ஆப்கானிஸ்தானில் இந்தியாவிலிருந்து சென்ற விமானம் விபத்து...
ஆப்கானிஸ்தானில் இந்தியாவிலிருந்து மாஸ்கோ சென்ற விமானம் விபத்து... ஆப்கானிஸ்தான் காவல்துறைக்கு விமான விபத்து குறித்துப் புகார் வந்ததையடுத்து 6 பேர் இருப்பதாகக் கருதப்படும் ரஷ்ய விமானம் ஒன்று காணாமற்போனதாக ரஷ்ய விமானத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நேற்றிரவு (ஜனவரி 20) விபத்து ஏற்பட்டதாகப் புகார் செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான் ஆகாயவெளியில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது அது காணாமற்போனதாக அதிகாரிகள் கூறினர். அந்த விமானம் இந்தியாவிலிருந்து மாஸ்கோவுக்குச் சென்றுகொண்டிருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் இருக்கும் பதக்-ஷான் (Badakhshan) எனும் மலைப்பகுதியில் விபத்து நேர்ந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது. அந்தப் பகுதி நகரத்திலிருந்து வெகுதொலைவில் உள்ளது. மீட்புக்குழுவினர் அங்கு சென்றடைய சுமார் 12 மணிநேரம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. விமானத்தின் விவரங்கள், விபத்துக்கான காரணம், பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் ஆகியவை உறுதியாகத் தெரியவில்லை. விபத்தில் சிக்கிய விமானம் வர்த்தக விமானமோ இந்திய விமானமோ இல்லை என்று இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டத