கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அழுகிய முட்டை - பள்ளி தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையலர் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் - கரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை (Rotten egg given to school students - School Headmaster, Noon Meal Organizer, Cook suspended - Karur District Collector action)...

 


பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அழுகிய முட்டை - பள்ளி தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையலர் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் - கரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை (Rotten egg given to school students - School Headmaster, Noon Meal Organizer, Cook suspended - Karur District Collector action)...


கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகனூரில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இயங்கிவருகிறது.


 கெட்டுப்போன அழுகிய முட்டைகளைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வைத்திருந்ததாக எழுந்த புகாரையடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வுசெய்து, தலைமை ஆசிரியை, சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்டோர்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்.


இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. பிரபு சங்கர் அவர்கள்,


"நாகனூர் அரசு துவக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து முட்டைகளின் தரம் நன்றாக இருந்தது. சத்துணவு அமைப்பாளர் சென்ற வாரம் பெறப்பட்ட சில முட்டைகளை ஒரு வாரத்திற்கும் மேலாக காலம் கடந்தும்  அப்புறப்படுத்த தவறியதால் சில முட்டைகள் அழுகியது விசாரணையில் தெரிய வந்தது.


பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட சத்துணவு அமைப்பாளர்,  உதவியாளர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற தவறுகள் வரும் காலங்களில் தவிர்க்க, உரிய அறிவுரைகள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும்."


என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

B.T. Assistant Vacant Places as on 26-07-2025

26-07-2025 நிலவரப்படி தொடக்கக்கல்வித்துறை நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் மாவட்ட வாரியாக  Details of Gra...