வெறிநாய்க்கடி நோய் (ரேபிஸ்) குறித்த விழிப்புணர்வு பதிவு (Awareness about Rabies) - மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா...
வெறிநாய்க்கடி நோய் (ரேபிஸ்) குறித்த விழிப்புணர்வு பதிவு (Awareness about Rabies) - மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா... கேரளாவில் வெறிநாய் கடித்து ரேபிஸ் நோய் ஏற்பட்டு ஒரு கல்லூரி மாணவி மரணமடைந்துள்ளார் என அறிந்து வேதனை அடைந்தேன் இறந்த சகோதரியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்து இந்த விழிப்புணர்வு கட்டுரையைத் தொடங்குகிறேன் அன்புள்ள சொந்தங்களே நாய்க்கடி/ நாய் நகத்தால் பிராண்டுதல் பூனைக்கடி/ பூனை நகத்தால் பிராண்டுதல் குரங்குக் கடி இன்னபிற காட்டு விலங்குகளிடம் கடி பட்டால் உடனே கடிபட்ட இடத்தை சோப் போட்டு நன்றாக 15 நிமிடம் தேய்த்துக் கழுவ வேண்டும் இதன் மூலம் கடிபட்ட இடத்தில் இருந்து வைரஸை தொற்று நீக்கம் செய்ய முடியும். இதன் மூலம் 90% வைரஸை காலி செய்து விடலாம் எனவே கடிபட்ட இடத்தை சோப் போட்டு 15 நிமிடம் கழுவுவது முக்கியமான முதல் பணி. இதைச் செய்து விட்டு அரசு மருத்துவமனைக்குச் சென்று டிடி எனும் டெட்டானஸ் பாக்டீரியாவுக்கு எதிரான தடுப்பூசியை பெற வேண்டும் அதன் பிறகு கடிபட்ட இடத்தை மருத்துவர் பரிசோதிப்பார் கடிபட்ட இடத்தில் நகம் பிராண்டிய இடத்தில் தோல் உரியாமல் ரத்தம் எதுவ