பள்ளி மேலாண்மைக் குழு SMC மூலம் ஆசிரியர்களை 02-06-2025 முதல் நியமனம் செய்ய பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்
காலிப்பணியிடங்களில் SMC மூலம் ஆசிரியர்களை 02-06-2025 முதல் நியமனம் செய்யலாம் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
Teachers can be appointed through SMC in vacant posts from 02-06-2025 - Proceedings of the Chief Education Officer
02.06.2025 முதல் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை SMC மூலமாக தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வமான பள்ளிக்கல்வி இயக்குநரின் (29.05.2025) குறுஞ்செய்தி மற்றும் முதன்மைக்கல்வி அலுவலரின் கடிதம்
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள / மகப்பேறு விடுப்பில் உள்ள / நீண்ட கால விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் இடங்களில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்களை 02-06-2025 முதல் நியமனம் செய்யலாம் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணையிடப்பட்டுள்ளது. B.Ed தேர்ச்சியுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கவும், முதுநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுநிலை பட்டம், BEd தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தரவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...