SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 4 தர்மபுரியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு
முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுடனான இரண்டு நாள் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி முடித்த மறுநாளே, மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களை நேரடியாகச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.
அந்த வரிசையில் 4-ஆவது ஆய்வுக் கூட்டத்தை தர்மபுரியில் நடத்தினோம். “தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு எனும் ஒற்றை குறிக்கோளை நோக்கி ஓராண்டு பயணிப்போம். தங்களின் முயற்சிகளும், உற்சாகமும் பெரும் நம்பிக்கை அளிக்கிறது” என உரையாற்றினோம்.
#SLAS அறிக்கையை கையிலெடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்கவுள்ளோம். இப்பயணம் நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கானது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.