கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அன்பில் மகேஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்பில் மகேஷ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9 ஆண்டுகளுக்கு முன்பே தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் கலைஞர் - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பதிவு

 


9 ஆண்டுகளுக்கு முன்பே தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் பதிவு


9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் இந்திய ஒன்றியத்திற்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.


அவர் கொடுத்த “மதயானை” எனும் தலைப்பையும், அவரின் வழிகாட்டுதலையும் எடுத்துக்கொண்டு, கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம். ஏற்க மாட்டோம்!


மாணவர்களின் அன்பான அழைப்பை ஏற்று, தொடக்கப்பள்ளியை பார்வையிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்



மாணவர்களின் அன்பான அழைப்பை ஏற்று, தொடக்கப்பள்ளியை பார்வையிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பதிவு


 ஒரத்தநாடு ஆம்பலாப்பட்டு அருகே உள்ள இலுப்பைத்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களின் அன்பான அழைப்பை ஏற்று, அப்பள்ளியைப் பார்வையிட்டோம்.


முதலமைச்சர் காலை உணவுத்திட்டப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, பள்ளி வளாகத்தைப் பார்வையிட்டோம். ஊர் மக்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கையை கேட்டறிந்து, உடனே அவற்றை பரிசீலிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலரிடம் அறிவுறுத்தியுள்ளோம்.


ஐ.நா. அமைப்பின் SEEUN திட்டத்தின் கீழ் பாங்காக் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களையும், ஆசிரியரையும் குறிப்பிட்டு அமைச்சர் வாழ்த்து





ஐ.நா. அமைப்பின் SEEUN திட்டத்தின் கீழ் பாங்காக் நகரில் நடைபெறவுள்ள பன்னாட்டு மாணவர் மன்றத்தில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி மாணவர்களையும், ஆசிரியரையும் குறிப்பிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் வாழ்த்து


 ஐ.நா. அமைப்பின் மாணவர் கல்விப் பயணத் திட்டத்தின் (SEEUN - Student Education Expedition for the United Nations) கீழ் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடைபெறவுள்ள பன்னாட்டு மாணவர் மன்றம் 5.O-வில் (International Youth Forum 5.0) தமிழ்நாடு சார்பில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி மாணவச் செல்வங்களுக்கும், ஆசிரியருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!


#SDG Goals எனப்படும் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த International Youth Forum-இல் கலந்துகொள்ளும் நீங்கள், அந்த இலக்குகளில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டின் சார்பில் செல்வது பெருமிதம் தருகிறது. எளிய பின்புலத்தில் இருந்து உலக அரங்கில் தமிழ்நாட்டின் முகங்களாகச் செல்லத் தேர்வாகி இருக்கும் உங்களைப் போன்றோரின் வெற்றிதான் நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் தலைமையிலான #DravidianModel அரசின் உண்மையான வெற்றி!


இந்த வாய்ப்பு உங்கள் அனைவருக்கும் சிறந்த கற்றல் அனுபவமாகவும், உலக அளவிலான exposure வழங்கிடும் பயணமாகவும் அமைந்திட வாழ்த்துகள்.


ஜூலை 18 : “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட நாள்



 ஜூலை 18 : “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட நாள் - மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


நமது தாய் நிலத்திற்கு “தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்ட நாள்!


ஜூலை 18, 1967ஆம் ஆண்டு “தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு” என சட்டப்பேரவையில் அண்ணா முழங்கியவுடன் தமிழர்களின் மனதில் ஏற்பட்ட உணர்வெழுச்சியை, பெயர் மாற்ற பாசிஸ்டுகள் துடிக்கும் போதெல்லாம் இன்றும் உணர முடிகிறது. தமிழர்களிடம் அந்த உணர்வு எழும் வரை தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்வார்கள். 


தமிழ்நாடு வாழ்க!

தமிழ்நாடு வாழ்க!

தமிழ்நாடு வாழ்க!


Review meeting is not a place to criticize; it is a place to encourage - Honorable Minister Mr. Anbil Mahesh



 ஆய்வுக்கூட்டம் என்பது குறை கூறும் இடமல்ல ; ஊக்கமளிக்கும் இடம் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள்


A Review meeting is not a place to criticize; it is a place to encourage - Honorable Minister of School Education, Mr. Anbil Mahesh



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


SLAS அறிக்கை - திருவண்ணாமலையில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 13

 


SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 13 திருவண்ணாமலையில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


மாநிலத் திட்டக்குழுவால் வெளியிடப்பட்ட SLAS முடிவுகள் அடிப்படையில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவரும் தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டத்தின் 13வது கூட்டம், இன்று எனது தலைமையில் திருவண்ணாமலையில் நடைபெற்றது. 


4 கல்வி வட்டாரங்களில் இருந்து 500 தலைமையாசிரியர்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.


SLAS அறிக்கை - கள்ளக்குறிச்சியில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 14



SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 14 கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


 தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டம்.

14வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி 


சிறப்பான தேர்ச்சி விகிதத்தை வழங்க சேவையாற்றும் தலைமையாசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். தங்களின் முயற்சிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்.


வாய்ப்புள்ள பள்ளிகளில் 'ப' வடிவ வகுப்பறை இருக்கைகள் - அமைச்சர்

 வாய்ப்புள்ள பள்ளிகளில் 'ப' வடிவ வகுப்பறை இருக்கைகள் -அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி


 ப வடிவ வகுப்பில் மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாட முடியும் . ஆசிரியர்கள், தங்களின் மாணவர்கள் அனைவரையும் பார்க்க முடியும். தொடக்க வகுப்புகளில் செயல்படுத்தப்பட்டுவரும் இந்த அமைப்பினை பிற வகுப்புகளிலும் செயல்படுத்திப் பார்க்க இருக்கிறோம். முதற்கட்டமாக , வாய்ப்புள்ள பள்ளிகளின் வகுப்பறைகளில் ‘ ப வடிவ இருக்கை அமைக்கப்படும் . 


- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி



THIRUKKURAL - Treasure Of Universal Wisdom நூல் வெளியீடு - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு



“உலகப் பொதுமறை திருக்குறள்” (THIRUKKURAL - Treasure Of Universal Wisdom) நூல் வெளியீடு - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு


 “உலகப் பொதுமறை திருக்குறள்” (THIRUKKURAL - Treasure Of Universal Wisdom) நூலை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்


உலகின் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அய்யன் திருவள்ளுவரின் திருக்குறள் இனி பெரும்பான்மையானோர் கைகளுக்கும் செல்லவுள்ளது! 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ், சிகாகோ உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையுடன் இணைந்து பதிப்பித்துள்ள “உலகப் பொதுமறை திருக்குறள்” (THIRUKKURAL - Treasure Of Universal Wisdom) நூலை, மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டுச் சிறப்பித்தார். 


கையடக்க வடிவில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல் உலகெங்கும் அனைவரின் இல்லங்களுக்கும், உள்ளங்களுக்கும் சென்று சேரும்!


403 புதிய வகுப்பறைகள் திறப்பு - மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு



  403 புதிய வகுப்பறைகள் திறப்பு - மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 72 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 99 கோடியே 35 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 

🏤403 வகுப்பறைகள்

🚻54 கழிவறைகள்

🧪13 ஆய்வகங்கள்

🚰2 குடிநீர் வசதிகள் 

என மொத்தம் 472 முடிவுற்ற பணிகளை மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் முன்னிலையில் திறந்து வைத்து சிறப்பித்தார். 


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர்களின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு



06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு 


மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம்முடைய பள்ளிக்கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா திருச்சியில் நடைபெற்றது.


மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @KN_NEHRU அவர்களுடன் இணைந்து, மாநிலம் முழுவதும் இருந்து தேர்வான 


🖤 அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் 100 பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்க நிதியுடன் பாராட்டுச் சான்று - கேடயத்துடன் 

*அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது*


❤️ கற்றல் - கற்பித்தல் உள்ளிட்ட பன்முக செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் 76 பள்ளிகளுக்கு *பேராசியர் அன்பழகன் விருது* 


💙 கற்றல் அடைவுக்கான 100 நாள் சவாலில் பங்கேற்ற 4,552 தொடக்கப் பள்ளிகளுக்கு சிறப்பு விருது ஆகியவற்றை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் வழங்கி, வாழ்த்தி மகிழ்ந்தோம். 


காவிரி கரைபுரண்டு ஓடும் திருச்சி மாநகரில் நம் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கமித்த முப்பெரும் விழா இனிய அனுபவமாக அமைந்தது.



Demands of Teachers and promises of the School Education Minister


ஆசிரியர்களின் கோரிக்கைகளும், மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் வாக்குறுதிகளும்


Demands of Teachers and promises of the Honorable Minister of School Education, Tamil Nadu




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு



திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு


தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்டம் சார்பில் எழுச்சியோடு நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்றோம்.


“மதயானை நூலை எழுதி வெளியிட்டதற்காக பாராட்டு விழா, நல்லாசிரியர் மற்றும் பொதுத் தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, பொதுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளில் சாதனைப் படைத்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா” என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.


“உங்கள் குடும்பத்தின் ஒருவராக இங்கு வந்துள்ளேன். எப்போதும் உங்களின் வளர்ச்சியில் உறுதுணையாக இருப்பேன்” என உரையாற்றி மாணவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் பரிசுகள் வழங்கினோம்.


எழுச்சிமிகு இவ்விழாவை ஒருங்கிணைத்த அனைவருக்கும் அன்பும். நன்றியும்.



SLAS அறிக்கை - திருப்பூரில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 5



SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 5 திருப்பூரில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடினோம்.


5 கல்வி வட்டாரங்களில் இருந்து 600 பள்ளித் தலைமையாசிரியர்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட #SLAS அறிக்கையின் அடிப்படையில், தேர்ச்சி விகிதம் மற்றும் கற்றல் கற்பித்தல் மேம்பாட்டிற்காக எடுத்துவரும் முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தார்கள். அவர்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள் கூறி நம்பிக்கையளித்தோம்.


மாவட்டம் வாரியாக நடத்துகின்ற ஆய்வுக் கூட்டத்தின் 5ஆவது மாவட்டமாக திருப்பூர் அமைந்தது.


NMMS தேர்வில் 18 மாணவர்கள் வெற்றி - தலைமை ஆசிரியர் & ஆசிரியருக்கு அமைச்சர் பாராட்டு



NMMS தேர்வில் 18 மாணவர்கள் வெற்றி - தலைமை ஆசிரியர் & ஆசிரியருக்கு அமைச்சர் பாராட்டு


திருச்சி மாவட்டம் ஊருடையாப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 18 மாணவர்கள் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் (National Means-cum-Merit Scholarship-NMMS) வெற்றி பெற்றுள்ளார்கள்.


இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்த அப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமிகு.ராணி அவர்களையும், பயிற்சியளித்த ஆசிரியர் திருமிகு.மணிகண்டன் அவர்களையும் திருச்சியில் நடைபெற்ற பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கெளரவித்தோம்.


SLAS அறிக்கை - தர்மபுரியில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 4



 SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 4 தர்மபுரியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுடனான இரண்டு நாள் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி முடித்த மறுநாளே, மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களை நேரடியாகச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.


அந்த வரிசையில் 4-ஆவது ஆய்வுக் கூட்டத்தை தர்மபுரியில் நடத்தினோம். “தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு எனும் ஒற்றை குறிக்கோளை நோக்கி ஓராண்டு பயணிப்போம். தங்களின் முயற்சிகளும், உற்சாகமும் பெரும் நம்பிக்கை அளிக்கிறது” என உரையாற்றினோம்.


#SLAS அறிக்கையை கையிலெடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்கவுள்ளோம். இப்பயணம் நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கானது!


SLAS அறிக்கை - கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 3



 SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 3 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


மாவட்ட வாரியாக பள்ளித் தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டத்தின் 3ஆவது சந்திப்பு ஓசூரில் எனது தலைமையில் இன்று நடைபெற்றது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். #SLAS அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை முன்வைத்து, மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டோம்.


“அடுத்தாண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் கற்றல் அடைவுகளில் முன்னேறியுள்ளது என #SLAS அறிக்கையின் முடிவுகளில் வர வேண்டும். அதற்கான முயற்சிகளை இன்றிலிருந்தே மேற்கொள்ளுங்கள். உங்களின் முயற்சிகளுக்கு துணை நிற்போம்” என ஊக்கமளித்து விடைபெற்றோம்.


SLAS அறிக்கை - நாகையில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 2



SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 2 நாகையில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


திருச்சி மாவட்டத்தைத் தொடர்ந்து 2ஆவது மாவட்டமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர்களுடன் இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினோம்.


மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட கற்றல் அடைவு #SLAS அறிக்கையை முன்வைத்து இந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். 2 கல்வி வட்டாரங்களில் இருந்து மொத்தம் 170 தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டு, கற்பித்தல் முறைகளில் தாங்கள் அடுத்து மேற்கொள்ளவுள்ள முயற்சிகள் பற்றி எடுத்துரைத்தார்கள்.


‘நாகை மாவட்டம் கற்றல் கற்பித்தலில் முன்னேறியுள்ளது’ என அடுத்தாண்டு #SLAS அறிக்கை தெரிவிக்க வேண்டும்’ என ஊக்கமளித்து விடைபெற்றோம்.


SLAS அறிக்கை - தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 1 திருச்சியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு



SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 1 திருச்சியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


 ஜூன் 23, 24 ஆகிய இரண்டு நாட்களும் 38 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அலுவலர்களுடன் ஒவ்வொரு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி குறித்தும் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினோம். அதில் மாநிலத் திட்டக்குழு நடத்திய SLAS (State Level Achievement Survey) மூலம் பெறப்பட்ட ஆய்வறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. 


“இதன் அடுத்த கட்டமாக மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும்” என அறிவித்திருந்தோம். அவ்வகையில் முதல் ஆய்வுக்கூட்டம் #திருச்சி -யில் எனது தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் SLAS அறிக்கையில் தரப்பட்டுள்ள புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கலந்தாலோசித்தோம்.


மாவட்டத்தின் 5 கல்வி வட்டாரங்களில் இருந்து 463 தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். 2025-26 கல்வியாண்டில் சிறப்பான தேர்ச்சி விகிதத்தைப் பெறுவதற்கான அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கி, நம்பிக்கையோடு விடைபெற்றோம்.


அரசுப்பள்ளிகளில் Water Bell Scheme - அமைச்சர் அன்பில் மகேஷ்



அரசுப்பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ்


"Water Bell Scheme in Government Schools" - Minister Anbil Mahesh


"அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் வாட்டர் பெல் திட்டம் கேரளாவில் நடைமுறையில் உள்ளது


வாட்டர் பெல் திட்டத்தை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 - Conducting "Kalai Thiruvizha" competitions - Guidelines

2025-2026 ஆம் ஆண்டு - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்   "கலைத்திருவிழா" "Kalai Thiruvizha" போட்டிகள் நடத்துதல் ...