இடுகைகள்

Fixed Deposit லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்: உயா்த்தியது பாரத ஸ்டேட் வங்கி...

படம்
வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்:  உயா்த்தியது பாரத ஸ்டேட் வங்கி - Fixed Deposit Interest rates Hiked: State Bank of India...... இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தங்களிடம் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை 0.5 சதவீதம் உயா்த்தியுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிலை வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்கள் 50 அடிப்படைப் புள்ளிகள் (0.5 சதவீதம்) உயா்த்தப்பட்டுள்ளன. கடந்த 27-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த வட்டி விகித உயா்வு குறிப்பிட்ட பருவகாலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு மட்டும் பொருந்தும். அதன்படி, இனி 180 முதல் 210 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 5.75 சதவீதமாகவும், 7 முதல் 45 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 3.5 சதவீதமாகவும் வட்டி விகிதம் இருக்கும். 211 நாள்களுக்கு மேலும் ஒராண்டுக்குக் கீழும் பருவகாலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 6 சதவீதமாக உயா்த்தப்படுகிறது.  3 ஆண்டுகளுக்கும் மேலான வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 6.75 சதவீதமாக இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில

'Fixed Deposit' புதுப்பிக்காவிடில் வட்டி குறைப்பு...

படம்
 'பிக்சட் டிபாசிட்' புதுப்பிக்காவிடில் வட்டி குறைப்பு...     'வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நிரந்தர வைப்புத் தொகை கணக்கிற்கான அவகாசத்தை புதுப்பிக்க தவறினால் அந்த தொகைக்கு சேமிப்பு கணக்கிற்கான வட்டி மட்டுமே வழங்கப்படும்' என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வங்கி வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தொகையை நிரந்தர வைப்புத் தொகையாக வங்கிகளில் செலுத்தி இருப்பர். அந்த வைப்புத் தொகை கணக்கிற்கான அவகாசம் முடியும் நிலையில் தானாகவே வங்கிகளில் புதுப்பித்துக் கொள்ளப்படும். தற்போது இந்த நடைமுறையை மாற்றி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி நிரந்தர வைப்புத் தொகை கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அதன் அவகாசம் முடியும் தருவாயில் வங்கிகளுக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளும் விண்ணப்பத்தை வழங்க வேண்டும். அப்படி செய்தால் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி வழங்கப்படும். அதேநேரத்தில் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை வழங்கத் தவறினால் அந்த வைப்புத் தொகைக்கான வட்டி சேமிப்பு கணக்குக்கான வட்டியாக குறைக்கப்படும். தற்போது நிரந்தர வைப்புத் தொகைக்கு 5 சதவீத வட்டியும

(SBI) நிலையான வைப்புத்தொகை மீது- கடன் பெறுவது எப்படி ?

படம்
 ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) உடனடி பணத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நிலையான வைப்புத் தொகையின் மீது கடன் வழங்குகிறது.வட்டி விகிதங்கள் அதிகம் கிடைக்கும் என்பதால் நாம் பொதுவாக நம் பணத்தை வைப்புத் தொகையில் முதலீடு செய்கின்றோம். ஆனால் சில நேரங்களில் நம்முடைய அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படுகிறது. இத்தகைய அவசர காலங்களில் நீங்கள் உங்களுடைய வைப்புத் தொகை மீது குறுகிய கால கடனை பெற முடியும்.  நிலையான வைப்புத் தொகையை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை. எஸ்பிஐ (SBI)வங்கியில் அவ்வாறு கடன் பெற, வங்கி கிளைக்கு சென்று தேவையான விண்ணப்பத்தை நிரப்பித் தர வேண்டும். குறைந்தபட்சமாக ரூ.25,000 முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை கடன் பெற முடியும். அதே சமயம் இந்த தொகையானது நம்முடைய வைப்புத்தொகையில் 90 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நிலையான வைப்புத்தொகை மீது எப்படி கடன் பெறுவது? எஸ்பிஐ(SBI)  வங்கியில் நிலையான வைப்புத் தொகை கணக்கு வைத்துள்ள தனிநபர் அல்லது கூட்டு வைப்புத்தொகையாளர்கள் கடன் பெற முடியும் ஆன்லைன் வங்கி கணக்கில் டிடிஆர் அல்லது எஸ்டிடிஆர் முறையில் கணக்கு வைத்திருக்கும் தனிநபர்களும் ஓவர் டிராஃப்ட் வசதி

பிக்ஸட் டெபாசிட் வட்டியைக் கூடுதலாகத் தரும்-'Immune India deposit scheme'- மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் நடவடிக்கை...

படம்
 கொரோனா வைரஸ் பரவலில் இரண்டாம் அலை, மிகத் தீவிரமாகி வருகிறது. கொரோனா தடுப்பூசிக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அதைப் போட்டுக்கொள்வதில் மக்களுக்கு அச்சமும், ஏராளமான குழப்பங்களும் இருந்து வருகின்றன. இதனாலேயே மக்களில் பலர், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வருவதில்லை. கடந்த திங்கள்கிழமையன்று புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 1,68,912-ஆக இருந்தது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,35,27,717-யைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான், மக்கள் அனைவரையும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது. மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய அரசு சில நடவடிக்கை எடுத்து வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வங்கி பிக்ஸட் டெபாசிட் வட்டியைக் கூடுதலாகத் தரும் விதமாக 'சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா' புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்காக பிரத்யேகமாக 'Immune India deposit sche

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...