அரசு ஊழியர்கள் EV வாகனம் வாங்கினால் தள்ளுபடி
அரசு ஊழியர்களுக்கு மின்சார வாகனங்கள் வாங்கும் போது சிறப்பு தள்ளுபடி வழங்கும் திட்டத்தை தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் மின்சார வாகனங்களை (Electric Vehicles) வாங்கும்போது அதிகபட்சம் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மகிந்திரா, ஓலா, கிராவ்டன், ஏதர் போன்ற நிறுவனங்களுடன் தெலங்கானா அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்கும், மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.