கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மின்னணு நூல்களை வாசிக்க உதவும் கருவி - பார்வை திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்...

 மின்னணு நூல்களை வாசிக்க உதவும் கருவி - பார்வை திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்...


மின்னணு வடிவில் உள்ள புத்தகங்கள் மற்றும் பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருவி பெறுவதற்கு, தகுதிகளுடைய பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


 திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வைத் திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் எளிதில் கற்பதற்கு ஏதுவாக மின்னணு வடிவில் உள்ள புத்தகங்களை (இ-புக்) பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருவி வழங்கும் திட்டத்தின் கீழ், தகுதிகள் உள்ள மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். 


இளநிலை கல்விமுடித்தவராக இருக்க வேண்டும். முதுநிலை படிப்பு படிப்பவராகவோ அல்லது டெட், டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெறுபவராக இருத்தல் வேண்டும். பிரெய்லி எழுத்துக்களை வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். 


ஜூலை 5-ம் தேதிக்குள்.. 

மேற்கண்ட தகுதிகளை உடையபார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வரும் ஜூலை 5-ம் தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr. Radhakrishnan Award Presentation Ceremony 2026 - DSE Proceedings

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Dr. Radhakrishnan Award Presentation Ceremony – Proceedi...