கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நெடுஞ்சாலைத் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெடுஞ்சாலைத் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Tollgateக்கு செல்லாமலேயே பணம் பிடித்தம் செய்யும் மத்திய அரசின் NHAI - பொது மக்கள் அதிர்ச்சி

 


Tollgateக்கு செல்லாமலேயே பணம் பிடித்தம் செய்யும் மத்திய அரசின் NHAI - பொது மக்கள் அதிர்ச்சி


Tollgateக்கு செல்லும் முன்பே பணம் பிடித்தம் செய்யும் மத்திய அரசின் NHAI : சென்னை-பெங்களூரு சாலையில் AI Camera மூலம் பணம் பிடித்தம் - பொது மக்கள் அதிர்ச்சி


Chennai - Bangalore தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட்களை மாற்றும் MLFF என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிறது.


தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) MLFF - Multi Lane Free Flow System என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, பழைய டோல்பூத் முறையை மெதுவாக மாற்றத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறையின் ஆசீர்வாதத்துடன் பொது மக்களிடம் அநியாயக் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் Toll Gate நிர்வாகங்களின் இந்த புதிய அவதாரம் பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


இந்த புதிய முறைமையில் AI அடிப்படையிலான ANPR (தானியங்கி எண் தட்டு அங்கீகாரம்) கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இவை வாகன எண்களை தானாகப் பிடித்து, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள FASTag கணக்கில் இருந்து கட்டணத்தை கழித்துவிடும். இந்த வாகனங்கள் சுங்க சாவடியில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறப்படுகிறது. வாகனங்கள் 100 முதல் 120 கிமீ வேகத்திலும் இலகுவாக சென்று விடலாம். இதன்மூலம் பயண நேரம் குறைவதோடு, சாலை நெரிசலும் குறையும் என பகீர் கிளப்புகின்றனர்.


முதற்கட்டமாக, ஸ்ரீபெரும்புதூர் (நெமிலி), சென்னசமுத்திரம் (வேலூர் அருகே), மற்றும் பாரனூர் (ஜிஎஸ்டி பாதை) ஆகிய மூன்று இடங்களில் இந்த புதிய கேமரா முறை பரிசோதனை அடிப்படையில் தொடங்கப்படுகிறது. இதன் வெற்றியைப் பொருத்து, தமிழ்நாட்டின் மற்ற டோல்கேட்களிலும் அடுத்த கட்டங்களில் இது விரிவுபடுத்தப்படும் என மத்திய அரசின் NHAI தெரிவித்துள்ளது.



Portable Washing Machine, 16L Mini Washing Machine With Spin Basket,Small Portable Washer Machine


https://amzn.to/486SMU6




சாலையில் ஒளிரும் விளக்குகளுக்கு மின்சக்தி எப்படி வருகிறது?



சாலையில் ஒளிரும் சிக்னல் விளக்குகளுக்கு மின்சக்தி எப்படி கிடைக்கிறது?


அதன் பெயர் ரோடு ஸ்டட் என்பார்கள். அது இருவகையில் வேலை செய்யும்.


இரவில் வரும் வாகனங்களின் முகப்பு வெளிச்சங்களை வாங்கி எதிரொளிக்கும் வகையில் ரிஃப்ளெக்டர் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருக்கும்.


அதே சமயத்தில் பகல் நேரங்களில் சூரிய வெளிச்சத்தினை கிரகித்து அதனுள் பொதியப்பட்டுள்ள சிறு சோலார் செல்களில் சக்தியை வாங்கி லித்தியம் வகை பேட்டரியில் மின்சாரத்தை சேகரித்துக் கொள்ளும்.


இருள் கவிய துவங்கியதும் அதில் இருக்கும் லைட் டிபண்டிங் ரெசிஸ்டர் (LIGHT DEPENDING RESISTOR) என்ற வெளிச்சத்தை உணரும் சென்சார் வேலை செய்து மிகக் குறைந்த மின்சாரத்தை உபயோகித்து அதிக வெளிச்சத்தை வெளியே விடும் லைட் எமிட்டிங் டயோடு (LIGHT EMITTING DIODE) எனப்படும் LED (எல்இடி) விளக்குகளின் மூலமாக விளக்குகளை ஒளிரச் செய்கின்றது.


அதனால் இரவு 12 மணி நேரம்கூட எல்.இ.டி. பல்புகள் ஒளிரும் அளவிற்கு சக்தியை கிரகித்து வைத்துக் கொள்ள முடிகிறது.


இந்த சாலைக் குறியீடுக்கு என்ன பொருள் ?

 


இந்த சாலைக் குறியீடுக்கு என்ன பொருள் ?


இந்தப் பகுதியில் பார்வையற்றவர்கள் அதிகம் பேர் உள்ளார்கள் என்று பொருள்.


பொதுவாக சாலையோரங்களில் பல்வேறு குறியீடுகளை கொண்ட பலகைகள் நிறுவப்படுவது வழக்கமான ஒன்று. ஒவ்வொரு குறியீட்டிற்க்கும் ஒரு அர்த்தம் உள்ளது.


அந்த வகையில் புதுவிதமான குறியீட்டைக் கொண்ட பலகை ஒன்று பெங்களூருவின் ஹோப் பார்ம் ஜங்ஷனில் நிறுவப்பட்டுள்ளது. வெள்ளை நிற பலகையில் 4 கருப்பு வட்டங்கள் போடப்பட்டுள்ளன. இதனை கண்காணித்த அனிருத்தா முகர்ஜி என்ற பயணி இதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள முயன்றுள்ளார்.


எனவே அந்த பலகையை புகைப்படம் எடுத்த அவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு போக்குவரத்து அதிகாரிகளிடம் இதற்கான அர்த்தத்தை விளக்குமாறு கேட்டுள்ளார். இந்தப் பதிவினை பார்த்துள்ள வைட்பீல்டு டிராபிக் போலீசார் அதற்கான விளக்கத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.


அதில் இந்தக் குறியீடு ஆனது "சாலையில் பார்வையற்றவர்கள் நடமாட வாய்ப்புகள் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனத்தை ஓட்டும் மாறு குறிப்பிடுகிறது. ஹோப் பார்ம் ஜங்ஷன் அருகில் பார்வையற்றவர்களுக்கான பள்ளி ஒன்று இருப்பதால் இந்தப் பலகை அங்கு நிறுவப்பட்டுள்ளது" என விளக்கம் அளித்துள்ளனர்.


சாலைகள் போடுவது குறித்து நெடுஞ்சாலைத் துறைக்கு தலைமைச் செயலாளர் புதிய அறிவுறுத்தல்...

 

நெடுஞ்சாலை துறைக்கு தலைமைச் செயலாளர் புதிய அறிவுறுத்தல். 

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளரின் கடித எண்: 5916/ எச்.என்.2/ 2021-1, நாள்:12-05-2021...

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் சாலைகளின் மேற்பரப்பை சுரண்டி எடுத்த பின்னரே புதிய சாலைகள் போட வேண்டும்.



>>> தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளரின் கடித எண்: 5916/ எச்.என்.2/ 2021-1, நாள்:12-05-2021...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்