட்ட இடைக்கால மாதாந்திர தொகையில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.  

iv. 01.01.2026 அன்றோ அதற்குப் பின்னரோ பணியில் இருக்கும்போது மரணமடையும் அரசு ஊழியரின் தகுதியான குடும்ப உறுப்பினர், TAPS விதிகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் வரை, அரசு ஊழியரின் மரணத்திற்குப் பிறகு வாழ்வாதாரத்திற்காக மாதாந்திர இடைக்கால குடும்ப தொகையைப் பெறத் தேர்வு செய்யலாம்.


*முக்கிய குறிப்பு:* இது TAPS விதிகள் முறையாக அறிவிக்கப்படும் வரை ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே. 


இந்த அரசாணையின் பக்கம் 3 மற்றும் 4-ன் தமிழாக்கம் இதோ:


*பக்கம் -3-*


*v.* மேற்கண்ட துணைப்பத்தி (iv)-ன் படி இடைக்கால மாதாந்திர குடும்பத் தொகை பெற விரும்பும் நபர்களுக்கு, தகுதியான சேவை சரிபார்ப்பு மற்றும் இறந்த அரசு ஊழியரின் பிற தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்தல் நிலுவையில் இருக்கும்போது, கணக்கிடப்பட வேண்டிய முழு அல்லது விகிதாசார தகுதியான மாதாந்திர குடும்பத் தொகைக்கு, TAPS விதிகளின்படி, உரிய காலத்தில் அறிவிக்கப்படும். இடைக்கால நடவடிக்கையாக, ஜீவனாம்சத்திற்கான மாதாந்திர குடும்பத் தொகை, இறந்த அரசு ஊழியர் கடைசியாக பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் முப்பது சதவீதமாக (30%) அல்லது ரூ.10,000/- இதில் எது அதிகமோ, அதனுடன் 50% அகவிலைப்படி நிவாரணமும் சேர்த்து, இறுதி மாதாந்திர குடும்பத் தொகை நிர்ணயிக்கப்படும் வரை ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்.


*vi.* துணைப்பத்தி-iv-ன் கீழ் இடைக்கால மாதாந்திரத் தொகை / குடும்பத் தொகை பெறுவதற்கான விருப்பத்தை, சம்பந்தப்பட்ட நபர்கள் இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள், படிவம்-III-ல் குறிப்பிடப்பட்டுள்ள வடிவத்தில் உறுதிமொழி அளித்து தெரிவிக்க வேண்டும். 01.01.2026 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பணியிலிருந்து வெளியேறிய நபர்களுக்கு இது பொருந்தும். இந்த அரசாணை வெளியிடப்பட்ட பிறகு ஓய்வு பெற்று அல்லது பணியில் இருக்கும்போது மரணமடைந்து சேவையிலிருந்து வெளியேறும் அரசு ஊழியர்களுக்கு, ஓய்வு/பணியில் இருக்கும்போது மரணம் அடைந்த நாளிலிருந்து 60 நாட்கள் கால அவகாசம், குறிப்பிட்ட படிவத்தில் விருப்பத்தை சமர்ப்பிக்க வழங்கப்படும்.


*vii.* இடைக்காலத் தொகை / குடும்பத் தொகை கணக்கீடு, அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அல்லது மரணமடைந்த தேதிக்கு அடுத்த நாளிலிருந்து தொடங்கும். அதன்படி வழங்கப்படும். ஏதேனும் நிலுவைத் தொகை இருந்தால், அது தகுதியான நபர்களுக்கு வழங்கப்படும்.


*7.* TAPS கட்டமைப்பிலிருந்து வெளியேற விரும்பும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, பின்வரும் இரண்டு கட்ட வெளியேறும் விருப்பம் வழங்கப்பட வேண்டும் என அரசு மேலும் உத்தரவிடுகிறது:


*i. கட்டம்-I (உடனடி வெளியேறும் விருப்பம்):* 01.01.2026 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ [துணைப்பத்தி (ii) மற்றும் (iv)] ஓய்வு பெற்று சேவையிலிருந்து வெளியேறும் எந்தவொரு அரசு ஊழியரும் அல்லது பணியில் இருக்கும்போது மரணம் அடைந்தால் தகுதியான குடும்ப உறுப்பினரும், விரிவான TAPS விதிகளுக்காக காத்திருக்காமல், படிவம்-III/IV-ல் ஒரு முறையான CPS இறுதித் தீர்வு அறிவிப்பை செயல்படுத்துவதன் மூலம், உடனடியாக TAPS-ல் இருந்து வெளியேறும் விருப்பத்தை பயன்படுத்தலாம். அத்தகைய நபர்களுக்கு, ஊழியர் மற்றும் அரசாங்கத்தின் பங்களிப்புகள் மற்றும் ஓய்வு/பணியில் இருக்கும்போது மரணம் அடைந்த தேதியில் ஊழியரின் CPS கணக்கில் வரவு வைக்கப்பட்ட திரட்டப்பட்ட வட்டி ஆகியவற்றை உள்ளடக்கிய திரட்டப்பட்ட இருப்புத் தொகை, தற்போதுள்ள CPS வழிகாட்டுதல்களின்படி தீர்க்கப்படும்.


கட்டம்-I உடனடி வெளியேறும் விருப்பத்தைப் பயன்படுத்துவது இறுதியானது மற்றும் மாற்ற முடியாதது. அத்தகைய பயன்பாட்டின் பேரில், சம்பந்தப்பட்ட நபர் TAPS விதிகளின் கீழ் உத்தரவாதமான குடும்பத் தொகை / மாதாந்திரத் தொகைகளை கோருவதற்கான எந்தவொரு உரிமையையும் உரிமையையும் நிரந்தரமாக இழப்பார். அத்துடன் TAPS விதிகளின் கீழ் எதிர்காலத்தில் உறுதியளிக்கப்பட்ட எந்தவொரு நன்மையும் கிடைக்காது. மேலும் TAPS கட்டமைப்பிற்கு மீண்டும் தேர்வு செய்ய அனுமதிக்கப்படாது.


*ii. கட்டம்-II (அறிவிப்புக்குப் பிந்தைய மேலும் வெளியேறும் விருப்பம்):* 01.01.2026-க்குப் பிறகு [துணைப்பத்திகள் (ii), (iii) மற்றும் (iv)] ஓய்வு பெற்று அல்லது தகுதியான குடும்ப உறுப்பினர் பணியில் இருக்கும்போது மரணம் அடைந்தால் அல்லது ஓய்வுக்குப் பிந்தைய மரணம் அடைந்தால் சேவையிலிருந்து வெளியேறும் எந்தவொரு அரசு ஊழியரும், இந்த உத்தரவின்படி இடைக்காலத் தொகை நன்மைகளைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு, TAPS விதிகள் அறிவிக்கப்பட்டவுடன் மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது, நிரந்தரமாக TAPS கட்டமைப்பிற்குள் இருப்பது அல்லது வெளியேறி, பெற்ற இடைக்கால மாதாந்திரத் தொகை/குடும்பத் தொகையை வட்டியுடன் கழித்த பிறகு, திரட்டப்பட்ட வட்டியுடன் CPS-ல் திரட்டப்பட்ட செல்வத்தின் முழு மற்றும் இறுதித் தீர்வைப் பெறுவது என்ற விருப்பத்தை செயல்படுத்தலாம்.


*பக்கம் -4-*


*8.* இந்த உத்தரவின் நோக்கத்திற்காக, "அரசு ஊழியரின் தகுதியான குடும்ப உறுப்பினர்" என்பது பின்வருவனவற்றைக் குறிக்கும்:

*(a)* ஆண் அரசு ஊழியராக இருந்தால் மனைவி அல்லது பெண் அரசு ஊழியராக இருந்தால் கணவர்;

*(b)* இருபத்தைந்து வயதை அடையாத மகன் மற்றும் திருமணமாகாத மகள், சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்ட அத்தகைய மகன் அல்லது மகள் உட்பட, அல்லது சட்டப்பூர்வ திருமணத்திற்கு வெளியே பிறந்த மகன் அல்லது மகளும்;

*(c)* உடல் அல்லது மனக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மகன் அல்லது மகள் (பார்வைக் குறைபாடு, மனநோய், அறிவுசார் குறைபாடு அல்லது பல குறைபாடுகள் உட்பட) அவர்களை வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்க இயலாதவர்களாக ஆக்குகிறது;

*(d)* இருபத்தைந்து வயதை அடைந்த திருமணமாகாத, விதவை அல்லது விவாகரத்து பெற்ற மகள்கள், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வருமான அளவுகோல்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு;

*(e)* திருமணமாகாத அரசு ஊழியர்களின் விஷயத்தில் தந்தை மற்றும் தாய், வளர்ப்பு பெற்றோர் உட்பட; மற்றும்

*(f)* திருமணமாகாத அரசு ஊழியரின் விஷயத்தில், சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்ட மகன் மற்றும் மகள், தந்தை, இல்லையெனில் தாய், அத்தகைய நபர் இறந்த அரசு ஊழியரைச் சார்ந்தவர் என்று அறிவிக்கப்பட்டால்.


*9.* TAPS விதிகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் வரை, அனைத்து பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் மாதாந்திர தனிப்பட்ட பங்களிப்புகளைப் பிடித்தம் செய்தல் மற்றும் பொருந்தக்கூடிய அரசாங்கப் பங்களிப்புகளைச் செலுத்துதல் ஆகியவை, CPS-ஐ நிர்வகிக்கும் தற்போதுள்ள வழிமுறைகள் மற்றும் விகிதங்களின்படி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அரசு மேலும் உத்தரவிடுகிறது.


*10.* இந்த அரசாணையின் ஆறாவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இடைக்காலத் தொகை முற்றிலும் தற்காலிகமானது. TAPS விதிகளை செயல்படுத்துவதற்கான மாற்று நடவடிக்கையாக இவை செயல்படும். TAPS விதிகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்போது இந்த உத்தரவுகள் தானாகவே ரத்து செய்யப்படும். இந்த உத்தரவின் கீழ் அனுமதிக்கப்பட்ட இடைக்கால நன்மைகள் எந்தவொரு நபருக்கும் சட்டப்பூர்வ உரிமையை நீட்டிக்காது. TAPS-ன் கீழ் உள்ள உரிமைகள் மற்றும் தகுதி, TAPS விதிகளில் அறிவிக்கப்படும்போது இருக்கும்.


*11.* TAPS விதிகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டவுடன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான தகுதியான மாதாந்திரத் தொகைகள் மற்றும் பணியில் இருக்கும்போது மரணம் அல்லது ஓய்வுக்குப் பிந்தைய மரணம் காரணமாக தகுதியான குடும்பத் தொகைகள், TAPS விதிகளின்படி விரிவாக மதிப்பிடப்பட்டு நிர்ணயிக்கப்படும். வழங்கப்பட்ட இடைக்காலத் தொகைகளுக்கும் TAPS விதிகளின் கீழ் உள்ள இறுதி நன்மைத் தொகைக்கும் இடையே ஏதேனும் வேறுபாடு இருந்தால், TAPS விதிகளின் கீழ் உள்ள நன்மைகள் அல்லது CPS-ல் இருந்து நிலுவைத் தொகை அல்லது மீட்பு மூலம் சரிசெய்யப்படும். மேலும், ஒரு தகுதியற்ற நபருக்கு இடைக்கால மாதாந்திரத் தொகை/குடும்பத் தொகை வழங்கப்பட்டிருந்தால், இந்த உத்தரவின் கீழ் அல்லது TAPS விதிகளின் கீழ் எந்தவொரு நன்மையையும் கோருவதற்கான உரிமையை அது வழங்காது. அத்தகைய தொகைகள் உடனடியாக நிறுத்தப்படும். ஏற்கனவே வழங்கப்பட்ட தொகை, TAPS விதிகளின் கீழ் தகுதியான நன்மைகளுடன், பொருந்தக்கூடிய வட்டியுடன் அத்தகைய நபர்களிடமிருந்து முழுமையாக மீட்கப்படும்.


இதோ இந்த அரசாணையின் தமிழாக்கம்:


*பக்கம் 5*


12. இடைக்கால மாதாந்திர குடும்ப ஓய்வூதியத்தின் அனுமதி, எடுப்பு மற்றும் வழங்கலுக்கான விரிவான வழிமுறைகள் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.


13. இடைக்கால ஓய்வூதியங்கள் பின்வரும் வைப்புத் தலைப்புக் கணக்கில் வழங்கப்படும்: 


*"(K) வைப்புகள் மற்றும் முன்பணங்கள் - (a) வட்டி தாங்கும் வைப்புகள் - 8342.00 பிற வைப்புகள் - 120 இதர வைப்புகள் - FO குழும நிதி இடைக்கால ஓய்வூதியத்திற்காக*


*801 - வரவுகள் 01 - வட்டி தாங்கும்* 

_(IFHRMS குறியீடு 8342 00 120 FO - 80101)_


*802 - வெளியேற்றம் 01 - வட்டி தாங்கும்* 

_(IFHRMS குறியீடு 8342 00 120 FO - 80201)_"


*(ஆளுநரின் ஆணைப்படி)*


M.A. சித்திக்* 

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாணவருக்கு அபுதாபியில் NEET தேர்வு மையம்

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாணவர் அப்துல்லாவுக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம் இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து பார்த்த மாணவர்...