முடி மாற்றும் அறுவை சிகிச்சைக்கு கடும் கட்டுப்பாடு - அரசாணை வெளியீடு
முடி மாற்றும் அறுவை சிகிச்சை மற்றும் அழகுக்கலை சிகிச்சைகளுக்கு கடும் கட்டுப்பாடு விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
அழகுக்கலை மற்றும் முடி மாற்று சிகிச்சைகளின் போது ஏற்படும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, இனி வரும் காலங்களில் தகுதியான மருத்துவர்கள் மட்டுமே இச்சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை (MCh/DNB Plastic Surgery) அல்லது தோல் சிகிச்சை (MD/DNB Dermatology) மருத்துவர்கள் மட்டுமே இச்சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதி-தமிழ்நாடு அரசு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.