கல்வி அஞ்சல்கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...கல்வி அஞ்சல்கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்... கல்வி அஞ்சல்தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...கல்வி அஞ்சல்கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...கல்வி அஞ்சல்கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்... கல்வி அஞ்சல்தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...கல்வி அஞ்சல்
பள்ளிக்கல்வித் துறையின் 100 நாள் சவால் - கற்றல் கற்பித்தல் திறனை சோதித்தறியும் முயற்சி. முதல் கட்டமாக 4552 அரசு ஆரம்ப / நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை சோதித்து அறியப்படுகிறது. அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் முன்னிலையில் நிகழ்ச்சியாக செயல்படுத்த உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 100% தமிழ்,ஆங்கிலம், கணிதம் என அனைத்து பாடங்களிலும் கற்றல் நிலை திறன் ஆய்வு, 100 நாள் சவாலுக்கு தயாராக உள்ள 4552 பள்ளிகளின் பெயர் பட்டியல்
7 மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 60 லட்சம் பேரின் வாக்குகளைப் பெற்று கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஏமாற்றி விட்டது - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேட்டி
While 7 states are implementing the Old Pension Scheme, the DMK, which won the last election by winning the votes of 60 lakh people including government employees, teachers and their families, has deceived them - Interview with PMK leader Dr. Anbumani Ramadoss
ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என கிட்டத்தட்ட 60 லட்சம் பேரின் வாக்குகளைப் பெற்று திமுக ஏமாற்றி விட்டது - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்
மாணவர்கள் சரியாக படிக்காததால் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொண்ட தலைமை ஆசிரியர் - அதிர்ச்சி நிகழ்ச்சியின் விவரம்
Headmaster punishes himself for students not studying properly - details of shocking incident
மாணவர்கள் படிக்காததால் `50 தோப்புக்கரணம்' போட்ட தலைமை ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்
ஆந்திராவில் சரியாக படிக்காத மாணவர்கள் முன்னிலையில், தலைமை ஆசிரியர் காதை பிடித்துக்கொண்டு 50 தோப்புக்கரணம் போட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
``மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்றால் அவர்களை ஆசிரியர்களால் அடிக்க முடியாது. மாணவர்களை ஆசிரியர்களால் அடிக்க முடியாத நிலையில், சரியாக படிக்காத மாணவர்களை தோல்வி அடையச்செய்யவும் முடியவில்லை. எனவே மாணவர்களை எப்படி நன்றாக படிக்க வைப்பது?'' என்று பல ஆசிரியர்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஆந்திராவில் சரியாக படிக்காத மாணவர்கள் மத்தியில் தலைமை ஆசிரியர் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் உள்ள விஜயநகரம் என்ற இடத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் சிந்தா ரமனா. இவர் மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கு வெளியில் வரிசையாக நிற்க வைத்தார். தலைமை ஆசிரியருடன் ஒரு மாணவரும், ஒரு ஆசிரியரும் நின்றனர்.
மாணவர்கள் மத்தியில் பேசிய தலைமை ஆசிரியர் ரமனா, ''உங்களை எங்களால் அடிக்க முடியாது. உங்களுடன் சண்டையிட முடியாது. எங்களது கைகள் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் உங்களுக்கு கற்றுக்கொடுத்து உங்களை படிப்பில் மேம்படுத்த எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்ட போதும் உங்களது செயல்பாட்டில் எந்த வித மாற்றமும் இல்லை. வாசிப்பதிலோ அல்லது எழுதுவதிலோ எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. பிரச்னை உங்களிடம் இருக்கிறதா அல்லது எங்களிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. பிரச்னை எங்களிடம் இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் உங்கள் முன்பு மண்டியிடுகிறேன். நீங்கள் விரும்பினால் எனது காதுகளை பிடித்துக்கொண்டு சிட்-அப்களை செய்யத்தயாராக இருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.
அதோடு நிற்காமல் மாணவர்கள் முன்பு அப்படியே படுத்து வணங்கிவிட்டு எழுந்து காதை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் ஆசிரியர் தொடர்ந்து அது போன்று செய்ததால் மாணவர்கள் அழுது கொண்டே நிறுத்தும்படி கேட்டனர். தலைமை ஆசிரியர் ரமனா 50 முறை தோப்புக்கரணம் போட்டு முடித்தார். ஆசிரியரின் செயல் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருக்கிறது.
இதை பார்த்த மாநில அமைச்சர் லோகேஷ், ஆசிரியரின் செயலை பாராட்டி இருக்கிறார். படிக்காத மாணவர்களை தண்டிக்காமல் தன்னைத்தானே தண்டித்துக் கொண்ட விதத்தை அமைச்சர் பாராட்டி இருக்கிறார்.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே உள்ள அரசு பள்ளியில் நடந்த சோகமான காட்சி தான் இது
அரசு பள்ளி மாணவர்கள் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் பள்ளிக்கு அவப்பெயர் ஏற்பட்டதாக கூறி
இறை வணக்கம் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் தோப்புக்கரணம் மற்றும் தரையில் விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
உங்களை அடிக்கவும் முடியாது, திட்டவும் முடியாது எனக் கூறி தனக்குத்தானே தண்டனை அளித்த தலைமை ஆசிரியரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பினை 15 நாட்கள் வரை ஒப்படைப்பு செய்து பணப்பலன் பெறும் நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும் - தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 2025
The procedure of surrendering the earned leave of government officials and teachers suspended due to the spread of Corona for up to 15 days and receiving cash benefits will be re-implemented - Tamil Nadu Government's Budget Statement 2025
2025-2026 - மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் - EMIS வலைதளம்
2025-2026 - Application Form for Student Admission - EMIS Website
அனைவருக்கும் வணக்கம் !
2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை பள்ளிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது . அம்மாணவர்களுக்கான சேர்க்கை விவரங்களை உள்ளீடு செய்ய ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் EMIS School Login- யில் வழிவகை செய்யப்பட்டுள்ளது .
மேலும் , விண்ணப்பப் படிவத்தில் உள்ளீடு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கீழே உள்ள காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மாணவருக்கு ஒரு பள்ளியில் மட்டுமே தரவுகள் பதிவேற்றம் செய்ய இயலும் .
முழுமையான மற்றும் சரியான தகவல்கள் பெறப்படும் வகையில் ஏதேனும் , தரவுகள் தவறாக பதிவு செய்யப்பட்டால் அதை edit செய்யும் வழிமுறையும் , delete செய்யும் வழிமுறையும் கொடுக்கப்பட்டுள்ளது .
இவ்விண்ணப்பப் படிவம் கீழ்க்கண்ட மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்
அங்கன்வாடியில் பயின்ற மாணவர்கள்
சுயநிதி பள்ளிகளில் Pre KG முதல் XII வகுப்பு வரை பயின்ற மாணவர்கள்
பிற மாநில அல்லது பிற நாட்டில் பயின்ற மாணவர்கள்
புதிய நேரடி மாணவர் சேர்க்கை
குறிப்பு
முந்தைய கல்வி ஆண்டில் அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்றுள்ள மாணவர்களுக்கு இந்தப் படிவம் பொருந்தாது.
அரசுப்பள்ளியில் நடந்த ஆண்டுவிழாவில் மாணவர்கள் கட்சி சார்ந்த துண்டுடன் சாதியப்பாடலுக்கு நடனமாடியதால் சர்ச்சை
Controversy as students dance to a caste song with a party-related towel at an anniversary celebration at a government school
கிருஷ்ணகிரி மாவட்டம் - சோப்பனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த ஆண்டுவிழாவில் மாணவர்கள் கட்சி சார்ந்த துண்டுடன் சாதியப்பாடலுக்கு நடனமாடியதால் சர்ச்சை
கிருஷ்ணகிரியில் அரங்கேறி இருக்கிறது ஒரு அதிர்ச்சி நிகழ்வு. அரசுப் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பாமக துண்டை கழுத்தில் போட்டுக் கொண்டு சாதி பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள் மாணவர்கள். இதை அடுத்து பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளிகளில் கொலை, கொள்ளை சம்பவம், போதைப் பொருள் பயன்பாடு, தவறை தட்டிக் கேட்கும் ஆசிரியர்கள் மீது தாக்குதல், தவறான பாலியல் புகார் என மாணவர்கள் அத்துமீறி வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளோ, அனைத்துக்கும் ஆசிரியர்களையே பலியாக்குவதால் ஆசிரியர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சோப்பனூர் கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றிருக்கிறது. விளையாட்டுப் போட்டிகள், கவிதை, போட்டி, கட்டுரை போட்டி என பல போட்டிகள் நடைபெற்ற நிலையில் மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. தங்களது திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். அப்போது மாணவர்கள் திடீரென கழுத்தில் பாமக துண்டை போட்டுக்கொண்டு மறுமலர்ச்சி படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமாடி இருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் நடனம் ஆடும் போது வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவரான காடுவெட்டி குரு, சந்தன கடத்தல் வீரப்பன் ஆகியோர் படம் பொறித்த டீசர்ட்களையும் அணிந்தபடி நடனமாடி இருக்கின்றனர். இதனால் அங்கிருந்த பிற மாணவர்களும் பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்துடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பாடல் நிறுத்தப்பட்டு மாணவர்கள் நடனமாட அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து குறிப்பிட்ட சமூகத்தினர் ஏன் அப்பாடலுக்கு நடனம் ஆடக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அரசுப் பள்ளியில் சாதி ரீதியான பாடலுக்கு நடனமாடியதோடு பாமக கட்சித்துண்டை கழுத்தில் அணிந்து கொண்டு ஆடியது அதிர்ச்சி அளிப்பதாக கூறிய பெற்றோர், இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது மாணவர்கள் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடினால், அதற்கு முன்னதாகவே பயிற்சியில் ஈடுபட்டு இருப்பார்கள். அப்படி மாணவர்கள் சாதியப் பாடலுக்கு நடனம் ஆடுவது தெரிந்தும் அதை எப்படி அனுமதித்தார்கள்? அப்போது இல்லை என்றாலும், நிகழ்ச்சி நடக்கும் போது மாணவர்கள் ஆடியதை எப்படி அனுமதித்தனர் என கேள்வி எழுப்புகின்றனர் பெற்றோர்.
யாரோ துண்டுதலின் பேரில் மாணவர்கள், பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில் சிக்கிய உதவி தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டம் - சட்ட அமைச்சர் திரு.ரகுபதி அவர்களின் பேட்டி
Students protest in support of Assistant Headmaster accused of sexual harassment due to someone's stimulating - Law Minister Mr. Raghupathi's interview
புதுக்கோட்டை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு - யாரோ துண்டுதலின் பேரில் மாணவர்கள் உதவி தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டம் - சட்ட அமைச்சர் திரு.ரகுபதி அவர்களின் விளக்கம்
ஆட்சியின் மீதுள்ள நம்பிக்கையால் தான் பாலியல் சீண்டல் விவகாரத்தில் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்
மாணவிகளின் புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட்
யாரோ துண்டுதலின் பேரில் மாணவர்கள் உதவி தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டம் - சட்ட அமைச்சர் திரு.ரகுபதி அவர்களின் பேட்டி
இன்று 28.01.2025 நடைபெற்ற விவாதத்தில் NCTE ஆசிரியர் தகுதி தேர்வு (பதவி உயர்வு) சார்ந்த முக்கிய விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என தகவல்.
அடுத்து பிப்ரவரி 06-02-2025 அன்று விசாரணைக்கு வரும் என்று (TENTATIVE) எதிர்பார்க்கப்படுகிறது