கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்த கூடாது - பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு...




 கொரோனா இயல்பு நிலை திரும்பும் வரை கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது.



இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப குழுவான ஏ.ஐ.சி.டி.இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும், பேராசிரியர்களுக்கான ஊதியத்தை மாதந்தோறும் உரிய நேரத்தில் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.



இதேபோல் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முதற்கட்ட கலந்தாய்வையும், செப்டம்பர் 9 ஆம் தேதிக்குள் இரண்டாம் கட்ட கலந்தாய்வையும் நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...