கருப்பு (ம்யூகர்) பூஞ்சை கொரோனாவின் இரண்டாவது அலையில் கொள்ளை நோயாக ஏற்படுவதற்கு காரணங்கள்...

கருப்பு (ம்யூகர்) பூஞ்சை கொரோனாவின் இரண்டாவது அலையில் கொள்ளை நோயாக ஏற்படுவதற்கு காரணங்கள்...


அறிவியல் பூர்வமான தர்க்கங்கள் 


டாக்டர்.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 



முதல் அலையின் முடிவில் கூட மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் ம்யூகார் தொற்று அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்டறியப்பட்டது 


ஆனால் இப்போது இரண்டாம் அலையின் உச்சத்தில் மிக அதிகமான அளவு இந்த ம்யூகார் பூஞ்சை கண்டறியப்படுகிறது 


இதற்கான சில தர்க்க  ரீதியான காரணங்களை முன் வைக்கிறேன் 


ஒரு தொற்று நோய் கொள்ளை நோயாக பரவுவதற்கு 

மூன்று விசயங்கள் தேவை


முதல் தேவை 

தீவிரத்துடன் தாக்கும் தொற்றுக்கிருமி 

( AGENT or PATHOGEN) 


இரண்டாவது தேவை 

அந்த கிருமி தொற்றுவதற்கேற்ற உயிரி 

( HOST) 


மூன்றாவது 

தொற்றை ஏற்படுத்துவதற்கேற்ற சூழ்நிலை 

( ENVIRONMENT) 


 இவை மூன்றும் ஒன்றாக அமையும் போது தான் ஒரு தொற்று நோய் கொள்ளை நோயாக மாறும் 


உதாரணம் 


டெங்கு பரப்பும் கொசு (agent) 

மனிதர்கள் (host) 

மழைக்காலம்( environment) 


இவை மூன்றும் ஒன்றாக சேரும் போது தான் டெங்கு வேகமெடுக்கும் 


அது போல இந்த ம்யூகார் பூஞ்சைக்கும் மூன்று விசயம் தேவை 


1. வீரியமிக்க தொற்றுக்கிருமி (PATHOGEN)

இங்கு ம்யூகார் பூஞ்சை 


2.  அந்த கிருமி தொற்றுவதற்கேற்ற உயிரி(HOST)  

இங்கு எதிர்ப்பு சக்தி குன்றிய நிலையில் இருக்கும் மனிதர்கள் 

( கட்டுக்கடங்காத நீரிழிவு நோயாளிகள் / உறுப்பு மாற்று அறுவை  சிகிச்சை / புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்கள்/ எய்ட்ஸ் நோயாளிகள்/ இவர்களுக்கு ஸ்டீராய்டு சிகிச்சை வழங்கப்படும் போது எதிர்ப்பு சக்தி வெகுவாக குறையும்) 


3. தொற்றுப் பரவலை ஊக்குவிக்கும் சூழல் ( Environment) 


இந்தியாவில் வெயில் காலங்களில் ம்யூகார் பூஞ்சையின் வித்துகள் (SPORES) மிக அதிகமாக பொதுவெளியில் காணப்படும் 


இந்தியாவில் உருவான கொரோனாவின் இரண்டாவது அலை. 

அதிலும் மிதமான மற்றும் தீவிர கொரோனா நிலையில் 20% நோயாளிகள் பாதிக்கப்படுவதால் கோவிட் நோய் தன்மையே எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைக்கிறது. 


மேலும் இந்தியாவில் 13கோடி நீரிழிவு நோயாளிகள் தற்போது இருக்கின்றனர் 

இவர்களிடையே சரியான கண்ட்ரோல் இல்லாதவர்கள் அதிகம் பேர் இருக்க வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் போது இன்னும் எதிர்ப்பு சக்தி குறைகிறது. 


இரண்டாம் அலையில் 

கொரோனா தொற்றுக்குள்ளாகும் 100பேரில் 20% பேர் குறை தீவிர (moderate) மற்றும் அதி தீவிர (Severe) நோய் நிலையை அடைவதால் இவர்களுக்கு ஸ்டீராய்டு எனும் நோய் எதிர்ப்பு சக்தியை குன்றச்செய்யும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. 

இது ஐசிஎம்ஆர் ப்ரோடாகாலில் இருக்கிறது. 

இத்தகைய சூழ்நிலையில் ஸ்டீராய்டு உபயோகித்தால்  தான் நோய் நிலை தீவிர தன்மைக்கு செல்லாமல் இருக்கும். 


ஆனாலும் இந்த ஸ்டீராய்டு உபயோகம் என்பதை சாதாரண நோய் நிலையிலும் பலரும் பரிந்துரை செய்வது அல்லது நோயாளியே மருந்தகங்களில் வாங்கி உண்பது என்று இருப்பது இது போன்ற ஆபத்தை வரவழைக்கிறது 


இன்னும் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் அதிகமானதாலும் தேவைப்படும் ஆக்சிஜன் அளவுகளும் அதிகமாகின. இந்த ஆக்சிஜன் சிலிண்டர்களில் இருந்து வெளியே வரும் இடத்தில் தண்ணீருக்குள் ஈரப்பதத்தை வாங்கிக்கொண்டு ஆக்சிஜன் வெளியே வரும். இதை HUMDIFIER என்பார்கள் 


அந்த ஹூமிடிஃபையர்கள் முறையாக சுத்தம் செய்யப்படாமல் இருந்தாலோ 

அதில் நிரப்பப்படும் நீர் கிருமி நீக்கம் செய்யப்பட்ட சுத்தமான நீராக இருக்க வேண்டும். 


ஆனால் மருத்துவமனைகளில் நிறைந்த கூட்டத்தாலும் வார்டுகளை பராமரிக்கும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவும் இதை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்திருக்கலாம்.  அங்கு இந்த பூஞ்சை வளர்ந்திருக்கலாம். 


ஏற்கனவே எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் மக்கள் இதை 

உள்ளே நுகர்ந்திருக்கலாம். இதன் மூலம் பூஞ்சை தொற்று ஏற்பட்டிருக்கலாம். 


இதற்கடுத்தபடியாக கூறப்படும் தியரி 


இந்த ம்யூகர் பூஞ்சை நன்றாக வளர்வதற்கு துத்தநாகம் தேவை என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.  

இந்த பெருந்தொற்று காலத்தில் சிகிச்சையில் இருக்கும் அனைவருக்கும் துத்தநாகம் மாத்திரை (ZINC) 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழங்கப்படுகின்றது. 


இது போன்ற எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களுள் பூஞ்சை நுழைந்தால் ரத்தத்தில் இருக்கும் துத்தநாகம் நன்றாக வேர் பிடித்து வளர ஏதுவாக அமைகிறதோ என்ற எண்ணமும் இருக்கிறது. 


இனி இந்த பூஞ்சை வராமல் தடுக்க சில யுக்திகளை நாம் கடைபிடிக்கலாம் 


நம்மால் நம்மை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் படர்ந்திருக்கும் இந்த பூஞ்சையை அழிக்க முடியாது எனவே Agent ஐ அழிக்கும் யுக்தி இங்கு பலனளிக்காது 


தொற்றுப்பரவ தேவையாக இருக்கும் முக்கிய காரணி - HOST 


எனவே இந்த தொற்றைப் பெற வாய்ப்புள்ள மக்களான கட்டுக்கடங்காத நீரிழிவு உள்ளவர்கள்- உடனடியாக சிகிச்சை எடுத்து நீரிழிவை கண்ட்ரோல் செய்ய வேண்டும். 


உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து / புற்று நோய் சிகிச்சைக்காக எதிர்ப்பு சக்தி குன்றச்செய்யும் மருந்துகளை உட்கொண்டு வருபவர்கள் கட்டாயம் வெளியிடங்களுக்கு முகக்கவசம் இல்லாமல் எப்போதும் வரக்கூடாது. 


தோட்ட வேலைகள் மற்றும் தூசு படிந்த கட்டிடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 


மூன்றாவது- சூழ்நிலையை மாற்றுவது 


கோவிட் நோய் வராமல் பாதுகாத்துக்கொள்வது.


தடுப்பூசிகள் பெற்று குறை தீவிர மற்றும் அதி தீவிர கோவிட் நோய் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்வது 


ஸ்டீராய்டு மருந்துகளை தேவையானோருக்கு, தேவையான அளவில், தேவையான காலம் மட்டும் உபயோகித்தல் நன்று 


ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு  ஹூமிடிஃபயர்களில் தொற்று நீக்கம் செய்யப்பட்ட sterile தண்ணீர் மட்டும் உபயோகிக்க வேண்டும். அது இல்லாத இடத்தில் நார்மல் சலைன் உபயோகிக்கலாம்.  அது தொற்று நீக்கம் செய்யப்பட்ட குடுவைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு ஒரு முறை ஹூமிடிஃபையரை நன்றாக தேய்த்து கழுவி உபயோகிக்க வேண்டும். 


ம்யூகர் தொற்று நன்றாக வளர உதவும் என்ற நிலையில் இருக்கும் துத்தநாகத்தை மாத்திரை வடிவில் நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றும் ரிஸ்க் உள்ளவர்களுக்கு வழங்காமல் இருக்கலாம் 

 

 


ம்யூகர் தொற்று மேற்சொன்ன பல காரணிகள் ஒன்றானதால் தான் இன்று கொள்ளை நோயாக மாறியிருக்கிறது 


நிச்சயம் மேற்சொன்ன விசயங்களில் நாம் மாற்றம் செய்தால் ம்யூகர் நம்மிடம் இருந்து விடைபெறும் 


கவலை வேண்டாம் 


இன்றும் ம்யூகர் பூஞ்சை அரிதினும் அரிதான தொற்றாகவே இருக்கிறது 


கொரோனா சிகிச்சை பெற்ற அனைத்து நீரிழிவு நோயாளிகளும் பீதி நிலைக்கு செல்லத் தேவையில்லை 


எச்சரிக்கை உணர்வுடன் இருந்தால் போதுமானது 


விரைந்து நோயைக் கண்டறிந்தால் 

விரைவில் சிகிச்சை அளித்து காக்க முடியும் 


டாக்டர்.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


ஆதாரங்கள் 

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6496101/


https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4433550/


https://pubmed.ncbi.nlm.nih.gov/24005091/


https://acsjournals.onlinelibrary.wiley.com/doi/pdf/10.1002/1097-0142%28195903/04%2912%3A2%3C330%3A%3AAID-CNCR2820120217%3E3.0.CO%3B2-F

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...