கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு?- இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு...

 


அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழக அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயது 58 ஆக இருந்தது. கடந்த ஆண்டு மே 7-ம் தேதி கரோனா நெருக்கடி காலத்தின்போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 ஆக உயர்த்தப்பட்டது.


தமிழக அரசின் இந்த அரசாணை அரசு, அரசு உதவி பெறும்பள்ளிகள், கல்லூரிகளின் ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மேலும் ஓராண்டுக்கு அதாவது 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான கோப்புகள் முதல்வர் பழனிசாமியின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


முதல்வர் பழனிசாமி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இன்றே சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. ஓய்வு வயது 60 ஆவதால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு ஓய்வூதியப் பயன்களை வழங்குவது இந்த ஆண்டு மிச்சமாகும் என்று அரசு உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்று அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பும் அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

International Yoga Day Mass Drill on 20-06-2025 - DSE Proceedings

சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் 20-06-2025 அன்று நடைபெறுதல் - இயக்குநரின் செயல்முறைகள் பள்ளிக் கல்வி - உடற்கல்வி - 2025-26ஆம் கல்வியாண்டு 11வத...