கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

17-02-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-02-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை.


குறள் 426:


எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவ தறிவு.


விளக்கம்:


உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.



பழமொழி : 


Necessity knows no low. All is fair in love and war.


ஆபத்துக்கு பாவம் இல்லை.



பொன்மொழி:


  I am the captain of my soul. I am the master of my fate.


 என் ஆன்மாவுக்கு நானே தலைவன். என் தலைவிதியையும் நானே எழுதுகிறேன்.



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 பொருளின் கட்டுமான அலகு - அணு

வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு

கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி

ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்

பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்

நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Deliver - வழங்குதல்

Demand - தேவை

Demolish - இடித்தல்

Depart - புறப்படுதல்

Descend - இறங்குதல்

Desert - பாலைவனம்


ஆரோக்கியம்


தக்காளி, கீரை சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகுமா?


தக்காளி, கீரை வகைகளைச் சாப்பிடுவதன்மூலம் ஒருவருக்குச் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாது. இது தேவையற்ற பயம். ஆனால், ஏற்கெனவே சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நலம். காரணம், இந்த இரண்டிலும் சிறுநீரகக் கல்லை உருவாக்கக்கூடிய ஆக்சலேட்டுகள் அதிகம்.



இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 17


1867 – சூயசுக் கால்வாயூடாக முதலாவது கப்பல் சென்றது.


1965 – அப்பல்லோ 11 மூலம் நிலாவிற்கு மனிதரை அனுப்புவதற்கு முன்னோட்டமாக நிலாவில் தரையிறங்குவதற்கான இடத்தைப் படம் எடுப்பதற்காக ரேஞ்சர் 8 விண்கலம் ஏவப்பட்டது.


1996 – பிலடெல்பியாவில் நடைபெற்ற சதுரங்க ஆட்டத்தில் காரி காஸ்பரொவ் ஐபிஎம்மின் டீப் புளூ மீத்திறன் கணினியை வென்றார்.


2000 – விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.



சிறப்பு நாட்கள்


விடுதலை நாள் (கொசோவோ, 2008)

புரட்சி நாள் (லிபியா)



நீதிக்கதை


தேனும் கசந்தது 


உணவைத் தேடி ஒரு கரடி காட்டில் அலைந்து கொண்டிருந்தது. அந்த பரிதாபமான கரடி நல்ல உணவை சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. அதற்கு பிடித்தமான வேர்கள், கொத்துக்கொத்தான பழங்கள், தேன் முதலியவற்றை நினைத்தாலே அதற்கு நாக்கில் நீர் ஊறிற்று. அது ஓர் அடர்த்தியான காடு; பல மயில்கள் பரவி இருந்தது. தன் பசியை போக்க கூடிய உணவு எப்போது கிடைக்கும் என்று எண்ணியவாறு கரடி காடு முழுவதும் அலைந்து திரிந்தது.


சற்றுத் தொலைவில் மரக்கிளையில் இருந்து தொங்கிக் கொண்டிருந்த ஏதோ ஒன்று திடீரென்று அதன் கண்களுக்கு தென்பட்டது. அந்த மரத்தை நோக்கி கரடி சென்றது. அருகில் நெருங்கியது; தேன்கூடு ஒன்று கிளையில் இருந்து தொங்குவதை கண்டதும் அதற்கு வியப்பு தாங்கவில்லை. நம்ப முடியாமல் தன் கண்களை தேய்த்துக் கொண்டது.


மரக்கிளையிலிருந்து தொங்கிக் கொண்டிருப்பது தேன்கூடா? ஆம், தேன் கூடுதான். தன் அதிர்ஷ்டத்தை கரடியால் நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியால் துள்ளி குதித்தது. தேன்கூட்டுக்குள் தேனீக்கள் இருக்கின்றனவா என்று உற்று நோக்கியது. அங்கு தேனீக்கள் இல்லை மிக உற்சாகத்தோடு சுவையான தேனைத் தேன் கூட்டில் இருந்து எடுக்க தன் காலை தூக்கியது.


அந்த நேரத்தில் சத்தமாக ரீங்காரமிட்டவாறு ஒரு பெரிய தேனீ கூட்டம் தன்னை நோக்கி வருவதை கண்டு கரடி துணுக்குற்றது. அந்தக் கூட்டை சேர்ந்த தேனீக்கள் அவை. தேனீக்கள் நாள் முழுவதும் கடுமையாக உழைத்து சேகரித்து தேனை கூட்டில் வைப்பதற்காக வந்து கொண்டிருந்தன. கூட்டை  நெருங்கும் போது அங்கிருந்த கரடியை பார்த்தன. அவை சேகரித்த விலைமதிப்பற்ற தேனை கரடி அபகரிக்க வருவதைக் கண்ட தேனீக்கள் கரடியை சூழ்ந்து கொண்டு கோபத்துடன் அதை கொட்ட ஆரம்பித்தன.



தேனீக்கள் கொட்டியதால் கரடிக்கு மிகவும் வலித்தது. வலி தாங்காத கரடிக்கு அதிகமாக ஆத்திரம்  ஏற்பட்டது. “எனக்கு கிடைக்காத தேன், தேனீக்களுக்கும் கிடைக்கக்கூடாது” என்று கரடி எண்ணியது. மேலே எழும்பி குதித்து கூட்டை கைப்பற்ற எண்ணியது. கைப்பற்றியவுடன் கூட்டை கீழே போட்டு உடைத்து அதை அழிக்க வேண்டும் என்று வெறி அதற்கு ஏற்பட்டது.


ஆனால், புத்தியுள்ள தேனீக்களுக்கு கரடி என்ன செய்ய முயல்கிறது என்பது தெரிந்தது. ரீங்காரம் செய்தவாரே அவை கரடியை சுற்றி சுற்றி வந்து வலிமையெல்லாம் ஒன்று சேர்த்து கொடுக்குகளால் கொட்டின. மறுமுறையும் தேனீக்கள் தாக்கியவுடன் கரடி திகைத்துப் போனது. தேன் கூட்டை பிடிக்கும் எண்ணத்தை கைவிட்டது. அவை இன்னமும் அதிகமாக தாக்குவதற்குள் அங்கிருந்து தப்பித்துக் கொள்ள தீர்மானித்தது.


கரடி மிக வேகமாக ஓடியது. ஆனால், அதன் உடலில் பல இடங்களிலும் கொட்டியவாறு தேனீக்கள் கரடியை பின் தொடர்ந்தன. தங்களுடைய தேனை பேராசை பிடித்த அந்த கரடி மறுபடியும் திருடாமல் இருக்க தேனீக்கள் அதற்கு ஒரு பாடம் புகட்ட விரும்பின.


அந்த அளவு தேனை சேகரிக்க தேனீக்கள் அரும்பாடு பட்டுள்ளன. தங்களுடைய கடுமையான உழைப்பின் பலனை கரடி அனுபவிக்க எண்ணியதை தேனீக்கள் விரும்பவில்லை. தேனீக்களுக்கு கரடி மீது கடும் கோபம் ஏற்பட்டது. அதற்கு தண்டனை அளிக்க தீர்மானித்தன.



தேனீக்களிடம் பயந்து போன அந்த கரடிக்கு எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை. காட்டுக்கு நடுவில் வேகமாக ஓடி ஆற்றுக்கு அருகில் கரடி வந்து சேர்ந்தது. ஓடி வந்த கரடி குளிர்ந்த நீருக்குள் குதித்தது. தேனீக்கள் கொட்டியதால் ஏற்பட்ட எரிச்சலை குளிர்ந்த நீர் தணித்தது. நீருக்குள் கரடி நீண்ட நேரம் தன்னை முழுவதுமாக அமிழ்த்திக் கொண்டது. பொறுமை இழந்து தேனீகள் தம் கூட்டை நோக்கி திரும்பும் வரையில் தண்ணீருக்கடியிலேயே கரடி காத்திருந்தது.


உடலில் பட்ட காயத்தால் வருந்திய கரடி தண்ணீரை விட்டு வெளியேறி தன் இடத்திற்கு சென்றது. இனிமேல் தேன் கூட்டு பக்கம் போவதில்லை என்று தீர்மானித்தது. இனிப்பான தேனை நினைத்தாலே கசப்பான இந்த அனுபவம் தான் அதன் நினைவுக்கு வரும்.


 நீதி : ஆசை, வெறியினால் அழிவு உறுதி.




இன்றைய முக்கிய செய்திகள் 


17-02-2025


2030ம் ஆண்டுக்குள் நாட்டின் ஜவுளி ஏற்றுமதி ரூ. 9 லட்சம் கோடி இலக்கை எட்டும்; பிரதமர் மோடி நம்பிக்கை...


மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவுபடுத்தப்படும்; துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...


அமெரிக்கா இந்தியாவிற்கு எப் 35 ரக ஜெட் விமானங்களை வழங்கும்: டொனால்டு டிரம்ப்...


பாஸ்டேக் கொண்டுவந்துள்ள புதிய விதிகள்: 17ஆம் தேதி முதல் அமல்...


ஒன்றிய அரசின் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வு குறியீடு அறிக்கை வெளியீடு: செயல்பாடுகள் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம்...


சாகச சுற்றுலாவை ஊக்கப்படுத்த பூண்டி, கொல்லிமலை, ஜவ்வாது மலை உள்ளிட்ட 7 இடங்கள் தேர்வு: சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல்...


நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா..? ஒன்றிய கல்வி அமைச்சருக்கு துணை முதல்வர் உதயநிதி கடும் கண்டனம்...


அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களால் ஆண்டுதோறும் ₹69,000 கோடி வருவாய் கிடைப்பதாக அந்நாட்டு அரசு தகவல்...


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது..? ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி...


உத்திர பிரதேசம் கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு...


அரசியல் பார்க்காமல் உரிய நிதியை ஒதுக்க வேண்டும். இன்னொரு மொழிப்போரைத் தூண்ட வேண்டாம்: மத்திய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை...



Today's Headlines:

17-02-2025


The country's textile exports will reach Rs 9 lakh crore by 2030; Prime Minister Modi is confident...


Women's Entitlement Scheme to be expanded; Deputy Chief Minister Udhayanidhi Stalin...


US to provide F-35 jets to India: Donald Trump...


New rules introduced by FASTag: Effective from the 17th...


Union Government's Panchayats' Power Sharing Index Report Released: Tamil Nadu tops the performance index...


7 places including Poondi, Kolli Hills, Jawvadhu Hills selected to promote adventure tourism: Tourism officials inform...


If you ask for financial rights, are you threatening Tamil Nadu to accept Hindi? Deputy Chief Minister Udhayanidhi strongly condemns the Union Education Minister...


Indian students studying in the US generate an annual revenue of ₹69,000 crore, according to the US government...


Which section of the Indian Constitution makes the trilingual policy mandatory? Chief Minister M.K. Stalin's question to the Union Minister...


18 people killed in stampede at Delhi railway station as people headed to Kumbh Mela in Uttar Pradesh...


Appropriate funds should be allocated without looking at politics. Don't instigate another language war: Minister Anbil Mahesh warns the central government...


- Kalvi Anjal


Term 3 - Unit 4 - Lesson Plan - 1, 2 & 3rd Std

 

1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 3 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 4 (Term 3 - Unit 4 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard)... 



>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 3 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 4 (Term 3 - Unit 4 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard)... 





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Term 3 - February 3rd Week - Lesson Plan - 4 & 5th Std

 

4 & 5ஆம் வகுப்பு - பருவம் 3 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – பிப்ரவரி 3வது வாரம் (Term 3 - February 3rd Week - Lesson Plan - Ennum Ezhuthum - 4 & 5th Standard)


>>> 4 & 5ஆம் வகுப்பு - பருவம் 3 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 4 (Term 3 - Unit 4 - Lesson Plan - Ennum Ezhuthum - 4 & 5th Standard)... 





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Full Body Check Up for Teachers – Application Form

 


பள்ளிக் கல்வி - ஆசிரியர் நலன் - 50 வயதினை கடந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்துதல் நெறிமுறைகள் - ஆணை - தொடர்பாக


ஆசிரியர்களுக்கான முழு உடல் பரிசோதனை - விண்ணப்பப் படிவம்


Master Health Checkup, Full Physical Examination for Teachers – Application Form



>>> தெளிவான படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




Master health check up Details - Guidelines & Forms - Download


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 முழு உடல் பரிசோதனை திட்டம்: ஆசிரியர்கள் பிப்ரவரி 28-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்


அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்துக்கு பிப்ரவரி 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வதற்கான அறிவிப்பு 2023-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் முதல்கட்டமாக 50 வயதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.1.50 லட்சம் என 38 மாவட்டங்களுக்கும் ரூ.57 லட்சம் தேசிய ஆசிரியர் நல நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு மேமோகிராம், இசிஜி, எக்ஸ்ரே உட்பட 16 வகையான மருத்துவ பரிசோதனை செய்யப்படவுள்ளன. இதையடுத்து மாவட்டந்தோறும் 50 வயதை கடந்த ஆசிரியர்களில் வயது மூப்பு அடிப்படையில் 150 ஆசிரியர்களை முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தில் பயன் பெற தேர்வு செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை தகுதியான ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பிப்.28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


தொடர்ந்து விண்ணப்பங்களை முதன்மைக்கல்வி அலுவலர்கள் மார்ச் 7-ம் தேதிக்குள்பரிசீலனை செய்து 150 ஆசிரியர்களை தேர்வுசெய்ய வேண்டும். மேலும், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் விவரங்களை மாவட்ட மருத்துவத் துறை அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் உடல் நல பரிசோதனைக்கான கால அட்டவணையை தயாரித்து, அதன் தகவல்களை தேர்வான ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Master Health Check Up for Teachers - Tests Details, Guidelines & Form - DSE Proceedings



ஆசிரியர்களுக்கான முழு உடல் பரிசோதனை - பரிசோதனைகள் விவரம் & நெறிமுறைகள் - DSE செயல்முறைகள் வெளியீடு


Full Body Master Health Check-up for Teachers - Tests Details, Guidelines & Form - DSE Proceedings


பள்ளிக் கல்வி - ஆசிரியர் நலன் - 50 வயதினை கடந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்துதல் நெறிமுறைகள் - ஆணை - தொடர்பாக


 50 வயதினைக் கடந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ₹1,000/- செலவிலான முழு உடல் பரிசோதனை  திட்டத்தை செயல்படுத்துதல் தொடர்பாக நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 17510 / எம்1/ இ3 / 2024, நாள் : 14-02-2025


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 01.03.2023 அன்று 50 வயதினை கடந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுஉடல் பரிசோதனை செய்வது தொடர்பான இத்திட்டச் சார்ந்த செய்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள் . அரசு இத்திட்டம் தொடர்பாக பார்வை ( 1 ) இல் காணும் அரசாணையில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது . அவ்வாணையில் , முதற்கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்ட அனைத்துவகை ஆசிரியர்களுக்கு மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



 மேலும் , பள்ளிக் கல்வித்துறையில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ( Package - 1 Gold Scheme ) திட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள பின்வரும் பரிசோதனைகளை மேற்கொள்ள பார்வையில் காணும் அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


👇👇👇👇👇


Master health check up Details - Guidelines & Forms - Download



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Today's teaching community needs to change their mindset



  தமது மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இன்றைய ஆசிரியர் சமூகம்


Today's teaching community needs to change their mindset


மாநிலம் முழுவதும் ஆங்காங்கே ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் சார்ந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.


*பாலியல் சார்ந்த குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


எனினும் 

ஆசிரியர்கள், மாணவர்களுக்கான உறவு என்பது கற்றல் கற்பித்தல் உடன் நின்றுவிடாமல் ஒழுக்கம் சார்ந்த கண்டிப்பையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது.


இன்றைய கைபேசி இணைய  உலகத்தில் படிப்பைத் தவிர மற்ற பல்வேறு நிகழ்வுகளில் மாணவர்களின் மனம் அலைந்து கொண்டிருத்தலும்,


குறிப்பிட்ட மதிப்பெண் இருந்தால்

மட்டுமே கல்லூரியில் 

இடம் கிடைக்கும் என்கின்ற சூழல் இல்லாமல்

எந்த மதிப்பெண் எடுத்தாலும் ஏதாவது 

ஒரு கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்கின்ற நிலை இருப்பதாலும்,


கடந்த தலைமுறையான கண்டிப்பான பெற்றோர்களிடம் குழந்தைகளாக வளர்ந்து, இன்றைய பெற்றோர்களாக இருக்கும் தலைமுறையினர் தாங்கள் பட்ட கஷ்டங்களை, கட்டுப்பாடுகளை தங்கள் குழந்தைகள்  படக் கூடாது என்கின்ற மனநிலையில் பெற்றோர்களும் இருப்பதாலும்,


படிப்பு மற்றும் ஒழுக்கம் சார்ந்த விடையங்களில் கட்டுப்பாடுகள் இன்றி இன்றைய இளைய தலைமுறையினர் இருக்கிறார்கள்.


முதன்மை கல்வி அலுவலர் தேர்ச்சி சதவீதம் உயர்த்த சொல்கிறார் என்றோ

அல்லது 

நீங்கள் வளர்ந்த சூழலை மனதில் வைத்து இன்றைய மாணவர் இடத்தில் கண்டிப்புடன் நடந்து கொண்டாலோ

அதைக் கூட சிக்கலாக்கிவிடும் வாய்ப்பு உள்ளது. 


எனவே

மேற்கண்ட சூழல்களில்,  இன்றைய காலகட்டம் இருப்பதால்,

ஆசிரியர்கள் மிகுந்த உச்சபட்ச எச்சரிக்கையுடன் மாணவர்களை கையாள வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.


எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாவற்றையும் விட  மானமும், கௌரவமும் முக்கியமானது.


 ஏனெனில் இன்றைய சமூக ஊடகங்களும் உங்களை வீழ்த்த மட்டுமே கூட்டம் கூட்டமாக வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ஆசிரியர்களே!


 தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டியவைகள்:


1) ஒரு பள்ளியில் தலைமையாசிரியர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை  ஈகோ இல்லாமல், பணித் தொகுதி பாரபட்சம் பார்க்காமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.


2) ஆசிரியர்களுக்கிடையேயான போட்டிகளை தீர்க்க (தனிப்பட்ட விடயங்களுக்காக) சாதி, மதம், உள்ளூர் என ஏதோ ஒரு வகையில் மாணவர்களிடம் நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டு மற்றோர் ஆசிரியருக்கு எதிராக தூண்டி விடுதல், போன்ற எதிர்மறையான சிந்தனைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


3) ஒரு ஆசிரியருக்கு எதிராக உண்மைக்கு புறம்பான சிக்கல் வரும் போது மற்ற அனைத்து ஆசிரியர்களும் துணையாக நிற்க வேண்டும்.


4) பெண்கள் பள்ளிகளில் ஆய்வகம், வகுப்பறைகள் உட்பட எந்தவொரு சூழலிலும் மாணவிகளை தனியாக சந்திக்கும் சூழலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

குறைந்த பட்சம் மூன்று அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையில் மாணவிகளை சந்திக்க சொல்லி அறிவுரை வழங்கி விடவும்.


5) இருபாலர் பள்ளியில் மாணவர்கள் உடன் வைத்துக் கொள்ளவும், ஆய்வகங்களுக்கு முதலில் மாணவர்களும் இரண்டாவதாக மாணவிகளும் உள்ளே வர வேண்டும் என்றும்,

வெளியேறும் போது முதலில் மாணவிகள் வெளியேற வேண்டும் இரண்டாவதாக மாணவர்கள் வெளியேற வேண்டும் போன்ற பாதுகாப்பான முறைகளை பின்பற்ற வேண்டும்.


6) மேற்கண்ட விடயம் பெண் ஆசிரியர் சகோதரிகளுக்கும் பொருந்தும்.

கவனம் செலுத்த தவறாதீர்கள்.



Jimmy Wales - Information about the founder of Wikipedia

 


ஜிம்மி வேல்ஸ் - விக்கிபீடியா நிறுவனர் குறித்த தகவல்கள்


Jimmy Wales - Information about the founder of Wikipedia


படத்தில் நீங்கள் காணும் இந்த மனிதருக்கு நானும் நீங்களும் உட்பட முழு உலகமும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். 


ஆம், நீங்கள் எந்த ஒன்றையும் தேடிப் படிக்க ஆர்வம் கொள்ளும் போதெல்லாம் கூகிளில் நுழைந்து ஒரு பட்டனைத் தட்டினால் புத்தக இறக்கை அப்படியே உங்கள் தலையில் வந்து விழுவது போல மொத்த அறிவுக் களஞ்சியமும் வந்து உங்கள் கண் முன் அடுக்கடுக்காக நிற்குமோ, அந்த இலவச கலைக்களஞ்சியமான (Wikipedia) வை நமக்காக வடிவமைத்தவர் இவர்தான். 



ஆம், (Wikipedia) வின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் நினைத்திருந்தால் இந்த களஞ்சிய தளத்தை வைத்து பில்லியன் கணக்கான பணத்தை சம்பாதிருக்க முடியும், அவருக்கு வந்த விளம்பர ஓபர்களை பயன்படுத்தி பேஸ்புக் நிறுவனர் மார்க் போன்றவர்கள் போல இந்த உலகையே  ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய பணக்காரர்களின் வரிசையில் நின்றிருக்கலாம். 


ஆனால் தனக்கு வந்த அனைத்து விளம்பரங்களையும் ஏற்க மறுத்தார், முழு உலகுமே பயன் பெரும் இந்த மாபெரும் கலைக்களஞ்சியம் என்றென்றும் இலாப நோக்கற்ற தளமாகவே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்த மண்ணில் வாழும் முன்மாதிரிமிக்க மனிதர்கள் தர வரிசையில் தானும் ஒருவராகவே இருக்க வேண்டும் என்பதிலும் விடாப்பிடியாக இருந்தார். 


கல்விக்கும் தேடலுக்குமான முதல் தர தளமாக விளங்கும் விக்கிபீடியாவை பணம் பார்க்கும் நிறுவனங்கள் மற்றும் விளம்பர ஏஜென்சிகளுக்கும் தாரை வார்க்க மறுத்தே வந்தார். 


சமீபத்தில் "Wikipedia Zero" என்ற விஷேட கலைக்களஞ்சியத்தை வடிவமைத்து ஆரம்பித்து வைத்த அவர், உலக மூலை முடுக்களிலெல்லாம் இன்டர்நெட் பேக்கேஜுக்கு பணம் செலுத்த முடியாத, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் சுமார் 400 மில்லியனுக்கும் அதிகமான உலக மக்களின் அறிவுப் பசியை போக்கவும் கலைத் தாகத்தை தீர்க்கவும் வசதியை ஏற்படுத்தி வைத்தார். 


இதன் மூலம் அவர்கள் உலகெங்கிலும் உள்ள மொபைல் நிறுவனங்களிடமிருந்து விக்கிபீடியாவிற்கான இலவச (access) களை பெற்றுக்கொள்ளலாம். 


இன்னும் இந்த பூமிக் கிரகத்தில் நன்மையை மாத்திரம் நாடும் நல்லுள்ளம் கொண்ட மனிதர்கள் வாழுகிறார்கள் என்பதை ஜிம்மி வேல்ஸ் நிரூபித்துள்ளார். 


  அறிவியல் பொக்கிஷங்கள் அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டு வந்து வைத்த இவருக்கு நீங்களும் ஒரு வாழ்த்தைத் தெரிவிக்கலாமே. 



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு  மாண்புமிகு ம...