14 மணிநேரத்தில் 800 முறை நிலநடுக்கம் - அவசரநிலையை அறிவித்தது ஐஸ்லாந்து அரசு (800 earthquakes in 14 hours - Iceland government declares emergency)... உலகின் மிகவும் அமைதியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் 2008 முதல் இன்றுவரை முதலிடத்தை தக்கவைத்திருக்கும் ஐஸ்லாந்து (Iceland) நாட்டில், கடந்த 14 மணிநேரத்தில் 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது, எந்த நேரத்திலும் அங்கு எரிமலை வெடிக்கலாம் என்ற அபயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஐஸ்லாந்தின் தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் (Reykjanes peninsula) ஏற்பட்ட இந்த தொடர்ச்சியான நிலநடுக்கங்களில், மிகப்பெரிய நிலநடுக்கம் கிரிண்டாவிக் (Grindavik) வடக்கே 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியிருக்கிறது. அதையடுத்து, ஐஸ்லாந்து வானிலை அலுவலகம், `அடுத்த சில நாள்களில் எரிமலை வெடிப்பு நிகழலாம்' என எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதன்காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சிவில் பாதுகாப்பு மற்றும் அவசரநிலை மேலாண்மைத் துறை, ``கிரின்டாவிக்கின் வடக்கே, சுந்த்ஞ்சுகாகிகரில் (Sundhnjukagigar) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக