இடுகைகள்

Government School லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசுப் பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

படம்
 அரசுப் பள்ளிகளில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்... Benifits of studying in Tamilnadu Government Schools அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி மற்றும் பொருட்கள், வேலைவாய்ப்பில் முன்னுரிமை, மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண்மை படிக்க 7.5 சதவீத ஒதுக்கீடு போன்ற சலுகை இருப்பதால் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கிடைக்கும் நன்மைகள்! 1. அரசு மருத்துவ கல்லூரிகளில் ஒதுக்கீடு 2. தொழில்முறை படிப்புகளில் ஒதுக்கீடு 3. உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை 4. வழக்கமான சலுகைகள்/ விலையில்லா பொருட்கள் 5. தமிழ்‌ வழியில்‌ கல்வி பயிலும்‌ மாணவர்களுக்கு அரசுப்‌ பணியில்‌ 20 சதவீதம்‌ முன்னுரிமை இந்த சலுகைகளை விரிவாக பார்ப்போம்: 1. அரசு மருத்துவ கல்லூரிகளில் இட ஒதுக்கீடு  மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வு - நீட் - கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து 2020ஆம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவ

அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Enrolling Children in Government Schools)...

படம்
  அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Enrolling Children in Government Schools)... அரசுப்பள்ளி  நம்பள்ளி.... சேர்த்திடுங்கள் நம் குழந்தைகளை அங்கே... அரசுப் பள்ளிகளில் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது                - அரசு அறிவிப்பு. ✳️LKG முதல்  8ஆம் வகுப்பு வரை .          ✳️தெரிந்தவர்கள் புதுப்பித்துக்கொள்க.. ✳️ தெரியாதவர்கள் தெரிந்துகொள்க.. ✳️அரசுப் பள்ளியில் பயின்றால்... ✳️கட்டணமில்லா கல்வி... ✳️ ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியில்  20% முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ✳️ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு உயர் கல்வி (மருத்துவம், பொறியியல், வேளாண்மை , சித்த மருத்துவம் , ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம், கலை & அறிவியல் உள்ளிட்ட படிப்புகள்) பயில  7.5 % முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ✳️பெண் கல்வி இடைநிற்றலை தவிர்க்க அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாண

ஆந்திராவில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணி உள்ளிட்ட பிற பணிகளுக்கு பயன்படுத்த தடை (Prohibition of using Government School Teachers for other work including election work in Andhra)...

படம்
 ஆந்திராவில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணி உள்ளிட்ட பிற பணிகளுக்கு பயன்படுத்த தடை (Prohibition of using Government School Teachers for other work including election work in Andhra)... அமராவதி, ஆந்திர பிரதேசத்தில் பள்ளிக் கல்வியின் தரம் குறைவாக உள்ளதால், இனி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கு வெளியே இதர பணிகள் அளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு இதர பணிகளுக்கு ஆசியர்களை அனுப்ப தடை ஆந்திர பிரதேச அரசு தடை விதித்துள்ளது. இதற்காக ஆந்திர பிரதேச இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் தனி உதவியாளர்கள் பணியில் நியமிக்கப்பட்டிருந்த ஆசியர்கள் அனைவரையும் பள்ளிக் கல்வித் துறை திரும்பப் பெற்றுள்ளது. பள்ளிக் கல்வி அல்லாத பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் 3ஆம் வகுப்பு மாணவர்களில் 22.4 சதவீத்தினர் மட்டுமே பாட நூலை படிக்கும் திறன் கொண்டுள்ளதாக கல்வி தரம் பற்றிய வருடாந்தர ஆய்வறிக்கை

தமிழ்நாடு பொறியியல் படிப்பு சேர்க்கை (TNEA) கலந்தாய்வு தரவரிசை பட்டியல் - விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவி பிருந்தா முழு மதிப்பெண் (200க்கு 200 கட்-ஆஃப்) பெற்று அசத்தல் சாதனை (Engineering Admissions Counselling Rank List - Villupuram Govt School student Brinda scored full marks (cut-off 200 out of 200))...

படம்
தமிழ்நாடு பொறியியல் படிப்பு சேர்க்கை (TNEA) கலந்தாய்வு தரவரிசை பட்டியல் - விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவி பிருந்தா முழு மதிப்பெண் (200க்கு 200 கட்-ஆஃப்) பெற்று அசத்தல் சாதனை (Engineering Admissions Counselling Rank List - Villupuram Govt School student Brinda scored full marks (cut-off 200 out of 200))... தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையில் (TNEA) 200/200 கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பெற்ற ஒரே அரசுப் பள்ளி மாணவி 16 வயதான பி.பிருந்தா. இது சிறிய சாதனையல்ல!  இவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், இது தமிழ்நாட்டின் கல்விக் குறியீட்டில் மிக பின்தங்கிய சாதனையாளர்களில் ஒருவராகத் திகழ்கிறது இம்மாவட்டம். இந்த வெற்றி பிருந்தாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் அவரது ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிய சாதனை.  2016ஆம் ஆண்டு சாலை விபத்தில் தந்தையை இழந்த பிருந்தா, வளவனூரில் உள்ள எஸ்.ஆர். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி. கடந்த அக்டோபரில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பிரகாசமான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் ‘எலைட் ஸ்கூல் புரோகிராம்

அரசுப்பள்ளிகள் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உறுதி...

படம்
 தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை அடுத்த கள்ளபெரம்பூர் செங்கழுநீர் ஏரியை  நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:  9வது முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு செய்வார்.  பள்ளிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட பின்னர் தான் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும்.  அரசுப்பள்ளிகள் இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும். அரசு பள்ளிகளில் சேர சிபாரிசு வரும் நிலையும் ஏற்படும்.  அரசு பள்ளிகளில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை கற்றுத்தர முயற்சிக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்?- ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு...

படம்
 அரசுப் பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்போது விண்ணப்ப கட்டணமாக 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்கலாம். ஆனால் செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு ரூ.100 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக பள்ளிக் கல்வி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவுசெய்துகொண்ட நீதிபதி, அரசுப்பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆய்வு செய்த அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவு

அரசுப் பள்ளிகளுக்கு படையெடுக்கும் பெற்றோர்கள் - கடந்த ஆண்டைவிட சேர்க்கை அதிகரிப்பு...

படம்
 அரசுப் பள்ளிகளுக்கு படையெடுக்கும் பெற்றோர்கள் - கடந்த ஆண்டைவிட சேர்க்கை அதிகரிப்பு...

மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்: மகள்களை அரசுப் பள்ளியில் சேர்த்த ஐஆர்எஸ் அதிகாரி ஷெரின்...

படம்
  மாற்றம் நம்மில் இருந்தே தொடங்க வேண்டும் என்கிறார், தன் மகள்களை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ள ஐஆர்எஸ் அதிகாரி ஷெரின் சோமிதரன். அரசு ஊழியர்கள், சமுதாயத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள், அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுக்கிறா. மதுரை அருகே திருப்பாலை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஷெரின் சோமிதரன். ஐஆர்எஸ் அதிகாரியான இவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்திய வருவாய்த் துறையில் ஜிஎஸ்டி இணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவர் தனது குழந்தைகளான ஆதிரை, ரெனி ஆகிய இருவரையும் அரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துள்ளார். ஆதிரை இரண்டாம் வகுப்பிலும் ரெனி எல்கேஜி வகுப்பிலும் சேர்ந்துள்ளனர். மகள்களை அரசுப் பள்ளியில் சேர்த்தது ஏன் என்பது குறித்து ஷெரின் ஐஆர்எஸ் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் விரிவாகப் பேசினார். ''நான் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்ததால் அத்தகைய பள்ளிச் சூழலை உணர்ந்திருக்கிறேன். அது என் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். பொதுவாகவே நானும் ஆவணப்பட இயக்குநராகிய

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...