கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பேருந்தில் படியில் பயணித்த மாணவன் விபத்தில் இறப்பு - ரூ.49 லட்சம் இழப்பீடு கேட்ட குடும்பம் - எதிர்பாரா தீர்ப்பு கொடுத்த நீதிபதி...



பேருந்தில் படியில் பயணித்த மாணவன் விபத்தில் இறப்பு - ரூ.49 லட்சம் இழப்பீடு கேட்ட குடும்பம் - எதிர்பாரா தீர்ப்பு கொடுத்த நீதிபதி...

 

பேருந்து படிக்கட்டில் பயணித்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முடியாது என சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை கொளத்துரை சேர்ந்த ஒரு  மாணவர் டந்த 2019 ம் ஆண்டு பள்ளிக்கு செல்ல பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்த போது, தவறி விழுந்து உயிரிழந்தார். இதற்கு அரசு பேருந்து ஓட்டுனரின் அலட்சியமை காரணம் என்றும் 49 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியும் மாணவனின் குடும்பத்தினர்  சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் அறிவுறுத்தியும்  கேட்காமல்,  ஜன்னல் கம்பியை பிடித்தவாறு பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணித்ததே மாணவன் உயிரிழப்பிற்கு காரணம் என்று  சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, மாணவரின் கவனக் குறைவு தான் அவரின் உயிரிழப்பு காரணம் எனக் குறிப்பிட்டு, இதற்காக மாநகர போக்குவரத்து கழகத்திடம் இழப்பீடு கோர முடியாது என்றும்  உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.4.0 - Updated on 05-04-2026

    தற்போது TNSED Schools  App-ல்  RTE attendance Enhancement added   புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.4.0 - U...