கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கிரானைட் குவாரியில் பல்கலை., தேர்வுத்தாள் கிடைத்தது எப்படி?

பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்தின், கிடங்கில் இருந்த பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த, மதுரை காமராஜ் பல்கலை தேர்வுத் தாள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மதுரை, இடையபட்டி பி.ஆர்.பி நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்கில், மதுரை வடக்கு துணை தாசில்தார், நைனல் ராஜ்குமார் தலைமையில், கற்கள் அளவிடும் பணி நேற்று முன்தினம் நடந்தது. அங்கு ரகசிய அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த அறையில் இருந்த, மூன்று பெட்டகங்களை உடைத்த போது, ஒன்றில், மதுரை காமராஜ் பல்கலையின், எழுதாத, 249 தேர்வுத் தாள்கள், வரிசை எண்களுடன் கட்டுக்கட்டாக இருந்தன. இது குறித்து, இடையபட்டி கிராம நிர்வாக அதிகாரி கீதா, ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார்; போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) பிச்சுமணி வெளியிட்ட அறிக்கை: மதுரை கருப்பாயூரணிக்கு அருகில், பல்கலைக்கு உட்பட்ட இணைவிப்பு கல்லூரிகளுக்குள் ஒன்றாக இருந்த, எஸ்.பி., அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிக்கு, மதுரை காமராஜ் பல்கலையால், நவம்பர் 2010 மற்றும் ஏப்ரல் 2011க்கான பருவத் தேர்வுகளுக்காக, வழங்கப்பட்ட விடைத்தாள்களில் உபயோகப்படுத்தியது போக மீதி விடைத்தாள்கள் தான், தற்போது கிடைத்துள்ளன.
எஸ்.பி., அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியை, பி.ஆர்.பி., நிறுவனம் டிசம்பர் 2011ல் கிரையம் பெற்றுள்ளதாக, இக்கல்லூரியின், முன்னாள் தலைவர் சக்ரவர்த்தியை தொடர்பு கொண்ட போது, போனில் தெரிவித்தார்.
இக்கல்லூரி தற்போது இயங்கவில்லை. கல்லூரி வசம் மீதமிருந்த விடைத்தாள்களை பல்கலை வசம், திரும்ப ஒப்படைக்காமல் இருந்துள்ளனர். அவையே, தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET 2026 Paper 2 | Social Science | Tentative Answer Key

  ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 (TNTET 2026) | சமூக அறிவியல் உத்தேச விடைகள் (Tentative Answer Keys) ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியீடு ...