கல்வி அஞ்சல்கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...கல்வி அஞ்சல்கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்... கல்வி அஞ்சல்தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...கல்வி அஞ்சல்கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...கல்வி அஞ்சல்கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்... கல்வி அஞ்சல்தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...கல்வி அஞ்சல்
குடியரசுத் தலைவருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு
School Education Minister Mr. Anbil Mahesh meeting with the President
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு.
ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை மணப்பாறையில் நடைபெற உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தார்.
மக்களின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் நடவடிக்கை
Panchayat Union Primary School whose name was changed in response to people's demand - Minister Anbil Mahesh's action
நாமக்கல்: மக்கள் கோரிக்கையை ஏற்று ‘அரிசன் காலனி’ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என்ற பெயரை ‘மல்லசமுத்திரம் கிழக்கு’ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என பெயர் மாற்றம் செய்து வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.
‘கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ என்ற மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வரிகளையும் குறிப்பிட்டு பெயர் மாற்றம் செய்து வைத்த அமைச்சர்
பள்ளியின் பெயரில் இருந்த ‘அரிசன் காலனி’ - நடவடிக்கை எடுத்த அமைச்சர் மகேஷ்
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் பெயரில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் எனும் பகுதியில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்தப் பள்ளியின் பெயர், ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி’ என்று இருந்தது. இதில், ‘அரிசன் காலனி’ என்பதை நீக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்களும், அந்த ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவரும் தொடர்ந்து போராடி வந்தனர். இவர்களின் போராட்டத்தை வழக்கறிஞர் அன்பழகன் என்பவர், அரசுக்கும் பள்ளிக்கல்வித் துறைக்கும் எடுத்துச் சென்றார்.
இதனையடுத்து முதலமைச்சரின் உத்தரவின்படி அந்தப் பள்ளியின் பெயரை ‘ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு’ என மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது.
பெயர் மாற்றத்திற்காக போராடிய ஊர்ப் பெரியவர் கணேசனுக்கு பொன்னாடை அணிவித்த அமைச்சர், இதற்கான அரசாணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
பெரியவர் கணேசன் மற்றும் வழக்கறிஞர் அன்பழகன் ஆகியோரை பாராட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நிதிசார்ந்த கோரிக்கைகளை முதலமைச்சர் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறியுள்ளார் - இன்றைய (10.11.2024) நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பேச்சு...
The Chief Minister has said that he will take care of the financial demands - Hon'ble Education Minister's speech in today's (10.11.2024) program...
சாக்லெட் கொடுத்த பிறந்தநாள் கொண்டாடிய மாணவிக்கு வாழ்த்து - பிழை இல்லாமல் வாய்ப்பாடு சொல்லி அசத்திய மாணவர்கள் - மதிய உணவு சாப்பிட்டு ஆய்வு - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...
பதவி உயர்வு தொடர்பான வழக்கில் அக்டோபர் 15அன்று உச்சநீதிமன்றத்தில் இருந்து நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள்...
On October 15th, we expect good news from the Supreme Court in the promotion case - Hon'ble Minister for School Education, Mr. Anbil Mahesh...
ஆசிரியர்கள் வருவதற்கு முன்பே பள்ளிக்கு சென்ற அமைச்சர் - தனியாளாக பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்...
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
———————————————————————————————————
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். அந்த வரிசையில் இன்று பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓவியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று (12-09-2024) காலை 8 மணிக்கே பள்ளிக்குள் நுழைந்த அமைச்சர் காலை உணவு உட்கொண்டிருந்த மாணவர்களுடன் உரையாடினார்.
ஆசிரியர்கள் யாரும் அந்நேரத்தில் வராத காரணத்தால் தனியாளாக பள்ளி முழுவதும் சுற்றிப்பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.
காலை உணவு பணியாளர் திருமதி துர்கா மட்டுமே அப்போது பள்ளியில் இருந்த காரணத்தால், அவர் மட்டுமே அமைச்சரின் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார்.
காலை உணவுத் திட்டத்தில் எத்தனை மாணவர்கள் சாப்பிடுகின்றார்கள்? பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு? பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகள் குறித்தும் அப்போது வந்திருந்த ஊர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். மாணவர்களிடம் கற்றல் குறித்து ஆய்வு செய்வதற்காக திருக்குறள், தமிழ்-ஆங்கில எழுத்துகளை சொல்ல சொல்லி ஆய்வு செய்தார் மாண்புமிகு அமைச்சர் திரு அன்பில் மகேஸ் அவர்கள்...
11-09-2024 அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்...
வேலம்பாடி ஊராட்சி, செளந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு...
🌍🚒
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை
அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு.இளங்கோ அவர்களின் அரவக்குறிச்சி தொகுதியில் 234/77 ஆய்வுத் திட்டத்தின் 185ஆவது ஆய்வை மேற்கொண்டார்.
வேலம்பாடி ஊராட்சி, செளந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
மாணவர்களின் கற்றல் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தொடு திரையின் வாயிலாக மாணவர்களுக்கு உயிரினங்களின் பெயர்களை சொல்லிக் கொடுத்தார்.
பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் கடுமையான தண்டனை வழங்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு பணியில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடலூர் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் மனவியல் சார்ந்த பிரச்சனைகளைப் போக்க வாழ்வியல் சார்ந்த புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அதன் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் மாணவர்களின் கற்றல் திறன் எந்த அளவுக்கு உள்ளது ஆசிரியர்களின் பயிற்சி முறை எவ்வாறு உள்ளது என அறிந்து கொள்ள ஆய்வு பணி நடைபெற்றது.
இந்த ஆய்வில் பள்ளி உள்கட்டமைப்பு தொடர்பாக சில கோரிக்கை வந்துள்ளது அவை நபார்டு வங்கிகள் மூலம் நிதிகள் பெறப்பட்டு பள்ளிகளுக்கு செயல்படுத்தப்படும். கொரோனா காலத்திற்குப் பின்னர் மாணவர்களை படிப்படியாக வளர்த்தெடுக்கும் சூழல் உள்ளது. மனதளவில் பாதிப்பு உள்ள மாணவர்களை தகுந்த ஆசிரியர்கள் மூலம் 44 வட்டங்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று 800 மருத்துவர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. திட்டக்குடியில் நடைபெற்ற சம்பவம் வேதனைக்குரியது. மாணவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க முடியாது.
மனநலம் சார்ந்து தான் திருத்த முடியும் அதுதான் எங்களது கடமை. மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் போது உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்படும். தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டம் என்ற பெயர் இல்லாமல் அனைத்து மாவட்டத்தையும் முன்னேற்ற முயற்சிகள் செய்யப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் நலனுக்காக 67 பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் தாண்டி ஆங்காங்கே ஒரு சில சம்பவங்கள் நடைபெறுகிறது இதனை கண்டறிந்து நம் வீட்டுப் பிள்ளைகள் தவறு செய்தால் எவ்வாறு நல்வழிப்படுத்துவோமோ அவ்வாறு நல்வழிப்படுத்துவோம்” என்றார்.
வரும் ஏப்ரல் 12ஆம் தேதி பிறை தென்பட்டு ரமலான் பண்டிகை வரும் பட்சத்தில் அன்றைய தேதியில் தமிழ்நாட்டில் நிச்சயமாக பொதுத்தேர்வு இருக்காது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்...
நவீன தொழில்நுட்பத்தை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நமது அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளை (Smart classroom) உருவாக்க தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை @tnschoolsedu பணிகளைத் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதன் முதல்கட்டமாக பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் ஒன்றியம்-புது வட்டாரம் கோவூர், மாந்தோப்பு நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு, முன்மாதிரி திறன்மிகு வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது.
"அன்புக் குழந்தைகளை
அரசுப் பள்ளிகளில் சேருங்கள்!
அறிவுச் செல்வங்களாக உயர்த்துங்கள்!" என அன்போடு அழைக்கின்றேன். - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளிலும் 2024-2025 ஆம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படுமென பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தகவல் - செய்தி வெளியீடு எண்: 460, நாள்: 04-03-2024...