கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 கேரளாவில் 18 திருநங்கைகள் கல்லூரிப் படிப்புக்குத் தேர்ச்சி: மாநில எழுத்தறிவு இயக்கம் முன்னெடுப்பு...

 மாநில எழுத்தறிவு இயக்கத்தின் முன்னெடுப்பால், கேரளாவில் திருநங்கைகள் 18 பேர், 12-ம் வகுப்புக்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் படிக்கத் தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் சமன்வயா திட்டத்தின் கீழ் கல்வி பெற்றுள்ளனர். இத்திட்டம் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் 4 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதாந்திர கல்வி உதவித் தொகையோடு இலவசமாகக் கற்பித்தலை நிகழ்த்துவது ஆகும்.

இதன்படி 10-ம் வகுப்புக்கு இணையாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை பெறுவர். இதுவே 12-ம் வகுப்புக்கு இணையான படிப்பில் வென்றோருக்கு மாதந்தோறும் ரூ.1,250 உதவித் தொகை கிடைக்கும். அவர்கள் உயர் கல்வியில் சேர விண்ணப்பிக்க முடியும்.

இத்திட்டத்தின் கீழ் 22 திருநங்கைகள் தேர்வெழுதியதில் 18 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக பத்தினம்திட்டாவில் 8 திருநங்கைகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சமன்வயா திட்டத்தின் கீழ் இதுவரை 39 திருநங்கைகளுக்கு உயர் கல்வி பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. 30 திருநங்கைகள் 10-ம் வகுப்புக்கு இணையான பாடத்திட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். 62 திருநங்கைகள் 12-ம் வகுப்புக்கு இணையான பாடத்திட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநில எழுத்தறிவு இயக்கத்தின் திட்ட இயக்குநர் பி.எஸ்.ஸ்ரீகலா, தேர்ச்சி பெற்ற திருநங்கைகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நன்றி: இந்து தமிழ் திசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

 காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு Flood warning issued to people living along the Cauvery River