கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சுயநிதி பள்ளி கட்டண நிர்ணய குழு தலைவர் பதவியை நீட்டிக்க முடிவு?

சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழுத் தலைவர் சிங்காரவேலுவிற்கு, பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கட்டண நிர்ணய குழுவின் தலைவராக பதவி ஏற்பவர், மூன்று ஆண்டுகள் அப்பதவியை வகிக்கலாம் என்றாலும், ஒட்டுமொத்த குழுவின் பதவி காலம், 6ம் தேதியுடன் முடிவடைந்ததால், தலைவர் உள்ளிட்ட அனைவரது பதவிகளும், முடிவுக்கு வந்தன. இந்நிலையில், குழுவின் பதவி காலத்தை, மேலும், மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்தும், தற்போதைய தலைவரான சிங்காரவேலு, மூன்று ஆண்டுகள் நிறைவுபெறும் வரை, அப்பதவியில் தொடரலாம் எனவும், தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதாக, நேற்று மாலை, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், குழுவின் சிறப்பு அலுவலராக இருந்த மனோகரன், அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஓய்வுபெற்ற, சி.இ.ஓ., முத்துக்கிருஷ்ணன், அப்பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

55 IAS Officers Transferred including District Collectors

     மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வாலாயம் எண்: 2367, நாள் : 23-06-2025 வெளியீடு  55 IAS Officers Tr...