கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நெடுஞ்சாலைத் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெடுஞ்சாலைத் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சாலையில் ஒளிரும் விளக்குகளுக்கு மின்சக்தி எப்படி வருகிறது?



சாலையில் ஒளிரும் சிக்னல் விளக்குகளுக்கு மின்சக்தி எப்படி கிடைக்கிறது?


அதன் பெயர் ரோடு ஸ்டட் என்பார்கள். அது இருவகையில் வேலை செய்யும்.


இரவில் வரும் வாகனங்களின் முகப்பு வெளிச்சங்களை வாங்கி எதிரொளிக்கும் வகையில் ரிஃப்ளெக்டர் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருக்கும்.


அதே சமயத்தில் பகல் நேரங்களில் சூரிய வெளிச்சத்தினை கிரகித்து அதனுள் பொதியப்பட்டுள்ள சிறு சோலார் செல்களில் சக்தியை வாங்கி லித்தியம் வகை பேட்டரியில் மின்சாரத்தை சேகரித்துக் கொள்ளும்.


இருள் கவிய துவங்கியதும் அதில் இருக்கும் லைட் டிபண்டிங் ரெசிஸ்டர் (LIGHT DEPENDING RESISTOR) என்ற வெளிச்சத்தை உணரும் சென்சார் வேலை செய்து மிகக் குறைந்த மின்சாரத்தை உபயோகித்து அதிக வெளிச்சத்தை வெளியே விடும் லைட் எமிட்டிங் டயோடு (LIGHT EMITTING DIODE) எனப்படும் LED (எல்இடி) விளக்குகளின் மூலமாக விளக்குகளை ஒளிரச் செய்கின்றது.


அதனால் இரவு 12 மணி நேரம்கூட எல்.இ.டி. பல்புகள் ஒளிரும் அளவிற்கு சக்தியை கிரகித்து வைத்துக் கொள்ள முடிகிறது.


இந்த சாலைக் குறியீடுக்கு என்ன பொருள் ?

 


இந்த சாலைக் குறியீடுக்கு என்ன பொருள் ?


இந்தப் பகுதியில் பார்வையற்றவர்கள் அதிகம் பேர் உள்ளார்கள் என்று பொருள்.


பொதுவாக சாலையோரங்களில் பல்வேறு குறியீடுகளை கொண்ட பலகைகள் நிறுவப்படுவது வழக்கமான ஒன்று. ஒவ்வொரு குறியீட்டிற்க்கும் ஒரு அர்த்தம் உள்ளது.


அந்த வகையில் புதுவிதமான குறியீட்டைக் கொண்ட பலகை ஒன்று பெங்களூருவின் ஹோப் பார்ம் ஜங்ஷனில் நிறுவப்பட்டுள்ளது. வெள்ளை நிற பலகையில் 4 கருப்பு வட்டங்கள் போடப்பட்டுள்ளன. இதனை கண்காணித்த அனிருத்தா முகர்ஜி என்ற பயணி இதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள முயன்றுள்ளார்.


எனவே அந்த பலகையை புகைப்படம் எடுத்த அவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு போக்குவரத்து அதிகாரிகளிடம் இதற்கான அர்த்தத்தை விளக்குமாறு கேட்டுள்ளார். இந்தப் பதிவினை பார்த்துள்ள வைட்பீல்டு டிராபிக் போலீசார் அதற்கான விளக்கத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.


அதில் இந்தக் குறியீடு ஆனது "சாலையில் பார்வையற்றவர்கள் நடமாட வாய்ப்புகள் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனத்தை ஓட்டும் மாறு குறிப்பிடுகிறது. ஹோப் பார்ம் ஜங்ஷன் அருகில் பார்வையற்றவர்களுக்கான பள்ளி ஒன்று இருப்பதால் இந்தப் பலகை அங்கு நிறுவப்பட்டுள்ளது" என விளக்கம் அளித்துள்ளனர்.


சாலைகள் போடுவது குறித்து நெடுஞ்சாலைத் துறைக்கு தலைமைச் செயலாளர் புதிய அறிவுறுத்தல்...

 

நெடுஞ்சாலை துறைக்கு தலைமைச் செயலாளர் புதிய அறிவுறுத்தல். 

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளரின் கடித எண்: 5916/ எச்.என்.2/ 2021-1, நாள்:12-05-2021...

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் சாலைகளின் மேற்பரப்பை சுரண்டி எடுத்த பின்னரே புதிய சாலைகள் போட வேண்டும்.



>>> தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளரின் கடித எண்: 5916/ எச்.என்.2/ 2021-1, நாள்:12-05-2021...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Rs.5400 grade pay : Audit Objections : Ordered to repay Rs.30 lakhs in one installment

  ரூ.5400 தர ஊதியம் : தணிக்கை தடைகளால் திண்டாடும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் : கூடுதலாகப் பெற்ற சுமார் 30 லட்சம் ரூபாயை ஒரே தவணையில் தி...