கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Accident லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Accident லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

குட்டையில் குளிக்கச் சென்ற 6 குழந்தைகள் உயிரிழப்பு

 


குட்டையில் குளிக்கச் சென்ற 6 குழந்தைகள் உயிரிழப்பு


ராணிப்பேட்டை - மேட்டு குன்னத்தூரில் குட்டையில் குளிக்கச் சென்ற 3 குழந்தைகள் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு


புவனேஸ்வரன்(7), சுஜன்(7), மற்றும் சிறுமி மோனி(9) ஆகிய 3 குழந்தைகளும் குட்டையில் மூழ்கி மரணம்


நீரில் மூழ்கிய 3 குழந்தைகளும் தீயணைப்பு வீரர்கள் உதவியோடு சடலமாக மீட்பு - காவல்துறையினர் விசாரணை




தஞ்சாவூர் மாவட்டம் மருதகுடியில் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம் திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் மகன் மாதவன் (10), அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் பாலமுருகன் (10), ஸ்ரீதர் மகன் ஜஸ்வந்த் (8) ஆகிய மூன்று பேரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லாமல் மருதகுடி ஊரணி குளத்தில் குளித்துள்ளனர்.


வெகு நேரம் ஆகியும் மாதவன் உட்பட மூன்று பேரும் வீட்டிற்கு வராததால் அவர்களின் பெற்றோர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது அவர்கள் மருதகுடி கிராமத்திற்கு சென்றதாக தகவல் கிடைத்து அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ஊரணி குளத்தின் கரையில் சிறுவர்கள் அணிந்திருந்த செருப்புகளை பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


உடன் அந்த பகுதி மக்கள் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்தபோது மூன்று சிறுவர்களும் குளத்தில் மூழ்கி கிடந்தது தெரியவந்தது. உடன் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுவர்களை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மருத்துவமனையில் சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



கடலூர் ரயில் விபத்து - கேட் கீப்பர் சிறையில் அடைப்பு

 



கடலூர் ரயில் விபத்து - கேட் கீப்பர் சிறையில் அடைப்பு


கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்.


கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு.


கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு.


கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்



கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்


பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் - கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் - கடலூர் தனியார் பள்ளிக்கு, பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்


கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கடலூர் தனியார் பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.



கடலூர் செம்மப்பம் பகுதியில பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் இரண்டு மாணவர், ஒரு மாணவி உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்த அந்த பள்ளி வேன் குறித்து பள்ளி கல்வித்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த பள்ளி வேனில் 4 மாணவ, மாணவிகளும் ஒரு ஓட்டுநர் மட்டுமே பயணம் செய்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி பள்ளி வாகனங்களில் ஓட்டுநருடன் கட்டாயம் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் விபத்துக்குள்ளான பள்ளி வாகனத்திற்கு உதவியாளர் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து உதவியாளர் இல்லாதது குறித்து விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடலூரில் உள்ள தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 



விபத்தில் நடந்தது எப்படி? 


இன்று காலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரயில் செம்மாங்குப்பம் ரயில்வே கேட் அருகே சென்றபோது தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கிராஸ் செய்து விபத்து ஏற்பட்டது. ரயில்வே கேட் மூடாதால் ரயில் வரவில்லை என பள்ளி வேன் ஓட்டுநர் வாகனத்தை இயக்கி சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தால் பள்ளி வேன் 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நசுங்கி உள்ளது.


அதில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்டோர் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த நிவாஸ் என்ற 12 வயது மாணவன் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சாருமதி என்ற 16 வயது மாணவியும், செழியன் என்ற 15 வயது மாணவனும் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் சின்னகாட்டுசாகை சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிடமணி என்பவரது மகன் மற்றும் மகள் ஆவர். 


தற்போது  விஷ்வேஸ் என்ற மாணவன்,   பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் (47), ஆகியோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரயில் சேவை பாதிப்பு



 கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு


கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது.


இந்நிலையில், பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே சிதம்பரம் நோக்கி ரெயில் சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.


இதுபற்றி தகவல் அறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.



இந்த சம்பவத்தில், ஒரு மாணவர், ஒரு மாணவி என 2 பேர் பலியாகி உள்ளனர். வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த விபத்தின்போது, ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. ரெயில்வே கேட்டை மூடுவதற்காக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை என கூறப்படுகிறது. அவர் பணியின்போது தூங்கியதில் ரெயில் வரும்போது கேட் மூடாமல் விடப்பட்டு உள்ளது.



இது விபத்திற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ரெயில்வே கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். தீவிர விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் பற்றி தெரிய வரும்.


கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய ரெயில்கள் இந்த வழியே செல்கின்றன. இதனால், அந்த வழியே செல்லும் ரெயில் போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது.



🚨 கடலூர் அருகே மூடப்படாத ரயில்வே கேட்டை பள்ளி வேன் கடக்க முயன்றபோது ரயில் மோதிய விபத்து எதிரொலி - முக்கிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

 
🚆 திருச்சியிலிருந்து தாம்பரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் அரை மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


🚆 மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியபோது ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு.



*கேட் கீப்பரின் அலட்சியத்தால் தனியார் பள்ளி வேன் கோர விபத்து


*கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கி விட்டதால் பள்ளி வேன் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்ற போது விபத்து நேர்ந்துள்ளது
 

*கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளது என நேரில் பார்த்த பொதுமக்கள் குற்றச்சாட்டு


* கேட் கீப்பரை தாக்கிய கிராம மக்கள்: கடலூரில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் ஏற்பட்ட மோதி விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்



ரயில்வே கேட் கீப்பர் சஸ்பெண்ட்

* கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து  குறித்து ரயில்வே துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கேட்கீப்பறை தற்போது பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவு




தற்போதைய செய்தி


கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரயில்வே சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 மாணவர், 1 மாணவி உள்பட மூவர் பரிதாபமாக பலியாகினர்.

ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன ஓட்டுநர், பள்ளிக் குழந்தைகள் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.






ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்ததில் மூவர் பலியாகினர். அவர்களில் சின்ன காட்டு சாகை சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிட மணியின் மகள் சாருமதி (16), அவரன் மகன் செழியன்(15), விஜயசந்திரகுமாரின் மகன் விமலேஷ்(10) ஆகியோர் பலியாகினர்.

இந்நிலையில், இவ்விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பங்களுக்கு ரயில்வே சார்பில் தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-மும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Daily Thanthi
முகப்பு >  செய்திகள் >  தமிழக செய்திகள் >  கடலூர்: பள்ளி வேன்...
கடலூர்: பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி..? 3 மாணவர்கள் பலியான சோகம் - கேட் கீப்பர் கைது
கடலூர் செம்மங்குப்பத்தில் வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் சிக்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.;
By - தினத்தந்திUpdate:2025-07-08 10:41 IST
கடலூர்: பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி..? 3 மாணவர்கள் பலியான சோகம் - கேட் கீப்பர் கைது

கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது.

இந்நிலையில், பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே சிதம்பரம் நோக்கி ரெயில் சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், ஒரு மாணவர், ஒரு மாணவி என 2 பேர் பலியாகி உள்ளனர்.

வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 


இந்த விபத்தின்போது, ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. ரெயில்வே கேட்டை மூடுவதற்காக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை என கூறப்படுகிறது. அவர் பணியின்போது தூங்கியதில் ரெயில் வரும்போது கேட் மூடாமல் விடப்பட்டு உள்ளது. இது விபத்திற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ரெயில்வே கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவம் பற்றி ரெயில்வே தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், ரெயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தினார். வேன் போகும் வரை கேட்டை மூட வேண்டாம் என அவர் கூறினார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும், இன்று காலை சுமார் 7.45 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது. கேட் கீப்பர் கேட்டை மூடத் தொடங்கிய போது வேன் ஓட்டுநர் வேனை வேகமாக இயக்கியதால் விபத்து ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட ரெயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாத கேட். கேட் கீப்பர் முறையாக மேனுவலாக கேட்டை மூட முயற்சித்துள்ளார். இதேபோன்று கேட்டை பாதி மூடி கொண்டிருக்கும்போது, வேன் ஓட்டுநர் உள்ளே சென்றார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கேட் கீப்பர் பணியின்போது தூங்கியதே விபத்துக்கான காரணம் என பொதுமக்கள் கூறி வரும் நிலையில், ரெயில்வே மாறுபட்ட விளக்கம் அளித்துள்ளது.


 

இந்நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் செம்மங்குப்பம் பகுதியில் பணியாற்றிய கேட் கீப்பர் மீது ரெயில்வே அதிகாரிகள் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.  

தீவிர விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான முழு காரணம் பற்றி தெரிய வரும் என்று கூறப்படுகிறது. கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய ரெயில்கள் இந்த வழியே சென்று வரும் நிலையில், அந்த வழியே செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

 


பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி?

'Non Interlocking' ரெயில்வே கேட் என்றால், அதனை மூடுவதற்கு தொலைபேசி மூலமே தகவல் தரப்படும்.

தொலைபேசி மூலம் தகவல் அளித்து கேட் மூடியதை உறுதிப்படுத்திய பின்னரே ரெயில் செல்வதற்கு சிக்னல் அளிக்கப்படும்.

செம்மங்குப்பத்தில் ரெயில்வே கேட்டை மூடிவிட்டதாக உறுதி அளித்தபின், பள்ளி வேனை மட்டும் கேட் கீப்பர் அனுமதித்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 


மூன்று மாணவர்கள் உயிரிழப்பு

பள்ளி வேனில் டிரைவர் மற்றும் 4 மாணவர்கள் பயணித்துள்ளனர். அந்த கோர விபத்தில் சிக்கி மாணவி சாருமதி(15), மாணவர் நிமலேஷ் (10) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மாணவர்கள் செழியன், விஷ்வேஸ் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவர், சிகிச்சை பலனில்லாமல் உயிரிந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 

பள்ளி வேனை இயக்கிய ஓட்டுநர் சங்கரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதியபோது ரெயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் பலியான சோகம்

செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சிக்கிய தொண்டமாநத்தத்தை சேர்ந்த சாருமதி (11-ம் வகுப்பு), அவரது தம்பி செழியன் (10-ம் வகுப்பு) ஆகியோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


அரசு பள்ளி சத்துணவு மையத்தில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு



அரசு பள்ளி சத்துணவு மையத்தில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு


திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் சத்துணவு மைய கட்டிடத்தில்  கேஸ் சிலிண்டர் வெடித்தது.


அதிர்ஷ்டவசமாக இந்த சிலிண்டர் வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை


திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் சத்துணவு மைய கட்டிடத்தில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்தது. இதுகுறித்து குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சிலிண்டர் வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.



திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் சத்துணவு மையக் கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்தது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.


பாலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு மையக் கட்டிடம் செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல், சத்துணவு தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், திடீரென சத்துணவு மையக் கட்டிடத்தில் கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.


சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டதும், பள்ளி வளாகத்தில் இருந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். சிலிண்டர் வெடித்ததால், சத்துணவு மையக் கட்டிடத்தில் தீ பரவத் தொடங்கியது.


சம்பவம் குறித்து உடனடியாகக் குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.


தீயணைப்பு வீரர்கள் வேகமாகச் செயல்பட்டு,  சத்துணவு மையக் கட்டிடத்தில் பரவிய தீயை அணைத்தனர். தீ மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.


இந்தச் சிலிண்டர் வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. சிலிண்டர் வெடித்த நேரத்தில் மாணவர்கள் யாரும் அருகில் இல்லாததும், சத்துணவு மைய ஊழியர்கள் பாதுகாப்பான தூரத்தில் இருந்ததும் பெரும் விபத்தைத் தவிர்த்தது.


சிலிண்டர் வெடிப்புக்கான காரணம் குறித்து வேடசந்தூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு, சமையல் வாயு அழுத்தத்தில் ஏற்பட்ட கோளாறு அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.


இந்தச் சம்பவம், பள்ளி சத்துணவு மையங்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் மற்றும் சமையல் உபகரணங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



விபத்தில் வருவாய் கோட்டாட்சியர் உயிரிழப்பு - முதலமைச்சர் இரங்கல் - நிவாரண நிதி அறிவிப்பு



திருச்சி அருகே அரசு பேருந்தும் காரும் மோதி விபத்து: வருவாய் கோட்டாட்சியர் உயிரிழப்பு


திருச்சி அருகே அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் முசிறி கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு


விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி


திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா  சென்ற  காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காரின் டயர் வெடித்ததால் எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த விபத்தில், பலத்த காயமடைந்த வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா பரிதாபமாக உயிரிழந்தார் என கூறப்படுகிறது.


இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.  வருவாய் கோட்டாட்சியர்  உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், திருச்சி கலெக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சாலை விபத்தில் வருவாய் கோட்டாட்சியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






திருச்சி மாவட்டம் கடியாக்குறிச்சி அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.


அவரது குடும்பத்தினருக்கு அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.1 கோடி பெற்று வழங்கப்படும் எனவும், பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம், குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவு.


சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி வருவாய் கோட்டாட்சியரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு


கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி கிராமம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனாவின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-


திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மேக்குடி கிராமம், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா இன்று காலை 11.45 மணியளவில் TN 45 G 1798 என்ற பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து மோதியதில் முசிறி வருவாய் கோட்டாட்சியரின் நான்கு சக்கர வாகனம் நிலைதடுமாறி அருகில் பழுது பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது எதிர்பாதாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானதில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.


முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனாவின் உயிரிழப்பு வருவாய்த் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ஆரமுத தேவசேனாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


ஆரமுத தேவசேனாவின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்த அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும். மேலும், அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் - பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை



கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் - பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை


கேரளா அருகே கடலில் மூழ்கிய கப்பல் - ரசாயனம் பரவும் அபாயம்


திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட சரக்குக் கப்பல் மூழ்கியது.


 கப்பலில்  25 பேர் இருந்த நிலையில் லைஃப் ஜாக்கெட் உதவியுடன் 9 பேர் கடலில் குதித்து தப்பித்தனர். 


கப்பலில் சிக்கிய 16 பேரை மீட்கும் பணி தீவிரம்.


கப்பலில் இருந்த கண்டெய்னர்களில் 367 மெட்ரிக் டன்  கந்தக எரிபொருள் உள்ளதால், அதனால் ஏதும் ஆபத்து நிகழலாம் என எச்சரிக்கை.


 கண்டெய்னர்கள் எங்காவது கரை ஒதுங்கும் போது மக்கள் யாரும் அருகே செல்ல வேண்டாம் என கேரள பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை.


கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடல் அருகே மூழ்கி விபத்துக்குள்ளானது.


கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கப்பலில் லைபீரியா நாட்டின் கொடி இருந்ததாகக் கூறுகின்றனர்.


இந்தக் கப்பல் இன்றிரவு 10 மணிக்கு கொச்சி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கொச்சியை தொடர்ந்து, தூத்துக்குடிக்கும் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.


இந்த விபத்தின்போது, கப்பலில் 24 பேர் இருந்ததாகவும், அவர்களில் 9 பேர் பாதுகாப்பு உடைகளின் மூலம் தப்பித்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது. மீதமுள்ளவர்களை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தென்மேற்கு பருவமழையின் காரணமாக, கடலில் ஏற்பட்ட பாதகமான நிலைமையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.


அதுமட்டுமின்றி, கப்பலில் இருந்த கன்டெய்னர்களில் 367 மெட்ரிக் டன் அளவில் கந்தக எரிபொருள் இருந்ததாகக் கூறுகின்றனர். ஆகையால், அவை கரை ஒதுங்கும் சமயத்தில், அதனருகே மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை எச்சரித்துள்ளது.


மேலும், கடற்கரையில் அடையாளம் தெரியாத எந்தப் பொருளையும் அணுக வேண்டாம் என்றும், 112 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


பெங்களூரு - காமாக்யா அதிவேக விரைவு தொடர்வண்டி ஒடிசாவில் விபத்து - காணொளி

 


ஒடிசாவில் பெங்களூரு - காமாக்யா அதிவேக விரைவு தொடர்வண்டி  விபத்து - காணொளி


Cuttack, Odisha: One person died and 8 injured after 11 coaches of 12551 Bangalore-Kamakhya AC Superfast Express derailed near Nergundi Station in Cuttack - Nergundi Railway Section of Khurda Road Division of East Coast Railway at about 11:54 AM on 30-03-2025


(Drone visuals from the spot)



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...




An Aeroplane carrying 181 people crashed in South Korea




 தென் கொரியாவில் 181 பேருடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது


An Aeroplane carrying 181 people crashed in South Korea



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



தென் கொரியாவில் 175 பயணிகள், 6 விமான பணியாளர்களுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.


பாங்காக்கில் இருந்து தென் கொரியா சென்ற விமானம், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. 


உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்ட நிலையில் மீட்பு பணிகள் தீவிரம்.


சியோல்,


தென் கொரிய நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் விமானம் தீப்பிடித்ததில் பயணிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


 தென் கொரியாவில் 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. முவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறாது. பாங்காக்கில் இருந்து தென் கொரியாவின் யோன்ஹாப் நோக்கி சென்ற போது இந்த விபத்து ஏற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாங்காக்கில் இருந்து 181 பேருடன் புறப்பட்ட விமானம், தென்மேற்கு கடற்கரை விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9:07 மணிக்கு தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையில் இருந்து விலகி வேலியில் மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


விமானத்தில் இருந்து பயணிகளை அகற்ற மீட்பு அதிகாரிகள் முயற்சித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யோன்ஹாப் செய்தி நிறுவனம் இறப்புகளை உறுதி செய்துள்ளது. ஆனால் அவசர அலுவலகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. மற்ற தென் கொரிய ஊடகங்களும் இதேபோன்ற உயிரிழப்புகளை தெரிவித்துள்ளன.


உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் விமானத்தில் இருந்து அடர்த்தியான கறுப்பு புகையின் வெளியாவதையும், விமானம் தீப்பிடித்து எரிவதைக் காட்டும் காட்சிகளை ஒளிபரப்பின.


தென் கொரியா விமான விபத்து நேரலை புதுப்பிப்புகள்: தென் கொரியா விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியதை அடுத்து, 2 பேரைத் தவிர மற்ற அனைவரும் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.


தென் கொரியா விமான விபத்து நேரலை புதுப்பிப்புகள்: தென் கொரியா விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியதை அடுத்து, 2 பேரைத் தவிர மற்ற அனைவரும் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.


தென் கொரியா விமான விபத்து செய்தி நேரலை புதுப்பிப்புகள்: ஞாயிற்றுக்கிழமை காலை தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானதில் இருவரைத் தவிர மற்ற 181 பேரில் பாங்காக்கில் இருந்து ஜெஜூ ஏர் விமானத்தில் பயணம் செய்த 179 பேர் இறந்திருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். 


தென் கொரியா விமான விபத்து

தென் கொரியா விமான விபத்து நேரலை: தலைநகர் சியோலில் இருந்து சுமார் 288 கிமீ தொலைவில் உள்ள தெற்கு ஜியோல்லா மாகாணத்தில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஜெஜு ஏர் விமானம் தரையிறங்கும் போது காலை 9 மணியளவில் (உள்ளூர் நேரம்) விபத்து ஏற்பட்டது. (X/Yonhanp செய்தி நிறுவனம்)


தென் கொரியா விமான விபத்து நேரலை புதுப்பிப்புகள்: ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்திற்கு பாங்காக்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் இரண்டு பணியாளர்களைத் தவிர விமானத்தில் இருந்த அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 120 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை இறுதியானது அல்ல என்று விமான நிலைய தீயணைப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ்  தெரிவித்துள்ளது. அமைச்சின் தரவுகளின்படி, ஏறக்குறைய மூன்று தசாப்தங்களில் தென் கொரிய விமான நிறுவனம் சம்பந்தப்பட்ட மிக மோசமான விமான விபத்து இதுவாகும்.


தென் கொரியா விமான நிலையத்தில் நடந்தது என்ன?  விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்குப் பிறகு சிறிது நேரத்தில் தரையிறங்கிய ஜெஜு ஏர் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, விமான நிலையத்தில் உள்ள சுவரில் மோதியதால் தீப்பந்தமாக வெடித்தது. உள்ளூர் செய்தி நிறுவனங்களால் பகிரப்பட்ட வீடியோக்களில், இரட்டை என்ஜின் விமானம் வெடிப்பில் சுவரில் இடிப்பதற்கு முன், வெளிப்படையான தரையிறங்கும் கியர் இல்லாமல் ஓடுபாதையில் சறுக்குவதைக் காணலாம்.


விமானத்தில் இருந்த அனைவரும் யார்? 

175 பயணிகளில் இரு தாய்லாந்து பிரஜைகளும் அடங்குவதாகவும், மீதமுள்ளவர்கள் தென் கொரியர்கள் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெஜு ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் போயிங் 737-800 ஜெட் விமானம். விபத்தின் உயிர்கள் மற்றும் காரணம் உள்ளிட்ட விவரங்களை விமான நிறுவனங்கள் தேடி வருவதாக விமானச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தென் கொரியாவின் செயல் தலைவர் சோய் சாங்-மோக் முழு மீட்புப் பணிகளுக்கு உத்தரவிட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.


தென் கொரியா பட மூலாதாரம்,Reuters

தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சாங்-மோக் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அவர் முவானில் இந்த பகுதியை "ஒரு சிறப்பு பேரிடர் மண்டலமாக" அறிவித்துள்ளார்.


"இந்த விமான விபத்தில் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக கடுமையான சூழல் நிலவி வருகிறது. உயிரிழந்தவர்வர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்", என்று அவர் கூறினார்.


உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவளிக்க அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஜேஜூ ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.


செய்தியாளர் சந்திப்பில், இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிம் இ-பே மற்றும் பிற அதிகாரிகள் தங்கள் தலையை தாழ்த்தி மணிப்பு கேட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதே தற்போது தங்களின் முன்னுரிமை என்று கிம் இ-பே கூறினார்.


மேலும் இந்த விமான நிறுவனம், அதன் இணையதளத்தை கருப்பு நிறத்திற்கு மாற்றி ஆன்லைனில் மன்னிப்பு கோரியது.


முவான் தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து 288 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.


விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது.


ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும். தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


முன்னதாக அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவில் இருந்து கடந்த 25-ந்தேதி ரஷியாவின் குரோஸ்னி நகருக்கு 67 பேருடன் சென்று கொண்டிருந்த விமானம் கஜகஸ்தான் நாட்டின் அக்தாவ் நகரில் அவசரமாக தரையிறங்கும்போது வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 38 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 29 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த நிலையில் அடுத்த சில தினங்களிலே இந்த கோர விபத்து நடந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருவனந்தபுரம் வாமனபுரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய கேரள முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள்



Kerala Chief Minister's security  vehicles collided one after the other at Thiruvananthapuram's Vamanapuram


 திடீரென சாலையை கடந்த பெண்ணால் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய கேரள முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள்


திருவனந்தபுரம் வாமனபுரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய கேரள முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் - காயங்களின்றி பயணத்தை தொடர்ந்தார் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள்




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வாமனபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அணிவகுப்பு பாதுகாப்புடன் காரில் சென்று கொண்டிருந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்ற கார் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் சாலையில் ஒன்றுடன் மோதி திடீரென விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருவனந்தபுரம் அருகே உள்ள வாமனபுரம் என்ற பகுதியில் சாலையில் பெண் ஒருவர் தமது ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொண்டிருந்தார். சாலையில் ஒருபுறம் நடுவழியில் தமது வாகனத்தை நிறுத்திய அப்பெண் வலதுபுறம் திரும்பினார்.


அதே நேரத்தில், முதல்வர் பினராயி விஜயன் கார் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் கோட்டயத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பரபரப்பான சாலையில் பெண்ணின் வாகனம் நின்று திரும்புவதை அறியாமல் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் திடீரென பிரேக் போட்டு நின்றது.


இதையடுத்து, முதல்வர் இருந்த வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் முதல்வர் பினராய் விஜயனின் கார் சிறிதளவு சேதம் அடைந்தது. விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் திடீர் பரபரப்பு நிலவியது. முதல்வர் பினராயி விஜயன் பயணித்த கார் சிறிது சேதம் அடைந்தது. அவருக்கும், உடன்வந்த பாதுகாவலர்கள் உள்பட யாருக்கும் நல்வாய்ப்பாக எந்த காயமும் ஏற்படவில்லை.


முதல்வர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றின்மீது ஒன்று மோதி விபத்தில் சிக்கிய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் தீப்பிடித்த கார் திடீரென தானாக வேகமெடுத்து சாலையில் ஓடியதால் பரபரப்பு - வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம்


ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் தீப்பிடித்த கார் திடீரென தானாக வேகமெடுத்து சாலையில் ஓடியதால் பரபரப்பு - வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம்


 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சாலையில் தீப்பிடித்த நிலையில் கார் ஓட ஆரம்பித்ததால் பரபரப்பு.


வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்.


வாகனத்தில் இருந்து புகை வருவதை பார்த்ததும் மேம்பாலத்தில் நிறுத்திய ஓட்டுநர்.


தீப்பிடித்த வாகனம் திடீரென பாலத்தில் இருந்து இறங்கியதால் பரபரப்பு.


ஜெய்ப்பூரில் விபத்தில் தீப்பிடித்த கார் திடீரென தானாக வேகமெடுத்து சாலையில் ஓடியதால் பரபரப்பு


கார் எரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம்.


ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பாலத்தில் தீப்பிடித்து எரிந்த ஓட்டுநர் இல்லாத கார், டிவைடரில் நிற்கும் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் மீது மோதியது. காரின் ஏர் கண்டிஷனிங்கில் இருந்து புகை வருவதை கவனித்த டிரைவர், வெளியே சென்று சோதனை நடத்தினார். 

ஜெய்ப்பூரில் உள்ள சோடாலா சப்ஜி மண்டி பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை, ஓட்டுநர் இல்லாத கார் (எம்ஜி ஹெக்டர்) தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியது. ஜிதேந்திரா ஓட்டிச் சென்ற கார், ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீப்பிடித்து எரிந்தது. தீ மற்றும் புகையை கவனித்த ஜிதேந்திரா வேகமாக வெளியே சென்று தப்பினார். 

இருப்பினும், கார் ஓட்டுநர் இல்லாமல் தொடர்ந்து நகர்ந்து, பாலத்தின் சாலையில் வேகமாகச் சென்றது. இறுதியில் உயரமான பகுதியைக் கடந்ததும் டிவைடரில் மோதியது. அதிர்ஷ்டவசமாக, ஓட்டுநர் இன்றி ஓடிய வாகனத்தால் குழப்பம் ஏற்பட்ட போதிலும், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.


A driverless car engulfed in flames descended an elevated road in Jaipur, colliding with a parked bike before halting at a divider.


The driver noticed smoke coming from the car's air conditioning and stepped out to investigate.


A dramatic incident unfolded on Friday evening in Jaipur’s Sodala Sabzi Mandi area when a burning, driverless car ( MG Hector ) caused widespread panic. The car, driven by Jitendra, caught fire due to a suspected short circuit. Upon noticing the flames and smoke, Jitendra quickly escaped. However, the car continued moving driverless, speeding down an elevated road. It eventually collided with a divider after crossing the elevated stretch. Fortunately, no injuries were reported despite the chaos caused by the runaway vehicle.





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 

Thiruvallur Kavarappettai - Darbhanga - Mysuru Express train accident - video of rescue of trapped passengers...


Rear end collision  at KAVARAIPPETTAI Railway Station around 20.30 hrs today in Chennai -Gudur section involving Train No.12578 Mysuru – Darbhanga Bagmati Express and a Goods train


Help line numbers at Chennai Division

04425354151

04425330952 

044-25330953 

044-25354995


கவரப்பேட்டை ரயில் விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர், உயிரிழப்பு இல்லை

- திருவள்ளூர் ஆட்சியர் பிரபுசங்கர் 


கவரப்பேட்டையில் 2 ரயில்கள் மோதி விபத்து


பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் உள்ள ரயில் பெட்டியை கீழே தள்ளுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்...


 திருவள்ளூர் கவரப்பேட்டை - மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து - சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் காணொளி...


Thiruvallur Kavarappettai - Darbhanga - Mysuru Express train accident - video of rescue of trapped passengers...





>>> மீட்புப் பணிகள் - காணொளியை காண இங்கே சொடுக்கவும்...




>>> ரயில் விபத்து காணொளி 2...




>>> ரயில் விபத்து காணொளி 3...



திருவள்ளூர் கவரைப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. மைசூருவிலிருந்து தர்பங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் மீது மோதியது. நான்கு ஏசி பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் நிலையம் அருகே விபத்து ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.






ரயில் நிலையம் அருகிலேயே விபத்து நிகழ்ந்ததால் - உயிரிழப்புகள் இல்லை - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு...








Near Kavaraipettai in Thiruvallur, a passenger train collided with a goods train. The Mysuru to Darbhanga Express crashed into the goods train.  

Four AC compartments derailed. The accident occurred near the railway station, allowing immediate rescue operations to begin.

Two compartments caught fire, and the fire department rushed to the scene. Rescue efforts to assist the public are underway.

திருவள்ளூரில் ரயில்கள் மோதல்: கவரப்பேட்டை அருகில் Darbhanga - Mysuru express பயணிகள் விரைவு ரயிலும், சரக்கு ரயிலும் மோதிக்கொண்டதில் ரயில் தீப்பிடித்து எரிந்து வருகிறது...

கவரப்பேட்டை ரயில் விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர், உயிரிழப்பு இல்லை

- திருவள்ளூர் ஆட்சியர் பிரபுசங்கர் 


Rear end collision  at KAVARAIPPETTAI Railway Station around 20.30 hrs today in Chennai -Gudur section involving Train No.12578 Mysuru – Darbhanga Bagmati Express and a Goods train


Help line numbers at Chennai Division

04425354151

04425330952 

044-25330953 

044-25354995

 


 திருவள்ளூரில் ரயில்கள் மோதல்: கவரப்பேட்டை அருகில் பயணிகள் விரைவு ரயிலும், சரக்கு ரயிலும் மோதிக்கொண்டதில் ரயில் தீப்பிடித்து எரிந்து வருகிறது...


முதல் கட்டமாக, சிக்னல் கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந்ததாக தகவல்...


ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம்...






திருவள்ளூர் கவரைப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. மைசூருவிலிருந்து தர்பங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் மீது மோதியது. நான்கு ஏசி பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் நிலையம் அருகே விபத்து ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.


ரயில் நிலையம் அருகிலேயே விபத்து நிகழ்ந்ததால் - உயிரிழப்புகள் இல்லை - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு...




 திருவள்ளூர் அடுத்த கவரப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து.


ஆந்திரா நோக்கி சென்ற பயணிகள் விரைவு ரயில் திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்து.


2 பெட்டிகளில் தீப்பற்றி எரிந்து வருவதால் பரபரப்பு.


மைசூர் தர்பங்கா பயணிகள் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.


நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து...




>>> மீட்புப் பணிகள் - காணொளியை காண இங்கே சொடுக்கவும்...





>>> ரயில் விபத்து காணொளி 2...




>>> ரயில் விபத்து காணொளி 3...


In Kavarapettai Darbhanga - Mysuru express collided with the Goods train . Looks like a major accident...


A major train accident has been reported near Ponneri, where Train No. 12578 Mysore-Darbhanga Express collided with a goods train near Kavarapettai in Tiruvallur district. A major fire has broken out, and more details are awaited.







பெண்கள் விடுதியில் தீ விபத்து - 2 ஆசிரியைகள் உயிரிழப்பு...




 மதுரையில் விசாகா என்ற பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விடுதியை நடத்தி வந்த இன்பா என்ற பெண் கைது. 


விசாகா பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர்.


விடுதியை காலி செய்யக் கோரி கடந்த ஆண்டே மதுரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது.


மதுரை மாவட்டம், பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள, கட்ராபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் (12-09-24) அதிகாலை 4 மணியளவில் இந்த விடுதியில் இருந்த பிரிட்ஜ் திடீரென்று வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக, கடுமையான கரும்புகை ஏற்பட்ட நிலையில், அருகில் இருக்கக்கூடியவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், விடுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தி அந்த விடுதியில் இருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மீட்டனர்.


இந்த விடுதியில் ஏற்பட்டுள்ள தீயினால், கரும்புகை உருவானதில் மூச்சுத்திணறலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், பிரிட்ஜ் வெடிக்கும் போது, அதன் அருகில் இருந்த பரிமளா செளந்தரி மற்றும் சரண்யா ஆகிய இருவரையும் பலத்த காயங்களுடன் தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரிமளா செளந்தரி மற்றும் சரண்யா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் தெரிவித்திருந்தனர். பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இந்த சம்பவம் தொடர்பாக விடுதி உரிமையாளர் இன்பாவை மதுரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 100 ஆண்டுகள் பழமையாக கட்டடத்தில் இயங்கி வந்த விசாகா பெண்கள் விடுதி, மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறவில்லை. கட்டடம் சேதமடைந்து இருப்பதால் விடுதியை காலி செய்யுமாறு இடத்தின் உரிமையாளர் கூறியும், வெளியேற மறுத்துள்ளார். மருத்துவமனை நடத்த அனுமதி பெற்றுவிட்டு மகளிர் விடுதியை நடத்தி வந்ததால், விடுதியின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் கட்டடத்தின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்திருந்தார் என்று கூறப்படுகிறது.


இதற்கிடையில், 2023ஆம் ஆண்டே விடுதியை இடித்து அப்புறப்படுத்த மதுரை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியிருக்கிறது. ஆனால், விடுதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் விடுதி இடிக்கப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில், விடுதியில் ஏற்பட்டுள்ள விபத்து குறித்து நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு சென்று அனுமதி பெற்று விடுதியை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


மதுரை மாவட்டம் கட்ராபாளையம் பகுதியில் இயங்கி வரும் பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி ஆசிரியை உள்பட 2 பேர் பலியானார்கள். விபத்து நடந்த இடத்தை கலெக்டர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,


"மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பழமை வாய்ந்த கட்டிடங்களை இடிப்பதற்கு மாநகராட்சி சார்பில் முறையாக நோட்டீஸ் வழங்கியும் அவர்கள் இடிக்காமல் இருக்கிறார்கள். நீதிமன்றத்தையும் சில பேர் அணுகி உள்ளனர். இடிக்காமல் இருக்கும் பழமை வாய்ந்த கட்டிடங்கள் ஆலோசித்து 'சீல்' வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமாரும், பார்வையிட்டு ஆய்வு செய்தார். முறையான மாநகராட்சி அனுமதி, சுகாதாரத் துறை அனுமதி, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று, காவல்துறையின் அனுமதி என்று எந்தவிதமான அனுமதியும் பெறாமல் இந்த விடுதி செயல்பட்டு வந்துள்ளது. விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.


இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டு 2 பெண்கள் பலியான நிலையில் பெண்கள் தங்கும் விடுதியை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விடுதி செயல்பட்டு வந்த கட்டிட உரிமையாளருக்கு மீண்டும் ஒரு நோட்டீஸ் வழங்க உள்ளதாகவும் மதுரை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.


மதுரை கட்ராபாளையத்தில் தீ விபத்து ஏற்பட்ட மகளிர் விடுதிக் கட்டடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தீ விபத்தை அடுத்து கட்டட உரிமையாளர் தினகரனை அழைத்து, வழக்கு தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கட்டிட உரிமையாளர் தரப்பில் கட்டடத்தை காலி செய்யும் பணியும் இன்று தொடங்கும்.


ரயில் தடம் புரண்டு விபத்து - 4 பேர் உயிரிழப்பு - தலா 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு...



 உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து - 4 பேர் உயிரிழப்பு - தலா 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு...


உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார். கோண்டா மாவட்ட ஆட்சியர் நேஹா ஷர்மாவும் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்த கோண்டா மாவட்ட ஆட்சியர் நேஹா ஷர்மா, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 8 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. 4 பேர் உயிரிழந்ததாக பதிவாகி இருக்கிறது. மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தயாராக இருந்த அனைத்து ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்தை அடைந்துள்ளன. மீட்புப் பணியில் உள்ளூர் மக்கள் மிகவும் உதவிகரமாக இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார். விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யாநாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கோண்டா மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்” என தெரிவித்துள்ளார். சண்டிகரில் இருந்து அசாம் மாநிலத்தின் திப்ருகர் நகர் வரை செல்லும் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில், வழக்கம்போல் நேற்றிரவு (ஜூலை 17) 11.20-க்கு புறப்பட்டது. இன்று மதியம் 1.45 மணி அளவில் உத்தரப் பிரதேசம் மாநிலம் கோண்டா நிறுத்தத்தில் இருந்து கோரக்பூர் நோக்கி ரயில் பயணித்து கொண்டிருந்தது. அப்போது கோண்டா மற்றும் ஜுலாஹி ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள பிகவுரா என்ற இடத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஜுலாஹி ரயில் நிலையத்துக்கு சில கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்பு உள்ள பிகவுரா என்ற இடத்தில் இந்த ரயிலின் ஏசி கோச்சின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. விபத்து குறித்து அறிந்ததும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.

உ.பி.யில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கவும் ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைத்ததா தமிழ்நாடு அரசு?

 பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைத்ததா தமிழ்நாடு அரசு? 'ப' வடிவில் இருக்கைகள் அமைக்க...