கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒரே அரசுப்பள்ளியில் மேலும் 11 மாணவிகளுக்கு கரோனா தொற்று - 7 நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவு...


 மன்னார்குடியில்‌ உள்ள அரசு மகளிர்‌ மேல்‌நிலைப்‌ பள்ளியில்‌ பயிலும்‌ மாணவிகள்‌ 5 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில்‌ நேற்று மேலும்‌ 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. திருவாரூர்‌ மாவட்டம்‌ மன்னார்‌குடி அரசு மகளிர்‌ மேல்நிலைப்‌ பள்ளியில்‌ பிளஸ்‌ 2 படித்து வரும்‌ மாணவிகள்‌ 5 பேருக்கு கடந்த 6-ம்‌ தேதி கரோனா தொற்று இருப்‌பது பரிசோதனையில்‌ உறுதி செய்யப்பட்டது. விடுதியில்‌ தங்கி இருந்து பள்ளிக்கு வந்து சென்ற இந்த மாணவிகள்‌ அனைவரும்‌ சிதிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்‌ பட்டுள்ளனர்‌. 


மருத்துவமனையில்‌ அனுமதி 

இதையடுத்து, பள்ளியில்‌ பயிலும்‌ சக மாணவிகள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ என 300 பேருக்கு கடந்த 8-ம்‌ தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்‌, மேலும்‌ 11 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி ஏற்பட்டுள்‌ளது நேற்று தெரியவந்தது. 


இதையடுத்து, 11 பேரும்‌ மன்னார்‌குடி அரசு மருத்துவமனையில் ‌அனுமதிக்கப் பட்டுள்ளனர்‌. இதனால்‌, அப்பள்ளியில்‌ கரோனா தொற்‌றால்‌ பாதிக்கப்பட்ட மாணவிகளின்‌ எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்‌ளது. இதையடுத்து, பள்ளிக்கு 7 நாட்கள்‌ விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ ராமன்‌ உத்தரவிட்டுள்‌ளார்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இரயில்வேயில் Assistant Loco Pilot (ALP) 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

இரயில்வேயில் Assistant Loco Pilot (ALP) 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்  இரயில்வே வேலை கனவை நனவாக்குங்கள்!  Assistant Loco Pilot (ALP)...