கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் ஏன்? கல்வித்துறை அமைச்சர் அவர்கள்...


பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டு முறையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தது ஏன் என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார். 


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் அதிகாரிகளுடன்  சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்ட பின்பு செய்தி யாளர்களிடம் கூறியது: பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு மொத்தம் 12 கணக்கீட்டு முறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அது குறித்து விவாதித்து, இரண்டு முறைகளை முதல்வர், தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோருக்குச் சமர்ப்பித்தோம். 


அதிலிருந்து ஒரு முறையை இறுதி செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிளஸ் 2 மாணவர்கள் பெருந்தொற்று இல்லாத காலத்தில் நேரடியாக பள்ளிக்குச் சென்று பாடங்களைப் பயின்று, நேரடியாகத் தேர்வை எழுதிப் பெற்ற மதிப்பெண்கள் அவை. அதனால் மட்டுமே பத்தாம் வகுப்பிலிருந்து 50 சதவீத மதிப்பெண்கள் பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்ணுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. 


தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை:

 அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா கையடக்க மடிக்கணினி (டேப்லெட்) வழங்குவது குறித்தும், கல்வி தொலைக்காட்சியை 4 சேனல்களாக விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசனை நடை பெற்று வருகிறது என்றார் அவர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSET தேர்வு 2024க்கான விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு - மதிப்பெண்கள் தளர்வு - பதிவாளர் அறிவிப்பு...

 TNSET தேர்வு 2024க்கான விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு - மதிப்பெண்கள் தளர்வு - பதிவாளர் அறிவிப்பு... >>> தரவிறக்கம் செய்ய...