உலகின் உயரமான செனாப் ரயில் பாலம் - பிரமிப்பூட்டும் படங்களை பகிர்ந்த இந்திய ரயில்வே(World's Highest Chenab Rail Bridge - Indian Railways Shares Stunning Pictures)... ரியாசி: உலகின் மிக உயரமான ரயில் பாலம் என அறியப்படும் செனாப் பாலத்தின் பிரமிப்பூட்டும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது இந்திய ரயில்வே. மேகங்கள் புடை சூழ வேற்றுலகில் பயணிக்கும் அனுபவத்தை இந்த பாலத்தில் பயணிக்கும் ரயில் பயணிகள் அனுபவிப்பார்கள் எனத் தெரிகிறது. பொறியியலின் அற்புதம் என சமூக வலைதளப் பயனர் ஒருவர் இந்தப் பாலத்தின் கட்டுமான பணியை பார்த்து கமென்ட் செய்துள்ளார். உதம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் இணைப்பின் முக்கிய மைல்கல்லாக இந்த பாலம் அமைந்துள்ளது. செனாப் நதியின் மீது இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. 1315 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தின் கட்டுமான பணியை மேற்கொண்ட ஊழியர்கள் மழை, குளிர் என சவாலான வானிலை சூழலை எதிர்கொண்டுள்ளனர். செனாப் பாலம் ஆற்றுப் படுகையின் மட்டத்திலிருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் டவரை காட்டிலும் சுமார் 35 மீட்டர் உயரம் என தெரிகிறது. ஸ்டீல் மற்ற